Saturday, August 27, 2011

கவிதை



தியான பெருநிலம்
தழுவி பிரியும்
அமைதியின்மையின்
அலைகள்


கண் எதிரே
கடவுள்


கையருகே
காமம்


நகரத்து வீதிகளில்
ஆண்குறி காட்டி
திரிபவனின்
உள்ளங்கைக்குள்
ஒளிர்ந்தது


தவறி விழுந்த
தாரகை


கவிதை

நீங்கள்
புனிதர்கள்


நீங்கள்
புத்திசாலிகள்


நீங்கள்
வெற்றியாளர்கள்


நீங்கள்
கலகக்காரர்கள்

பிறகும்
நீங்கள்
பிக்குகளாய்

நீங்கள்
நான்
ஒன்றுதான்



அம்மணத்தில்

Friday, August 5, 2011

கவிதை


கைவிடப்பட்டவர்களின்
மரணங்கள் நிகழும்
பிரதேசங்களின்
நிறமிழந்த
வன்னத்த்துப்பூச்சிகள்
சிறகுகள் விரிக்கின்றன
ஊழிக்காலம் கடக்க

இரவு
வரும் பாதையில்
சிதைந்த கைகளால்
பித்தனொருவன்
இழுத்துச் சென்ற
அரைச்சாக்கில்
உலகமிருந்தது

Tuesday, August 2, 2011

கவிதை

பெருகி வழியும் இரவுகளில்
அலைகின்றன
வெண்ணிற
மனநிற
முகங்கள்

எச்சில் நாவுகளில்
நிணமும்
குருதியும்

உறைந்த நிலத்தில்
படியும்
கண்ணீர்த்துளிகள்

பால் பற்களிடையே
தேங்கிய
ஆதிகுரல்

எம் அம்மாக்கள்
இப்போதெல்லாம்
பூச்சாண்டிகளை
அழைப்பதேயில்லை