Tuesday, August 2, 2011

கவிதை

பெருகி வழியும் இரவுகளில்
அலைகின்றன
வெண்ணிற
மனநிற
முகங்கள்

எச்சில் நாவுகளில்
நிணமும்
குருதியும்

உறைந்த நிலத்தில்
படியும்
கண்ணீர்த்துளிகள்

பால் பற்களிடையே
தேங்கிய
ஆதிகுரல்

எம் அம்மாக்கள்
இப்போதெல்லாம்
பூச்சாண்டிகளை
அழைப்பதேயில்லை

2 comments:

Post a Comment