Friday, February 25, 2011

$கவிதை $



அகம்
பிரம்மாஸ்மி

ஆறாவது
வார்டு

இசங்கள்

அப்ப தீ
போ பவ

இன்மை

கி.எஸ்.ஜெ.

அனல்
ஹக்

ஹராஹிரி

கழுதை

மனிதன்

கவிதை **




ஆழ்கடலின்
அழுகுரல்
கேட்டது

இடியோசை
நகர்ந்தது

உதிரம்
உதிர்ந்தது
கடற்கரை
மணலெங்கும்

என்னை அரிந்து
எழுதினேன்

யோசப் க.

தூரத்து
சாலையில்
எழுந்தது
மீட்பர்களின்
கெக்கலி

இடியோசை
பிடித்து
நடந்த
பாதங்களின்

நிழலாகி
தொடர்ந்தேன்..

கவிதை ***




ஏதோ ஒரு மழைநாளின்
பற்றி படரும்
உணர்வுகளின்
பின்னலில்


மிரட்சியோடு
இரு விழிகள்
நிழலாடி செல்லும்


மௌனமாய் துள்ளலோடு
கடந்து சென்ற மழைத்துளி
வெம்மையை எழும்
உயிரின் ஆழங்களில்


மிச்சம் வைக்கப்பட்ட
குழந்தமை கனவுகள்
உயிரின் தேடலாய்
நீளும்


கட்டவிழ்க்கும்
பிஞ்சு விரல்களில்
விரியும்
மீட்சியின்
சிறகுகள்

Monday, February 14, 2011

கவிதை *


இலையுதிர் கால
மரம்

கைவிடப்பட்ட
இருப்புப் பாதை

சிறகை தொலைத்த
பறவை

புத்தகத்தின்
மயிலிறகு

இந்த
கவிதை

நான்

Monday, February 7, 2011

கவிதை .......




எங்கே செல்வாய்

எவ்வளவு தூரம்
ஓடுவாய்

எதில் ஒளிந்து
கொள்வாய்

உன்னைப்போல
இன்னொருவன்
இல்லை என்றது
முகம் பார்த்த
கண்ணாடி

பிறகு உமிழ்ந்தது

குருதி சுவைத்து
ஓடின
ஓநாய்கள்

கானல்
நீர்க்குளத்தில்
கல்லெறிந்தேன்

எரிந்தேன்..

கவிதை




வெட்ட வெளியின்
வெளிச்ச புள்ளிகள்
பிடித்தேன்

வெற்றுத்தாள் ஒன்றில்
வைத்தேன்

ஒவ்வொன்றும்
ஓவியமாக
தன்னை
வரைந்துகொண்டது

தீராத என் கவிதையொன்றின்
வரிகளை எழுத துவங்கினேன்

வெளியில் கலந்து
மறைந்தன

உள்ளங்கையில்
மிச்சமிருந்தது
வெறுமை

கவிதை




தத்துவங்களின் தாகம்
பெருகி வழிய
தொண்டைக்குள் இறங்கி
இரை தேடிய
என் பாட்டனின் சோகம்
நரம்புகளில் பாய்ந்து
சிலிர்த்தது

உமிழப்பட்ட
வார்த்தைகளிலெல்லாம்
தனித்திருந்து
முடங்கியது


அதிமானுடன் தேடி
பயணம் நடந்த
பாதையில்
ஓர் ஓரமாய்
வீசப்படும் துண்டுகளுக்காய்
தானும் நாய்க்குட்டியுமாய்
பாடிக்கொண்டிருந்த
கிழவனின்
குரலில்

ஒழித்து தெரித்தது
கள்ளோடு
கொஞ்சம்
கம்யூனிசமும்..

Sunday, February 6, 2011

கவிதை



எள்ளி நகையாடி
என்னை தவிர்த்துவிட்டு
செல்லும்
சிறு விழிகள்

இரவுகள் தோறும்
அர்த்தம் தெரியாமல்
தவித்து
மனவெளியில்
திரிகையில்

பற்றவைத்துச் செல்கின்றன
இளமையின் வேர்களில்
துளி துளியாய்..

இனியும்
உணரப்படாமல்

காணலில் பரவி
பகல்களை
கொள்ளை கொண்டு

அழகான இரவுகளை
சற்றே முரட்டுத்தனமாய்
போதிய மென்மையுடன்
சூழும் என் காதல்

தணிந்து தணிந்து
தவழவே
துவங்கிவிடும்
விடியலில்

உள்ளங்கை சூட்டில்
முகம் புதைத்து
ஓர் கணம் சிலிர்த்து
மீண்டும் துவங்கும்
பயணம்

விழிகளின் செவ்வரி
திசைகள் படைக்கும்
உறுதியோடு
நிறம் மாறும்.

Thursday, February 3, 2011

கவிதை...




சலனமற்றிருந்த
விழிகள்
வெறிக்கும்


மிருகத்தின்
சாயல்


உயிர்ப்புமிக்க
நீரோட்டத்தின்
ஏக்கம்


எதிர்கொள்ள
துணிவில்லாமல்
அழுத்தமான
தனிமையில்
திசைகளற்று
தொடர்கிறது


துள்ளலோடு
உலவுகின்றன
மகிழ்வூட்டலின்
இருண்ட பக்கங்கள்



மேய்ச்சல் நிலத்தின்
இடையன் சுட்டுவிரல் பிடித்த
மென் விரல்கள் போய்
ஒற்றை ஆட்டுக்குட்டி மட்டும்
தோளில் சுமையாய்
துவண்டு படுத்திருக்கும்



இரவின் காரிருள்
மூண்டெழ



நாடோடிகள் நடனம்
வெறிகொண்டு
துவங்கும்..