Friday, August 5, 2011

கவிதை


கைவிடப்பட்டவர்களின்
மரணங்கள் நிகழும்
பிரதேசங்களின்
நிறமிழந்த
வன்னத்த்துப்பூச்சிகள்
சிறகுகள் விரிக்கின்றன
ஊழிக்காலம் கடக்க

இரவு
வரும் பாதையில்
சிதைந்த கைகளால்
பித்தனொருவன்
இழுத்துச் சென்ற
அரைச்சாக்கில்
உலகமிருந்தது

No comments:

Post a Comment