Saturday, August 27, 2011
கவிதை
தியான பெருநிலம்
தழுவி பிரியும்
அமைதியின்மையின்
அலைகள்
கண் எதிரே
கடவுள்
கையருகே
காமம்
நகரத்து வீதிகளில்
ஆண்குறி காட்டி
திரிபவனின்
உள்ளங்கைக்குள்
ஒளிர்ந்தது
தவறி விழுந்த
தாரகை
கவிதை
நீங்கள்
புனிதர்கள்
நீங்கள்
புத்திசாலிகள்
நீங்கள்
வெற்றியாளர்கள்
நீங்கள்
கலகக்காரர்கள்
பிறகும்
நீங்கள்
பிக்குகளாய்
நீங்கள்
நான்
ஒன்றுதான்
அம்மணத்தில்
புனிதர்கள்
நீங்கள்
புத்திசாலிகள்
நீங்கள்
வெற்றியாளர்கள்
நீங்கள்
கலகக்காரர்கள்
பிறகும்
நீங்கள்
பிக்குகளாய்
நீங்கள்
நான்
ஒன்றுதான்
அம்மணத்தில்
Friday, August 5, 2011
கவிதை
கைவிடப்பட்டவர்களின்
மரணங்கள் நிகழும்
பிரதேசங்களின்
நிறமிழந்த
வன்னத்த்துப்பூச்சிகள்
சிறகுகள் விரிக்கின்றன
ஊழிக்காலம் கடக்க
இரவு
வரும் பாதையில்
சிதைந்த கைகளால்
பித்தனொருவன்
இழுத்துச் சென்ற
அரைச்சாக்கில்
உலகமிருந்தது
Tuesday, August 2, 2011
கவிதை
பெருகி வழியும் இரவுகளில்
அலைகின்றன
வெண்ணிற
மனநிற
முகங்கள்
எச்சில் நாவுகளில்
நிணமும்
குருதியும்
உறைந்த நிலத்தில்
படியும்
கண்ணீர்த்துளிகள்
பால் பற்களிடையே
தேங்கிய
ஆதிகுரல்
எம் அம்மாக்கள்
இப்போதெல்லாம்
பூச்சாண்டிகளை
அழைப்பதேயில்லை
Subscribe to:
Posts (Atom)