Monday, December 5, 2011

கவிதை

அறியப்படாத கதவுகளுக்கு
அப்பால் காத்திருக்கிறது
பேய் மழை

வாசித்த பக்கங்களின்
வலிகளை
பிரதி எடுக்கிறேன்

தேங்கிய தென்றல்
தெருவில் வழிய
தேகம் உலர்கிறது

மீதமிருக்கின்றன
சில
முற்றுப்புள்ளிகள்

கவிதை

விழிக்கும்போதெல்லாம்
விழித்துக்கொள்கிறது
விரக்தி

ஆழ்ந்து சுவாசித்து
அக்கறையின்மையை
நிரப்பிக்கொள்கிறேன்

நிகழ்தகவு விதிகள்
தலைகீழாய்
எழுதப்படுகிற

வெளியில்

கண்கள் கட்டப்பட்டு
சுற்றி விடப்பட்டிருக்கிறார்கள்
திவாலாகிப்போன
தீர்க்கதரிசிகள்