skip to main |
skip to sidebar
கவிதை
பெருகி வழியும் இரவுகளில்
அலைகின்றன
வெண்ணிற
மனநிற
முகங்கள்
எச்சில் நாவுகளில்
நிணமும்
குருதியும்
உறைந்த நிலத்தில்
படியும்
கண்ணீர்த்துளிகள்
பால் பற்களிடையே
தேங்கிய
ஆதிகுரல்
எம் அம்மாக்கள்
இப்போதெல்லாம்
பூச்சாண்டிகளை
அழைப்பதேயில்லை
2 comments:
...
நல்ல கவிதை
Post a Comment