Thursday, February 3, 2011

கவிதை...




சலனமற்றிருந்த
விழிகள்
வெறிக்கும்


மிருகத்தின்
சாயல்


உயிர்ப்புமிக்க
நீரோட்டத்தின்
ஏக்கம்


எதிர்கொள்ள
துணிவில்லாமல்
அழுத்தமான
தனிமையில்
திசைகளற்று
தொடர்கிறது


துள்ளலோடு
உலவுகின்றன
மகிழ்வூட்டலின்
இருண்ட பக்கங்கள்



மேய்ச்சல் நிலத்தின்
இடையன் சுட்டுவிரல் பிடித்த
மென் விரல்கள் போய்
ஒற்றை ஆட்டுக்குட்டி மட்டும்
தோளில் சுமையாய்
துவண்டு படுத்திருக்கும்



இரவின் காரிருள்
மூண்டெழ



நாடோடிகள் நடனம்
வெறிகொண்டு
துவங்கும்..

No comments:

Post a Comment