Friday, July 31, 2009

சில களங்கள் - ஒரு பார்வை

ஈழத்தமிழர்களின் தாயக விடுதலை கோரிக்கைகையை
சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு எந்த விதத்திலும்
குறையாத இஸ்ரேலிய சியோனிச பயங்கரவாதிகளின்
பாலஸ்தீன தாயக ஆக்கிரமிப்போடு ஒப்பிடும் சில
ஈழ ஆதரவாளர்களின் அவல அரசியல் சகிக்க
இயலாததாக இருக்கிறது.

அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏதிராக போராடி
தங்கள் தேசிய விடுதலையை வென்றெடுத்த
நாடுகள் பட்டியலில் உதாரணமாகக் கொள்ள
வியட்னாம்,கினியா-பிஸோ,அல்ஜீரியா,
என்று முன்னுதாரனமாகக் கொள்ள எத்தனையோ
நாடுகள் இருக்க,சிங்கள இனவாதிகளை போலவே
பாலஸ்தீன மண்ணை,யூத குடியேற்றங்கள் வழியே
ஆக்கிரமித்து,பாலஸ்தீன மக்களுக்கு எதிராக அரச
பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு அம்மக்களை
இன்றுவரை படுகொலை செய்துகொண்டு இருக்கும்
இஸ்ரேலை உதாரணமாகக் கொள்ளும் எண்ணம்
எத்துனை இழிவானது என்பதையும்,இஸ்ரேலை
போற்றுவது என்பது சிங்கள் இனவெறியர்களை
போற்றுவதற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல
என்பதை இந்த அரைவேக்காட்டு அரசியல்வாதிகள்
உணர மறுப்பது ஏன்?

ஈழவிடுதலை போரின் தொடக்க காலத்தில்
பாலஸ்தீன விடுதலை கோரி போராடிக்கொண்டிருந்த
அமைப்புகளோடு ஈழ விடுதலை அமைப்புகளுக்கு
இருந்த உறவுகள்,சமகாலத்தில் போராட்டத்தில்
இறங்கிய இரண்டு தேசங்களின் இன்றைய நிலை
ஆகியவைகளை ஆய்வு செய்து பாடம் கற்பதையும்
தோழமை உணர்வை வளர்த்தெடுப்பதையும் தவிர்த்துவிட்டு
யூதர்கள் பாலஸ்தீன மன்னை ஆக்கிரமித்ததை
தேச மீட்பாக சித்தரிக்கும் இவர்களின் அறியாமையை
என்னவென்று சொல்ல ?

யூதர்கள் தங்கள் தேசம் என்று கருதியதை மீட்டார்கள்
என்று இவர்கள் கருதுவார்களேயானால் சிங்களர்கள்
தங்கள் தேசம் என்று கருதுவதை தமிழர்களிடமிருந்து
மீட்கும் செயலைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்
என்று கொள்ள வேண்டி வரும்.அவ்வாறு கொள்வதில்
சம்மதமா இவர்களுக்கு?

அறத்தின் அடிப்படையில் நிகழ்ந்த தேசிய விடுதலை
போர்களை பின் தள்ளி,இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை
முன்னிறுத்துவதன் மூலம் ஈழ விடுதலை கோரிக்கையை
அவமதிக்கும் செயலைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்
இந்த ஈழ ஆதரவாளர்கள்.


அதே சமயம்,இஸ்ரேலை கண்டித்துக்கொண்டு சிங்கள
அரசின் ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைகள் பற்றி
வாய் திறக்காமல் இருந்த சில தமிழக பிழைப்புவாத
இஸ்லாமிய அமைப்புகளின் தலைமைத்துவங்களை
நாம் கண்டிப்பதும் அவசியமாகிறது.

இரண்டு தேசிய விடுதலைபோராட்டங்களின் சமகால
நிலை பற்றி நாம் சற்று அலச முயலலாம்.முதலில்
இரு போராட்டங்களும் தங்கள் இறுதி இலக்கை எட்டும்
இலட்சியத்தில் வெற்றி பெறவில்லை என்கிற உண்மையை
ஒப்புக்கொண்டாக வேண்டும்.புலிகள் தங்கள் கட்டுப்பாட்டு
பகுதிகளை முழுமையாக இழந்திருக்கின்றனர்,ஹமாஸ்
தனது கட்டுபாட்டு பகுதிகளில் தனது நிர்வாகத்தை
தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டுமே சிறு
வேறுபாடு.

இரு போராட்டங்களுக்கும் இடையே இருக்கும் சில
ஆச்சரியமான ஒற்றுமைகள் நமக்கு புலப்படுகின்றன
ஆயுத போராட்டத்தில் துவங்கி,உலக ஏகாதிபத்திய
நாடுகளின் சதியால் தனது கனவு தனது கண்முன்னே
கலைந்துகொண்டிருப்பதை பார்த்துவிட்டு மறைந்து
போனார் யாசர் அராபத்.அவரின் கட்சி இன்று
பிழைப்புவாத ஊழல் அரசியலில் மூழ்கி ஒரு சரியான
போராட்டத்தை முன்னெடுக்கும் தகுதியை இழந்து
நிற்கையில் ஹமாஸ் அந்த பொறுப்பை முன்னெடுத்து
நகர்ந்துகொண்டிருக்கிறது.

இலங்கை பேரினவாத அரசுடன் சமரசத்தின் மூலம்
தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க முயன்ற,
மற்றும் பிழைப்புவாத தமிழர் அரசியல் தலைமைத்துவங்களை
புறக்கனித்து ஆயுத போரட்டத்தை முன்னெடுத்த புலிகள்
தங்கள் தேசத்தின் பெரும்பகுதியை மீட்டு சில மாதங்கள்
முன்புவரை தங்களிடம் வைத்திருத்து உலக ஏகாதிபத்திய
நாடுகளின் சதியால் இன்றைக்கு அதனை இழந்திருக்கின்றனர்.

பாலஸ்தீனத்தில் பிழைப்புவாத ஏகாதிபத்திய ஆதரவாளர்கள்
ஒருகட்சியின் கீழ் எளிதில் அடையாளம் காணகூடியவர்களாக
இருக்கையில் ஈழத்தில் டக்ளஸ்,கருணா,ஆனந்தசங்கரி
குழுக்களும் மேலும் இடதுசாரி,மனித உரிமை முகமூடிகளுடன்
பல குழுக்களும் உள்ளன.

புலிகளிடமிருந்து ஆயுதங்களை களைந்தது போல
ஹமாஸிடமிருந்து ஆயுதங்களை களைவதில்
இஸ்ரேல்,அமெரிக்க வட்டாரங்களுக்கு இருக்கும்
அரசியல் ரீதியான நிர்பந்தங்களால் ஹமாஸ்
ஆயுதங்களுடன் போராட்டத்தை தொடர்கிறது.

மக்களின் அரசியல்ரீதியான போராட்ட வழிமுறைகள்
மூலம் எதிரியை தோற்கடிப்பது என்பதற்கு மிகசிறந்த
உதாரணமாக பாலஸ்தீன மக்களின் இண்டிபதா
போராட்டங்கள் இடையில் நிகழ்ந்துகொண்டிருந்ததையும்
நாம் அறிவோம்.

ஆயுதபோராட்டத்தின் மூலமே தேசவிடுதலையை
வென்றெடுப்பதில் புலிகளுக்கு சாதகமான வாய்ப்புகள்
இருந்ததை நாம் மறுப்பதிற்கில்லை.ஆனால்
இன்றைக்கு மாறியிருக்கும் உலக சூழலில் அரசியல்
போராட்டங்களின் மூலமே தேசவிடுதலையை முன்நகர்த்த
வேண்டிய தேவை எழுந்திருக்கும் நிலையில் பாலஸ்தீன
மக்களின் அரசியல் போராட்ட வழிகளை அவர்கள்
கடைபிடிப்பதன் மூலமே தங்கள் மக்களுக்கான
கடமைகளை நிறைவேற்ற முடியும்.

தமிழீழத்தின் எல்லைகளில் ஆயுதங்களோடு நின்று
உலக நாடுகளின் வணிக சூறையாடல் மற்றும் ராணுவ
மேலாதிக்க நடவடிக்கைகளை தடுத்துக்கொண்டிருந்த
புலிகள் இனி மக்களோடு நின்று ஆயுதங்கள் இல்லாமல்
அந்த வேலையை செய்ய வேண்டியிருக்கும்.அந்த
வேலையில் காந்தி என்கிற கடைந்தெடுத்த பிற்போக்கு
அரசியல்வாதியின் வழியை கடைபிடிக்கபோகிறார்களா
இல்லை பாலஸ்தீனம்,பொலிவியா,லால்கார்,காஸ்மீர்
என்று மக்களின் அரசியல் போராட்டங்கள் தந்திருக்கும்
படிப்பினைகளை கற்றுக்கொண்டு இவ்வகையான
போராட்டங்களை முன்னெடுக்கப்போகிறார்களா
என்கிற கேள்விக்கான பதிலில்தான் ஈழவிடுதலையின்
சாரமே அடங்கியுள்ளது.

காந்தியின் வழி என்பதும்,தன் மீது திணிக்கப்பட்ட
தீர்வுக்கு பணிந்த யாசர் அராபத்தின் வழியும்
அப்பட்டமான,ஏகாதிபத்திய நாடுகளின் நலன் காக்கும்
பிற்போக்குதனமான அரசியல் நடவடிக்கைகள் என்கிற
புரிதலோடு முன்னெடுக்கப்படும் அரசியல் போராட்டங்கள்
மட்டுமே ஈழ விடுதலையையும் பொதுவாக ஒடுக்கப்படும்
எல்லா தேசிய இனங்களின் விடுதலையையும் சாதிக்க
இன்றிருக்கும் வழியாகும்.

அதிகரித்திருக்கும் ராணுவ தொழில்நுட்பங்கள் ஆயுத
போராட்டத்தின் சாத்தியங்களை உலகெங்கும் குறைத்துக்
கொண்டிருக்கிற வேலையில் எப்படி ஒடுக்கப்பட்ட
மக்களுக்கானபோராட்டத்தை முன்னெடுப்பது என்பதை
நேபாளத்திடம் இருந்தே கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.



மக்களை அரசியல் ரீதியாக பயிற்றுவித்து,தங்களுக்கான
தளப்பிரதேசங்களை உருவாக்கிகொன்டு ஜனனாயக அரசில்
பங்கேற்கும் முடிவை எடுத்ததன் மூலம் அந்நிய நாடுகளின்
நேரடி மறைமுக படைநடவடிக்கைகளையும்,மக்களின்
உயிரிழப்புகளையும் தவிர்த்து,நிழல் தளபிரதேசங்களை
பாதுகாத்து நேபாள அரசியலில் தங்கள் புரட்சிகர இடத்தை
தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள் மாவோயிஸ்ட்டுகள்.

வேறுபட்ட களநிலைமைகள் இருந்தாலும் நேபாளத்தின்
மாதிரியே இன்றைய காலகட்டத்துக்கு புரட்சிகர மற்றும்
தேசிய விடுதலை இயக்க முன்னெடுப்புகள் மீது தாக்கம்
செலுத்த வேண்டியதாக இருக்கிறது.

உலகையே பாசிசமயமாக்கிக்கொண்டிருக்கும்,பூமியின்
செல்வத்தையும்,அதிகாரத்தையும் தங்கள் கைகளில்
மேலும்,மேலும் குவித்துக்கொண்டிருக்கும் சிறிய மனித
விரோத குழுக்கள் இயற்கை வளங்களை சூறையாடி
புவிவெப்பத்தை அதிகரிப்பதன் மூலமும்,ஈவு இரக்கமற்ற
சுரண்டல் அரசியல் மூலமும் மனித சமூகத்தின்
இருத்தலையேகேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும்
நிலையில்அதற்கு எதிராக சோசலிசம் சார்ந்த மக்கள் நல
அரசுகளின்வடிவத்திலேயே மனித இருத்தலுக்கான
போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருப்பதை நம்
சமகாலம் உணர்த்துகிறது.

எதிர்கொள்ளும் யதார்த்தங்களை சரியாக மதிப்பிட்டு
அரசியல் போராட்டம் மற்றும் ஆயுத போரட்டம்
இரண்டில் எதை முன்னிறுத்துவது,இரண்டையும்
ஒருங்கிணைப்பது எப்படி?,மற்றும் மக்களின் உச்சபச்ச
நலன்களின் அடிப்படையில் போராட்டத்தை தக்கவைப்பது
எப்படி? ஆகிய கேள்விகளுக்கு உலக புரட்சிகர சக்திகளும்,
தேசிய விடுதலை இயக்கங்களும் அளிக்கும் செயல்பூர்வமான
பதிலில் மட்டுமே மனித விடுதலையும் இருத்தலும்
சாத்தியமாகும்.


தேசிய இன விடுதலை பற்றிய இந்த கட்டுரையை
ஒரு பாலஸ்தீன கவிதையுடன் நிறைவு செய்துகொள்ளலாம்.

எனது நாட்டில் ஒருசாண் நிலம்
எஞ்சி இருக்கும்வரை
என்னிடம் ஒரு ஒலிவ் மரம் எஞ்சி இருக்கும்வரை
ஒரு எழுமிச்சை மரம்
ஒரு கிணறு,ஒரு சப்பாத்திக் கள்ளி
எஞ்சி இருக்கும்வரை

ஒரு சிறு நினைவு
ஒரு சிறு நூலகம்
ஒரு பாட்டனின் புகைப்படம்,ஒரு சுவர்
எஞ்சி இருக்கும்வரை

அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை
நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை
கவிஞர்கள்
அந்தர் அல் -அப்ஸ் கதைகள்
பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான
யுத்த காவியங்கள்
எனது நாட்டில் இருக்கும்வரை

எனது கண்கள் இருக்கும் வரை
எனது உதடுகள்,எனது கைகள்
எனது தன்னுணர்வு இருக்கும் வரை
விடுதலைக்கான பயங்கரப் போரை
எதிரியின் எதிரில்
நான் பிரகடனம் செய்வேன்.

மஹ்மூட் தார்வீஷ்

லோகாயத சித்தர் பாடல்

தமிழர்களின் மரபில் மார்க்சியத்தின் அறிமுகமும்,
பெரியாரின் பகுத்தறிவு கால எழுச்சியும் தொடங்குவதற்கு
முன்பாக இருந்த பார்ப்பன எதிர்ப்புடன் கூடிய மனிதத்துவ
அரசியலின் வேர்களை நாம் தேடினால் அந்த தேடல்கள்
நம்மை சித்தர்களிடமே கொண்டு சேர்க்கும்.
பொதுவாக ஒரு குறியீடாக மட்டுமே சில கடவுளர்
பெயர்களை தங்கள் பாடல்களில் பயன்படுத்தினாலும்
பெரும்பாலான சித்தர்கள் மனிதத்துவ அரசியலையே
முன் நிறுத்தியதை நாம் அறிவோம்.ஆனால் முழுக்க
முழுக்க கடவுள் மறுப்பையும் பொருள்முதல்வாத
அரசியலையும் அடித்தளமாகக் கொண்டு தனது
பாடலை பாடியிருக்கிறார் லோகாயத சித்தர்.

பரிணாம வளர்சியின் மூலம் மனிதன் உருவானது
பற்றிய அறிவு,பார்ப்பனர்களால் கட்டமைக்கப்பட்ட
சாதியம் பற்றிய புரிதல் மற்றும் அவர்களின்
வேதங்களை சாடுதல்,இனக்குழு வாழ்கையின்
நடுகற்களும் சிறுதெய்வங்களும் பார்ப்பனிய
மயப்படுத்தபட்டதை சுட்டிகாட்டுதல்,புத்தர்
திருவள்ளுவர்,திருமூலர் எழுத்துக்களில் திரிபுகள்
செய்யப்பட்டதை குறித்தல் என்று ஒற்றை
பாட்டில் லோகாயத சித்தர் செல்லி செல்லும்
விசயங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

ஓரளவு புரியக்கூடிய எளிய தமிழிலேயே
பாடல் இருப்பதால் அப்படியே பதிவிடுகிறேன்.



பொருளும் இருப்பும் இயற்கையும் முதன்மை -நாம்
போற்றும் உணர்வெண்ணம் இரண்டாம் தன்மை
கருதும் நம் ஆத்துமா அறிவின் துடிப்பு - அதனை
க்டந்ததுமே கடவுள் எனல் கற்பனை பிடிப்பு

இயற்கையே மானுடர் வாழ்விற்கு வழியாம் -அவ்
இயற்கையே எண்ணத்தின் மேலான வழியாம்
இயற்கையை வென்றதும் மானுடம்தானே -இவ்
இயற்கைக்கு மேல் ஒன்றும் இல்லை என்பேனே

விலங்கிலிருந்து வளர்ந்தவர் நாமே - பின்
விலங்காண்டி ஆனதும் மாந்தர்கள்தாமே
உலகில் இயற்க்கையில் கற்றனர் பாடம்-மன
ஆறாம் அறிவாலே உற்றனர் மாடம்

உழைப்பே மனிதனின் உன்னத ஆற்றல் -கடும்
உழைப்பினால் வந்ததே உயர்வு முன்னேற்றம்
உழைத்துப் படைத்தது மானிடம் அன்றோ -அட
அதனின் உயர்ந்தது உண்டெனல் நன்றோ

மாறிக்கொண்டிருப்பது மாளா இயற்கை - தன்
மாற்றத்தில் படைத்தது மாந்தர் இனத்தை
ஏறிகொண்டிருந்திடும் காலப்பிடியில் - மனிதன்
எத்துனை புதுமைகள் செய்தான் முடிவில்

பொருளே உலகத்தில் சாகா உயிர்கள் - அந்த
பொருளின் இயக்கமே வையப் பயிர்கள்
பொருளே வளர்ச்சியின் தொட்டில் அந்த
பொருளின்றி இல்லை சிறப்புடை தொட்டில்

மனிதனுக்கு மேலொரு தெய்வமும் இல்லை -இந்த
மானுடம் போலொரு மெய்மையும் இல்லை
மனிதன் இயற்கையின் எதிரொலிச் சின்னம் -உழைப்பு
மனம் இல்லையேல் அவன் விலங்கான்டி இனம்

செத்தவர்க்காகவே நட்ட நடுகற்கள் - பல
தெய்வங்களாம் இவைநச்சுமிழ் பற்கள்
உய்த்துணரா முன்னம் இயற்க்கையின் போக்கை -அட
உண்டாக்கினர் கடவுளின் நோக்கை

உண்மையை கானும் அறிவில்லா போது - கடவுள்
உருவாகி உலகில் உண்டாயிற்று தீது
உண்மை ஒளி அறியாமையை தக்க - சில
ஞானிகள் தோன்றினர் வைய்யகத்தை காக்க

வந்தேறிகள் சிலர் நாட்டில் புகுந்தார் - இயற்கை
வாழ்வுணராமலே தீமைகள் தந்தார்
சிந்தனை இல்லா நெஞ்சில் சேர்ந்தது தீமை - பல
சிறுதெய்வ கூட்டங்கள் சேர்ந்தன ஆமை

காலங்கள் தோரும் அறிவின் குறைவு - தான்
கண்டதே கொண்டதே கடவுளின் நிறைவு
காலங்கள் மாறிடும் காகங்கள் தோறும் - உள்ள
கடவுள்களின் மத வேரும் பேரும்

அறிவுடை கடவுள்கள் ஒன்றேனும் இல்லை - கடவுள்
அவ்வவ் இனத்தின் அறியாமை எல்லை
செறிவுடை சிந்தனை தெளிந்தநீர் ஊற்று - தான்
தெய்வத்தின் தப்பெண்ணத்திற் கொரு கூற்று

அறியாமை அச்சம் தவறுகள் யாவும் - உலகில்
ஆக்கின தேக்கின மாயும் பொய் தேவும்
குறியான விஞ்னானம் நேர்படவில்லை - மத
குருக்கலும் மன்னரும் கொடுத்தனர் தொல்லை

வேதங்கள் ஆவது பேசின் பேச்சு - உள
உபநிடதங்கள் அச்சத்தின் மூச்சு
பூதங்கள் ஐந்துக்கு மேல் இல்லை ஒன்று கூறும்
புராணங்கள் யாவுமே பொய்மையின் குன்று

அறியாமை அச்சம் தவறுகள் யாவும் - உலகில்
ஆக்கின தேக்கின மாயும் பொய் தேவும்
குறியான விஞ்னானம் நேர்படவில்லை - மத
குருக்கலும் மன்னரும் கொடுத்தனர் தொல்லை

வேதங்கள் ஆவது பேசின் பேச்சு - உள
உபநிடதங்கள் அச்சத்தின் மூச்சு
பூதங்கள் ஐந்துக்கு மேல் இல்லை ஒன்று கூறும்
புராணங்கள் யாவுமே பொய்மையின் குன்று

சாத்திரம் என்பது சண்டை சரக்கு - அட
சமயங்கள் பகைமை பனைக்கள் இரக்கு
தோத்திர குப்பைகள் மூடர்கள் கூச்சல் - எண்ணத்
தொலையாத தர்க்கங்கள் பொஞ்ஞானக்காய்ச்சல்

செல்லரித்துப்போன வேதத்தின் பாட்டும் -உலகில்
செலவானியாகாத சமயத்தின் கூட்டும்
வல்லமை வாய்ந்த நல் காலத்தின் போக்கால் -மக்கள்
வாழ்வில் சலிப்புறும் ஒடிந்திடும் தேர்க்கால்

வேதாந்தம் என்பது வெறும் வெத்து வேட்டு - வேத
வியாக்கியானம் எல்லாமே பொருந்தாத பூட்டு
நாதாந்த்ம் என்பதும் பொய்புனை சுருட்டு - அட
நமசிவாயம் தன் நலமான புரட்டு

ஆன்மீக வாதம் ஒரு செத்த பிணங்காண் - வேத
ஆகமங்கள் யாவும் புற்று நோயின் ரணங்காண்
ஆன்மா என்பதும் பொய்யின் கற்ப்பனை - வெறும்
ஆத்திகம் என்பது தன்னல விற்ப்பனை

அடுத்த உலகம் என்றொன்றும் இல்லை - கோள்
அடுத்த தல்லால் வேறுலகமும் இல்லை
படுத்தும் நரகமும் சொர்க்கமும் இல்லை - மக்கள்
பண்படா காலத்தில் புகுந்த ஒர் தொல்லை

நன்மையின் ஆற்றலை தந்ததும் உண்மை - மனிதர்
நாளும் உயர்ந்திட செய்ததும் உண்மை
புண்மைகள் தீர்த்தது பகுத்தறிவாட்சி - தனை
புரிந்திட வைப்பதே லோகாதய மாட்சி


புத்தன் திருவள்ளுவர் சீல திருமூலர் - இந்த
பூமியிலே பிறந்து சிறந்த நல்சீலர்
எத்தனை பொய்புனை அவர்களின் நூலில் - பல
எத்தர்கள் இட்டனர் பிழைகளை காலில்

உண்மையும் எண்ணையும் இறுதியில் வெல்லும் - உலகில்
ஓங்கிடும் காற்றினால் பிரியும் நெல்லும் புல்லும்
மண்ணில் உலோகாயதமே உயரும் - கால
மாறுதல் வாய்மையின் பாலை நுகரும்

உழைக்காமல் உண்ணுவோர் தீயபாழ் ஊள்ளம் - இந்த
உலகத்தில் தோற்றிற்று மதமான பள்ளம்
பிழையே பிழைப்பாக சாதிகல் தந்தார் - மக்கள்
பேதத்தில் வாழ்வை சுரண்டி உவந்தார்

இயற்கை வளங்களை கண்டவன் மனிதன் - மக்கள்
ஏற்றத்தில் கவற்றை இணைத்தவன் மனிதன்
செயற்கை வளங்களை செய்தவன் மனிதன் - தனை
செய்யகூட தெரியாதவன் கடவுளா - புனிதன்?

மனிதனே சமூகத்தில் உயிருக்கு நாடி சமய
மதங்கள் வளர்ந்தன கடவுள்கள் கோடி
மனிதனே உலகத்தின் தலைவன் - அவனே
அணைத்துக்கும் மாண்புள்ள புலவன்

நெய்யினால் நெருப்பை அணைக்க எண்ணாதே அறிவு
நியாத்தால் லோகாயதம் மறைக்க எண்ணாதே
பொய்யிது மாயைதான் வாழ்வென்ருரைப்பீர் - உம்
பெண்டாட்டி பிள்ளை பெற்றொறை எங்கொளிபீர்

உலகத்தில் அனைட்துயிர் உருவங்கள் இறக்கும்
உயிர்மட்டும் என்றென்றும் இறவது இருக்கும்
உலக இயற்கையை வெல்வதே வாழ்கை
உலகில் நிலையாமை பேசிடல் தாழ்க்கை

தகுதியின் மிகுதியே வெல்லும் - இந்த
தங்கவேல்லோகாயதரின் சொல்லும் வெல்லும்
மிகுதியாம் பொய்யாதே சமயங்கள் ஒடும் - நாளை
மேன்மையாம் மெய்வாழ்க்கை ஒத்திசை பாடும்

Tuesday, July 28, 2009

இரட்டை மைய உலகில் தேசிய இன போராட்டங்கள்



இரட்டை மைய உலகில் ஈழப்போராட்டம் என்று தலைப்பிடலாம்
என்று கருதினாலும் ஈழவிடுதலை போராட்டத்துக்கு இன்றைக்கு
ஏற்பட்டிருக்கும் பின்னடைவின் பின்னனியில்,உலகமெங்கும்
நிகழு வேண்டிய தேசிய இனங்களை அடிப்படையாக கொண்ட
வர்க்கப்போராட்டங்களை பற்றி ஆய்வு செய்ய வேண்டிய
தேவை இருப்பதால் இந்த தலைப்பு.

இந்திய மாவோயிஸ்ட்டுகள்,விடுதலைப்புலிகளுக்கு
ஏற்பட்டிருக்கும் பின்னடைவு தெற்கு ஆசிய தேசிய
விடுதலை இயக்கங்கள் மற்றும் புரட்சிகர
இயக்கங்களின் ஆயுதபோராட்ட முன்னெடுப்புகள் மீது
எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட
சில தினங்களிளேயே இந்திய உள்துறை அமைச்சர்
சிதம்பரத்தின், இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்களில்
செயல்படும் தேசியவிடுதலை இயக்கங்கள் பற்றிய
கருத்து வெளியாகி இருக்கிறது.

அதில் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் ஆயுதமேந்திய
குழுக்கள் இந்தியாவின் வளர்சிக்கு மிகப்பெரிய இடையூறாக
விளங்குவதாகவும் அவைகளுக்கு எதிராக அரசு கடுமையான
நடவடிக்கைகளை எடுக்கும் எண்ணத்தில் இருப்பதாகவும்
அறிவித்திருக்கிறார்.

இந்திய காங்கிரசு அரசும்,மகிந்தவின் இலங்கை அரசும்
கடைபிடிக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் வணிக சூறையாடலுக்கு
ஆதரவான பொருளாதார கொள்கைகளை தனது கட்டுப்பாட்டில்
இருந்த பகுதிகளில் நிகழ்த்த அனுமதி அளித்திருக்கும் முன்னால்
புலி கருணா அமைச்சராகியிருப்பதையும் அந்த வணிக
சூறையாடலுக்கு தங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளை
திறந்துவிட மறுத்த புலிகள் இந்தியா தலைமையில்
முன்னெடுக்கபட்ட போரில் பின்னடைவை சந்திருப்பதையும்
இன்று காண்கிறோம் நாம்.

உலகில் கடைசி ஒரு மனிதனே இருந்தாலும் அவனிடமும்
லாபம் பெற ஏதேனும் வழி தேடும் முதலாளித்துவம் என்கிற
கூற்று இன்றைக்கு,தாங்கள் புகாத ஒரு பிடி நிலமும்
இருக்ககூடாது என்று வரிந்துகட்டிகொண்டு செயல்படும்
ஏகாதிபத்திய அரசுகளின் நடவடிக்கைகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.அதன் தொடர்சியாகவே
சிதம்பரத்தின் கருத்துக்களை பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் இன்றைக்கு மாறியிருக்கும் உலக ஒழுங்கை
பரிசீலனைக்கு உட்படுத்துவதன் மூலம் மட்டுமே உலகின்
ஒடுக்கபட்ட மக்களுக்கான விடுதலை போராட்டங்களை
சரியான திசையில் முன்னெடுக்க வழிகள் காணப்பட முடியும்.

டெங் சியாவோ பிங் தலைமையில் முதலாளித்துவபாதைக்கு
திருப்பபட்ட சீனாவில் சற்று காலம் காணப்பட்ட வளர்ச்சியை
புலிகளின் அறிவுதுறையை சேர்ந்தவர்களே பாராட்டுகிற
மனப்போக்கை கண்டுவந்திருக்கிறோம் நாம்.அதே சீனாதான்
தனது ஏகாதிபத்திய வல்லாதிக்க நலன்களுக்காக ஈழ
விடுதலை போராட்டத்தை ஒடுக்குவதில் முன்னால் நின்றது
என்கிற உண்மை வெளிப்பட்டிருக்கிறது இன்று.


சோசலிச நிர்மாணத்தில் ஈடுபட்ட நாடுகளில் நிகழ்ந்த
தவறுகள்பற்றியும்,அதிகாரத்துவத்தால் ஏற்பட்ட
பின்னடைவுகள்,தனிமனித உரிமைகள் மீறபட்டது பற்றிய
புலிகளின் விமர்சனங்களையும் கண்டிருக்கிறோம்.
ஆனால் அவர்களின் அந்த விமர்சனங்கள் ஏகாதிபத்திய
நாடுகளிடமிருந்து எந்த பலனையும் அவர்களுக்கு
பெற்றுக்கொடுக்கவில்லை.ஏகாதிபத்திய கட்டத்துக்கு
வளர்ந்துவிட்ட முதலாளித்துவத்துக்கு எந்த புரட்சிகர
பாத்திரமும்இல்லை என்பதையும்,தனிமனித ஊக்குவிப்புகள்
மூலம் சாதிக்கப்படும்முதலாளித்துவ வெற்றிகள் சிறிது காலம்
மட்டுமே நிலைக்கும் என்பதையும் புலிகள் இனிமேலாவது
உணர்ந்துகொண்டால் நல்லது.

மேலும் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைகள் தொடர்பாக
ஈழ ஆதரவாளர்களிடையே நிலவிவரும் குழப்பத்தை பற்றியும்
இங்கே நாம் சற்று குறிப்பிட வேண்டியிருக்கிறது.நமது
நண்பர்கள்சிலர் சொல்லிக்கொண்டிருந்ததுபோல முழு
அமெரிக்க சார்புநிலையிலேயே இந்தியா இருந்தது என்பது ஒரு
தவறான அவதானிப்பாகும்.சீன,ரஸ்ய,தலைமையில்
உருவாகியிருக்கும் அணியின் பக்கம் சாய்வதா அல்லது
அமெரிக்க சார்பு நிலையிலேயே தொடர்வதா என்கிற கேள்விக்கு
எந்த முடிவையும் எடுக்காமல் தாமதிப்பதன் தனது பேரம்
பேசும் திறனைஉயர்த்திக்கொள்வதிலேயே காலங்களை
(குறிப்பிட்டுச் சொன்னால் கடந்த பத்துமாதங்களாக)
செலவிட்டுக்கொண்டிருந்து இந்தியா.

அமெரிக்க சார்புநிலையிலேயே தொடர விரும்பிய பாராளுமன்ற
அதிகாரவர்க்கத்துக்கும் சீன சார்புநிலையை நோக்கி இழுக்க
முயன்றபாராளுமன்றம் தாண்டிய அதிகாரவர்க்கத்துக்கும்
(இந்து ராம்,சுப்பிரமணியசாமி,எம்.கே நாராயணன் வகையறாக்கள்)
இடையே நிகழ்ந்த பகை முரண்பாடு இல்லாத மோதல்களின்
காலம்தான் இந்த பத்துமாதங்கள்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அதிகரிக்கும் ராணுவ உதவிகளை
சுட்டிக்காட்டி கண்டிப்பது,ரிலையன்சின் ஈரானுடனான
வர்த்தகத்தை தடுக்கும் அமெரிக்காவை குறை கூறுவது ஆகிய
விடயங்கள் மூலம் சீனசார்பு நிலையை எடுக்க
தூண்டிக்கொண்டிருந்தனர் பாராளுமன்றம் தாண்டிய
அதிகார வர்க்கத்தினர்.

இந்திய முதலாளிகளின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்படும்
இந்திய வெளியுறவு கொள்கை முடிவுகளில் இருந்த இந்த நிலை
இன்றைக்கு உடைந்திருக்கிறது.

உலக அனுசக்தி கழக நாடுகள் Enrichment and reprocessing
தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு விற்பதை தடுக்கும்
மிரட்டல் மற்றும்அமெரிக்கா இந்தியாவுக்கு விற்கும்
ஆயுதங்களின் இறுதி பயன்பாட்டை சோதனை செய்துகொள்ள
இந்திய அரசு அமெரிக்காவை அனுமதிப்பது தொடர்பான
ஒப்பந்தம் மூலம் தனது முகாமைவிட்டு நகர முயன்ற
இந்தியாவை தட்டிவைத்துவிட்டு சென்றிருக்கிறார்
ஹிலாரி கிளிண்டன்.அதன் தொடர்சியாகவே
சீனபொருட்களுக்கான இறக்குமதி விதிகளை
கடுமையாக்கியிருக்கிறது இந்திய அரசு.

நடந்துகொண்டிருந்த அரசியல் நிகழ்வுகளை புலிகளும்
ஈழ ஆதரவாளர்கள் சரியான முறையில் உள்வாங்கவில்லை
என்பதை காட்ட மேலும் ஒரு விசயத்தை நாம்
காண வேண்டியிருக்கிறது.

பிரசந்தா தலைமையிலான நேபாள மாவோயிஸ்ட் கட்சி சீன
சார்பு நிலையை எடுத்திருப்பதாக இன்றைக்கும் சில கருத்துக்கள்
ஈழ ஆதரவாளர்களால் முன் வைக்கப்படுகின்றன.தனது
சார்புநிலை எடுத்திருந்த கட்சியை ஆட்சியை விட்டு இறக்குவதில்
தீவிரமாகஈடுபட்ட தனது பகைநாடான இந்தியாவை எதிர்த்து சீனா
எந்த நடவடிகையையும் ஏன் எடுக்கவில்லை,பிரசந்தாவின்
ஆட்சியை காப்பாற்ற முயலவில்லை என்பதற்கான பதிலை
பிரச்சனைகளை தட்டையாக யோசிக்கும் இவர்களிடமிருந்து
பெற முடியாது.

மக்களின் நலன்களை முன்வைத்து நேர்மையாக போராட
முனைபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் புலிகளாக
இருந்தாலும் நேபாள மாவோயிஸ்டுகளாக இருந்தாலும்
சரி சீன ஏகாதிபத்தியத்துக்கும் இந்தியாவுக்கும் பகைவர்கள்தான்.
அந்த வகையில்தான் இந்தியாவும் சீனாவும் நேபாளத்தில்
மாவோயிஸ்டுகளை ஆட்சி பொறுப்பில் இருந்து
அகற்றுவதிலும்,ஈழத்தில் புலிகளை ஒடுக்குவதிலும்
கைகோர்த்து செயல்பட்டன.

தங்கள் தேசங்களின் இறையான்மையையும்,மக்களின்
நல்வாழ்வையும்முன்நிறுத்தி,தங்களின் ராணுவ
நலன்களுக்கும் வணிக நலன்களுக்கும் இடையூறு
விளைவிப்பவர்களாக மாவோயிஸ்ட்டுகளையும்,
புலிகளையும் இந்திய,சீன அரசுகள் சரியாக
புரிந்துகொண்டதாலேயே அவர்களை ஒடுக்குவதில்
ஒன்றினைந்து நின்றன.


உருவாகிவிட்ட இரட்டை மைய உலக ஒழுங்கு,அமெரிக்க,
சீன ரஸ்யமுகாம்களில் உள்ள நாடுகளிடையே ஏற்படும்
தற்காலிக நீண்ட காலஅணிசேர்ப்புகள்,அந்தந்த நாடுகளின்
முதலாளித்துவ வர்க்கங்கள்பற்றி சரியான மதிப்பீடுகளை
தொடர்ந்து மேற்கொள்வதன் மூலமாக மட்டுமே,தூய வடிவில்
நிகழும் புரட்சிகள் சாத்தியமில்லாத மூன்றாம் உலக நாடுகளில்
உள்ள தேசிய இன விடுதலைப்போராளிகள் தங்கள்
மக்களுக்கான கடமையை சரிவர ஆற்றமுடியும்.

இந்திய தேசியம்

இந்திய தேசியம்,இந்திய தேசிய ஒருமைபாடு.பாரத தேசம்
என்ற கூச்சல்கள் இடைவிடாது நமது செவிகளை தாக்கும்
வண்ணம் எழுப்பப்பட்டு வருகின்றன பல்தேசிய அரசு
சமூகமான இந்தியாவை ஒரு தேசிய சமூகமாக ஒரு பழமை
வாய்ந்த தேசமாக காட்டும் முயற்சியில் 3500 ஆண்டுகளுக்கு
முன் சிந்துவெளியில் வந்து குடியேறிய ஆரிய இனக்குழு
தலைவன் ஒருவன் பெயரால் பாரத தேசம் என்று பெயரிட்டு
அரசியல் சட்டத்திலும் பொறித்து கொண்டிருக்கிறார்கள் .

ஆனால் இந்தியா ஒரு தேசிய சமூகம் அல்ல என்பது
மட்டுமின்றி அது ஒரு அரசு சமூகமாக கூட இன்றைய
எல்லைகலுடன் 1947 க்கு முன் இருந்தது இல்லை
என்பதுதான் வரலாற்று உண்மையாகும் வெள்ளையர்
காலனிய ஆதிக்கத்துக்கு முன் இந்தியாவில் இருந்த மிகப்
பெரிய பேரசுகள் அசோக பேரரசு.துக்ளக் பேரரசு.ஒவுரங்கசிப்
பேரரசு ஆகியவையே.இப்பேரரசுகள் கூட இந்தியாவின்
இன்றைய பகுதிகள் அணைத்தையும் கொண்டிருக்கவில்லை.
அசாம் மற்றும் வட கிழக்கு பிரதேசங்களும் தென்னிந்தியாவின்
சில பகுதிகலும் இப்பேரரசுகளுக்கு உட்பட்டிருக்கவில்லை.
இந்திய வரலாற்றில் இப்பேரரசுகளின் காலமும் குருகியதே.
மற்ற பேரரசுகள் வ்ட இந்தியாவின் சில பகுதிகளிலோ,
தென்னிந்தியாவின் சில பகுதிகளிலோ மட்டுமே இருந்தன.


ஆங்கிலேயர் ஆட்சியில் பங்களாதேஸ்,நேபாளம்,பூட்டான்,
சிக்கிம்.பர்மா,பாகிஸ்தான்.இலங்கை ஆகிய நாடுகலும்
சேர்ந்தே இந்தியாவாக இருந்தது, அசோகர் அக்பர் பேரரசுகளில் ஆப்கானிஸ்தானும் இருந்தது.வெள்ளையர்கலுக்கு முன்பு
எந்த பேரரசிலும் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு
பிரதேசங்களிருக்கவில்லை.


எனவே 1947க்க் பிந்திய இந்திய நாடு அதற்க்கு முன்
இன்றைய எல்லைகலுடன் கூடிய அரசு சமூகமாக கூட
இருந்தததில்லை.உண்மை இவ்வாறிருக்க இந்தியா ஒரு
பழம் பெரும் தேசிய சமூகம் எனக் காட்டும் முயற்ச்சியில்
தரகு முதலாளித்துவ பார்ப்பனிய சக்திகள் கூட்டாக ஈடுபட்டுள்ளனர்,அவர்கலுக்கு வெவ்வெறு காரனங்களுக்காக
இந்தியாவை ஒரு தேசிய சமூகமாக காட்டுவது அவசியமாகிறது.


தரகு முதலாளிகளை பொறுத்தவரை அவர்கள்
ஏகாதிபத்தியங்களுடன் கூடி குலவிக்கொண்டிருக்கும்
வர்க்கம் அவர்களுக்கு நாட்டு நலன் மக்கள் நலன் என்பதைவிட
தமது பணப்பையின் நலன்தான் எப்பொழுதும் முக்கியமானது.
1857இல் நடை பெற்ற மாபெரும் கிளர்ச்சியில் படை வீரர்களும்
விவசாயிகளும் குறுநில மன்னர்களும்ம் ஈடுபட்டு
கொண்டிருந்தபோது சேட்டுகளும் தாக்கூர்களும் ஏகாதிபத்திய
கம்பெனிகலுடன் கூடி குலாவிக்கொண்டிருந்தததை
வரலாறு கூறுகிறது.


இந்த லேவாதேவி வணிக கும்பலை சேர்ந்த தரகர்கள் தாம்
பின்னர் ஏகாதிபத்தியங்களுடன் சேர்ந்து இந்தியாவின்
தொழில் துறையில் இறங்கினர்,ஏகாதிபத்தியத்தை சார்ந்து
இவர்கள் தொடங்கிய தொழில்கள் மற்றோரு வகையில்
கொள்ளை லாபம் ஈட்டி தரும் தொழிழ்களே என்பதால்
இவர்களின் தரகுதனமை மாறிவிடவில்லை.
இவர்களுடைய நலன் எப்போதும் நாட்டு நலன் மக்கள்
நலன்களுடனன்றி ஏகாதிபத்தியங்களுடனே
பிணைகப்பட்டிருக்கிறது.

இவ்வாறு தோன்றிய தரகு முதலாளிகளில்
மிகப்பெரும்பாலோனோர் இந்து மேல்தட்டு சாதிகளை
சார்ந்தவர்களாக இருந்தார்கள்.இவர்கள் யாவருமேதேனும்
ஒரு தேசிய இனத்துடன் கட்டுப்பட்ட சந்தை கொண்டவர்களாக
இல்லை.மாறாக அணத்திந்திய சந்தை கொண்டவர்கள்
இவர்களுடைய சந்தை நலன் பாதுகாக்கப்படுவதற்க்கு
அணைத்திந்திய ஒற்றுமை பாதுகாக்கப்படுவது
அவசியமாக இருக்கிறது.

இதற்க்கு மாறாக பார்ப்பனிய சக்திகள் பார்ப்பன -சத்ரிய
கூட்டின் மூலம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகலுக்கும்
மேலாக சாதிமுறை சமுதாய அமைப்பையும் அதில் தமது தலைமையாதிக்கத்தையும் ஒட்டுண்ணி வாழ்க்கையையும்
இந்தியா முழுவதும் கட்டிக்காத்து வந்துள்ளனர்.இதுவரை
ஆட்சியில் இருந்து வந்துள்ள எல்லா மன்னர்களுமே
அவர்கL இந்து மதத்தினறாயினும் வேற்று மதத்தவறாயினும் படையெடுத்துவந்து ஆட்சியை கைபற்றியவர்கலாயினும்
சரி எல்லோருமே பார்ப்பனர்கலுடன் சேர்ந்து இந்து வர்ண் சாதி
தர்மத்தையும் அதில் பார்ப்பனிய தலைமையாதிக்கத்தையும் ஒட்டுண்ணித்தனத்தையும் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.


இதை பாதுகாப்பதில் மவுரியர் ஆட்சியிலிருந்து நிலவிய குப்தர்
சார்வாகனர் முகலாயர்.மராட்டியர் விஜயநகர அரசுகள் சேர
சோழ பாண்டியர்கள் வெள்ளையர்கள் வரை யாரும்
விதிவிலக்காயில்லை சுல்தான்கள் ஆட்சியில் முஸ்லிம்
மதத்துக்கு மாறிய சூத்திரர்கள்தொடர்ந்தும் சூத்திரர்களாகவே மதிக்கப்பட்டார்கள்.ஷாஷகான் வேதங்களும் கீதையும் குரான்
போலவே இறை வழங்கிய மறைகள் எனக்கூறி மொழிபெயர்த்து பரப்பினார்.வெள்ளையர் ஆட்சி இதற்க்கு சற்றும் குறைந்ததல்ல
வாரன் கேஸ்டிங்ஸ் சாதி கோர்ட்டுகளை நிருவினார்.

மனு நூல் 1794 இல் இந்து சட்டம் என ஏற்றுக்கொள்ளப்பட்டது
இவ்வாறு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
ஆட்சியாளர்களுடன் கூட்டமைத்துக்கொண்டு தொடர்ந்து
சாதியாதிக்க சமூக அமைப்பையும் அதில் தமது தலைமையாதிக்க
ஒட்டுண்ணி வாழ்க்கையையும் பாதுகாத்து வந்துள்ள பார்ப்பன
சக்திகளுக்கு இனியும் அதை தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ள
இந்து மதமும் அதன் அடிப்படையிலான இந்திய ஒற்றுமையும் பாதுகாக்கப்படுவது அவசியமாக படுகிறது.


மொழிவழி அமைந்த மக்கள் சமூகங்கள்,தேசிய இனங்கள்
எழுச்சியுற்று அரசுரிமை பெற்ற நவீன தேசங்களாக அமைந்து
விடுமானால் அதில் ஒன்றுபட்ட இந்திய அரசியல் அமைப்பு
மட்டுமல்ல இந்து பார்ப்பனிய மதமும் புதைகுழிக்கு சென்றுவிடும்
அது அணைத்து இந்திய சந்தை கொண்ட தரகுமுதலாளிய
வர்க்கத்தையும் இந்து பார்ப்பனிய சக்திகளையும் புதைகுழிக்கு
அனுப்பிவிடும் எனவேதான் தரகு முதலாளிதுவ சக்திகளும்
பார்ப்பனிய சக்திகளும் இடைவிடாது இந்திய தேசம் இந்திய
தேசிய ஒருமைபாடு பழம்பெரும் பாரத தேசம் என்றெல்லாம்
இடைவிடாது கூச்சலிட்டு வருகிறார்கள்.

அவர்கள் கூறுவதுபோல் இந்திய மக்களையெல்லாம்
பிணைத்திருக்கும் அந்த ஒருமித்த பண்பாடு கலாசார
ஒருமைபாடு என்பதுதான் என்ன ?????கூட்டி கழித்து
பார்த்தால் பார்ப்பன சாதியை தலைமையிடமாக
கொண்ட பலபடித்தான சாதியாதிக்க சமூக அமைப்பு
அன்றி வேறல்ல.இந்தியாவில் இச்சாதிய அமைப்பு தலை
முதல் கால் வரை பரவியுள்ளது.அதை போலவே இச்சாதிய
அமைப்புக்கு புணிதமளிக்கும் கீதையும் புராணங்களும்
இந்தியா முழுவதும் பரவியுள்ளது.


பார்ப்பனர் தலைமையிலான சாதியாதிக்க சமூக அமைப்புதான்
பார்பனிய சமூக அமைப்பு.இச்சமூக அமைப்பு தெய்வீக தனமை
பொருந்தியது.மீற முடியாதது.மீறக்கூடாதது என்ற விதிகளை
ஆதாரமாக கொண்டு மனு,நாரதர் போன்றவர்கள் எழுதிய தர்ம
சாத்திரங்கள் போதிக்கின்றன.இத்தர்ம சாத்திரங்களே சமுதாய சட்டங்கள்,சாதியாதிக்க நெறியை விதிக்கும்இச்சமுதாய
சட்டங்களில் தலைமையிடம் வகிக்கும் பார்ப்பனர் மன்னுலக
தேவர்.இச்சட்டங்களை செயல்படுத்தும் மன்னர் கடவுளின்
அவதாரம் என்று பிரச்சாரம் செய்கின்றவையே புராணங்களும்
இதிகாசங்களும் இவைதாம் இந்து மதத்தின் இலக்கியங்கள்.
இந்த இலக்கியங்கள் மக்களை பார்ப்பனர்,சத்திரியர்,வைசியர்,
சூத்திரர் என்று நாண்கு வர்ணங்களாகவும் எண்ணற்ற
சாதிகளாகவும் பிரிக்கின்றன.இதில் பார்ப்பான் எல்லோருக்கும் முதன்மையானவன்.சூத்திரனும் வர்ணமற்றவர்களான
சண்டாளர்களும் எல்லோருக்கும் தாழ்ந்தவர்.

முதல் மூன்று வருணத்தாரும் இருபிறப்பாளர்கள்.சூத்திரர்கள்
அவர்களுக்கு அடிமை சேவகம் செய்யவே பிறந்தவர்கள்,இழி பிறவிகள்.அதனினும் இழி பிறவி சண்டாளன்,அதாவது
சமுதாயத்தின் ஒட்டுண்ணிகள் உயர்பிறவிகள்.உழைக்கும்
மக்கள் இழி பிறவிகள்,இவை எல்லாம் இந்து இலக்கியங்கள்
போதிக்கும் தர்ம நெறிகள்.இந்து இலக்கியங்கள் போதிக்கும்
இந்த பார்ப்பனிய வரண சாதி தர்ம நெறிகளே இந்து பண்பாடு.
இவைதாம் இந்திய மக்களை பிணைத்திருக்கும் கலாசார ஒருமைப்பாடு.ஒருமித்த கலாசாரம் என்பதெல்லாம் இதுதான்.
இதுதான் இந்திய பண்பாடு இந்திய தேசிய பண்பாடு,
பாரத பண்பாடு என்றெல்லாம் போற்றி புகழப்படுகிறது.

இந்திய தேசிய தலைவர்கள் என்பவர்களே இதை
ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.இந்திய தேசியத்தின்
தந்தை காந்தி கூறினார் 'நான் ஒரு சனாதன இந்து .
ஏனெனில் முதலாவதாக வேதங்களை நம்புகிறேன்
புராணங்களை நம்புகிறேன் மற்றும் எல்லா இந்து மத
ஆதார நூல்களையும் நம்புகிறேன்,இரண்டாவதாக நான்
வருணாசிரமத்தையும் இன்றைய வடிவத்தில் அன்றி
வேதங்கள் கூறி இருப்பதுபோல நம்புகிறேன்.மூன்றாவதாக
நான் பசுவதை தடையை நம்புகிறேன்.நானகவதாக
உருவ வழிபாட்டில் நான் நம்பிக்கையற்றவனாக இல்லை.
தேச்சத்தந்தையின் நம்பிக்கைகளுக்கும் விருப்பத்துக்கும்
மாராகவா ஒரு தேசம் உருவாகிவிட முடியும்?
இந்திய தேசத்தின் சாரமே இந்து பார்ப்பனியம் என்பதை
எல்லா இந்திய தேசிய தலைவர்களுமே ஒப்புகொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் ஒரே ஆட்சி மொழியாக இந்தி மொழியை
திணித்ததும் இந்த தரகு முதலாளித்துவ - பார்ப்பனிய ஆதிக்க
கூட்டே.தரகு முதலாளிகளுக்கு தமது அனைத்திந்திய சந்தை
நலனை காக்கும் பொருளாதார காரணங்களுக்காகஒரு பொது
மொழி அவசியம்,அதே நேரத்தில் அந்த மொழி இந்து பார்ப்பனிய
பண்பாட்டை பாதுகாக்ககூடியதாக இருப்பதும் அவசியம்.இந்து
பார்ப்பனிய பண்பாட்டின் மொழியாக கடந்த இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் மொழி சமஸ்கிருதம்.
அது பார்ப்பனர்களால் பார்ப்பனிய சமுதாயத்தினை
கட்டிகாப்பதற்காக உருவாக்கப்பட்ட மொழி. சமஸ்கிருதம்
என்றாலே செய்யப்பட்டது என்றுதான் பொருள்.



இருபிறப்பாலர்களுக்காவே உருவாக்கப்பட்ட இந்த மொழி
எப்பொழுதுமே மக்கள் மொழியாக இருந்ததில்லை.
பார்ப்பனர்கள் மண்ணுலக தேவர்கள் என்றும்
சத்திரியர்கள் கடவுளின் அவதாரங்கள் என்றும் தமக்கு தாமே
கூறிகொண்டதுபோல அவர்களுக்காகவே அவர்கள் உருவாக்கிக்
கொண்ட சமஸ்கிருத மொழிக்கு தேவ மொழி என்றும் அதன்
எழதுததுவடிவுக்குதேவநாகரி என்றும் பெயர் வைத்துகொண்டனர்.
உழைக்கும் மக்களை சூத்திரர் சண்டாளர் என்று இழிவுபடுத்தி
ஒடுக்கி வந்தது போலவே அவர்கள் பேசும் மொழிகளை சூத்திரபசை
என்றும் நீச பாசை எனறும் இழிவுபடுத்தி ஓடுக்கினர்.


தரகு-முதலாளித்துவ பார்ப்பனிய சக்திகள் மேலை
ஏகாதிபத்திய - பார்ப்பனிய கலாசாரத்தின் மேலாண்மையை
நிறுவி தேசிய மக்களின் மொழி.கலை.இலக்கியம்.
கலாசாரத்தினை நசுக்கி வருகின்றன,தரகு முதலாளித்துவ
-நிலபிரபுத்துவ வர்க்கங்களை சுற்றியுள்ள மிகசிறிய மேல்தட்டு சதவிகிதத்தினரின் கலாசாரம்தான் தரகு-பார்ப்பனிய கலாசாரம்,
மேலை ஏகாதிபத்திய கலாசாரமும் பண்பாடும் மொழியும்
வாழ்க்கைமுறையும் உயர்வாணவை விஞ்ஞானபூர்வமானவை.


பார்ப்பனிய வாழ்க்கைமுறையும் தேவ மொழியும் கலை
இலக்கியமும் நாகரிகமும் பண்பாடும் உயர்வானவை.
புனிதமானவை,போற்றபட வேண்டியவை.அதே நேரத்தில்
மிகபெரும்பான்மையாய் இருக்கும் தேசிய இன மக்களின்
(உழைக்கும்) மொழி கலை,இலக்கியம் பண்பாடு அணைத்தும்
இழிவானவை கைவிடபட வேண்டியவை,இது தரகு பார்ப்பனிய
கலாசாரத்தின் சாரம்.தரகு-பார்ப்பனிய நெறிகள் தமது
கலாசாரத்தின் ஆதிக்கத்தை நிருவியிர்ப்பதன் மூலம் தமது
சொந்த தேசிய வரலாறு,தத்துவம்.பண்பாடு,மொழி.இலக்கியம்
குறித்த அறியாமையையும்,தமது சொந்த தேசிய கலாசாரம்
குறித்த தாழ்வு மனபான்மையையும் அணைத்து தேசிய இன
மக்களிடையேயும் உருவாக்கி அவர்களை தமது கலாசார அடிமைகளாக்கியிருக்கின்றன.

தேசிய இன மக்களின் வரலாறும்,பண்பாடும் பார்ப்பனிய
வேத வரலாற்றின்.பண்பாட்டின் பகுதிகளாக கீழ்பட்டதாக ஆக்கபட்டிருக்கிறது,தேசிய மொழிகள் அனைத்தும்
பார்ப்பனிய தேவமொழிக்கு கீழ்பட்டதாக்கபட்டிருக்கிறது.
அனைத்து உழைக்கும் மக்களும் பார்பனர்களுக்கு கீழ்ப்பட்ட சாதிகளாக்கபட்டிருக்கிறார்கள்,வாழ்க்கைத்தரத்தில் கீழாகவும்
கல்வியறிவற்ற பாமரர்களாகவும் ஆக்கபட்டிருக்கிறார்கள்.

தேசிய அரசுரிமை எல்லைகள் இந்து பார்ப்பனிய அரசு
எல்லைகளால் விழுங்கபட்டுள்ளன, ஆங்கிலமும் இந்தி
மொழியும் ஆதிக்கபீடத்தில் இருக்க தேசிய மொழிகள்
பிராந்திய மொழிகளாக நசுக்கபடுகின்றன, தேசிய மொழிகளும்
கலை இலக்கியங்களும் ஆங்கில -பார்ப்பனிய மொழி
கலை இலக்கியங்களால் சிதைக்கபடுவதும்.ஆங்கில,
பார்ப்பனிய வாழ்க்கைமுறையை மேற்கொள்வதும் பெருமைக்குரியதாக்கபட்டிருக்கின்றன.


தேசிய இனமாக உருவாகி வரும் பழங்குடி மக்கள்
சமூகங்களில் இந்து பார்ப்பனிய கலாச்சாரத்தையும்.
இந்தி மொழி ஆதிக்கத்தையும் திணித்து அவர்களுடைய
மொழி கலாச்சாரத்தை ஒழித்து கட்டுவதன் மூலம்
அவர்களை இந்திய தேசியத்தின் அங்கமாக்கி வருகின்றன.
மொத்தத்தில் தரகு-பார்ப்பனிய சக்திகள் தேசிய இன மக்கள்
சமூகங்களை இந்திய தேசியத்தால் படிப்படியாக விழுங்கி
வருகின்றன,தேசிய இன மக்களின் தேசிய
தனித்தன்மைகளையும் உணர்வையும் அழித்து
அவற்றின் சுய வளர்ச்சியையும் தன்னம்பிக்கையையும்
முடமாக்கி அடிமைப்படுத்தி வருகின்றன.


தோழர் கார்முகில்

Monday, July 27, 2009

முல்லைப்பெரியாறும் துரோகத்தின் வரலாறும்


தமிழகத்தின் ஆறுகள் சிதைந்த வரலாறு:


நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர்.இன்றைய சூழலில்
சில ஆறுகள் இன்றி அமையாது தமிழகம் என்றே குறிப்பிடலாம்,
தாவரங்கள் விலங்குகள் மற்றும் மனித உயிர்களின் அடிப்படை
உயிர் ஆதாரங்களில் ஒன்று நீர்.மனித உயிர்களால் உற்பத்தி
செய்ய முடியாத நீர் ஆதாரமே இயற்கை வழங்கிய மிகப்பெரும்
கொடையாகும்.

மேலும் நீர் ஆதாரமானது மனித சமுதாயத்தின் உற்பதி
நடவடிக்கைகளான வேளான்மை மற்றும் தொழித்துறைக்கும்
அடிப்படையாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பெரும்பான்மை
உற்பத்தி நடவடிக்கையானது வேளான்மைத்துறை சார்ந்ததாகவே
இருக்கிறது.



இயற்கையாய் உருவெடுத்து தன்போக்கில் ஓடிக்கொண்டிருக்கும்
ஆறுகளை தடுத்தும் மறித்தும் திசைதிருப்பியும் அணைகளை
எழுப்பியும் உகந்த வகையில் பயன்படுத்த முடியும்.
தமிழ்நாட்டிலே ஓடிய வைகையாறு காவிரியாறு பவானியாறு
பாலாறு ஆரணியாறு தாமிரபரணியாறு கொறட்டலையாறு
பெண்ணையாறு கூவமாறு கடிலமாறு கொலுவனாறு வெள்ளாறு
ஓங்கூறாறு வராக ஆறு மலட்டாறு அக்கினியாறு அம்புலியாறு
வெண்ணாறு கொலுவணாறு பம்பாறு மணிமுத்தாறு கோதையாறு
போன்ற ஆறுகள் தமிழ்நாட்டின் குடிநீர்த்தேவையையும்
வேளான்மை உற்பத்தி தேவையையும் நிறைவு செய்து வந்தன.




அதே சமயத்தில் வேகமாக உருவெடுத்து வந்த தரகு
முதலாளித்துவ தொழிற்துறை ஆலைகளாலும்
பெருநகரங்கள் உருவாக்கத்தாலும் நச்சுகழிவுநீர் கலப்பாலும்
தமிழநாட்டில் ஓடிய பல ஆறுகள் சிதைந்தும் காணாமலும்
அழிக்கப்பட்டும் விட்டன. எஞ்சிய ஆறுகளும் நீரின்றி
வறண்டு கிடக்கின்றன.செருப்பு இருந்தால் மட்டுமே கடக்க
முடியும் என்கிற நிலையில் இன்றைய தமிழக ஆறுகள்
காட்சியளிக்கின்றன. இம்மாற்றங்கள் இயற்க்கையால மட்டுமே
நிகழ்ந்ததாக சொல்ல முடியாது. தமிழ்நாட்டை சுற்றியுள்ள
கருநாடகம் ஆந்திரம் மற்றும் கேரள அரசுகளின் துரோகங்களும்
அதற்கு டில்லி அரசு துணை சென்றது ஒரு காரணமாகும்.



இந்த வரிசையில் முல்லை பெரியாறு அணையிலும்
தொடர் துரோகங்கள்



முல்லை பெரியாறு நீர் யாருக்கு சொந்தம் அதன் வரலாறு என்ன?
பெரியாற்றின் உரிமைகளுக்காக போராடுவதன் பாதை என்ன ?
முல்லை பெரியாற்றில் தமிழர் உரிமையை வென்றெடுப்பது எப்படி?




முல்லை பெரியாறு அணை கட்டிய வரலாறு:


தமிழகத்தில் நெல்லை மாவட்டம் சுந்தரமலையில் உள்ள
சிவகிரி சிகரத்தில் தோன்றும் பெரியாறு தன்னோடு சின்ன
ஆறு சிறு ஆறு சிறுதோனி ஆறு கட்டப்பனையாறு
இடமலையாறு முல்லையாறு ஆகியவற்றையும்
சேர்த்துக்கொண்டு சுமார் 300 கிலோ மீட்டர்கள் ஓடி
இறுதியில் கொச்சி அருகே கடலில் கலக்கிறது.


தமிழக எல்லைக்குள் 56 கிலோ மீட்டர் தூரமும் தற்ப்போதைய
கேரள எல்லைக்குள் 244 கிலோ மீட்டர் தூரமும் பாய்கிறது.
அடர்ந்த வனப்பகுதிகலில் வழியாக பாய்ந்தோடும் பெரியாற்றின்
சமவெளி பகுதி 23 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே, பெரியாற்றின்
நீர் பிடிப்பு பகுதிகளில் சூன் சூலை ஆக்ஸ்டு மாதங்களில்
தென்மேற்கு பருவ மழையும் நவம்பர் திசம்பர் மாதங்களில்
வடகிழக்கு பருவ மழையும் பொழிவதால் ஆண்டின்
பெரும்பகுதிக்காலம் பெரியாற்றில் வெள்ளம் வழிந்தோடுகிறது.




கோள் நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியா
தண்டமிழப் பாவை என பழந்தமிழ இலக்கியங்களால்
குறிக்கப்பெறும் வைகையாறும் 19 ம் நூற்றாண்டுகளில்
பொய்த்து போனது.இதனால் வேளான்மை உற்பத்தி
சீர்குலைந்து இப்பகுதி மக்கள் பசியாலும் பட்டினியாலும்
வாட நேர்ந்தது. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கும்
வேளான்மைக்கும் ஆற்று நீரையே பயன்படுத்த வேண்டிய
கட்டாயம் இருந்ததால் அப்போதைய சேதுபதி மன்னர்கள்
மற்றும் அமைச்சர் முத்து இருளப்பர் ஆகியோர்,பெரியாற்றில்
இருந்து கால்வாய் வெட்டி மேற்கு நோக்கி செல்லும் ஆற்றுநீரை
தென்தமிழகம் திருப்பி கொண்டு வருவது பற்றி ஆராய
1798 இல் ஒரு குழுவை அமைத்தனர்.



இதன் பிறகுதான் ஆங்கிலேயர்கள் மேற்குறித்த திட்டம்
குறித்து ஆய்வு செய்ய தொடங்கியதோடு அத்திட்டத்தை
நிறைவேற்றவும் அக்கறை காட்டினர்1808 இல் ஜேம்ஸ்
கால்டுவெல் என்பவர் அணைகட்டும் திட்ட ஆய்வை
செய்துள்ளார். 1850 இல் முல்லையாற்றில் அணை கட்டும்
முயற்சியானது அப்பகுதியில் தொற்று நோய் பரவியதன்
காரணமாக நின்று போனது.



1868 இல் கர்னல் பெனி குயிக் என்பவரை அப்போதைய
ஆங்கிலேய அரசாங்கம் இத்திட்டத்தை ஆய்வு செய்ய நியமித்தது.
1882 இல் ரூபாய் 65 இலச்சம் மதிப்பீட்டில் அணை கட்டும்
திட்டம் உருவாக்கப்பட்டு திட்டம் இறுதி செய்யப்பட்டது.




அணை கட்டப்படவிருந்த இப்பகுதியானது முழுமையான தமிழர்
பகுதியாகும் தேவிகுளம் பீர்மேடூ போன்ற பகுதிகள் தமிழர்கள்
வாழ்ந்து வந்த பகுதியாகும். இன்றளவும் அப்பகுதிகளில்
தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.



அணை கட்டப்படவிருக்கும் இப்பகுதியில் இருந்து சுமார் 62
கிலோ மீட்டர்கள் தொலைவுவரை தமிழ்நாட்டு எல்லை பகுதி
அமைந்திருந்தது இதன் பிறகுதான் கொட்டாக்கரை அடூர் போன்ற
பகுதிகளை கொண்ட திருவிதாங்கூர சமஸ்தான எல்லை
தொடங்குகிறது. இருப்பினும் அணை கட்டப்படவுள்ள பகுதி
தமிழக பகுதியா திருவிதாங்கூர் சமஸ்தன பகுதியா என்பதில்
தெளிவில்லாத வெள்ளைய அரசாங்கம் அணை கட்டப்படவுள்ள
பகுதி திருவிதாங்கூர் சமஸ்தான பகுதி என்பதாக கருதி 1886
அக்டோபர் 28 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999
ஆண்டுகலுக்கான ஒப்பந்தத்தை செய்துகொண்டது.


இவ்வொப்பந்தப்படி அணை நீரால் மூழ்கும் 8000 ஏக்கர்
நிலமும் பராமரிப்புக்கான 100 ஏக்கர் நிலமும் அணையில்
தேங்கும் நீரும் அணையின் பாதுகாப்பு படகு மற்றும் சாலை
போக்குவரது உள்ளிட்ட அணைத்து உரிமைகலும் தமிழகத்துக்கு
சொந்தமாகும் புதிதாக கட்டப்பட உள்ள இவ்வணை நீரானது
தொடர்ந்து காலங்காலமாக தமிழகத்துக்கு கிடைக்க செய்ய
வேண்டும் என்கிற நோக்கத்துக்காக 999 ஆண்டுகல் ஒப்பந்தம்
போடப்ப்ட்டாலும் ஒப்பந்த காலம் முடியும் தருவாயில் ஒ
ப்பந்தம் மீண்டும் 999 ஆண்டுகலுக்கு புதுப்பிக்க உறுதி மொழியை
திருவிதாங்கூர் சமஸ்தானத்திடமிருந்து வெள்ளை அரசாங்கம் பெற்றது.


பல்லாயிரம் ஆண்டுகலுக்கு முன்பே வேளான்மை துறையிலும்
தேவையான நீர்பாசன கட்டமைப்பை உருவாக்குவதிலும் தமிழர்கள்
தலைசிறந்து விளங்கி வருக்கின்றனர் நீர்ப்பாசன பொறியியல்
நீர்ப்பாசன பயன்பாட்டு நிர்வாகம் என இரு துறைகளில் சிறந்து
விளங்கி வருவததற்கு தமிழகத்தில் உள்ள 39 ஆயிரம்
ஏரிகலும் குளங்கலும் கண்மாயிகலும் சான்றாக உள்ளன.



இதுமட்டுமல்லாது அணைகட்டுகளை உருவாக்குவதிலும்
தமிழர்கள் உலகத்திற்க்கே முன்னோடியாக இருந்துள்ளனர்
என்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கரிகாலன்
காலத்தில் கட்டப்பட்ட கல்லனை கம்பீரத்துடன் நிலைத்துநின்று பயன்பட்டுகொண்டிருப்பதை கூறலாம்.ஆங்கிலேயர்கள் தமது
ஆட்சி காலத்தில் கட்டி எழுப்பிய அணை கட்டுமானங்களுக்குக்
கல்லனையின் கட்டுமானமே அடைப்படையாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.அதனால்தான் பேயர்டு ஸ்மித் தனது
இரிகேசன் இன் சவுத் இந்தியா நூலில் இரண்டாயிரம்
ஆண்டுகலுக்கு முந்திய இந்த அணை மிகச்சிறந்த பொறியியல்
சாதனை எனக் குறிப்பிடார்.


மேலும் 1874 இல் கோதாவரி ஆற்றில் தவுளீஸ்வரம் அணையை
கட்டிய ஆர்த காட்டன் த்னது நூலில் ஆழம் காண இயலாத
மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற
தொழிநுட்ப்பத்தை இவர்கலிடமிருந்து (கல்லனையை கட்டியவர்கலிடமிருந்து) தான் நாம் அறிந்துகொண்டோம் இந்த பாடத்தை பயன்படுதிதான்
ஆறு பாலங்கள் அணைகட்டுகள் போன்றவற்றை கட்டினோம்.



எனவே இந்த மகத்தான சாதனை புரிந்த பெயர் தெரியாத
அந்நாளைய மக்கலுக்கு நாம் பெரிது கடமைப்பட்டுள்ளோம்
எனக் குறிப்பிட்டுள்ளார் இது அக்கால தமிழ் தேசிய இன மக்களின்
அறிவு திறனுக்கு சான்றாகும்.


மேற்கு நோக்கி பாய்ந்தோடும் ஆற்று நீரை அணைகட்டி தேக்கி
அந்நீரை எதிர்த்திசையில் கிழக்கு நோக்கி மலையை குடைந்து
சுரங்கம் தோன்டி அதன் வழியாக கொண்டு வந்து வைகை
ஆற்றோடு முல்லை பெரியாற்று நீரை இணைக்கும்
நோக்கத்தோடுதான் முல்லை பெரியாறு அணை கட்டப்படுகிறது.
ஒரு ஆற்று படுகையிலிருந்து மற்றோர் ஆற்று படுகைக்கு
நீரை திருப்பும் இத்திட்டம் உலகிலேயே முதலாவது என கருதலாம்.



முல்லை பெரியாறு அணையின் வேலைகள் பாதியளவு
முடிந்திருந்த நிலையில் 1890 இல் பெரியாற்றில் வந்த
பெரு வெள்ளமானது அணை கட்டுமானம் அணைத்தையும்
உடைத்து சென்றுவிட்டது ஆகவே இந்த அணையை கட்டுவதை
கைவிடுவதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது ஆனாலும் முல்லை
பெரியாற்று அணை கட்டுவதில் பென்னி குயிக் உறுதியாக இருந்தார்.




அணை கட்டும் செலவினங்கலுக்காக இங்கிலாந்து சென்று
தனது சொத்துக்கலையெல்லாம் விற்று விட்டு அதில் கிடைத்த
85 இலச்சம் ரூபாயையும் செலவழித்துதான் முல்லை
பெரியாற்று அணைய கட்டி முடித்தார்.அணை முழுவதும் கட்டி
முடிக்கப்பட்டவுடன் இடதுபுறம் வெட்டப்பட்ட கால்வாயில் 240
அடி நீளமுள்ள சிற்றனை ஒன்றையும் கட்டி முடித்தார்.

1241 அடி நீள்த்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ள
முல்லை பெரியாற்று அணையின் மொத்த உயரம் 172 அடியாகும்.
இதில் நீரை தேக்கும் உயரம் 155 அடியாகும் திடீரென்று வரும்
வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் 152 அடி வரை மட்டுமே நீர்
தேக்கப்பட்டு வருகிறது. 152 அடி உயரமுள்ள அணையில் 104
அடி வரை தேங்கும் நீரை மட்டுமே எடுக்கும்படியாக
அமைக்கப்பட்டுள்ளது.அதாவது அணையின் மொத்த
கொள்ளளவான 15 டி எம் சி தண்ணீரில் 10 டி எம் சி நீரை மட்டுமே அணையிலிருந்து வெளியே கொண்டு வர முடியும்.
மீதமுள்ள 5 டி எம் சி நீர் கிடப்பு நீராக அணைக்குள் இருக்கும்.


முல்லை பெரியாறு அணை ஆங்கிலேய ஆட்சி காலத்தில்
கட்டப்பட்டிருந்தாலும் அவ்வணையின் தொழில்நுட்ப்பமும்
உழைப்பும் மூலப்பொருட்க்களும் தம்ழர்களுக்கு சொந்தமானவை.

முல்லை பெரியாற்று அணை மிகபெரும் பொருட் செலவு
மட்டுமின்றி மிகப்பெரும் அளவு உயிர்சேதங்களையும் செலவாக
கொண்டு கட்டப்பட்டிருக்கிறது.

1956 இல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது
தமிழர்கள் காலம்காலமாக வாழ்ந்து வந்த தேவிகுளம்
பீர்மேடு போன்ற பகுதிகள் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு
மாறாக கேரள மாநிலத்தோடு இணைக்கப்பட்டன.


அதற்கு ஏதுவாக அப்பகுதிகளில் மலயாளிகலின் குடியேற்றத்தை
கேரள அரசு திட்டமிட்டு நடத்தியது. அதாவது இலங்கையில்
சிங்கள இனவாத் அரசு தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள
மக்களை வழுக்கட்டாயமாக குடியமர்த்தி தமிழீழத்தை ஆக்கிரமிப்பு
செய்து வருவது போல அப்போதைய கேரள முதல்வர்
தானுப்பிள்ளை என்பவர் கேரளச் சிறைகளில் இருந்த கைதிகளை
விடுவித்து அவர்கலுக்கு 5 ஆயிரம் ரூபாயும் 5 ஏக்கர் நிலமும்
கொடுத்து தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் குடியமர்த்தும்
வேலைகளை செய்தார்.

இத்தகைய குடியேற்றங்கலுக்கு பின்புதான் 1963 இல் முல்லை
பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்கிற புரளியை
கேரளாவின் மனோரம இதழ் மூல மக்களிடம் பரப்பி
இனவெறியை தூண்டி விட்டது கேரள அரசு.


பெரியாற்றின் துணை ஆறுகளில் தடுப்பு அணைகளை கட்டுதல்
தமிழக்த்தின் எல்லைக்குள் உள்ள செண்பகவல்லி அணையை
உடைத்தல் முல்லை பெரியாறு அணைநீர் தேங்கும் பகுதிகளை
ஆகிரமித்து அரசு கட்டடங்களை கட்டுதல் சுற்று சூழல்
பாதிக்கப்ப்டும் வன விலங்குகள் அழியும் என பொய் கூறுதல்
அணைய பலப்படுத்தும் பணிகளை செய்ய விடாமல் தடுத்தல்
போன்ற அடாவடித்தனங்களை 1956 முதல் இன்று வரை
கேரளத்தை ஆண்டு வரும் சி பி எம் கட்சியும் காங்கிரசு கட்சியும்
மற்றும் கேரளாவின் உதிரி கட்சிகளும் செய்து வருகின்றன.
அணைக்கு ஆபத்து அணையால ஆபத்து என்று ஒரே குரலில்
திரும்ப திரும்ப பொய் சொல்லி வருகின்றன.


முல்லை பெரியாறு பலப்படுத்தப்பட்ட வரலாறு: 1924 1933
1940 1943 1961 1977 ஆகிய ஆண்டுகளில் அணயின்
முழுகொள்ளளவான 152 அடிவரை நீரை தேக்கி வைத்தபோதும்
அணைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.இது தவிர 1930 1933
1960 ஆகிய ஆண்டுகலிலும் தமிழக அரசு கேரள அரசுகள்
சொல்லாமலேயே அணையை பலப்படுத்தும் வேலைகலை
செய்துகொண்டிருந்தது. இது ஒரு புறமிருக்க 1976 இல்
முல்லை பெரியாறு அணைக்கு கீழே 555 அடை உயரமுள்ள
இடுக்கி அணைய 800 மெகாவாட் மின் உற்பதிக்காக கட்டி
எழுப்பியது கேரள அரசு. இந்த இடுக்கி அணை கட்டப்பட்ட
பிறகுதான் கேரள அரசு தனது பொய்புரட்டுக்களை வேகமாக ப
ரப்பி வந்தது 1978 இல் அணை பலவீனமாகிவிட்டது என்று கேரள
அரசு மீண்டும் புரளியை கிளப்பி விட்டதால் அணையின் நீர்மட்டம்
145 அடியாக குறைக்கப்பட்டது.



அப்போது அணையை பார்வையிட்ட மத்திய நீர்வள ஆணைய
தலைவர் அணை பலமாக்வே உள்ளது கேரள மக்களின் அச்சம்
தேவையற்றது என கூறினார்.இருப்பினும் கேரள மக்களின்
அச்சத்தை போக்குவதற்கு அணையை பலப்படுத்தும் ஒப்பந்தம்
கேரள தமிழநாடு அரசுகளிடையே செய்துகொள்ளப்பட்டது
அணையை பலபடுத்தும் வரை அணையின் நீர்மட்டம் 136
அடியாக தற்காலிகமாக குறைக்கப்பட்டது.



மூன்று ஆண்டுகளில் முடிய வேண்டிய பலப்படுத்தும் பணிகள்
கேரள அரசுகளின் இடையூறுகள் காரணமாக பல
ஆண்டுக்கனக்கில் செய்ய வேண்டியதாயிற்று. 1978 இல்
அணையின் நீர் மட்டம் 145 அடியாக குறைக்கப்பட்டதால்
இராமனாதபுரம் சிவகங்கை மாவட்ட
பகுதிகளில் 40.000 ஏக்கர் நிலம் தரிசாக மாறியது.


காலம் காலமாக வறட்சியால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள்
தங்கள் நிலங்கள் தரிசாக கிடப்பதை போட்டுவிட்டு பிழைப்பு
தேடி சொந்த மண்ணையும் விட்டு வெளியேறி பெரு
நகரங்கலுக்கும் வெளி மாநிலங்கலுக்கும் வெளிநாடுகலுக்கும்
சென்று குறைந்த கூலிக்கு கொத்தடிமைகளாக வேலை செய்யும்
நிலைக்கு தள்ளப்பட்டனர்.1979 இல் மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மாநில அரசுகலும் செய்துகொண்ட
ஒப்பந்தப்படி முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும்
பணிகள் 1985 லேயே முடித்த பின்பும் அணையின் நீர் மட்டத்தை
உயர்த்துவதற்கு கேரள அரசுகள் மறுத்து வந்தன.



இதனால் கால் நூற்றாண்டு காலமாக பாதிக்கப்பட்டு வந்த
உழவர்கள் முல்லை பெரியாற்று பிரச்சனையை உச்ச நீதி
மன்றத்துக்கு கொண்டு சென்றனர். மத்திய நீர்வள ஆணையம்
மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை
சார்ந்த தலைசிறந்த நிபுணர்கள் அணையை பார்வையிட்டதற்கு
பிறகு அவர்கள் கேரள அரசின்அத்துனை பொய் காரணங்களையும்
நிராகரித்த பிறகு அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த
27/ 02 / 2006 அன்று நீரை 142 அடி வரை தேக்கலாம் என்று
தீர்ப்பு வழங்கியுள்ளது.


அதை ஏற்க மறுத்து கேரள அரசு சன்டித்தனம் செய்வதோடு
கேரள மக்களிடம் பயபீதியை கிளப்பி இனவெறியை தூண்டி
வருகிறது சி பி எம் அரசு.உச்ச நீதி மன்ற தீர்ப்பை
செயல்படுத்தவிடாமல் தடை செய்யும் நோக்கட்தோடு
காங்கிரசு அரசு கொண்டு வந்த கேரள அணைகள்
பாதுகாப்பு சட்டத்தை வழிமொழிந்தது இன்றைக்கு
ஆட்சியில் இருக்கும் சி பி எம் கட்சிதான்.



உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழக விவசாயிகளின்
வயிற்றில் அடிக்கும் சி பி எம் கட்சி கோக கோலா ஆலை
குறித்த உச்ச நீதி மன்ற ஆனையை உச்சி முகர்ந்து
வரவேற்றுக்கொண்டிருக்கிறது பாட்டாளி வர்ர்க சர்வதேசியம்
பேசி திரியும் சி.பி.எம் கட்சி மிக எளிய உண்மைகளை கூட
மறுக்கிறது அணை உடைந்தால் இடுக்கி உள்ளிட்ட ஐந்து
மாவட்ட மக்கள் கடலில் மூழ்கி இறந்து விடுவார்கள் என்று புரளி
பரப்பி வருகிறது.


உண்மை என்னவெனில் அணையின் உபரி நீர் வழிந்தோடும்
பகுதி முழுவதும் அடர்ந்த வன்ப்பகுதியாகும் அது
மட்டுமில்லாமல் முல்லை பெரியாறு அணையானது
கடல் மட்டத்திலிருந்து 2869 அடி உயரத்தில் உள்ளது.
அணை நீரில் மூழ்கி விடுவதாக சொல்லும் பகுதிகள்
அணைத்தும் 3500 அடி உயரத்தில் இருந்து 4750 அடி
வரையிலான உயரதில் உள்ளன கேரள அரசு சொல்வதை
போன்று ஒரு வாததிற்கு முல்லை பெரியாறு அணை உடைவதாக
வைத்துக்கொண்டாலும் முல்லை பெறியாற்றின் முழு கொள்ளலவான
15 டி எம் சியை காட்டிலும் பல மடங்கு கொள்ளளவை கொண்ட
[70 டி எம் சி] இடுக்கிஅணை முல்லை பெரியாற்று அணைக்கு
கீழே கட்டப்பட்டு உள்ளது. ஒரு வேளை அணை உடைந்தால்
கூட 15 டி எம் சி நீரும் 70 டி எம் சி கொள்ளளவு கொண்ட
இடுக்கி அணைக்குதான் போய் சேரும்.


இன வெறி பிடித்து அலையும் கேரள சி. பி. எம். ம்மின்
சன்டித்தனத்திற்கு எதிராக சுண்டு விரலை கூட
அசைக்காதவர்கள்தான் தமிழக சி.பி.எம்.அடிப்பொடிகள்

முல்லை பெரியாற்று பிரச்சணையில் கேரள சி.பி.எம் ம்மினர்
மட்டுமல்ல சி பி ஐ காங்கிரசு பா ஜ க உள்ளிட்ட அணைத்து
கட்சிகளும் இனவெறியை தூண்டி விட்டு வருகின்றன.



இக்கட்சிகள்யாவும் கேரளாவுக்குள் இருந்துகொண்டு இந்திய
ஒற்றுமை குறித்தோ இந்திய இறையானமை குறித்தோ
மறந்தும் பேசுவதில்லை. ஆனால் தமிழ்நாட்டிளுல்ல
இந்திய தேசியம் பேசும் கட்சிகளாகட்டும் மாநில சுயாட்சி
பேசும் மாநில கட்சிகளாகட்டும் இல்லாத இந்திய ஒற்றுமை
குறித்தே பேசி திரிகின்றன.


தமிநாட்டுக்கு இழைக்கப்படும் துரோகத்துக்கு துணை போவதையே
தொழிலாக வைத்துக்கொண்டுள்ளன இங்குள்ள ஓட்டு பொறுக்கி
கட்சிகள். 1970 இல் முல்லை பெரியாற்று நீரில் மின்சாரம்
தயாரிப்பதற்கான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது
அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி அணைக்கான
குத்தகை பனத்தை 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 2.60 லட்சமாக
அதிகரித்து கொடுத்தார்.


மீன் பிடி உரிமையையும் படகு போக்குவரத்து உரிமையையும்
விட்டு கொடுத்தார் இதனால் சுற்றுலா பயணீகள் மூலம்
தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வருமானம் 200 கோடி
ரூபாய் வருமானம் கேரளாவிற்கு சென்று விட்டது. 1979 இல்
எம் ஜி ஆர் அட்சி காலத்தில் அணையின் நீமட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டதோடு அணையின் பாதுகாப்பும் கேரள
காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

1981 இல் தமிழக எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த கேரள அரசால்
செண்பகவல்லி அணை உடைக்கப்பட்டது.


உடைக்கப்பட்ட அவ்வணையை கட்டி கொடுப்பதற்க்காக 1991 இல்
5.50 லச்சம் ரூபாயை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா
கேரள அரசுக்கு வழங்கினார். அத்தொகையை பெற்றுக்கொண்ட
கேரள அரசு இடிக்கப்பட்ட அணையை கட்டிதரவில்லை
என்பதோடு முல்லை பெரியாற்று அணையையும்
சிற்றனையையும் உடைப்பதற்கு கடப்பாறைகளோடு
புறப்பட்டிருக்கிறது.


துரோகத்தின் வரலாற்றை முறியடிப்போம் முல்லை பெரியாற்று
உரிமை மீட்டெடுப்போம்:


முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் கேரள ஆளும்
வர்க்கமும் தமிழக ஆளும் வர்க்கமும் துரோகத்தையே
இழைத்திருக்கின்றன,

தமிழ்நாட்டின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைப்பதும் கூட
இனவாதமாகவும் பயங்கரவாதமாகவும் இங்குள்ள
ஆட்சியளர்களால் சொல்லப்படுகிறது.தமிழகம் மற்றும் கேரள
அரசுகள் சொந்த தாயகத்திற்க்காக செயல்படும் அரசுகள் அல்ல,
மாறாக டெல்லி அரசின் எடுபிடிகளாகதான் செயல்பட்டு வருகின்றன.


டெல்லி அரசானது பார்ப்பனிய ஏகாதிபத்திய அரசாக இருந்து
கொண்டிருக்கும் நிலையில் இம்மாநில அரசுகலும் டெல்லியின்
நோக்கத்தை ஈடேற்றவே துடித்து கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு தேசிய இனத்திலும் உள்ள இயற்க்கை வளங்களை
தங்கு தடையின்றி சுரண்டி செல்லும் நோக்கத்தோடு நமது
தமிழர்களுக்கு எதிரான இனவெறியை தூண்டி வருகிறது
டெல்லி அரசு.



முல்லை பெறியாற்று பிரச்சணையை வைத்துக்கொண்டு
உழைக்கும்மலையாளிகள் யாவருமே எதிரிகள் என்கிற
கருத்து பரவலாகதமிழகத்தில் உருவாக்கப்படுகிறது.
உண்மையில் உழைக்கும்மலையாளிகள் நமக்கு எதிரிகள்
அல்ல, இனவெறி ஊட்டும் கேரள அரசு கும்பலே நமது எதிரிகள்
அதுபோல கேரள இனவெறிக்கு துணை போகும் டெல்லி
தமிழக அரசுகளும் நமது எதிரிகளே தமிழர்களின்
நலன்கலை பாதுகாத்திடவும் தமிநாட்டின் உரிமையை
மீட்டெடுக்கவுமானபுரட்சி தேசிய அரசை அமைத்திடும்
நோக்கத்தோடு இணைந்திடுவோம்

Sunday, July 26, 2009

ஓஷோவின் வைரங்கள்



ஆக்டன் பிரபு சொல்கிறார்;அதிகாரம் கெடுக்கும்
இது உண்மையல்ல.அதிகாரம் ஒரு போதும் கெடுப்பதில்லை,
ஆனால் கெட்டுப்ப்போன மக்களே அதிகாரத்தை நோக்கி
கவரப்படுகிறார்கள்.அதிகாரமில்லாமல் அவர்களால் எப்படி
தஙகள் உண்மை முகத்தை காட்ட முடியும்?
அவர்கள் தங்கள் இதயத்தின் உண்மை தன்மையை வெளிக்காட்ட
அதிகாரம் அவர்களுக்கு வாய்ப்பை மட்டுமே எற்ப்படுத்தி தருகிறது.
அதிகாரம் கெடுப்பதில்லை,
அது உண்மையை வெளிப்படுத்த மட்டுமே செய்கிறது.


ஒருமையிலிருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.முடிந்தவரை
நடைமுறைச் சாத்தியமானவரை ஒருமையிலிருப்பதை ஆனந்தியுங்கள்.யாருமில்லாத தனிமையில் சந்தோசபப்டுங்கள்.
மௌனமாக அமர்ந்திருக்கும்போது, எதுவும் செய்யாமலிருக்கும்போது
வசந்தம் வருகிறது புல் தானாகவே வளருகிறது.


நினைவில் கொள்ளுஙகள்.வாழ்வு என்பது பகலிற்கும் இரவிற்கும்,
வெயில்காலதிற்கும் குளிர்காலதிற்கும் இடையிலான இசைவு.ஒரு
தொடர்ந்த இசைவு.எங்கும் நிற்க்காதது!தொடர்ந்து செல்வது!
இந்த இயக்கத்தின் வீச்சு எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த
அளவு உங்களது அனுபவம் ஆழமாக இருக்கும்.


ஒவ்வொரு தனி மனித உயிரியும் ஒரு சுதந்திரம்.ஒரு அறியப்படாத
சுதந்திரம்.முன்கூட்டியே கணிப்பது சாத்தியமில்லை.எதிர்பார்ப்பு சாத்தியமில்லை.ஒருவர் விழிப்புணர்விலும்,புரிதலிலுமே வாழ வேண்டும்.


அடிமையாய் இருக்காதீர்கள்.உங்களுக்கு தேவை என்று நீங்கள்
உணரும் எல்லை வரை மட்டும் சமுதாயத்தை கடைபிடியுங்கள்.
ஆனால் எப்போதும் உங்களை வழிநடத்துவதில் நீங்களே
எஜமானனாய் இருங்கள்.


நான்,ஆச்சரியப்படும் தனமையை இழக்காமல் காப்பாற்றி
வைத்திருக்கும்,மனதையே பக்குவமடைந்த மனம் என்று அழைகிறேன்.தொடர்ந்து வியப்படைந்து கொண்டே
இருக்கககூடிய மனமே பக்குவமடைந்த மனம்.
அது மற்றவர்களால்,தன்னால்,எல்லாவற்றாலும்
வியப்படையும்.வாழ்க்கை எப்பொழுதும் ஒரு ஆச்சரியமே.


வாழுங்கள்,ஆடுங்கள்,சாப்பிடுங்கள்,தூங்குங்கள்,
முடிந்தவரை செய்பவற்றை முழுமையாக செய்யுங்கள்.
அதோடு திரும்பத் திரும்பஇதை நினைவில் கொள்ளுங்கள்:
எப்பொழுதெல்லாம் நீங்களே பிரச்சனைகளை உருவாக்குவதை
கவனிக்கிறீர்களோ அப்பொழுதே அதிலிருந்து
வெளியே வந்துவிடுங்கள்.


எல்லோரும் உங்களோடு இணைந்திருப்பதை காணும்
பொழுதுதான் உங்களுக்குள் கருணை எழும்.நீங்கள்
எல்லோரிலுமிருப்பதை, எல்லோரும் உங்களில் இருப்பதை
நீங்கள் காணும் பொழுதுதான்உங்களில் கருணை எழும்.
எவரும் தனியானவரில்லை.தனி என்ற மாயை
விலகும்பொழுது கருணை எழும்புகின்றது.

கும்பல்,பெருங்கூட்டம் ஆகியவை தனிமனிதனின்
வாழ்க்கையை கட்டுப்படுத்தாமல் இருப்பதே உண்மையான
ஜனநாயகத்தின் அர்த்தம்.

ஜனநாயகம் என்பது மதத்தன்மையைவிட அரசியல்தன்மை
குறைவாகக் கொண்டது.ஜனநாயகம் அரசியலை விட மிகுந்த
முக்கியத்துவம் கொண்டது. ஜனநாயகம் என்பது வாழ்வை
பற்றிய முற்றிலும் புதிய பார்வை.அது இதுவரை எங்கும் நிகழவில்லை,இனிமேல்தான் நிகழ வேண்டும்.ஜனநாயகத்தின் பொருள்,ஒவ்வொரு தனிமனிதனும் தனது
வெளிச்சத்தில் வாழ்க்கையை வாழ முழு உரிமையும்
கொண்டுள்ளான்,அவனை அதிலிருந்து தடுக்க கூடாது என்பதே.
ஒருவன் மற்றவர்களுக்கு தொந்தரவோ,சங்கடமோ ஏற்ப்படுத்தாத வரையில்,அவனுடைய வாழ்வின் எல்லா பரிமாணங்களிலும்,
எல்லாவிதத்திலும் அவனுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.
இதுவே உண்மையான ஜனநாயகம் பற்றிய எனது பார்வை.
இது போலவே எனது சந்நியாசிகள் செயல்பட வேண்டும்
என்று நான் விரும்புகிறேன்.அடுத்தவர் வாழ்க்கையில்
குறுக்கிடக் கூடாது.அடுத்தவருக்கு மிகுந்த மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.


உண்மையில் உயிர்த்துடிப்பான வாழ்க்கை,ஒரு வகையில்
தாறுமாறாகவே இருக்கும். ஒரு வகையில் என்று நான்
சொல்கிறேன்,ஏனெனில் அந்தத் தாறுமாறான நிலை
தன்னுடையதான ஓர் ஒழுக்கத்தைக் கொண்டே இருக்கிறது.
அத்ற்கு எந்த விதிமுறையும் இல்லை,ஏனெனில்
அதற்கு எந்த விதிமுறையும் தேவை இல்லை.
அது மிக அடிப்படையான விதியைத் தனக்குள்,தனக்குள் தானே கொண்டுள்ளது.அதற்கு எந்தவித புற விதிகளும் தேவை இல்லை.


எதையாவது,அது எதுவாக இருந்தாலும்,பிடித்து தொங்கிக்கொண்டிருப்பது
நம்பகத்தைன்மையற்று இருப்பதையே காட்டுகிறது.நீங்கள் ஒரு ஆணையோ
பெண்ணையோ நேசிக்கிறீர்கள்.அதே சமயம் பிடித்து வைத்துக் கொள்கிறீர்கள்
என்றால் அது நீங்கள் நம்பகத்தன்மையற்று இருப்பதையே காட்டுகிறது.

அன்ப தர்க்கரீதியானதல்ல.அன்பு பகுத்தறிவுக்கு உட்ப்பட்டதல்ல.
அன்பே வாழ்வு.அன்பு எல்லா முரண்பாடுகளையும் தன்னுள்
ஏற்றுக்கொண்டது. அன்பு அதற்கு எதிர்மறையான வெறுப்பைக்கூட
தன்னுள் ஏற்றுக்கொள்ளும் சக்தி கொண்டது.


புரிந்துகொள்ளக் கூடிய மனிதனே நல்ல மனிதன்.
ஒரு நல்ல மனிதன் என்பவன் எதையும் சந்திக்கும்
உணர்வோடு,விழிப்போடு இருப்பவனே.
விழிப்புணர்வு ஒன்றே எனது மதிப்பிற்குகந்தது.
மற்ற எல்லாம் அர்த்தமற்றவை.

எந்த சுமையும் சேர முடியாதபடி
கணத்திற்கு கணம் இறந்துவிடுதல் -
இதுவே முழு வாழும் கலை ஆகும்.


ஒவ்வொரு கணத்தையும் இதுவே கடைசிக் கணம்
என்பதைப்போல வாழுங்கள்.யாருக்கும் தெரியாது
- இதுவே கடைசியாகவும் இருக்கலாம்.


உங்களை பற்றி நீங்களே அதிக அக்கறை
கொண்டிருத்தலே உங்களுக்கு வரக்கூடிய மிகப்பெரிய நோய்.


வாழ்வு ஒரு பெண்.புரிந்துகொள்ள முயன்றால் வாழ்வும்
நீங்களும் சிக்கலில்தான் விழுவீர்கள்.புரிந்துகொள்வதைப்பற்றிச்
சுத்தமாக மறந்துவிடுங்கள்.அதை வாழ்ந்து பாருங்கள்.
அப்போது அதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
அதைப் புரிந்துகொள்வது
அறிவுப்பூர்வமானதாகவோ
கருத்துப்பூர்வமானதாகவோ இருக்கப்போவதில்லை,
அது பரிபூரண புரிதலாக இருக்கபோகிறது.


மனிதன் ஒரு முரண்பாடு.அவன் பிரக்ஞையின்
மிக மிகச் சிறிய துகள்,ஓர் அனு,மிகவும் அனுவானவன்.
ஆனால் அதே சமயம் அவன் பரந்ததைக் கொண்டிருக்கிறான்.
முழு ஆகாயமும் அவனுள் அடங்கியுள்ளது.

புரிதல் இல்லாத நிலையே யோசனை.
உங்களுக்கு புரியாததால்தான் நீங்கள் யோசிக்கிறீர்கள்.
புரிதல் எழும்போது யோசனை மறைந்துவிடும்.


உங்கள் சொந்த வாழ்க்கைக்கு பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்.
இந்த முழு பிரபஞ்ச இருப்பும் கொண்டாட்டத்திலிருப்பதைப்
பாருங்கள்.இந்த மரங்கள் கடினபாவத்தில் இல்லை.
ஆறுகளும் கடல்களும் தங்கள் போக்கில் உள்ளன.
எல்லா இடங்களிலும் வேடிக்கை இருக்கிறது.
எங்கும் மகிழ்ச்சியும் சந்தோசமுமாய் இருக்கிறது.
பிரபஞ்ச இருப்பைப் பாருங்கள்,பிரபஞ்ச இருப்பை காது கொடுத்துக் கேளுங்கள்,அதன் பாகமாய் மாறிவிடுங்கள்.

Thursday, July 23, 2009

புலி அரசியலை உயர்த்திப்பிடிப்போம்

தமிழகத்தில் இலக்கியவாதிகளுக்கிடையே நிகழ்ந்த
சந்திப்புகள்,அங்கேஎழுப்பபட்ட ஈழம் தொடர்பான
புலிகள் தொடர்பான விமர்சனங்கள்,அதனை தொடர்ந்து
நிகழ்ந்த இணைய விவாதங்கள் என நிகழ்வுகளை
கவனிக்கையில்,கருத்தியல் ரீதியாக ஈழப்போராட்டத்தின்
நியாங்களை உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை
இருப்பதால் இந்த எதிர்வினை முயற்சி.


தங்கள் சொந்த நலன்களின் அடிப்படையில் ஈழ விடுதலைப்
போராட்டம் பற்றி திரித்து எழுதுவதையும் அவதூறுகளை
கிளப்புவதையும் வழக்கமாக கொண்டுள்ள ஷோபாசக்தி
அ.மார்க்ஸ் போன்றவர்கள் வைக்கிற கருத்துக்களாவது
பரிசீலிக்க தகுந்தவைகளாக உள்ளன,அவர்களின் பல்துறை
வாசிப்பு அனுபவத்தையாவது நாம் அவர்களின்
எழுத்துக்களில் அடையாளம் காண முடியும்.


ஆனால் அ.மார்க்ஸ் ஷோபாசக்தி ரசிகர்மன்ற
நிர்வாகிகளும் விசிறிகளும் கம்யூனிஸ்ட் கட்சி
அறிக்கையை கூட புரட்டிப் பார்த்ததில்லை என்பதை
அவர்கள் முன்வைக்கிற கருத்துகளில் இருந்தே நம்மால்
உணர்ந்துகொள்ள முடிகிறது.மிக குறைந்த அளவாக
முப்பதாயிரம் உயிர்களை மட்டுமே கொன்று,உலகின்
மாபெரும் மனிதாபிமான மீட்பு நடவடிக்கையை ராஜபக்ஸே
நிறைவு செய்திருக்கும் வேளையில் புலி அரசியலிலிருந்து
மக்களை மீட்க புறப்பட்டிருக்கும் இந்த மீட்பர்களின்
அரசியலை நாம் ஆய்வுக்குட்படுத்த வேண்டியிருக்கிறது.

இந்துத்துவவாதி என்று முத்திரை குத்தப்படுகிற அபாயம்
இருப்பதை உணர்ந்தாலும் வேறு வழியில்லாமல் சில
கேள்விளை எழுப்பித்தான்ஆக வேண்டியிருக்கிறது
இவர்களிடம்.



புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதைப் பற்றி
அ.மார்க்ஸ் தொடர்ந்து விமர்சனம் எழுப்பி
வருவதை அறிந்திருக்கிறோம்.யாழ்ப்பானத்தில்
இருந்து வெளியேற்ற்ப்பட்ட முஸ்லிம்களுகாக
குரல் கொடுக்கும் அ.மார்க்ஸ் காஸ்மீரில்இருந்து
வெளியேற்றபட்ட பண்டிட்டுகளுக்காக ஒரு வரியையும்
எழுதியதாகவோ,அல்லது காஸ்மீர் தேசிய விடுதலை
போராட்டத்தை முன்னெடுக்கும் குழுக்கள் மீது
விமர்சனங்களை முன்வைத்ததாகவோ
நம்மால் காண முடியவில்லை.
ஏன் இந்த பாரபட்சம் என்று அவருக்கே வெளிச்சம்?


முஸ்லிம்கள் வெளியேற்றம் என்பது தவறுதான் என்று
புலிகளே ஒப்புக்கொண்டபிறகும்,அந்த முஸ்லிம்களை
1995இல் யாழ்ப்பானத்தை சிங்கள ராணுவம்ஆக்கிரமித்த
பிறகு மீள குடியேற்ற மறுப்பது சிங்கள அரசுதான்
என்பதை எப்படி மறக்கிறார்.இலங்கை முஸ்லிம்
அரசியல் பற்றி அவரது புரிதல் மிக குறைவாக
இருக்கிறது என்பதையே அவரது வாதங்கள் காட்டுகிறது.
யாழ்ப்பானத்திலும் கிழக்கிலும் வாழ்ந்து தங்களை
தமிழர்களாகவே உணர்ந்த முஸ்லிகளின் அரசியல்
தலைமைத்துவத்தை தென்னிலங்கையில் வசித்த
அராபிய வழித்தோன்றல்கள் என்று தங்களை கருதும்
முஸ்லிகள் கைப்பற்றிகொண்டதையும்,தமிழர்களின்
போராட்டத்தில் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின்
பங்கேற்ப்பை தடுக்கும் சிங்கள் அரசின் முகவர்களாக
அவர்கள் அன்றும் இன்றும் செயல்பட்டுக்கொண்டிருப்பதை
அறிவாரா அ.மார்க்ஸ்


தெற்கு ஆசியாவிலேயே மிககுறைவான எண்ணிக்கையில்
இலங்கையில் வசிக்கும் சூஃபியிச முஸ்லிம்கள் பற்றியும்
அவர்களுக்கு எதிராக அடிப்படைவாத முஸ்லிம்களின்
அடக்குமுறைகள் இலங்கையில் நிலவுவது
பற்றிய தகவலையும் அவருக்கு நினைவூட்டுவோம் நாம்.

இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானிய ஆதரவாளர்களாக
சித்தரிக்கும் இந்துத்துவா கும்பல்களின் மனநிலைக்கும்,
ஈழத்தின் தமிழின படுகொலையில் இந்திய அரசோடு
பாகிஸ்தான் இணைந்து நின்றதை வெளிப்படுத்தினால்
இந்திய முஸ்லிகள் வருத்தப்படுவார்கள் என்று கருதி
தனது தீராநதி கட்டுரையில் பாகிஸ்தானின் பெயரை
தவிர்த்துவிட்டு எழுதும் அ.மார்க்ஸின் மனநிலைக்கும்
வேறுபாடுகளை காண முடியவில்லைநம்மால்.
அவர்களாவது நேரடியாக குற்றம் சுமத்துகிறார்கள்.
இவர் மறைமுகமாக அதையே செய்கிறார்.



ஈழத்தில் சாதிய கட்டமைப்புக்கு எதிராக புலிகள் எதுவும்
செய்யவில்லை தலித்திய ஒடுக்குமுறையை கேள்வி
கேட்கவில்லை என்கிற இவர்களின் கேள்விக்கு பதில்
அளிக்கும்முன் அ.மார்க்ஸ்,ஷோபாசக்தி ரசிகர் மன்ற
குழக்கொழுந்துகளிடம் ஒரு கேள்வியை எழுப்ப
வேண்டியிருக்கிறது.


பெரியார் என்கிற மகத்தான மனிதனின் உழைப்பு,
அம்பேத்கரிய பரவலை தமிழகத்தில் எடுத்துசென்ற
தலித்திய இயக்கங்களின்முன்னெடுப்புகள் ஆகியவைகள்
இல்லாமல் இருந்திருந்தாலும் கூட தமிழகத்தில் நிகழ்ந்த
நகரமயமாக்கலும் அரைகுறை முதலாளித்துவ
உறவுகளும்,ஒப்பீட்டளவில் குறைந்திருக்கிற
தீண்டாமையையும்,சாதியத்துக்கு எதிரானகருத்தியல்
கட்டமைப்பையும் சாதித்திருக்கும்
என்று கூறினால் அதை ஒப்புகொள்வார்களா இவர்கள்?
நிச்சயம் இதுபோன்ற அதிபுத்திசாலித்தனமான
முடிவுக்கெல்லாம் வர மாட்டார்கள் என்று நம்பலாம்.

அது போலத்தான் தேசிய இன விடுதலை முன்னெடுக்கபட்ட
ஈழத்திலும்,புலிகளும் தேசிய இன விடுதலை
போராட்டமும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு
சாதிய கட்டமைப்பில் உடைவை ஏற்ப்படுத்தியிருக்கிறார்கள்.

1995இல் யாழ்ப்பானம் சிங்கள ராணுவத்தால்
ஆக்கிரமிக்கப்பட்டபோது புலிகளோடு இடம்பெயர்ந்த
மக்களில் சிங்கள ராணுவத்தின் மீள் குடியேற்ற அழைப்பை
ஏற்று திரும்பி வந்தவர்கள் பெரும்பாலும் ஆதிக்கசாதியினர்
என்பது ஒன்று போதுமே புலிகள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு
எதிராக எடுத்திருந்த நடவடிக்கைகளை காட்ட.இனியும் சாதி
ஒழிப்பில் முன்னெடுக்கப்பட நிறைய வேலைகள் உள்ளன
என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம்.



இவர்கள் நெடுமாறன் மீது வைக்கும் விமர்சனங்களில்
பெரும்பாலும் நமக்கு மாற்றுக்கருத்துக்கள் இல்லை
என்றாலும் புலிகளின் முகவர் என்று சொல்வதை
விமர்சிக்க வேண்டியிருக்கிறது.இந்த முகவர் என்கிற
கொழுப்பெடுத்த வார்த்தையை தாராளமாக
உபயோகப்படுத்தும் அ.மார்க்ஸ்.அ.மார்க்ஸின்
சீடர்களுக்கு நாம் ஒரு கேள்வியை முன்வைக்க
வேண்டியிருக்கிறது.நெடுமாறன் புலிகளின் முகவர்
என்றால் நீங்களெல்லாம் யாரின் முகவர்கள்?
எதிர்ப்பிலக்கியம் என்கிற பெயரில் உளறிக்கொட்டி
கிளறி மூடிவதன் மூலமாக அறிவுஜீவி பட்டம் பெற
விரும்பும் உள்மன அரிப்பின் முகவர்கள் மட்டுமதானா
இல்லை வேறு ஏதாவது......?



நெடுமாறன் தமிழ் தேசிய டம்மிபீஸ் சரி ,ஆயுத
போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும்
அக்கம் பக்கம் நடத்தும் மக இக இந்திய தேசிய புரட்சி
டம்மி பீஸ் திண்ணியக் கொடுமைக்கு எதிராக என்ன
செய்தார்கள் என்பதை கேள்வி கேட்க்காமல் இவர்கள்
நழுவுவது ஏன்? புலிகளை குற்றம் சொல்பவர்களோடு
மட்டும் கள்ளக் கூட்டுவைத்துக்கொள்வதில் அப்படி என்ன
இவர்களுக்கு அலாதி விருப்பம் என்று தெரியவில்லை.



அடுத்து இவர்கள் புலிகள் மீது பொழியும் அவதூறுகளை
பற்றி சற்று அலச வேண்டியிருக்கிறது.அதில் ஒன்று
புலிகள் மக்களை பணயகைதிகளாக பிடித்துவைத்திருந்து
சிங்கள ராணுவத்தின் முன் தள்ளி தங்களை
பாதுகாத்துக்கொள்ள முயன்றார்கள் என்பது,அதாவது
தாங்கள் மக்கள் மத்தியில் இருந்தால் சிங்கள் ராணுவம்
தங்களை தாக்காது என்றும் அவ்வாறு தாக்கி மக்கள்
கொல்லப்பட்டால் சர்வதேச நாடுகள் தலையிடும்
என்றும் புலிகள் நம்பியதாக சொல்கிறார்கள்.


கடந்த முப்பது ஆண்டுகால போரில் சிங்கள ராணுவம்
கடைபிடித்த போர் முறை ஒன்று இஸ்ரேலின்
வழிகாட்டலில் நிகழ்த்தப்பட்ட கூட்டுத்தணடனை
முறை,அதாவது புலிகளின் நிலைகள் தெளிவாக
தெரிந்திருந்தாலும் அவர்களை தாக்காமல் மக்களை
தாக்கி உயிர்களைகொல்வதன் மூலம் புலிகள் மீது
மக்களுக்கு வெறுப்பு ஏற்ப்பட செய்வது.

இதை நன்கு அறிந்த புலிகள் மக்கள் மத்தியில் இருந்து
தங்களை பாதுகாக்கும் முடிவை எடுத்திருப்பதாக கருத
எந்த அடிப்படை நியாயமுமில்லை.

நூறு பேராக இருந்தாலும்,இலட்சக்கணக்கில் இருந்தாலும்
மக்களை கொல்ல சிங்கள ராணுவம் தயங்காது
என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்த விசயம்தான்.
இந்த நிலையில் புலிகள் மக்களை தங்கள் பாதுகாப்புக்காக
பயனபடுத்த முயன்றார்கள் என்று கூற
எந்த அடிப்படையும் இல்லை.



அடுத்தது புலிகள் மக்கள் மத்தியில் இருந்து செல்லடித்து
தமிழ்மக்களை கொன்றதாக் ஒரு குற்றச்சாட்டை
சுமத்துகிறார்கள்.இன்றைக்கு முகாம்களில் இருக்கும்
பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்ற
சிங்கள ராணுவத்தினர்க்கு எதிராக அவர்களின்
துப்பாக்கிகளை பிடுங்கி இளைஞர்கள் தாக்க முயன்றதாக
எல்லாம் தகவல்கள் கசிகின்றன.ஒருவேளை புலிகள்
மக்களுக்கு எதிராக தங்கள் துப்பாக்கிகளை நீட்டியிருந்தால்
சிங்களனுக்கு எதிராக ஓங்கிய கைகளை புலிகளுக்கு
எதிராகவும் இளைஞர்கள் தூக்க எவ்வளவு நேரமாயிருக்கும்


ஒருவேளை அந்த இளைஞர்கள் எல்லாம் மக்களோடு
மக்களாக ஊடுருவிய புலிகள் என்றால்,புலிகள்தான்
மக்களுக்கு இப்போதும்பாதுகாப்பு என்கிற உண்மை
வெளிப்படுவதை ஜீரனித்துக்கொள்வதில் இவர்களுக்கு
ஏற்ப்படும் சஙகடத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.



இவன்தான் புலி எங்களை பிடித்துவைத்திருந்தான் என்று
சிங்கள ராணுவத்திடம் மக்களே பிடித்துகொடுத்ததாகவும்
அதனை புலிகளின் ஆதரவாளர்களே ஒப்புக்கொள்வதாகவும்
கயிறு திரிக்கும் இவர்கள் அத்தோடு
நிறுத்திக்கொண்டிருந்தாலாவது நமக்கு இவர்களை
அம்பலப்படுத்துவது கடினமாக இருந்திருக்கும்.



கஞ்சிக்கும்,கழிப்பிடத்துக்குமே கால் கடுக்க மக்களை
வரிசயையில் நிற்க வைத்து,சர்வதேச செஞ்சிலுவை
சங்கம்உதவி நிறுவனங்கள்,பத்திரிக்கையாளர்கள்
என்று எவரையும் முகாம்களுக்குள் அனுமதிக்காக
சிங்கள அரசு பத்துரூபாய்க்கு நான்கு என்று
செல்போனையும் சிம்கார்டையும் மக்களுக்கு
கொடுத்து தமிழ்நாட்டில் இருந்து வரும் அழைப்புகளை
அனுமதித்துக்கொண்டிருப்பதாக கூறுவது ஒன்றே
போதும் இவர்களின் யோக்கியதை என்னவென்று காட்ட?


நல்லவேளையாக பொன்சேகாவின் நம்பரையோ
ராஜபக்சேவின்நம்பரையோ கொடுக்காமல்
போனார்களே மக்களின் நிலைமை பற்றி விசாரிப்பதற்கு,


சரி ஒரு பேச்சுக்கு இவர்கள் சொல்வதை
ஒப்புக்கொண்டாலும்இரண்டு இலட்சத்து
அறுபத்து ஆறாயிரம் மக்களும் நிழற்சிறைகளில்
இருப்பதாக இவர்களின் சித்தாந்த ஆசிரியர்
அ.மார்க்ஸே சொல்லிவிட்டார்.



தயா மாஸ்டர்,ஜார்ஜ் மாஸ்டர்,போர்க்காலத்தில் வன்னியில்
இருந்த மருத்துவர்கள் என்று பலரும் பேயறைந்தாற்
போனறமுகத்துடன் பத்திரிகையாளர்களை சந்தித்து
புலிகள் மக்களை பிடித்துவைத்திருந்தார்கள் என்று
சொல்லிகொண்டிருக்கையில்முகாம்களில் இருக்கும்
மக்களின் வாக்குமூலம் எந்த முறையில் பெறப்பட்டிருக்கும்
என்பதை பற்றி அறிய பெரிய புத்திசாலித்தனம்
தேவை இல்லை.

சிறைகளில் இருப்பவர்களிடம் பெறப்படும்
வாக்குமூலத்தின் நம்பகத்தன்மையை கேள்விகள் எதுவும்
இன்றிஒப்புக்கொள்ளும்படி நம்மை கேட்கும் உரிமை
இவர்களுக்கு இருக்கும்போது இவர்களின் நேர்மை பற்றி
சந்தேகங்கள் எழுப்பநமக்கு உள்ள உரிமையை
யார் மறுக்க முடியும்.


தனது சொந்த மகனையும் மகளையும் களதிற்கு
அனுப்பி பலிகொடுத்திருக்கும் பிரபாகரன் மக்கள்
மீது தாக்குதல் நடத்தும்படியும் அவர்களை மனித
கேடயங்களாக நட்த்தும்படியும் வலியுறுத்துவதாக
சொல்லப்படுவதை கண்ணை மூடிக்கொண்டு
புலிகள் ஆதரவாளர்கள் நம்ப வேண்டும் என்று
எந்த அடிப்படையில் இவர்கள் எதிர்பார்கிறார்கள்
என்று புரியவில்லை.

தங்களை மடையர்களாக கருதுவதில் அவர்களுக்கு
இருக்கும்உரிமைகளை நாம் மதிக்கலாம்.
நம்மையும் அவ்வாறே கருத நினைப்பவர்களை
என்ன செய்வது?



அத்தனையைம் தாண்டி ஒரு கேள்வி எழுகிறது.புலிகள்,
ஜனனாயகமின்மை பாசிசம் என்று பஜனை
பாடிக்கொண்டிருக்கும் இவர்கள் முகாம்களில் இருக்கும்
மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு
எதிராக கடைபிடிக்கும் சதித்தனமிக்க மௌனம் நமக்கு
மேலும் பல விசயங்களை புரியவைக்கிறது.

சிங்களன் நடத்திக்கொண்டிருக்கும் மனித உரிமை
மீறல்களைபற்றி பேச புகுந்தால் அப்பாவி மக்களுக்கு
எதிராக் தான் மேற்கொள்ளும் சித்திரவதைகள மூலம்
புலிகளையும் மக்களையும்ஒன்றாகவே அவன் பார்க்கிறான்
என்கிற உண்மையை வெளிப்படுத்த வேண்டிய
நிலைவந்துவிடுமே என்கிற இவர்களின் பதட்டதைத்தான்
நம்மால் இதன் வழியாக உணர முடிகிறது.



புலிகளும் பிரபாகரனும் சாகும்வரை இந்தியாவை எந்த
விமர்சனமும் செய்யவில்லை என்று நாளும் பகலும்
தமிழ்தேசியத்தை விமர்சிப்பதைபோல இந்திய பார்ப்பன
தேசியத்தை விமர்சித்துக்கொண்டிருக்கும் இவர்கள்,
எந்த விமர்சனமும் செய்யாமல் இருக்கும் நிலையில்
கூட புலிகளை அழிக்க வேண்டிய தேவை இந்திய அரசுக்கு
ஏன் ஏற்ப்பட்டது என்பது போன்ற விசயங்களை ஆராயாமல்
கம்பி நீட்டுவது ஏனோ?



மாற்று அரசியல்,ஜனனாயகம் பற்றிய உரையாடல்கள்
பாசிச எதிர்ப்பு போன்ற சொல்லாடல்களின் மழையில்
முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள்,இந்தியா கருணாநிதி
போன்றவர்கள் செய்த குற்றங்களை மூடி மறைக்க
செய்யப்படும்முயற்சிகளை முறியடிக்க வேண்டிய தேவை
எழுந்திருகிறது இன்று தமிழ் உணர்வாளர்கள் அதை
உறுதியுடன் முன்னெடுக்க வேண்டும்

புலிகள் தவறுகளே செய்யாதவர்களா? அவர்கள் மீது
உங்களுக்குவிமர்சனங்களே இல்லையா? என்றால் ஆம்
எங்களுக்கும் புலிகள்மீது அரசியல்ரீதியான விமர்சங்கள் உண்டு.

ஆனால் அவைகள் அடிப்படை நேர்மை கொண்ட,
முன்வைக்கப்படும் கருத்துகளை எதிர்கொண்டு
திறந்த மனதுடன் உரையாட முன்வருபவர்களோடு
மட்டுமே சாத்தியம் என்பதால்,அன்றைக்கு பிரபாகரன்
சூப்பர் ஸ்டார் என்று அர்த்தம் தெரியாமல் கூவியதை
போலவே இன்றைக்கு அ.மார்க்ஸ் சூப்பர் ஸ்டார்.
ஷோபாசக்தி சூப்பர் ஸ்டார் என்று கோசமிடும்
விசிலடிச்சான் குஞ்சுகளிடம் விவாதங்களை
தவிர்க்கவே விரும்புகிறோம்

தோழர் பொன்னம்பலனாருக்கு பெரியார் எழுதிய கடிதம்

தோழர் பொன்னம்பலனார் எழுதியிருக்கும் இவ்வாரக்
கட்டுரையில் சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்தில்
ஈடுபட்டிருந்த பார்ப்பனீயத்தை ஒழிக்கும் முயற்சியிலும்
பார்ப்பன ஆதிக்கத்தை அழிக்கும் முயற்சியிலும்
இன்னமும் ஈடுபட்டிருக்காமல் அதைவிட்டுவிட்டு
வேறு வழியில் அதாவது சமதர்மம் பொதுவுடைமை
என்கிற வழியில் பிரவேசித்தது தப்பு என்றும்
அதனால் பழையபடி பார்ப்பனீயம் துளிர்த்து வருவதாகவும்,
பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடுவதாகவும்
குறிப்பிட்டுவிட்டு நாம் ஏதோ பார்ப்பன மாயையில் சிக்கி
இருப்பதாக பொருள்பட மிக்க ஆத்திரத்துடன் பல
விசயங்களை கொட்டியிருக்கிறார்.அதற்கு சிறிதாவது
சமாதானம் கூற வேண்டும் என்றே கருதுகின்றோம்.


முன்போல பார்ப்பனீயத்தின் கொடுமைகளை
வெளியாக்கும் வேலையிலும் பார்ப்பன ஆதிக்கத்தை
ஒடுக்கும் வேலையிலும் நமது முயற்சி முழுவதும்
இல்லை என்பதை நாம் ஓரளவுக்கு ஒப்புக்கொள்கிறோம்.
ஆயினும் சுயமரியாதை இயக்கத்தின் இலட்சியமெல்லாம்
அதுவேதான் என்பதை நம்மால் ஒப்புக்கொள்ள
முடியவில்லை.


பார்ப்பனீயத்துக்கும் பார்ப்பன ஆதிக்கத்துக்கும் காரணமாயிருப்பது
மதம் என்பதை தோழர் பொன்னம்பலனார் உணர்ந்திருப்பார்.
அம்மதத்தை ஒழிப்பதில் நாம் முன்னைவிட இப்போது
பன்மடங்கு தீவிரமாய் இருக்கின்றோம் என்பதையும்
தோழர் பொன்னம்பலம் அவர்கள் அறிவார்கள்.



பார்ப்பனீயத்தையும்,பார்ப்பன ஆதிக்கத்தையும் அழிக்க
வேண்டிய அவசியம் நமக்கு எதனால் ஏற்பட்டது?
பார்ப்பனீயத்தின் பேராலோ,பார்ப்பனர் பேரிலோ,ஏற்பட்ட
துவேசமா? வெறுப்பா? வஞ்சகமா? என்பதை யோசித்துப்
பார்க்க விரும்புகிறோம்.


ஒரு நாளுமல்ல,மற்றென்னவென்றால்,பார்ப்பனீயமும்
பார்ப்பன ஆதிக்கமும் ஏழை மக்களை,தாழ்த்தப்பட்ட
மக்களை என்றென்றும் தலை எடுக்கவொட்டாமல்
அழுத்தி நசுக்கி வருவற்கு ஆதரவாய் இருக்கின்றதென்றும்,
தாங்களே என்றென்றும் மேன்மையாயும் ஆதிக்கமாயும்
இருந்துவரத்தக்கதாய் இருக்கின்றதென்றும் கருதியே
அதனுடன் போர் புரிந்துவந்தோம்


ஆனால் அப்போரின் பலன் என்ன ஆயிற்று என்று
பார்ப்போமானால் பார்ப்பனர்களின் ஆதிக்கம் சில
குறைவுபட்டது.அரசியல் துறையில் பார்ப்பன
ஆதிக்கத்திற்குச் சாவுமணி அடிக்கத்தக்க நிலைமையும்
ஓரளவுக்கு ஏற்பட்டது.ஆனால் இதனால் ஏற்ப்பட்ட பயன்
என்ன என்று பார்ப்போமானால் சில பார்ப்பனரல்லாதார்
பார்ப்பனர்களின் ஸ்தானத்துக்கு வந்தார்கள்.

பார்ப்பனர்களைப் போலவே நடந்தார்கள்,ஏழைகளையும்,
தாழ்த்தப்பட்டவர்களையும் தலைதூக்கவிடாமல் இருக்க
பார்ப்பனர்களுக்கு கையாளாக இருந்து வேலை செய்து
வருகின்றார்கள் என்பதுதான் வெளிப்படையாக தெரிகின்றது.


உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால்
பார்ப்பனரல்லாதார் பெயரைச் சொல்லிக்கொண்டு
பெரிய மனிதனாகிய,மந்திரி பதவியையும்,
பார்ப்பனரல்லாதார் இயக்கத் தலைவர் பதவியையும் பெற்ற
தோழர் முனிசாமி நாயுடு அவர்கள் பதவிக்கு வந்தவுடன்
பார்ப்பனர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும்,
பார்ப்பனரல்லாதார் நன்மைக்காகவே தோழர் முத்தையா
முதலியார் அவர்களால் உத்தியோகங்கள், வகுப்புவாரி
பிரதிநித்துவப்படி விநியோக்கிப்பட வேண்டும் என்று
செய்யப்படிருந்த விதியை ஒழிக்க வேண்டும் என்று
பாடுபட்டதோடு சுயமரியாதை இயக்கம் என்பதாக
ஒரு இயக்கம் இருக்கின்றதா என்று அறியாதவர்
போலும் பல தடவைகளில் அதை அலட்சியமாய்ப்
பேசியும் நடந்தும் வந்தார்.



இந்தக் காரியம் சுயமரியாதை இயக்கம் பார்ப்பன
ஆதிக்கத்தை ஒழிக்கப்பாடுபட்டதற்கும்,தோழர்
முனிசாமி நாயுடு முதல் மந்திரியாவதற்கும்
ஓரளவாது காரணமாய் இருந்ததற்கு ஏற்பட்ட பலனாகும்.
இது மாத்திரமல்ல,மற்ற மந்திரிகள் நிலைமையை
யோசித்தால் இனியும் வெட்க்ககேடாகும்.ஒரு மந்திரியார்
ஒரு பொதுக்கூட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தின்
நிழலில்தான் நாங்கள் இன்று மனிதர்களாய் வாழ்கிறோம்
என்றுகோஷம் செய்தார்,அவர் கண்களுக்கு இன்று
ரூபாயைத் தவிர வேறு வஸ்துவே உலகத்தில்
இருப்பதாகத் தெரியவில்லை.மற்றும் இப்போது பார்ப்பனரல்லாதார்
தலைவர் என்று சொல்லிக்கொள்ளுகின்ற பணக்காரர்களின்
யோக்கியதையும் முன்சொன்ன மந்திரி போலவும்
பார்ப்பனர்களையே தூதாட்க்களாகவும் தங்கள்
பதவி வேட்டைக்கு ஒற்றர்களாகவும் வைத்துப் பார்ப்பனீய
ஆதிக்கத்தைவிட மோசமான ஆதிக்கம் செலுத்தி
வருகின்றவர்களாவார்கள்.



பார்ப்பானை ஒழித்து பணக்காரன் கையில் ஆதிக்கத்தை
வாங்கிக் கொடுக்கசுயமரியாதை இயக்கம் இருக்கின்றது
என்று சொல்லுவதானால் கஷ்ட்டப்படும் மனித
சமூகத்துக்கு இவ்வியக்கத்தினால் எவ்வித பலனும்
ஏற்படாதென்பதே நமது அபிபிராயம்.


ஆதலால் சமதர்மத்தையும் பொதுவுடைமை
கொள்கையையும் விட பார்ப்பனீய ஒழிப்பும்,பார்ப்பன
ஆதிக்க அழிப்பும் பிரதானம் என்பதை ஒப்புக்கொள்ள
முடியாமைக்கு வருந்துகிறோம்.



இந்து,சுதேசமித்திரன் பத்திரிக்கைகளுக்கு நாட்டில்
செல்வாக்கு இருக்கும்வரை,இந்தியாவுக்கு வெள்ளைக்கார
முதலாளிகளின் ஆட்சிதான் மேலானது என்பதுதான்
நமது அபிப்பிராயமாக இருந்து வருகிறது.


ஏனெனில் தங்களை இழிவுபடுத்தி தங்கள் சமூகத்தை,
அடிமையாக்கி வாழ்ந்துவரும் ஸ்தாபனத்தை மக்கள்
ஆதரிகின்றார்கள் என்றால் அந்த மக்கள் விடுதலை பெற
யோக்கியதை உடையவர்கள் என்று எந்த மூடனாவது
ஒப்புக்கொள்ள முடியுமா? இதையெல்லாம் பார்த்துதான்
இந்த நாட்டுக்கு வேண்டியது சமதர்மமும்
பொதுவுடைமையும் என்ற முடிவுக்கு வந்தோமேழொழிய
வேறில்லை.

பார்பனரல்லாத மக்கள்,அறிவோடு மானத்தோடு
நடந்துகொள்ள யோக்கியதை உடையவர்கள் என்றால்,
பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து பார்ப்பனரல்லாதார்
ஆதிக்கத்தை ஏற்ப்படுத்த முயற்சிப்பதில் அர்த்தமுண்டு:

அப்படிக்கில்லாமல் பார்பனீயத்தை அழித்து பார்ப்பன
அடிமை கையில் ஆதிக்கத்தை கொடுப்பதற்கு
பாடுபடுவதென்றால்,அது கொள்ளிக் கட்டையை
எடுத்துத் தலையைச்சொறிந்து கொள்வதேயாகும்.

என்றாலும் எல்லாக் காரியத்தையும் ஏககாலத்தில்
செய்கின்ற முயற்சியில்தான் நாம்
இருக்கின்றோமேயொழிய,அவற்றை அடியுடன்
விட்டுவிடவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


குடி அரசு
பக்கம் 10.11.12.
22.10.1993


தோழர் பெரியாரின் இந்த கட்டுரையில் தேவையற்றவை
என்று கருதிய சில பத்திகளை சேர்க்காமல் விட்டிருக்கிறேன்.

அரசு அதிகாரத்தில் இருப்பவர்களோடு பிற்ப்படுத்தப்பட,
தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை முன்நிறுத்தி
செய்துகொண்ட சமரசங்களையும் தாண்டி, பெரியாருக்கு
இருந்த வர்க்க கண்ணோட்டத்தையும் பிறப்பின்
அடிப்படையை வைத்து மட்டுமே பார்ப்பனர்களை,
பார்ப்பனீயத்தை தீர்மானிக்கும் போக்குக்கு எதிரான
அவரது மிகச்சரியான பார்வையையும்
இந்த கடிதத்தில் நம்மால் காண முடிகிறது.

அவரது இந்த கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள விசயங்களை
சமகால அரசியல் தலைவர்களோடும் நிகழ்வுகளோடும்
இணைத்துப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது இன்று.


பெரியார் சாடியிருக்கிற முனிசாமி நாயுடுவின் இடத்தில்
கருணாநிதியை வைத்துப்பார்க்க எல்லா அம்சங்களும்
பொருந்தி வருகின்றன.

கடலில் கட்டி தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாகத்தான்
மிதப்பேன் அதில் நீங்கள் ஏறிபயணிக்கலாம் என்று
வசனம் பேசிக்கொண்டிருகிற மனிதரின் கண்களுக்கு
ரூபாய் என்கிற வஸ்துவை தவிர வேறு எதுவும்
தெரியாமல் போய்விட்டதையும்,பெண்கள்,குழந்தைகள்,
கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் சிசு என்று
முப்பதாயிரம் ஈழத் தமிழ் உயிர்களை காப்பாற்றியிருக்க
கூடிய நிலையில் இருந்தும்,ஆட்சிக்காகவும் அதிகாரத்துக்காகவும்
அவர்கள் கொல்லப்பட, துணைபோகிற அளவுக்கு அவர்
சென்றதையும் கண்டிருகிறோம் நாம்.


முனிசாமி நாயுடு முதல்வர் பதவியை பெற்ற பிறகு
பார்ப்பனர்களுக்கு விசுவாசமாக நடந்துகொண்டார்.
இன்று அகில இந்திய முதலாளிகளாக வளர்ந்துவிட்ட
தனது குடும்பத்தினரின் நலன்களுக்காக பார்ப்பன இந்திய
தேசியத்துக்கு விசுவாசமாக நடந்துகொள்கிறார் கருணாநிதி.

மத்திய அரசும் மாநில அரசும் தாழ்த்தப்பட்ட
வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப வேண்டிய
இடங்களை நிரப்பாமல் விட்டிருப்பது பற்றிய விவாதங்களே
இன்னும் முடியாத நிலையில்,மத்திய அரசின் அலுவலர்கள்,
மற்றும் பயிற்சித்துறை தாழ்த்தபட்டோர்க்கும்,
பழங்குடியினருக்கும் பணியிடங்களில் இடஒதுக்கீடு
மசோதா 2008 என்ற ஒன்றை கொண்டுவந்து 47
கல்விநிறுவனங்களில் அவர்களின் இட ஒதுக்கீட்டு
உரிமையை பறித்திருப்பதை பற்றியும்,அந்த சட்டம்
செல்லுபடியாகும் நிறுவனங்களின் பட்டியலை மேலும்
விரிவுபடுத்திக்கொள்ள அனுமதித்திருப்பதையும்
எதிர்க்காமல் மௌனம் காத்த திமுக வினரின் நிலையும்
இங்கே நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.



பெரியாரின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்
பார்ப்பனரல்லாத சிலர் பார்ப்பனர்களின் இடத்துக்கு வந்து
பார்ப்பனீய ஆதிக்கத்தை விட மோசமான ஆதிக்கத்தை
செலுத்திவருவதை ஈழ போராட்டத்துக்கு எதிரான
கருணாநிதியின் ஒடுக்குமுறைகள் வழியாகவும்,
எடுத்ததற்கெல்லாம்தேசிய பாதுகாப்பு வழக்கு போடும்
அவரது நடைமுறைகள் வழியாகவும் நாம் புரிந்துகொள்ளலாம்.



பார்ப்பானை ஒழித்துப் பணக்காரன் கையில்
ஆதிக்கத்தை வாங்கிகொடுக்கவிரும்பாத,பெரியாரின்
இயக்கத்தில் இருந்து முறித்துகொண்டு வந்து,
பணக்காரர்களாகியிருக்கிற பார்ப்பன அடிமைகளால்
கஷ்ட்டப்படும் தமிழ் சமூகத்தை மீட்க வேண்டிய
தேவை எழுந்திருக்கிறது இன்று.


பெரியாரின் வழிகாட்டலின்படி சமதர்ம பொதுவுடைமை
கருத்துக்களை உயர்த்திப்பிடித்து பார்ப்பன,
கருப்பு(பணக்கார)பார்ப்பன, ஆதிக்கத்தை எதிர்த்து
ஏககாலத்தில் போராடுவது மட்டுமே நம்முன் உள்ள வழியாகும்.

Monday, July 20, 2009

ஷோபாசக்தி ஜீவிக்கிறார்



தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கோர்வையான பத்திகளோடு வன்மத்தையும் தனது அரசியல் அறியாமையையும் கலந்து பிரபாகரன் ஜீவிக்கிறார் என்றொரு கட்டுரையை தீராநதி இதழில் தீட்டியிருக்கிறார ஷோபாசக்தி.

பெரியாரிய,மார்க்சிய,பிறகான நவீனத்துவவாதியான அவரின் எழுத்துக்களில் மிளிரும் மேதமை உடனடியாக அதற்கு ஒரு எதிர்வினையை முன்வைக்கும் தேவையை உணர்த்தியதால் இந்த மறுமொழி முயற்சி.


எமது புரட்சிகர இயக்கத்தின் புனித இலட்சியமான சோசலிச தமிழீழம் அடைய என்பதாய் துவங்கும் புலிகள் இயக்கத்தின் உறுதிமொழியின் முதல் வாசகம் வெறும் புரட்சிகரமான வாய்ச்சொல் என்பதை இருபத்தைந்து ஆண்டுகளுக்குபிறகு கண்டுபிடித்து அறிவிக்க முனைந்திருக்கும் அவரை இடைமறித்து ஒரு விசயத்தை சொல்ல வேண்டியிருக்கிறது.


சர்வதேச நாடுகளின் வணிக சுரண்டல்,ராணுவ மேலாதிக்க நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட பிரதேசமாக,உலக புரட்சியில் மாளாத காதல் கொண்ட உங்களுக்கு புரியும் வார்த்தைகளில் சொல்வதானால் இந்தியாவில் மாவோயிச புரட்சியாளர்களின் கட்டுபாட்டில்இருக்கும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை போல,தமிழீழத்தின் பகுதிகளை பாதுகாத்து வைத்திருந்தது அந்த வாய்ச்சொல் இயக்கம்தான்.


தாடிக்கார கிழவன் மார்க்ஸின் பணிப்பெண்ணுக்கு புத்தகத்தை சமர்ப்பிக்கும் அளவுக்கு வரலாற்று உணர்வு கொண்ட உங்களுக்கு இந்த விசயத்தை நினைவூட்ட வேண்டிய நிலைக்கு எங்களை தள்ளிவிட்டது நியாயமா
ஷோபா சக்தி?

இரக்கத்துக்குறியவராக மட்டுமே கருதப்படக்கூடிய,நாயகனாக கொண்டாடப்படவோ,தலைவராகபின்பற்றக்கூடியவராகவோ இல்லாமல் போய்விட்ட உங்கள் முன்னால் தலைவர்,மதம்,சாதி,கட்சி,அமைப்புகள்,தாண்டி உலக தமிழர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பெற்று வெகுகாலமாகிவிட்டது என்கிற யதார்த்த உண்மை உங்கள் மதிப்பீட்டால் மாறப்போவதில்லை என்பதை அறிந்திருக்கிறீர்களா ஷோபாசக்தி?

விளிம்புநிலையினரின் கலகக்குரல் அல்லவா நீங்கள் !!
உங்களிடமிருந்து இது எதிர்பார்க்கப்பட கூடியதுதான்.

கடந்த இருபத்தைந்தாண்டுகளாக ஈழத்தமிழர்களின் அரசியல்,சமூக வாழ்வில் முதன்மை சக்தியாகவும்,மாபெரும் அமைப்பு பலத்தை பெற்றதாகவும்,எண்ணற்ற போரியல் சாதனைகளை செய்ததுமான விடுதலைப்புலிகளின் தலைமைக்குழு இலங்கை அரசால் ஒட்டுமொத்தமாக அழிக்கபட்ட வினாடியே,விடுதலைப்புலிகள் அமைப்பு மண்ணோடு மண்ணாய் சரிந்துபோனதாக கூறிவிட்டு அவ்வளவு அவசரமாக எங்கே செல்கிறீர்கள் ஷோபா சக்தி?


அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள்,தங்களுக்குள் பகைகொண்ட நாடுகளாக அறியப்பட்டிருந்த சீனா,இந்தியா,பாகிஸ்தான் போன்றவைகளின் ஆதரவோடு சிங்கள அரசு தமிழர் பகுதிகளை கைப்றறிய பிறகு வளர்ச்சி திட்டங்கள் என்கிற பெயரில் அங்கு அனுமதிக்க ஆரம்பித்திருக்கும் அந்நிய முதலீடுகளை,இத்துணை காலமும் தடுத்துக்கொண்டிருந்தது அந்த வாய்ச்சொல் இயக்கம்தான் என்பதை ஏகாதிபத்திய எதிர்ப்புபோராளியான நீங்கள் மறந்தது ஏனோ? செலக்டிவ் அம்னீசியாவா?


அதிவலதுசாரிய இயக்கமாக உருவெடுத்து சோசலிச சொல்லாடல்களை தனது குறுந்தேசியத்தை நியாயபடுத்த பயன்படுத்திகொண்ட ஒரு இயக்கத்தை ஒழிக்க அமெரிக்கா இந்தியா பாகிஸ்தான் சீனா என்று வலதுசாரி நாடுகளே இலங்கை அரசின் பின்னால் அணிவகுத்து நின்றதன் முரண்பாட்டை நீங்களே கொஞ்சம் விளக்குங்களேன்.


ஒரு வலதுசாரிய அமைப்பை உடைப்பதற்காக தனது உளவுதுறையை இந்தியா பயன்படுத்தியதன் முரண்பாட்டைஎங்களுக்கு விளக்காமல்,வெறுமனே ராஜிவ்காந்தியின் நினைவுநாளோடு புலித்தலைமை அழிக்கபட்ட நாட்கள் என்று கூறப்படுபவைகளை இணைத்து பம்மாத்து காட்டும் உங்களுக்கு எதற்கு இடதுசாரிய முகமூடி?


விமர்சனங்களை அனுமதிக்காத மாற்று கருத்தாளர்களை துரோகிகள் என்று கூறி கொலை செய்தது விடுதலைபுலிகள் இயக்கம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் உங்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்க வேண்டியிருக்கிறது.

மேற்குலக நாடுகள் இந்திய,சிங்கள அரசுகள் நீண்டகால திட்டங்களின் அடிப்படையில் விடுதலைபுலிகளின் அரசியல் ராணுவ அமைப்புகளில் ஊடுருவி வேலை செய்ததின் மூலமாகவே இன்றைக்கு புலிகளுக்கு இந்த பின்னடைவை கொடுத்திருக்கிறார்கள் என்கிற உண்மை இன்றைக்கு வெளிப்பட்டிருக்கிறது.


கருத்துக்களை அனுமதிக்காத,சனனாயகமற்ற ஒரு இயக்கத்துக்குள்,அரசியல்ரீதியாகவும் ராணுவரீதியாகவும் தவறான முடிவுகளை எடுக்கும்படியான வழிகாட்டல்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு செய்ய அந்நிய நாடுகளுக்கு எவ்வாறு சாத்தியமானது என்கிற கேள்விக்கான பதிலில் உங்கள் சனனாயகமின்மைக்கான புலம்பல்கள் எல்லாம் அர்த்தமற்று போய்விடுகின்றன.


இரண்டு இலட்சம் மக்களை பணயகைதிகளாக பிடித்துவைத்து அதில் இருபதாயிரம் மக்களை புலிகள் பலிகொடுத்ததாக வாய் கூசாமல் உங்களால் சொல்ல முடிவதில் எஙகளுக்கு ஆச்சரியமில்லைதான்.அந்த இருபதாயிரம் மக்களின் உயிர்களையும் தங்களோடு கடைசிவரை இருந்த போராளிகளின் உயிரையும் காக்க சரணடைதல் முடிவை மேற்க்கொண்டு,சரணடையவந்த நடேசனையும் மற்ற தளபதிகளையும் கொன்றுவிட்ட பிறகுதான் அந்த இனப்படுகொலையை சிங்கள ராணுவம் நிகழ்த்தியது என்கிற அடிப்படை மறைத்து,புலிகளின் தாக்குதலே இல்லாத நிலையில்தான் அந்த படுகொலைகள் நிகழ்ந்தது என்பதையும் மூடி மறைத்து யாரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள் நீஙகள்?


முகாமில் இருக்கும் பெண்களிடம் பாலியல் வன்முறை செய்ய முயன்ற சிங்கள ராணுவத்தினரின் துப்பாகிக்களை பிடிங்கி இளைஞர்கள் தாக்க முயன்றதாக செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன இன்று,இந்த செய்திகள் போதுமே தமிழ் மக்களை புலிகள் பனையகைதிகளாக வைத்திருக்கவில்லை எனபதை உணர்த்த.

சிஙகள ராணுவ தளபதிகளே வெறும் ஆயிரம் புலிகள்தான் மீதமிருக்கிறார்கள் என்று அறிவித்திருந்த நிலையில் ஆயிரம் பேர் எழுபதாயிரம் மக்களை எப்படி தடுத்துவைத்திருக்க முடியும் என்பது போன்ற தர்க்கரீதியான கேள்விகளை எழுப்புகிற நேர்மையை எல்லாம்,

புலிகளின் வரித்தொல்லையோ புள்ளைபிடிப்போ இனிமேல் இருக்கப்போவதில்லை என்று எழுதி,முகாம்களில் இருந்து இதுவரை சிங்கள ராணுவம் பிடித்து சென்ற பதிமூன்றாயிரம் பிள்ளைகள் பற்றியும் அவர்களில் பாதிப்பேரை அவர்கள் கொன்றொழித்திருப்பதை பற்றியும் வாய்திறக்க மறுக்கிற உங்களிடம் எதிர்பார்க்கிற அளவுக்கு நாங்கள் ஏமாளிகள் இல்லை.

போகிற போக்கில் புலிகள் ப்ரேமதாசாவோடு ஒப்பந்தம் செய்துகொண்டது போலவே ராஜசபக்சேவோடும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டாதாக கூறும் நீங்கள் அந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் உள்ளடக்கம் பற்றி எல்லாம் உங்கள் சிங்கள பாட்டாளிவர்க்க உளவாளி தோழர்களிடம் இருந்து தகவல் சேகரித்து வெளியிடாமல் போனது ஏனோ ?

தங்கள் தேசத்துக்கான அங்கீகாரத்தை பெறும் ஒற்றை நோக்கத்துக்காக மட்டுமே பெயரளவில் ஏகாதிபத்திய நாடுகளோடு சமரசத்தை கடைபிடித்த தலைமையின் வழிகாட்டலில்,களத்தில் போராடி வீழ்ந்த போராளிகளின் மரணத்தை அரசியலற்ற அவலங்களாக சித்தரிக்கும் உங்கள் போலித்தனத்தை உணர முடியாத அளவுக்கு நாங்கள் அரசியல் அறிவு அற்றவர்களுமல்ல.

தங்களின் அப்பட்டமான தனிமனிதத்துவ வாழ்வியல் சிந்தனைகளையும் தாண்டி,போராட துணிந்த புலம்பெயர் தமிழ் இளைஞர்களை துரோகிகள் என்று விளிக்கும் உங்களின் திடீர் இடதுசாரிபாசத்தின் யோக்கியதை எங்களுக்கு தெரிந்ததுதான்.செத்த விலங்கிலிருந்து உண்ணி கழருவதுபோல இடதுசாரி அமைப்புகளில் இருந்து பிய்த்துக்கொண்டு சென்றவர்களின் ரசிகர்மன்ற நிர்வாகிதானே நீங்கள்.

சிங்கள் அரசின் மனித உரிமை மீறல்கள்,சரணடைந்த பெண் போராளிகளின் பாதுகாப்பு,விசாரணைகளின்றி நீண்ட காலமாக சிறைகளில் இருக்கும் தமிழ்ர்களின் மறுவாழ்வு என்றெல்லாம் கதையாடல்களை நீட்டிச் செல்லும் நீங்கள் இன்றுவரை எரிக்சோல்கைம் இருதரப்புகளுமே ஒரு அரசியல் தீர்வுக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டன என்று சொல்லிக்கொண்டிருப்பதை சுட்டிகாட்டுகிறீர்கள்.

அது என்ன தீர்வாக இருந்திருக்கும் என்பதையும் சுட்டிகாட்டி இருக்கலாமே?

திரிகோணமலையை இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும்,நோராச்சோலையை சீனாவுக்கும் இலங்கை அரசு திறந்துவிட்டுருப்பதுபோல தமிழீழத்தின் பகுதிகளை அந்நிய நாடுகளுக்கு திறந்துவிட புலிகள் சம்மதித்து,தமிழீழத்தின் மக்களையும்,வளங்களையும் சூறையாடலுக்கு விட்டுவிட்டு,இலங்கை அரசும் மேற்கு மேற்கு நாடுகளும் கொடுக்கும் பெயரளவிலான தீர்வுத்திட்டங்களை ஏற்றுக்கொண்டு இனஒடுக்குமுறை என்கிற நுகத்தடியை சுமந்துகொண்டிருக்கும் மக்கள் மீது ஏகாதிபத்திய ஒடுக்குமுறை என்கிற என்கிற நுகத்தடியை சுமத்தவும் சம்மதித்திருக்க வேண்டும். அதுதானே நீங்கள் சொல்ல வருகிற தீர்வு?

புலிகளின் அழிவு,தலைமை கொல்லபட்டுவிட்டது என்றெல்லாம் நீங்கள் அள்ளிவிடும் சரடுகளையெல்லாம் சற்றுபரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

2008ஆம் ஆண்டு நவம்பரில் கிளிநொச்சியை பிடிப்பது சிங்கள ராணுவத்துக்கு கனவாகவே அமையும் என்று பிரபாகரன் தனது மாவீரர் தின உரையிலேயே குறிப்பிட்ட சில தினங்களிளேயே பின்வாங்கி செல்லும் முடிவை எடுத்த புலிகளின் நடவடிகைகளை கனரக ஆயுதங்கள்,ஆளில்லாத உளவு வாணூர்திகள்,ராணுவவீரர்கள் என்று இலங்கையின் போரை தனது போராக நடத்திக்கொண்டிருந்த இந்தியாவின் உளவு செயற்க்கைகோள் அனுப்பும் முயற்சிகளோடு இணைத்துப்பார்ப்பது சரியாக இருக்கும்.

தமிழகத்திலும்,புலம்பெயர் தேசங்களிலும் நடைபெறும் போராட்டங்களும் எழுச்சிகளும் என்ன விளைவுகளை கொடுக்கின்றன என்பதை அறிவதற்காகவும்,சிங்கள் ராணுவத்தின் பிடியில் விழும் மக்களுக்கு இழைக்கப்படபோகும் சித்திரவதைகளை கருத்தில்கொண்டும் தங்களோடு வந்த மக்களை அழைத்துக்கொண்டு பின்நகர்ந்த புலிகள் ஆயுத போராட்டத்தை ஒத்திவைக்கிற முடிவை அப்போதே எடுத்துவிட்டதாக கருத சகல நியாயங்களும் உண்டு.

தங்கள் மரபுவழி படையணிகளையும் ஆயுதவளங்களையும் பரவலாக்கிவிட்டு பின்நகர்ந்த புலிகள்,புலத்திலும், ஊடுருவியிருந்த சக்திகளால் அடையும் பின்னடைவுகளை உணர்ந்து கொண்டு,தனது மகனையும்,மகளையும் போராட்ட களத்திற்க்குகொடுக்கும் முடிவில் இருந்த தேசிய தலைவரை போரின் ஏதோ ஒரு கட்டத்தில் களத்திலிருந்து அப்புறப்படுத்தியிருந்தார்கள் என்ற முடிவுக்கு தர்க்கரீதியாக வர முடியும்.

ராணுவ தளபதிகள் சிலரையும் அரசியல் பிரிவு தலைவர்கள் சிலரையும்,குறிப்பிட்ட அளவிலான போராளிகளையும் மட்டுமே களத்தில் நிற்க வைத்திருந்தார்கள் புலிகள் என்பதாகவும் கருதலாம்.

ஆயுதங்களை மௌனிக்க செய்வது என்கிற முடிவை புலிகள் அறிவித்த பிறகும் அவர்களையும் மக்களையும் கொன்றொழித்திருக்கிறது இலங்கை ராணுவம்.

வன்னியில் புலிகளுக்கெதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள்,பாதுகாப்பு வளையம் என்று அறிவித்த பகுதிகளுக்கு வந்த மக்களை ஏன் கொன்றார்கள்,ப்ரான்ஸின் உதவி நிறுவனத்தை சேர்ந்தவர்களின் ஆம்புலன்ஸை தாக்கி மருத்துவ பணியாளர்களை கொன்றார்களே அவர்கள் எல்லாம் புலிகளா? இது ஒன்றே போதுமே புலிகள் ஆக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழர்கள் என்கிற காரணத்துக்காகவே மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று சொன்ன தோழன் முத்துக்குமாரின் வார்த்தைகள் களத்திலும்,இன்று முகாம்களிலும் நிதர்சனமான உண்மையாகிருக்கிறது.

மாகாண சபைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்க்கு அரசு தரப்பு சம்மதித்திருப்பதாகவும்,கிழக்கின் உதயத்தை போலவே வடக்கின் வசந்தத்தை அரசு கொண்டுவந்துவிடும் என்று தமிழ்மைய கட்சிகளும் தமிழ் அறிவுஜீவிகளும் கருதுவதாக ஷோபாசக்தி சொல்லிக்கொண்டிருக்கையில், நாட்டை நேசிப்பவர்கள், நேசிக்காதவர்கள் என்ற இரு தரப்பினராக மட்டுமே இலங்கையில் உள்ள மக்களை தான் பார்க்கப்போவதாக அறிவித்திருப்பதன் மூலம் தமிழர்களுக்கு எந்த உரிமைகளையும் கொடுக்க முடியாது என்பதை அழுத்தந்திருத்தமாக உறுதிபடுத்தியிருக்கிறார் ராஜபக்சே.

அறுபது ஆண்டுகளாக சிங்கள அதிகாரவர்க்கத்தின் சிந்தனையில் வராத மாற்றம் இனி வரும் என்று நம்பவோ,ஒட்டுமொத்த இலங்கையில் புரட்சி என்பது போன்ற அபத்தகளஞ்சியமான சிந்தனைகளுக்கோ இனி எந்த இடமில்லை.


அரசியல் போராடங்களை முதன்மைப்படுத்துவது.அமைப்பில் இருக்கும் சந்தர்ப்பவாத சக்திகளை களையெடுப்பது.போராட்ட போக்கின் வழியில் இழைத்த சில தவறுகளை திருத்திக்கொண்டு முன்நகர்வது தேவையான நேரத்தில் ஆயுதபோராட்டத்தை முன்னெடுப்பது ஆகியவைகளே புலிகளின் திட்டமாக இனி இருக்க கூடும்.

உலகம் வியக்கத்தக்க விதத்தில் ராணுவ போராட்டங்களை நடத்திய அவர்கள் அரசியல் போராட்டங்களையும் அவ்வாறேமுன்னெடுத்து தமிழீழத்தை வெல்வார்கள் என்பதில் நம்பிக்கை கொள்வோம்.

உலக இடதுசாரி இயக்கங்களால் இலங்கை ஆசியாவின் வெடிமருந்துபீப்பா என்று அழைக்கப்பட்ட காலம் ஒன்று இருந்ததாக அழுத்துக்கொள்ளும் ஷோபாசக்தி சமீபத்தில் இந்திய மாவோயிஸ்ட் கட்சி தனது அணிகளுக்கு வெளியிட்ட சுற்றறிக்கை பற்றி கேள்விப்பட்டிருக்க நியாயமில்லை.

அதில் விடுதலைபுலிகள் தங்கள் எதிரிகளை குறைத்து மதிபிட்டுவிட்டதால் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும்,அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும்படி தனது அணிகளை கேட்டுக்கொண்டுள்ளதுடன்,விடுதலை புலிகளுக்குஏற்ப்பட்டிருக்கும் பின்னடைவு ஒட்டுமொத்த தெற்க்கு ஆசிய புரட்சிகர இயக்கங்கள்,தேசிய விடுதலை இயக்கங்களின் ஆயுத போராட்ட முன்னெடுப்புகள் மீது எதிர்மறை விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்றும் குறித்திருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகளின் மீது விமர்சனங்கள் இருந்தாலும்,ஈழதேசிய விடுதலை போராட்டத்தின் புரட்சிகர உள்ளடகத்தையும் அதில் விடுதலைபுலிகள் வகித்த பாத்திரத்தையும் அங்கீகரித்திருக்கிறது இந்திய (மாவோயிச)கம்யூனிஸ்ட் கட்சி.

உண்மையான புரட்சிகர சக்திகளின் எண்ணத்தை அறிந்துகொண்ட பிறகு ஷோபாசக்தியிடம் நற்சான்றிதழ் பெற்று புலிகளுக்கு கொடுத்துக்கொண்டிருக்க தேவைகள் இல்லை நமக்கு.

தமிழர்களின் உள்ளங்களில் வீரனாகவும் மனிதனாகவும் பிரபாகரன் ஜீவித்துக்கொண்டிருக்கும்வரை,ஏகாதிபத்திய அரசுகளுக்கும் பேரினவாத அரசுக்கும் எதிராக வெற்று வார்த்தைகளையும்,இடதுசாரி அமைப்புகளுக்கும்,தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் எதிராக வன்மத்தையும்,மனிதத்துவ முகமூடியை அணிந்துகொண்டு கக்கிக்கொண்டிருக்கும், உயிரோடு அழுக ஆரம்பித்திருக்கும் வர்க்கத்தின் பிரதிநிதியாக ஷோபாசக்தியும் ஜீவித்துக்கொண்டிருப்பார்.

Thursday, July 16, 2009

அ.மார்க்ஸ் என்றொரு தேசமறுப்பாளன்



உறங்கிக்கொண்டிருக்கையில் கூட தேசிய இனம்,தேசம்.தேசியம் என்கிற வார்த்தைகளை கூறினால் எங்கோ தமிழ்த்தேசியம் பற்றித்தான் பேசுகிறார்களோ என்று விமர்சனம் என்கிற பெயரில் ஒழிக கோஷம் போட கிளம்பிவிடுவார் தோழர் அ.மார்க்ஸ்.

தேசியம் என்கிற கருத்தியலுக்கு எதிராக பேசிய எழுதிய சர்வதேசிய எழுத்தாளர்களை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தும் மாபெரும் பணியில் கடந்த சில வருடங்களாகவே மிக தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அவரின் தேசிய எதிர்ப்பில் நமக்கும் உடன்பாடுகள் உண்டுதான்.

ஆனால் ஒரு சின்ன வருத்தமும் கூடவே வந்து தொலைகிறது.

அவரின் தேசிய எதிர்ப்பு கருத்துக்கள் எல்லாம் ஈழதேசியத்துக்கும்,தாய்தமிழக தமிழ்த்தேசியத்துக்கும் எதிராக மட்டுமே முன்னிருத்தப்படுகிறதே ஒழிய,இந்திய தேசியத்துக்கு எதிராகவோ அல்லது அவரின் பெருவிருப்புக்கு உரியதான காஸ்மீர தேசியத்துக்கு எதிராகவோ ஒரு பத்தியை கூட அவர் எழுதியதாக தெரியவில்லை.

இந்த இரண்டு தேசியங்களும் அக்மார்க் முத்திரை பெற்ற மனித சுரண்டல்களும் அவலங்களும் இல்லாத தேசியங்களாக இருக்கின்றன என்றும்,எந்த தவறுகளும் இல்லாமல் மிகசரியாக காஸ்மீர் தேசிய விடுதலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்றும் கருதுகிறாரா அ.மார்க்ஸ்?

தோழர் அ.மார்க்ஸ் பதிலளிப்பார் என்றே நம்புவோம்.

தமிழகத்தின் குறிப்பிடத்தகுந்த அறிவுஜீவிகளில் ஒருவரான அவரை பற்றி நாமும் ஒரு விமர்சனத்தை முன்வைக்கலாம் என்கிற நப்பாசையில் இலங்கையில் அடுத்து என்ன என்கிற பெயரில் தீராநதி இதழில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையை புரட்டியபோது இப்பவே கண்ணை கட்டுதே என்கிற வடிவேலுவின் நிலைதான் நமக்கும் வந்தது.

புலிகள் செய்த கடைசிதவறு என்கிற பெயரில் சென்றமாதம் தான் எழுதிய கட்டுரைக்கு தீவிர புலிகள் ஆதரவாளர்களிடம் இருந்து கூட பாராட்டுகள் வந்ததாக கூறுகிறார் அ.மார்க்ஸ்.

தமிழகத்தின் மேன்மைதங்கிய சில அறிவுஜீவிகள் சித்தரிப்பதுபோல ரசிகர்மன்ற மனப்பான்மையோடு செயல்படாமல் வைக்கப்படும் கருத்துகளை எதிர்கொண்டு விமர்சிக்கும் அளவுக்கு பக்குவம் கொண்டவர்களே புலிகள் ஆதரவாளர்கள் என்று ஒப்புக்கொண்ட அ.மார்க்க்சுக்கு நமது நன்றிகளை கூறிக்கொள்வோம்.

மூன்று வேளை அறுசுவை உணவு,நேர்த்தியான இருப்பிடங்களோடு புலிகள்பகுதிகளில் இருந்து வெளியேறும் மக்களை வரவேற்க காத்திருந்த சிங்கள ராணுவத்தினரின் அழைப்பை மதிக்காமல் புலிகள் மக்களை மனித கேடயங்களாக பிடித்துவைத்திருபதாக இவரது உற்ற தோழன் சோபாசக்தி கூறியபோது மவுனித்திருந்த இவர் இன்றைக்கு மூன்று இலட்சம் தமிழர்கள் நிழற் சிறைகளில் அடைபட்டு கிடப்பதாக எழுதியிருந்ததை பார்க்கையில் புல்லரிப்பே வந்துவிட்டது.

இலங்கையில் அழிக்கப்பட்டுவிட்ட ஜனநாயகம்.மக்களை முகாம்களில் அடைத்துவைத்துக்கொண்டு உள்ளாட்சி தேர்தலைகளை நடத்த முயற்சிக்கும்ராஜபக்சே கும்பலின் சதி ஆகியவைகளை பற்றி கூறிவிட்டு.தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்த திஸ்ஸ விதாரண குழு அறிக்கை முடங்கி கிடப்பதாக கூறுகிறார் அ.மார்க்ஸ்.

கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக சிங்கள ஆளும்வர்க்கங்கள் அமைத்த தீர்வுத்திட்ட குழுக்களின் நிலை பற்றிய நினைவு வந்து போனது மனதில்.

ராஜபக்சே மீது போர்குற்ற விசாரணை நடத்தப்படுவதை தடுத்த,ஈழத்தின் தமிழினபடுகொலையில் பங்கேற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவோடு
முன்னால் சோசலிச நாடுகளான சீனா,ரஸ்யா,வியட்நாம் ஆகியவைகளை மறக்காமல் குறித்த அ.மார்க்ஸ் பாகிஸ்தானை கழட்டிவிட்டது ஏனோ?

ஆட்க்கொணர்வு மனுவை கூட அனுமதிக்காத ஸ்டாலினிய ரசியா பற்றி அதிகாரம் பற்றிய உரையாடல்களில் நீட்டி முழக்கும் அவருக்கு பாகிஸ்தானில் இருந்து ஏதேனும் பத்வா வந்திருக்குமோ?

பேசாப் பொருளை பேச துணிந்த அவருக்கு ஏன் இந்த தடுமாற்றம்?

ஈழத்தமிழின படுகொலையில் ஒன்றிணைந்த இந்திய பாகிஸ்தானிய ஆளும்வர்க்கங்களை அம்பலபடுத்துவதில் பார்ப்பனிய இதழான காலசுவடுக்கு இருக்கும் சிரமத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்துத்துவ பாசிச எதிர்ப்புபோராளி அ.மார்க்சுக்கு அதில் என்ன சங்கடம்.

தமிழீழ தேசிய தலைமையின் அழிவு பற்றி தர்க்கரீதியான ஆய்வுகள் இன்றி இவர் சொல்லியிருக்கும் கருத்துகள் பரிசீலிக்க தகுதியற்றவையாக இருப்பதால் அதற்குள் நாம் போக தேவை இல்லை.

பிரபாகரனின் மரணத்தால் தங்கள் அரசியல்வாழ்வு அஸ்தமித்துபோய்விட்டதாக கருதும் ஈழ ஆதரவாளர்கள் பற்றி இவர் கூறும் கருத்து குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்தது போல ஈழவிடுதலைக்கு குரல் எழுப்பும் தமிழக அமைப்புகள் அனைத்தையும் பொதுமைப்படுத்தி குறை கூறுவதாக மட்டுமே அமைந்திருப்பதால் அவரின் கருத்தாழமிக்க அடுத்த சிந்தனையை பரிசீலிக்க முயலுவோம் நாம்.

உச்சபச்ச கோரிக்கைகள் கொள்கை இலட்சியங்களின் அடிப்படையிலான காலமல்ல இது என்றும் அறம் நீதி ஆகியவற்றை வறுபுறுத்தி மக்களின் துயரத்தை களைய நம்மாலானதை செய்ய வேண்டும் என்று போகும் இவரின் அடுத்த பத்தியை படிக்கையில் மேலும் சில கேள்விகள் தோன்றியது நமக்கு.

தங்கள் வணிக ராணுவ நலன்களுக்காக உச்சபச்ச மனித அவலத்தை ஈழத்தமிழர்களுக்கு இழைத்திருக்கும் முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளின் ஆளும்வர்க்கங்களோடு அறம் பற்றிய நீதி பற்றிய உரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லும் இவர்,போராட்ட களத்தின் போக்கில் புலிகள் இழைத்த தவறுகளுக்கு எதிராக மட்டும் சாட்டையை சுழற்றிக்கொண்டு திரிந்தது ஏனோ?

மீண்டும் கேளிக்கை வரிவிதித்து அதன் மூல வசூலாகும் தொகையை ஈழத்தமிழர்களுக்கு அனுப்புவோம் என்றால் சினிமாக்காரர்கள் ஒத்துகொள்வார்களா?

பஸ் கட்டணத்தை பத்து ரூபாய் உயர்த்தி ஈழத்துக்கு அனுப்பலாம் என்றால் மாணவர்கள் ஏற்ப்பார்களா ?

வாட் வரியை ஒரு சதம் உயர்த்த வணிகர்கள் சம்மதிப்பார்களா ?

என்றெல்லாம் அதிபுத்திசாலித்தனமான் கேள்விகளை முன் வைக்கும் அ.மார்க்சுக்கு நாம் சொல்லிக்கொள்ள வேண்டியது ஒன்றுதான்.

குஜராத்தில் பூகம்பம் ஒரிசாவில் வெள்ளம் என்று எந்த பேரழிவு வந்தாலும் தனது கைகளில் இருக்கும் தான் உழைத்து சேர்த்த காசை கொடுக்க இயல்பாக முன்வந்த தமிழர்களுக்கு மனிதநேயத்தை பற்றி நீங்கள் பாடம் நடத்த தேவையில்லை.

அதற்கான தகுதியும் உங்களுக்கு இல்லை.


இந்துத்துவ எதிர்ப்பு என்பதை இந்திய தேசிய எதிர்ப்பிலிருந்து பிரித்து பார்க்க முடியாது என்கிற அடிப்படை உண்மையை மூடிமறைக்க முயலும் அ.மார்க்ஸ் போன்றவர்களிடம் தமிழக இளையதலைமுறை விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகியிருக்கிறது இன்று.