Monday, December 5, 2011
கவிதை
அப்பால் காத்திருக்கிறது
பேய் மழை
வாசித்த பக்கங்களின்
வலிகளை
பிரதி எடுக்கிறேன்
தேங்கிய தென்றல்
தெருவில் வழிய
தேகம் உலர்கிறது
மீதமிருக்கின்றன
சில
முற்றுப்புள்ளிகள்
கவிதை
விழித்துக்கொள்கிறது
விரக்தி
ஆழ்ந்து சுவாசித்து
அக்கறையின்மையை
நிரப்பிக்கொள்கிறேன்
நிகழ்தகவு விதிகள்
தலைகீழாய்
எழுதப்படுகிற
வெளியில்
கண்கள் கட்டப்பட்டு
சுற்றி விடப்பட்டிருக்கிறார்கள்
திவாலாகிப்போன
தீர்க்கதரிசிகள்
Sunday, November 13, 2011
கவிதை.
ஒரு கிணற்றின் விளிம்பில்
அன்புடன் மட்டுமிருப்பது
காணாமல் அடித்துகொள்வதாக
மட்டுமே இருக்க முடியும்
தவிர்க்கவியலா
அபூர்வ கணங்களும்
ஓய்வெடுக்க சென்றுவிட்டன
நிரந்தர விடுமுறையில்
ஒற்றை புன்னகையால்
ஓடும் உயிர் நதி
தனிக்குரல் பறவையின்
தாகம் தீர்ப்பதில்லை
Tuesday, November 8, 2011
கவிதை
அச்சமேற்றும்
ஊளைச் சத்தங்கள்
சுடலைக் காற்றில்
சுவாசம் திணறினாலும்
வழிகாட்டிகள் வாழ்ந்துகொள்ள
வாழ்வை தருவதாயில்லை
எனக்கானவை அல்லாத
எல்லா மையங்களையும்
அழித்தபின்
அடைவதென்ன
புறவாசல் இல்லாத
புதிய சொர்க்கம்
இருக்குமெங்காவது
Friday, November 4, 2011
கவிதை
மேகமற்ற வானில்
ஆடையின்றி
அன்பின்
தாந்த்ரீக நடனங்கள்
மெல்லிய தூறல் விழும்
காத்திருப்புகளின்
காலங்களில்
ஊடறுத்துச் செல்லும்
மயானங்களின் அமைதி
புறக்கணிக்கப்பட்ட
உவமையற்ற
அழகான சோகங்களின்
சுடரனையும்
தூர தூரங்களின்
தீபங்களில்
Friday, October 21, 2011
கவிதை
வழி நடத்த
முயன்று தோற்கிறது
காத்திருக்கிறது
மென்று தீர்த்தாலும்
அதுவாவதில்லை
நானென்பதை
அறியுமது
விதிமீறலென்றாலும்
கருப்பு சீட்டு
வாங்கியேனும்
கம்யூனிஸ்டிடம்
கைகுலுக்க
விருப்பம்
Tuesday, October 18, 2011
மே 17 க்கு சில கேள்விகளும் ஒரு எதிர்வினையும்
திருமுருகன் காந்தி மற்றும் சார்லஸ் அன்ரனி ஈழம் ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம் என்று கீற்றில் எழுதியிருக்கும் கட்டுரையில் நான் எழுப்பியிருக்கும் கேள்விகளும் ஒரு எதிவினையும் இங்கே
பின்வரும் தகவல்களை கூர்ந்து கவனித்தால் அமெரிக்கா எவ்வாறு இலங்கை அரசின்மூலமாக தனது போரை நடத்தியது என்பதை கவனிக்கலாம். இதன் அர்த்தம் இந்தியா இதில் பங்காற்றவில்லை என்பதல்ல. அமெரிக்காவின் நோக்கத்தில் இந்தியா தனது வக்கிரத்தையும் தமது தரகுமுதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களையும் இணைத்துக் கொண்டது. அமெரிக்கா மூலமாக தனது பிராந்திய ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள விரும்புகிறது.//
இப்படி முடிகிறது அந்த கட்டுரை
இந்த கட்டுரையை அடிப்படையாக வைத்து சில கேள்விகளை எழுப்பி நானே விவாதிக்கொண்ட விசயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.சில மாதங்களுக்கு முன் தனது முகப்பு புத்தகத்தில் ஈழத்தின் இனபடுகொலை நிகழ்ந்துகொண்டிருந்தபோது சிங்கள அதிகாரிகள் மூவருடன் இந்திய அதிகாரிகள் மூன்று பேர் நடத்திய பேச்சுகளை சிங்கள அதிகாரிகள் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் அதை வைத்து இந்தியாவை தங்கள் நலன் பக்கம் வைத்துகொள்வதாகவும் எழுதி இருந்தார் திருமுருகன் காந்தி.தங்கள் கட்டளைகளை சிங்கள அதிகாரிகள் பதிவு செய்கிற அளவுக்கு விடுகிற முட்டாள்கள அல்ல இந்திய அதிகார வர்க்கம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.தன வசம் இருக்கிற அந்த பதிவுகளை திருமுருகனே வெளியிடுவார் என்று நினைத்து காத்திருந்தால் இந்த கட்டுரைதான் வந்திருக்கிறது.ஒருவேளை அவர் வசம் உள்ள அந்த ஆவணங்களை சூலியன் அசாஞ்சோ விக்கிலீக்சோ வருங்காலத்தில் கண்டுபிடித்து வெளிடுவார்கள் என்று நம்புவோம்.மேலும் இந்த கட்டுரை வந்திருக்கிற நேரம் கவனிக்கத்தக்கது.இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த அன்னிய நாடுகள் சதி செய்துகொண்டிருபதாக பிரதமர் பேசிக்கொண்டிருக்கிறார் சமீப காலங்களில் .....
தான் நடத்திய கருத்தரங்கத்தில் அரபுலகில் நடந்துகொண்டிருக்கிற எழுச்சிகளின் பின்னணியாக அமெரிக்கா செயல்படுகிறது அதன் தொடர்ச்சியாகவே அன்னா ஹசாரேவை நாம் பார்க்க வேண்டும் என்கிற பொருள்படும்படி பேசியிருந்தார்.தனது முழு விசுவாசியான இந்திய அதிகார வர்க்கத்துக்கு எதிராக அன்னா மூலமாக தொல்லை கொடுக்க வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது என்கிற கேள்வி எழவே செய்கிறது.இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டில் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அணு உலைகளை அமைக்கிற அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் பொறுபேற்க வேண்டும் என்கிற சட்டத்தை சில மாதங்களுக்கு முன் இந்திய அரசு நிறைவேற்றியது பாராளுமன்றத்தில்.தரகு முதலாளிகளின் தேசத்துக்கு தானாகவே முதுகெலும்பு முளைப்பது சாத்தியமாகாதது என்று நாம் அறிவோம்.ரஷ்ய சீன முதுகெலும்புகளை கடன் வாங்கி பொருத்திகொள்கிற சாத்தியம் தனக்கு இருக்கிறது.என்பதை காட்டி உலக பொருளாதார சுரண்டலில் தனது பங்கை அதிகரித்துகொள்கிற இந்திய நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே அந்த அமெரிக்க.மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான சட்டத்தை கூற முடியும்
அந்த கட்டுரையின் இறுதியில் சொல்லியுள்ள விஷயம் பொய் என்பது இப்போது எளிதாக புரிந்துகொள்ள முடியும்.
சில மாதங்களுக்கு முன் ஓட்ட கூத்தன் http://www.facebook.com/profile.php?id=100000162949157என்கிற அலாவுதினிடம் பேசிய பொது ஒரு விஷயத்தை சொன்னார்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிளிண்டன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எரித்ரியா போராளிகளுக்கு புலிகள் பயிற்சி அளித்தார்கள் என்று.புலிகளுக்கு எதிராக ரூம் போட்டு யோசிக்கும் மருதையர் கலை இலக்கிய கும்பலுக்கு கூட இப்படி ஒரு அவதூறை கிளப்ப முடியுமா என்று தெரியவில்லை.மாங்குளத்தில் வைத்து அமெரிக்க green beret களை புலிகள் மண் கவ்வ வைத்து ஓட்டிய வரலாறு இருக்கிறது.சொன்னது சீமானுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்.இருக்கிறவர் என்பதும் கவனிக்கத்தக்கது.மட்டுமல்லாம சீனாவின் முற்றுகையில் இந்தியா என்கிற உதவாக்கரை புத்தகத்தை உருவாக்கியவர் குழுவில் அவரும் இருந்திருக்கிறார்.
ஈழத்தில் நிகழ்ந்த இனபடுகொலையில் சர்வதேச நாடுகளின் பங்கு எவ்வளவு உள்ளதோ அவ்வளவு தூரம் புலத்து வாழ் அமெரிக்க சமரசத்துக்கு தயாராகிவிட்ட வலதுசாரிகளுக்கும் இருக்கவே செய்கிறது.களத்தில் இருந்த இடதுசாரி சமரசமற்ற தலைமைக்கு எதிராக புலத்து வலதுசாரிகள் நிகழ்த்திய கழுத்தறுப்பு பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து சேரமான் எழுதிக்கொண்டிருக்கிறார்.
புலத்தில் இருந்த துரோகிகள் மட்டுமே ஓட்ட கூத்தர் சொன்னதுபோன்ற புரளிகளுக்கு பின்னணியாக இருந்திருக்க கூடும்.
இப்போது இனபடுகொலை உச்சம் தொட்ட காலத்தை பார்க்கலாம்.
அமெரிக்காவின் பிராந்திய நலனுக்கான திட்டமும் நமது விடுதலையும் பிணைந்துள்ளன. //
என்று அந்த கட்டுரையில் வருகிற வரிகள் இது.தான் விலைக்கு வாங்கிய புலத்து மனிதர்கள் அவர்கள் விலைக்கு வாங்கிய களத்தில் இருந்த சில துரோகிகள் மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம்.புலிகளின் தலைமை தப்பி வெளியேறினாலும் தாங்கள் திணிக்கிற துரோக தலைமைக்கு எதிராக பிற்காலத்தில் அவர்கள் போராட கூடாது என்பதற்காகவே மக்கள் மீது தாங்கள் வாங்கிய துரோகிகள் மூலம் தாக்குதல் நிகழ்திருக்க கூடும் என்று புரிந்துகொள்வதில் தவறு இருக்க முடியாது.ஆக தன வசம் இருக்கிற புலத்து நபர்கள்.மூலம் வருங்கால போராட்டத்தை சிதைக்கிற வல்லமையில் இருந்த அமெரிக்கா அந்த இறுதிபடுகொலைகள் நிகழ்ந்த காலத்திலேயே தலையிடுவதை யார் தடுத்தது என்கிற கேள்விக்கு பதில் கண்டாக வேண்டும்.அந்த பதில் இந்திய அரசு என்பதாகத்தான் இருக்க முடியும்.சீன,ரஷ்ய பூச்சாண்டிகளை காட்டை அமெரிக்காவை தள்ளி நிறுத்தி உலக பொருளாதார சுரண்டலில் தனது பங்கையும்,பிராந்திய வல்லரசு நோக்கத்தையும் நிறைவேற்றிகொள்ள முயல்கிற இந்திய அரசு வெறுமனே ஏவலாள் என்கிற அளவுக்கு குறுக்குகிற கட்டுரையின் நோக்கம் அடிப்படையிலேயே தவறாக இருக்கிறது.
தொடர்புடைய விஷயங்கள்
நீடித்த நிலையான போராட்டங்களுக்கு தமிழக மக்களை தயாரிப்பது தனக்கு சாத்தியமில்லை என்றால் சீமான் பேசாமல் சும்மா இருப்பது நல்லது....
தங்களிடம் இருக்கிற இந்திய அதிகாரிகளின் பேச்சுகளை வைத்து இந்தியாவை மிரட்டுகிறது சிங்கள அதிகார வர்க்கம் என்று சொன்ன திருமுருகன்,இப்போது ராஜபக்சேவும் கூட்டாளிகளும் தண்டிக்கப்படலாம் என்று பேசுவதன் அர்த்தம் என்ன? ஒருவேளை இந்திய அதிகார வர்க்கம் அந்த உரையாடல் பதிவுகளை களவாடிக்கொண்டு வந்து விட்டதோ?
உண்மையில் பங்காளி அமெரிக்காதான் தனது பங்கை கூட பெற முடியாமல் போகிற நிலை வந்துவிட்டதே என்கிற கடும் எரிச்சலில் இருக்கிறது.அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் 2008 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கிற பொருளாதார நெருக்கடியும் தனது விரிவாதிக்க கனவை இந்தியாவுக்கு வளர்த்துவிட்டிருக்கிறது என்கிற நிலையில் தனது பேரம் பேசும் திறனை விட்டுகொடுத்து அடியாள் வேலை மட்டுமே பார்க்கும் என்று கருதிக்கொண்டிருப்பது அடிமுட்டாள்தனம்.
தனது கைவசம் ஒரு துரோக தலைமையை போர் துவங்கிய காலத்திலிருந்த உருவாகிக்கொண்டிருந்தது அமெரிக்கா என்பதை ஈழ இணையங்களில் தொடர்ச்சியாக அமெரிக்கா தங்களுக்கு ஆதரவாக தலையிடும் என்ற கருதுபரப்பலில் இருந்த...ு புரிந்துகொள்ள கூடியதாக இருந்தது.தனது கைவசம் ஒரு தலைமையை வைத்திருந்ததோடு,களத்தில் சிங்கள ராணுவம் நிகழ்த்துகிற போர் குற்றங்களோடு புலிகளும் போர்குற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை உருவாக்க தனது ஆட்கள் மூலம் களத்தில் மக்களின் மீது தாக்குதலையும் நடத்தியிருந்தது அமெரிக்கா என்று புரிந்துகொள்ள முடியும் மார்ச் மாத துவக்கத்தில் ஐந்தாயிரம் ஆறாயிரம் மக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில் சிங்கள ராணுவமும் புலிகள் இருவர் மீதும் குற்றம் சுமத்துவதற்க்கான ஆதாரங்களை தங்கள் கைகளில் அமெரிக்காவும் மேற்குலகமும் வைத்துக்கொண்ட பிறகு பிரான்ஸ் ஒரு படையிறக்கத்துக்கு தயாராக இருந்தது.அதை இந்தியா தடுத்தது.மே மாத துவக்கத்தில் அமெரிக்க நிகழ்த்த விரும்பிய படையிறக்கத்தையும் இந்தியாவே தடுத்தது.அமெரிக்க படைகள் இறங்கிருந்தால் அந்த இறுதி படுகொலைகள் தடுக்கபட்டிருக்கும்.மக்கள்
Friday, October 14, 2011
கவிதை
என்பவர்களிடம்
என்டோமார்பின் சுரக்காதது
என் தவறல்ல
என்றிருக்கலாம்
மறைகளுக்கு எதிராயிருப்பது
மனிதத்துக்கு
நெருக்கமானது என்றேன்
அல்லாவும்
புத்தனும்
கர்த்தரும்
காவிகளும்
காவு கொண்டு
களவெடுக்கிறார்கள்
கோவில் மணியை
கொள்ளையிட்டவனை
கோவில் எல்லை
தாண்டவும்
விட்டதில்லையாம்
கருப்பணசாமி
Thursday, October 13, 2011
கவிதை
இல்லாமல்
இருக்கிறேன்
வினோத கோமாளிகள்
விரித்து செல்கிற
மழை மறைவு
பிரதேசங்களில்
அழுக்கு தொப்பிகளில்
ஆயுதங்களின்
அறுவடை
நிரந்தரமாய்
ஈட்டியில் மீன்
வேட்டையாட செல்கிறேன்
குகையோவியங்களில்
Monday, October 10, 2011
கவிதை
ஆற்றாமையில்
இசை
ஈன சுருதியில்
உலவுகிறது
ஊரெல்லைகளில்
என்ன
ஏதேன்றேன்
ஐயோ
ஒன்றுமில்லை
ஓடி
ஔவையிடம்
ஃ
வாங்கி வர
சொன்னாள்
என் தோழி
என்றது
கவிதை ...
உன்னதங்களின்
சுனை
தேடி களைத்தபின்
அருந்துகிறேன்
அலைவரிசைகளின்
ஆபாசங்ககளை
இருப்புக்கும்
விருப்புக்குமான
இடைவெளிகளில்
அன்பின்றி
அடித்துக்கொண்டே
இருக்கிறது அபத்தம்
தன வாழ்வு போதா
தந்தை தோளில் தோற்ற
ஊர் கிழித்த பக்கங்கள்
போக எஞ்சியதில் எழுத
எனக்கும் இருக்கிறது
சில
வார்த்தைகளும்
சிறிய வாழ்வும்....
Sunday, October 9, 2011
கவிதை
அறிவித்தார்
பில்லி சூனியம்
ஏவல் ஏதுமில்லை
அடுத்தடுத்து பெண் பிள்ளை
பெறுபனுக்கு அடுத்தது
ஆண் என்றும் தன் பெயர்
வைக்க சொல்லி
அன்பு கட்டளையிட்டார்
அந்த கரைக்கும் இந்த கரைக்கும்
ஓடும் சாமியோடு ஓடி
அடிக்கிற பறை நிறுத்தி
அவன் கேட்டிருக்கலாம்
எப்போது நீக்குவாய்
என் ஜாதி இழிவையென்று
அப்பா
அரசு
அதிகாரத்தோடுதான்
அவருமென்றானபின்
நாத்திகனாகிறேன்
புதிய கடவுளாகவும்
Friday, October 7, 2011
கவிதை
நீந்தும் இரவு மீன்களின்
சாளரங்களுக்கு
அப்பால்
உடையும்
நீர்க்குமிழிகளின்
மௌனங்கள்
இசை
நெய்தலில்
மணல் மலரும்
Tuesday, October 4, 2011
கவிதை
என் வீட்டு மாடியில்
குடி வைத்திருக்கிறேன்
ஏழைப் பிசாசொன்றை
அந்தியொளி வீழ்ந்தபின்
அழிந்த நகரங்களின்
அருவங்கள்
கதை சொல்லிகளாவார்கள்
கட்டி வைத்திருக்கிறேன்
கடவுளை மட்டும்
அர்த்தமின்மைகளின்
படிக்கட்டுகளில்
அற்பர்கள்
அதிமானுடர்களாய்
பாவித்து
அறுத்தெரிகிறார்கள்
பிரபஞ்சத்தின்
பிழையை
Monday, October 3, 2011
Wednesday, September 28, 2011
கவிதை
கிடக்கின்றன
கலைத்துப் போடப்பட்ட
சீட்டுகள்
எனதல்லாதவை
எல்லாம்
வன்மங்களின்
மாயை களத்தில்
அரிச்சுவடியும்
அறியாதவன்
ஆடுவதென்பது....
உபேக்சா
என்றான்
புத்தன்
உதவாக்கரை
என்கிறது
ஊர்
கவிதை
வேண்டுமெனக்கு
வெளிச்சங்கள்
எதில் தள்ளிவிடுவது
இந்த பகல்களை
வான்காவின்
பரிதிக்கெதிராய்
வரித்துகொள்கிறேன்
உலகின்
முதல்
போதையை
கவிதை
ஆற்ற ஆற்ற வரும்
பால் நுரை
ஒரு அழுமூஞ்சி
பொம்மை
கொஞ்சம்
கோப்பி
ஒரு ரூபாய்
அல்வா
ஜங்கிள் புக்
மோக்ளிக்கு
சாக்காடுகள்
சமீபமாகின்றன
கவிதை
கவிதைகள் எழுதலாம்
இருபத்தியோராம் நூற்றாண்டு
புரட்சிக்கு செயல்திட்டம்
வகுக்கலாம்
நிலையான புள்ளியொன்று
கிடைத்தால்
உலகை பிடித்தும்
ஆட்டலாம்
அடுத்தவேளை உணவு
மட்டுமல்ல
அந்நியமாதலும்
அவரின்
தயவுதான்
Monday, September 26, 2011
முரண் கவிதைகளில் இருந்து
கிள்ளி வைத்த
சூனியக்காரி
ஓடிப்போனாள்
புனைவின்
அடவியில்
பேராவலில்
விரிந்த
விழிகளின்
மருட்சி
இமை களைந்து
சூன்ய புயலில்
பாலை
மணலெண்ணிக்
கொண்டிருப்பேன்
கவிதை
அரவங்களின் சீறலில்
நடுக்குறும்
காலிக்குவளையில்
நிறையும் ஓர்
நீண்ட துயர்
வெண்
மஞ்சள் திட்டுக்கள்
மிதக்கும் நச்சுப்பொய்கையில்
படரும் எழுச்சியுற்ற
தீக்குறி
முடிவற்ற இரவில்
எறியப்பட்ட குவளை
சிந்தும்
வசந்தத்தின்
பனி நீர்
Saturday, September 24, 2011
கவிதை
அறைச்சுவர்களின்
அயர்வு
விழுங்கி
தீர்வதில்லை
தற்புணர்ச்சி
கடவின்
வெளிறிய
பிறழ்வுகள்
வியாபித்து நிற்கும்
விளங்காமையில்
கடைசி கல்லையும்
எறிந்த
பின்......
Monday, September 5, 2011
கவிதை
அழித்துக்கொண்டிருக்கிறார்கள்
உடலை
அனாவசிய சிறுமிகள்
கையிருப்பின்
செயற்கை கன்னித்திரைகளை
மறுத்து
நிற்கும்
நீலப்பறவை
கவிதை
இரவில்
முன்னால் விழும்
நிழலில் மட்டுமே
நிகழ்கிறது என்
முன்னேற்றம்
அதனாலென்ன
எங்களுக்கும் இதயமிருக்கிறது
என்பவர்களில் இல்லை
நான்
Saturday, September 3, 2011
கவிதை
என் இருத்தலுக்கான
சான்றிதழில்
கையொப்பமிட்டுத் தந்தது
காற்று
கழுதைகள் கால்களிடையே
கை நழுவி வீழ்ந்தது
அது
முன்பக்கம் சென்றால்
கடிக்கின்றன
பின்பக்கம் சென்றால்
உதைக்கின்றன
அதை அவைகளே
வைத்துக்கொள்ளட்டும்
அடுத்த நூற்றாண்டு
வரை
Friday, September 2, 2011
கவிதை
ஏன் எப்போதும்
திறந்திருக்கின்றன
எங்களுக்கான
வதைகூடங்கள்
ஏன் இன்னும்
எரிக்கப்படுகின்றது
எங்கள்
நிலமும்
உடலும்
எப்போதோ
நிறைந்துவிட்டது
எஜமானர்களின்
ஏழாவது ஜாடியிலும்
தங்கம்..
,கவிதை,
முயங்குதல் சப்தங்களில்
அதிரும் காற்றில்
சிலிர்க்கும்
உலர் நிலத்தின்
ஒற்றை நாணல்
ஒரு துளி நதியின்
பிரவாகம் பருக
திணறும்
பால்வெளி
சபிக்கப்பட்ட
சார்வாகனின்
பாதங்களில்
முடியும்
முடிவுறா
பாதைகள்...
Thursday, September 1, 2011
கவிதை
மழை நேர வாசிப்பின்
பக்கங்களில் எரியுமென்
யாக்கை
உதிரும்
சிகரெட் சாம்பலில்
தணிந்து தவழ்ந்து
தார்சாலை திவலைகளில்
தக்கை மீது தவிக்கும்
ஓர் துளி
நெருப்பு
Saturday, August 27, 2011
கவிதை
தியான பெருநிலம்
தழுவி பிரியும்
அமைதியின்மையின்
அலைகள்
கண் எதிரே
கடவுள்
கையருகே
காமம்
நகரத்து வீதிகளில்
ஆண்குறி காட்டி
திரிபவனின்
உள்ளங்கைக்குள்
ஒளிர்ந்தது
தவறி விழுந்த
தாரகை
கவிதை
புனிதர்கள்
நீங்கள்
புத்திசாலிகள்
நீங்கள்
வெற்றியாளர்கள்
நீங்கள்
கலகக்காரர்கள்
பிறகும்
நீங்கள்
பிக்குகளாய்
நீங்கள்
நான்
ஒன்றுதான்
அம்மணத்தில்
Friday, August 5, 2011
கவிதை
கைவிடப்பட்டவர்களின்
மரணங்கள் நிகழும்
பிரதேசங்களின்
நிறமிழந்த
வன்னத்த்துப்பூச்சிகள்
சிறகுகள் விரிக்கின்றன
ஊழிக்காலம் கடக்க
இரவு
வரும் பாதையில்
சிதைந்த கைகளால்
பித்தனொருவன்
இழுத்துச் சென்ற
அரைச்சாக்கில்
உலகமிருந்தது
Tuesday, August 2, 2011
கவிதை
பெருகி வழியும் இரவுகளில்
அலைகின்றன
வெண்ணிற
மனநிற
முகங்கள்
எச்சில் நாவுகளில்
நிணமும்
குருதியும்
உறைந்த நிலத்தில்
படியும்
கண்ணீர்த்துளிகள்
பால் பற்களிடையே
தேங்கிய
ஆதிகுரல்
எம் அம்மாக்கள்
இப்போதெல்லாம்
பூச்சாண்டிகளை
அழைப்பதேயில்லை
Monday, July 25, 2011
கவிதை
என் பொம்மைகுட்டியை
தொலைத்துவிட்டேன்
பத்தாவது எருதின்
ஓவியத்தை
கிழித்துவிட்டேன்
சாம்பல் மேடுகளில்
எறும்புகள்
பசித்திருக்கின்றன
Wednesday, May 25, 2011
கவிதை
மௌனமாக பேசிக்
கொண்டிருக்கிறேன்
என் இரண்டாவது
காதல் கடிதத்திடம்
அழ மட்டுமே
தெரிந்த குழந்தையின்
மொழியில்
மொழிகிறாள்
என்
யட்சியுமானவள்
Wednesday, May 18, 2011
கவிதை
தூரத்தில்தான
இருக்கிறது
சாவும்
சமரசங்களின்
சமுத்திரமும்
காத்திருக்கிறேன்
பாக்கெட்டில் பத்திரமாக
இருக்கிறது
காகிதக் கப்பல்
கவிதை
பதினேழு ரூபாயில்
சிறப்புக் குடி
முப்பத்தெட்டு ரூபாய்க்கு
என்ன எழுதிக்கொண்டிருக்கும்
இந் நாட்களில்
என் வானமும்
அதன்
தனிமையும்
கவிதை.,
விமர்சகன்
புரட்சியாளன்
கவிஞன்
எழுத்தாளன்
இயக்குனர்
யாதொன்றும்
தேவையில்லை
பெயர் மாற்றம்
போதுமானது
யெவ்கெனி வசீலிச் பஷாரவ்
Saturday, May 7, 2011
கவிதை......
எரியும் பாதையொன்றில்
படிந்த பாசிகளில்
நிறமின்றி வழிந்துகொண்டிருக்கிறது
காலம்
கழுதை மீதமர்ந்து கடக்க
நினைத்த நதியில்
கவிழ்ந்தான்
இரகசிய புத்தன்
Wednesday, March 30, 2011
கவிதை ;'
Friday, March 18, 2011
-கவிதை -
கற்பிதங்களின்
புனிதத்தில்
என்னை வடிக்கும்
சிற்பியாய் என்
கவிதைகளின் கரு
நீர்க்குளத்தின்
சலனங்கள்
பார்க்கும்
சுட்டிக் குழந்தை
ஓரோர்
பொழுதுகளின்
நிராகரிப்பின்
தூண்டலும்
துவளலும்
எள்ளலும்
மீட்டலுமாய்
என்னில் நான்
மீண்டு(ம்) வந்து
கட்டிக்கொள்ளும்
என் கவிதை
அழுமூஞ்சியோடு
-கவிதை .
வெக்கை தாளாமல்
விழித்துக்கொள்கிறது
என் இரவு
இடைக்கிடை
அமிழ்ந்து எங்கோ
ஓர் குழந்தையின்
அழுகுரல் கேட்கும்
தனித்து வானத்தின் கீழ்
உயிர்ப்பை அறிவித்து
சலனங்களற்று என்
வேர்களும் நீளும்
முற்றத்தில் அமர்ந்து
தர்க்கித்தும்
விமர்சித்துமிருந்தவன்
இமைகளை உயர்த்தி
தாழ்த்திக்கொள்வான்
விழிகளின் விழிகளில்
புன்னகை மலரும்
வழிப்போக்கர்களின்
காலடியோசை
கேட்டு துவங்கும்
என் நாள்
துயில்கொண்டு
நீங்கிச் சென்ற
தென்றலின் சுவடு
தோள்களில்
இனியும் இனியும்
மிச்சமிருக்கும்
கவிதை
எல்லையற்ற வானத்தின் கீழ்
அந்தி பொழுதின் நிழல்களையும்
வண்ணங்களையும் தூரிகை கொண்டு
வரைந்திடும் கண்கள் விரிய திறந்து
தேம்பி அழுதவாறு நிற்கும்
நீல வானம் தூய காற்று
கூச்சப்பட்டு தழுவிக்கொள்ளும்
அர்த்தமற்ற சந்தடியையும்
பரபரப்பையும் கடந்து
மர நிழல்களில் ஒளிந்து
செல்லும் உருவங்கள் கதைகள்
சொல்லி செல்லும்
தனிமையாலும் சோர்வாலும்
முடங்கியிருக்கும் தருணங்கள்
நிலவுதல் இல்லாத நிலையின்
எஞ்சிய பரப்பெங்கும்
சோகம் கலந்த உள்ளன்பு
பரவும்
கதகதப்பான கைகளுக்குள்
சிறுவிழிகள் சிமிட்டி
விரல்களால் உயிர்தொட்டு
நீங்கும் ஓர் குழந்தை
மெல்ல குளிராகி
இருள் சூழும்
Wednesday, March 9, 2011
!! கவிதை !!
அந்தகனின் விழிகளை
அணிந்திருந்தேன்
நண்பகல் வானில்
நட்சத்திரங்கள்
இறைந்திருந்தன
முன்னிரவின் துவக்கத்தில்
கைகளில் வழிந்த
துளிகளில் நின்றது
பேரிசையின் தொடரணி
தள்ளி வைக்கப்பட்டிருந்த
எனது தலையின்
இடப்பக்கம் ஹெராக்ளிடஸ்
வலப்பக்கம் பெர்மினியீட்ஸ்
நான்கு நாட்களுக்கொரு முறை
புதுப்பிக்கப்படும் கணினியை
உடைத்துவிட்டு நடந்தான்
லோகாயத
சித்தன்...
Friday, February 25, 2011
$கவிதை $
கவிதை **
கவிதை ***
Monday, February 14, 2011
கவிதை *
மரம்
கைவிடப்பட்ட
இருப்புப் பாதை
சிறகை தொலைத்த
பறவை
புத்தகத்தின்
மயிலிறகு
இந்த
கவிதை
நான்
Monday, February 7, 2011
கவிதை .......
பிறகு உமிழ்ந்தது
கவிதை
கவிதை
Sunday, February 6, 2011
கவிதை
Thursday, February 3, 2011
கவிதை...
Monday, January 31, 2011
கவிதை
Saturday, January 22, 2011
கவிதை
ஏக்கம் ததும்பி
வழியும்போதே
வற்றிவிடுகிறது
என் இருப்பு
சேமிப்பில் இருந்த
முகங்கள்
உதடுகள் திறந்து
உளறி திரிகிறது
வாழ்வை
முகில் கலையும்
வெளிகள்தோறும்
நிறங்கள் எரிந்து
சாம்பல் குவித்து
துயில்கிறது
என் வானம்
அந்நிய மொழி
குழந்தையின்
பிஞ்சு விரல்கள்
பிடித்து
விழிகள் பார்த்து
துள்ளலோடு
துவஙகும்
மீள் உயிர்ப்பு
இந்த கவிதை
தொடரும்.
கவிதை
எப்பொழுது பார்க்கினும்
எட்டி நின்று
முறைத்துகொன்டிருக்கிறது
சூழலின் யதார்த்தம்
இடைக்கிடை ஓரிரு நொடிகள்
தணிந்து மீண்டும்
சூழ்ந்து பரவும்
வெயில்
நரம்புகள் பரவி
மனித கூட்டின்
பள்ளத்தில்
மரித்துபோகிறது
நெஞ்சுக்குள் கிளர்ந்து
சரசரக்கும் சருகுகள்
இனி உரக்க பேசும்
மெலிதாய் தளிர்க்கும்
இனி வரும்
விடியல்கள்
சிவந்திருக்கும்
இரு பனிதுளிகள்
தழுவிக்கொண்டு
புன்னகைக்கும்
Friday, January 21, 2011
கவிதை
ஏதுமில்லை
கலைந்தே கிடக்கின்றன
அழகாய்
சிறகிழந்த
சிறுமைகள்
மெலிதாய் ஊடுருவி
நெஞ்சில் பரவும்
திகைப்பு
தவித்து அடங்கும்
முரண்களின் வெளி
புனிதங்களின் நிறம்
என்றும்
வெண்மையின்
மறுப்பாகவே
வீதிகள் தோறும்
விழிகளில்
வழிந்து
தெருக்கள்
நிறையும்
தேடல்கள்
விரல்கள் இடையில்
வழிந்து பாதங்கள்
தீண்டிமெதுவாய்
நழுவி செல்கிறது
நதி
துளிதுளியாய்
சலனங்களற்று
மடிகிறது
கவிதை...
Thursday, January 20, 2011
கவிதை.
உதிரும்போதெல்லாம்
கருவறையின் வெம்மை தேடி
உள்ளோடுகிறேன்
எதிரிடும் கண்களை
சந்தித்து மீளகையில்
மின்னல் தெறிக்கிறது
மெலிதாய் சாவின் நிழலும்
மொழிதலின் மறுப்பு
தொடர
சூழ்கொண்டு மேகமாய்
வேர் வரை தீண்டி
பற்றிகொள்ளும்
எரிதழல் எழும்
கற்பிதங்களின்
அறியாவெளிகள்தோறும்
உள்ளொடுங்கி
தளிர்க்கும்
எதிர் உயிர்கள்..
விட்டுசெல்லும்
யுகம் சுமந்த
கனவுகள்
நீளும்...
Wednesday, January 19, 2011
முகமற்ற கவிதைகள் - 4
போருக்கு அழைக்கின்றன
என் வனத்தின்
சில பட்டாம்பூச்சிகள்
அழகாய்த்தான் சிறகுகளும்
செயற்கை வண்ணங்களில்
நுகத்தடியின் நுன் கரங்களுக்குள்
சிதைந்துகொண்டே
புன்னகை பூக்கின்றன
பற்றி பிடித்த தளிர் கரம்
ஒன்றின் விரலிடுக்கில்
செழுமையாய் ஒரு துளி
இரத்தம்
அமைதியாய் மரணித்துபோகும்
வனம்
அதிகாலை நீல் இரவு
மெதுவாய் விடிய
துவங்கும்
முகமற்ற கவிதைகள் - 3
உலவினேன்
காட்டின்
தனிமையில்
வசவிய
குருவிகளுக்கும்
வாழ்த்துக்கள் தந்தேன்
வார்த்தைகளற்று
அதீதங்களின்
அரவமொன்றின்
வழியில்
தொலைந்தேன்
நனைந்த
நதியில்
நகர்ந்தது
நீலத்
தீ
ஈர நிலத்தின்
குடைகாளான்
தலை
கவிழ்ந்து
நின்றது.
முகமற்ற கவிதைகள் - 2
ஒரு துளி நீரெடுத்து
ஒவ்வொரு துளியாய்
வைத்தேன்
ஐந்து துளிகளில்
அணைந்தது
சூரியன்
உயர உயர
சென்றது
சிறகிழந்த
தும்பி.
முகமற்ற கவிதைகள் - 1
சின்ன சின்ன சிவப்பு
பூக்கள் கொஞ்சம்
கொஞ்சம் மஞ்சள் பூக்கள்
கொஞ்சமே கொஞ்சம்
வயலட் பூக்கள்
வயலன்சை தவிர்க்க
எந்த பூக்கள் தருவது
சிறிய குழப்பத்துடன்
சிறுமி
காத்திருந்தாள்...
கனத்த
காலணிகள்
சப்திக்க
நெருங்கியிருந்தவனின்
வீரம்
விறைத்திருந்தது..