கையெதிரே
கிடக்கின்றன
கலைத்துப் போடப்பட்ட
சீட்டுகள்
எனதல்லாதவை
எல்லாம்
வன்மங்களின்
மாயை களத்தில்
அரிச்சுவடியும்
அறியாதவன்
ஆடுவதென்பது....
உபேக்சா
என்றான்
புத்தன்
உதவாக்கரை
என்கிறது
ஊர்
Wednesday, September 28, 2011
கவிதை
எட்டவே இருக்க
வேண்டுமெனக்கு
வெளிச்சங்கள்
எதில் தள்ளிவிடுவது
இந்த பகல்களை
வான்காவின்
பரிதிக்கெதிராய்
வரித்துகொள்கிறேன்
உலகின்
முதல்
போதையை
வேண்டுமெனக்கு
வெளிச்சங்கள்
எதில் தள்ளிவிடுவது
இந்த பகல்களை
வான்காவின்
பரிதிக்கெதிராய்
வரித்துகொள்கிறேன்
உலகின்
முதல்
போதையை
கவிதை
புளிப்பு மிட்டாய்கள்
ஆற்ற ஆற்ற வரும்
பால் நுரை
ஒரு அழுமூஞ்சி
பொம்மை
கொஞ்சம்
கோப்பி
ஒரு ரூபாய்
அல்வா
ஜங்கிள் புக்
மோக்ளிக்கு
சாக்காடுகள்
சமீபமாகின்றன
ஆற்ற ஆற்ற வரும்
பால் நுரை
ஒரு அழுமூஞ்சி
பொம்மை
கொஞ்சம்
கோப்பி
ஒரு ரூபாய்
அல்வா
ஜங்கிள் புக்
மோக்ளிக்கு
சாக்காடுகள்
சமீபமாகின்றன
கவிதை
இன்னும் சில
கவிதைகள் எழுதலாம்
இருபத்தியோராம் நூற்றாண்டு
புரட்சிக்கு செயல்திட்டம்
வகுக்கலாம்
நிலையான புள்ளியொன்று
கிடைத்தால்
உலகை பிடித்தும்
ஆட்டலாம்
அடுத்தவேளை உணவு
மட்டுமல்ல
அந்நியமாதலும்
அவரின்
தயவுதான்
கவிதைகள் எழுதலாம்
இருபத்தியோராம் நூற்றாண்டு
புரட்சிக்கு செயல்திட்டம்
வகுக்கலாம்
நிலையான புள்ளியொன்று
கிடைத்தால்
உலகை பிடித்தும்
ஆட்டலாம்
அடுத்தவேளை உணவு
மட்டுமல்ல
அந்நியமாதலும்
அவரின்
தயவுதான்
Monday, September 26, 2011
முரண் கவிதைகளில் இருந்து
விளையாட்டாய்
கிள்ளி வைத்த
சூனியக்காரி
ஓடிப்போனாள்
புனைவின்
அடவியில்
பேராவலில்
விரிந்த
விழிகளின்
மருட்சி
இமை களைந்து
சூன்ய புயலில்
பாலை
மணலெண்ணிக்
கொண்டிருப்பேன்
கிள்ளி வைத்த
சூனியக்காரி
ஓடிப்போனாள்
புனைவின்
அடவியில்
பேராவலில்
விரிந்த
விழிகளின்
மருட்சி
இமை களைந்து
சூன்ய புயலில்
பாலை
மணலெண்ணிக்
கொண்டிருப்பேன்
கவிதை
அருந்தக
அரவங்களின் சீறலில்
நடுக்குறும்
காலிக்குவளையில்
நிறையும் ஓர்
நீண்ட துயர்
வெண்
மஞ்சள் திட்டுக்கள்
மிதக்கும் நச்சுப்பொய்கையில்
படரும் எழுச்சியுற்ற
தீக்குறி
முடிவற்ற இரவில்
எறியப்பட்ட குவளை
சிந்தும்
வசந்தத்தின்
பனி நீர்
அரவங்களின் சீறலில்
நடுக்குறும்
காலிக்குவளையில்
நிறையும் ஓர்
நீண்ட துயர்
வெண்
மஞ்சள் திட்டுக்கள்
மிதக்கும் நச்சுப்பொய்கையில்
படரும் எழுச்சியுற்ற
தீக்குறி
முடிவற்ற இரவில்
எறியப்பட்ட குவளை
சிந்தும்
வசந்தத்தின்
பனி நீர்
Saturday, September 24, 2011
கவிதை
விதிக்கப்பட்ட
அறைச்சுவர்களின்
அயர்வு
விழுங்கி
தீர்வதில்லை
தற்புணர்ச்சி
கடவின்
வெளிறிய
பிறழ்வுகள்
வியாபித்து நிற்கும்
விளங்காமையில்
கடைசி கல்லையும்
எறிந்த
பின்......
அறைச்சுவர்களின்
அயர்வு
விழுங்கி
தீர்வதில்லை
தற்புணர்ச்சி
கடவின்
வெளிறிய
பிறழ்வுகள்
வியாபித்து நிற்கும்
விளங்காமையில்
கடைசி கல்லையும்
எறிந்த
பின்......
Monday, September 5, 2011
கவிதை
அழி ரப்பரால்
அழித்துக்கொண்டிருக்கிறார்கள்
உடலை
அனாவசிய சிறுமிகள்
கையிருப்பின்
செயற்கை கன்னித்திரைகளை
மறுத்து
நிற்கும்
நீலப்பறவை
அழித்துக்கொண்டிருக்கிறார்கள்
உடலை
அனாவசிய சிறுமிகள்
கையிருப்பின்
செயற்கை கன்னித்திரைகளை
மறுத்து
நிற்கும்
நீலப்பறவை
கவிதை
இரவில்
முன்னால் விழும்
நிழலில் மட்டுமே
நிகழ்கிறது என்
முன்னேற்றம்
அதனாலென்ன
எங்களுக்கும் இதயமிருக்கிறது
என்பவர்களில் இல்லை
நான்
Saturday, September 3, 2011
கவிதை
என் இருத்தலுக்கான
சான்றிதழில்
கையொப்பமிட்டுத் தந்தது
காற்று
கழுதைகள் கால்களிடையே
கை நழுவி வீழ்ந்தது
அது
முன்பக்கம் சென்றால்
கடிக்கின்றன
பின்பக்கம் சென்றால்
உதைக்கின்றன
அதை அவைகளே
வைத்துக்கொள்ளட்டும்
அடுத்த நூற்றாண்டு
வரை
Friday, September 2, 2011
கவிதை
ஏன் எப்போதும்
திறந்திருக்கின்றன
எங்களுக்கான
வதைகூடங்கள்
ஏன் இன்னும்
எரிக்கப்படுகின்றது
எங்கள்
நிலமும்
உடலும்
எப்போதோ
நிறைந்துவிட்டது
எஜமானர்களின்
ஏழாவது ஜாடியிலும்
தங்கம்..
,கவிதை,
முன்நிலா பொழுதுகளில்
முயங்குதல் சப்தங்களில்
அதிரும் காற்றில்
சிலிர்க்கும்
உலர் நிலத்தின்
ஒற்றை நாணல்
ஒரு துளி நதியின்
பிரவாகம் பருக
திணறும்
பால்வெளி
சபிக்கப்பட்ட
சார்வாகனின்
பாதங்களில்
முடியும்
முடிவுறா
பாதைகள்...
முயங்குதல் சப்தங்களில்
அதிரும் காற்றில்
சிலிர்க்கும்
உலர் நிலத்தின்
ஒற்றை நாணல்
ஒரு துளி நதியின்
பிரவாகம் பருக
திணறும்
பால்வெளி
சபிக்கப்பட்ட
சார்வாகனின்
பாதங்களில்
முடியும்
முடிவுறா
பாதைகள்...
Thursday, September 1, 2011
கவிதை
மழை நேர வாசிப்பின்
பக்கங்களில் எரியுமென்
யாக்கை
உதிரும்
சிகரெட் சாம்பலில்
தணிந்து தவழ்ந்து
தார்சாலை திவலைகளில்
தக்கை மீது தவிக்கும்
ஓர் துளி
நெருப்பு
Subscribe to:
Posts (Atom)