Saturday, April 3, 2010

இந்தியாவைக் கையாள்வதைப்பற்றி..

இணையத்தில் செலவிடும் குறைவான நேரத்தையும் கூட ஈழம் தொடர்பான வலைத்தளங்களை வாசிப்பதற்கே செலவிட்டு வந்திருக்கிறேன்.இருந்தபோதிலும் சமீப நாட்களாக ஈழ இணையங்களை வாசிப்பதற்கான ஆவல்குறைந்து வருகிறது.ஈழ விடுதலைப்போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதற்கான ஆக்கப்பூர்வமான விசயங்களை பரிசீலிப்பதை விடுத்து குழுச்சண்டைகளில் நிறைந்து கிடக்கும் இணையத்ததளங்களை பார்க்கநேர்வது வருத்தத்தை தருகிறது.குழு அரசியலும்,குழப்பங்களும் நிறைந்து கிடக்கும் தமிழக அரசியலை தொடர்ச்சியாக பார்த்து வருபவன் என்றாலும் ஒரு கொடூரமான இன அழிப்புக்கு உள்ளான,உள்ளாகிக் கொண்டிருக்கும் சமூகத்திலும்,தமிழக பாணியிலான அரசியலின் அடையாளங்களை பார்க்க முடிவது வேதனையளிக்கிறது.புலிகள் எவ்வளவு சிரமங்களுக்குஇடையில் ஈழ விடுதலைப்போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது முன்னைவிட இப்போதே அதிகமாக புரிகிறது.உள் அரசியலுக்குள் சென்று நானும் குட்டையை குழப்ப விரும்பவில்லை.அதற்கான திறமையோ தகுதியோ எனக்கு இல்லை என்பதையும் நான் நன்கறிவேன்.ஈழ இணையங்களில் சமீப நாட்களில் பிரதானமாக பேசப்படும் விசயமாக இருப்பது இந்தியாவை எப்படிக் கையாளுவது,அல்லது இந்தியாவை தவிர்த்துவிட்டு எப்படி முன்னேறுவது என்பதைப் பற்றித்தான்.அது பற்றிய என்கருத்துக்களை முன் வைக்கவே இந்த பதிவினை எழுதுகிறேன்.


இந்தியாவைத் தாண்டி எதையும் செய்ய முடியாது என்றொரு தரப்பும்,ஈழத் தமிழர்களுக்கு இத்துணை அவலங்களையும் கொடுத்த இந்திய அரசை நம்பாமல் மேற்கத்திய நாடுகளின் வழியாகவே போராட்டத்தை முன்நகர்த்த வேண்டும் என்கிற மற்றொரு தரப்புமாக வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.சில தரவுகளையும் பார்வைகளையும் முன் வைப்பதன் மூலம் அந்த விவாதத்தை முன்நகர்த்த உதவ வேண்டும் என்பதே என் நோக்கம்.பொருளாதார,ராணுவரீதியாக பலம் பெற்று வரும் சீனாவுக்கு எதிராக ஒரு சக்தியாக இந்தியாவை வளர்த்துவிடும் நோக்கில் அமெரிக்காவும்,மேற்கத்திய நாடுகளும் செயல்பட்டுக்கொண்டு இருப்பதாக ஒரு கருத்து இன்றைக்கும் முன்வைக்கப்படுகிறது.இந்த கருத்தை முன்வைப்பவர்கள் இரண்டு,மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த அரசியல்சூழலில் இருந்தே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்,நடைமுறையில் இல்லை என்பதே என் கருத்து.


அமெரிக்காவுக்கும்,இந்தியாவுக்குமான உரசல் துவங்கி பல மாதங்களாகி விட்டது.மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றப்பட்ட அமெரிக்க இந்திய அனுசக்தி ஒப்பந்தம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதே இதற்கான மிகச் சிறந்த உதாரணம்.உலக அனுசக்தி நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் இந்தியாவுக்கு,அணுசக்தி செறிவூட்டல் மற்றும் மறுசுழற்சி தொழில்நுட்பங்களை வழங்குவதை அமெரிக்க அரசு தடுத்துவைத்திருக்கிறது.மேலும்,அணு உலைகளில் ஏற்படும்விபத்துக்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொடர்பானமசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இந்தியஅரசை வலியுறுத்திக்கொண்டிருக்கிறது.அதேநேரம் 2009 ஆம் ஆண்டில் நிகழ்ந்த அமெரிக்கப் பொருளாதாரவீழ்ச்சியினைத் தொடர்ந்து தனது பேரம் பேசும் திறனைஉயர்த்திக்கொள்ளும் சாத்தியத்தில் இருக்கும் இந்திய அரசு தனது பாரம்பரிய நண்பனான ரஸ்யாவுடன் ஆறு அணு உலைகளை இந்தியாவில் அமைக்க உடன்படிக்கை செய்து கொண்டிருக்கிறது.


ரஸ்யாவுடனான இந்தியாவின் அணுஉலைகள் அமைக்கும்ஒப்பந்தம் என்பது,அமெரிக்காவுடன் செய்துகொண்டதுபோன்ற ஒன்று அல்லஎன்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.எந்த விதமான அடிமைத்தனமான நிபந்தனைகளையும் ரஸ்யா இந்திய அரசுக்கு விதிக்கவில்லைஎன்பதோடு,அமெரிக்க அரசை புறக்கணித்துவிட்டு இந்தியாவுடன் அணுசக்தி வியாபாரத்தை நடத்தும் திறனும்,அதற்கான ராணுவமேலாதிக்க நிலையும் ரஸ்யாவுக்கு இருக்கிறது என்பதே புரிந்து கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.


இந்தியாவுடன் செய்து கொண்டது போன்று பாகிஸ்தானுடனும் அணுசக்தி உடன்பாடு செய்துகொள்ள அமெரிக்கா தயாராகிறது என்று ஒரு செய்தி சில நாட்களுக்கு முன்னால் ஊடகங்களில் கசிய விடப்பட்டது.அணு உலைகள் விபத்து மசோதாவை விரைந்து நிறைவேற்ற இந்திய அரசை வலியுறுத்தும் விதமாகவும்,ரஸ்யாவுடனான இந்தியாவின் நெருக்கத்துக்கு எதிரான எச்சரிக்கையாகவுமே அந்த செய்தி கிளப்பி விடப்பட்டது.இருந்தபோதிலும் அந்த செய்தி எதிர்ப்பார்த்தபலனைக் கொடுத்ததாக கூற முடியாது.அமெரிக்காவுடனான இந்தியாவின் அணுசக்தி ஒப்பந்தத்தால் மேற்கத்திய நாடுகளுக்கு நான்கைந்து ஆண்டுகளில் கிடைக்கும் வருமானம் முப்பதுஇலட்சம் கோடிகளைத் தொட்டு நிற்கிறது.இது ஏறக்குறைய இந்தியாவின் ஒரு வருடத்துக்குகான மொத்த உற்பத்தியில் (GDP)ஐந்தில் மூன்று பங்காகும்.(இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி கடந்த ஆண்டில் ஐம்பது இலட்சம் கோடியாக இருந்தது) சராசரியாக ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் இருந்து ஏகாதிபத்திய நாடுகளின் வணிக நிறுவனங்கள் எடுத்துச் செல்லும் தொகைக்கு இணையானது இது.இத்தகைய ஒரு பிரமாண்டமான வாய்ப்பை அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கு கொடுக்க முனையும் இந்தியஅரசு அல்லது முதலாளிவர்க்கம் தனக்கான தரகுத்தொகையை உயர்த்திக்கொள்ள விரும்பும் என்பது புரிந்துகொள்ளப்பட கூடிய ஒன்றுதான்.இந்திய அதிகாரவர்க்கம் விரும்பும் அத்தகைய பங்கை கொடுக்கும் நிலையில் அமெரிக்காவின்தலைமையிலான நாடுகள் இல்லை என்பதே உண்மை.


ரஸ்யாவின் ராணுவ மேலாதிக்கநிலையும்,பொருளாதார,ராணுவ ரீதியிலான பலத்தில் எழுச்சியடைந்திருக்கும் சீனாவும்,சர்வதேச அரசியலில் வகிக்கும் ஆதிக்கத்துக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளைக் கூட எடுக்க இயலாத நிலையிலேயே மேற்குலக நாடுகள் இருக்கின்றன.ஈரான்,வடகொரியாவெனிசுலா என்று அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளுக்கு எதிராக எந்த ஒரு ராணுவ நடவடிக்கையையும் சமீப வருடங்களில்,அமெரிக்கா எடுக்க முடியாத நிலையே இருந்து வருகிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.ஈராக்கின் அணு உலைகளைத் தாக்கிய இஸ்ரேலும் கூடஈரானைத் தாக்க இயலாத நிலையிலேயே இருந்து வருகிறது.அமெரிக்க,இஸ்ரேலின் ஈரான் மீதான விமானப்படைத் தாக்குதலை செல்லாக்காசாக்கும் திறன் கொண்ட S 300 என்கிற அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளை விற்பனை செய்வதாக ரஸ்யா அறிவித்திருப்பதோடு,S 10 என்கிறவிமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஏற்கனவே விற்பனை செய்தும் விட்டது.ரஸ்யாவின் S 10 ஏவுகணைகளே ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தடுத்து வருகிறது.சர்வதே அரசியலின் இந்தத் சூழலில் ஈரான் மீது அமெரிக்கா கொண்டுவர விரும்பும் பொருளாதாரத் தடையால்பாதிக்கப்படுகிற நிறுவனமாக இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நடத்தி வரும்அம்பானியின் ரிலையன்சே இருக்கும் என்பதையும் கவனிக்க முடிகிறது.


அடிப்படையில் இந்திய அதிகாரவர்க்கதின்,நேரடியாக கூறினால்இந்திய உளவுத்துறையின் நோக்கங்கள் என்னவாக இருக்க முடியும் என்பதை ஆய்வு செய்தால் இரண்டு விசயங்களைக் கூற முடியும்.ஒன்று இந்திய முதலாளிவர்க்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வழிவகைகளைக் கண்டறிவதும்அதற்கு நிலவும் தடைகளை அகற்றுவதும்,அடுத்ததாக சர்வதேச அரங்கில் வல்லரசு பட்டம் பெற்று புளங்காங்கிதம் அடைய வேண்டும் என்கிற விசயங்களையே கூற முடியும்.தங்களுடைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவே தினறிக்கொண்டிருக்கும் சூழலில் இந்திய முதலாளிவர்க்கத்தின் பங்கை அதிகரித்துக்கொடுக்கும் நிலையிலோ அல்லது இந்திய அதிகாரவர்க்கத்தின் வல்லரசுக் கனவுக்கு ஒத்துழைக்கும் நிலையிலோ அமெரிக்காவும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் இல்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது.அதேசமயம் பெரியண்ணன் அமெரிக்காவுக்கு கீழான நிலையில் இருக்கும் அரசு என்பதாக அல்லாமல்,உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார பலம் கொண்ட நாடுகள் என்று சீனாவோடு தன்னை இணைத்துபேசுவதை இந்திய அதிகாரவர்க்கம் விரும்பும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ராணுவரீதியாகவோ பொருளாதாரரீதியாகவோ இந்தியாவை சீனாவுடன் ஒப்பிடுவது நகைப்புக்குறிய விசயம் என்பது வேறுவிசயம்.


தொகுத்துக் கூறலாம்.இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது தற்போதைய நிலையில் ரஸ்ய,சீனச் சார்புடனும் ஓரளவுசுயாதீனமாகவும் இயங்குகிறது என்கிற முடிவுக்கு வரலாம்.BRIC என்று அழைக்கப்படுகிற பிரேசில்,ரஸ்யா,இந்தியா,சீனாஆகிய நாடுகளின் கூட்டமைப்பு தங்களுக்குள் பொருளாதார ரீதியாக உறவுகளை வளர்த்துக்கொண்டு வருவதை சமீப நாட்களில் அவதானிக்க முடிகிறது.சுருக்கமாக, தன்னுடைய சந்தையையும்,வளங்களையும் மேற்குலக நாடுகளுக்கு திறந்து விடுவதற்கு,அந்த நாடுகள் கொடுக்க முனையும் பங்குத்தொகையை அதிகரிக்க,ரஸ்ய,சீன சார்பு நிலையையும்,அந்த நாடுகளின் பொருளாதார ராணுவ மேலாதிக்கத்தையும் பயன்படுத்திக் கொள்கிறதுஇந்திய அதிகாரவர்க்கம்.பாகிஸ்தானுடனான தனது நெருக்கத்தை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவின் இந்த நடவடிக்கையை தடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது அமெரிக்கா.


தந்திரோபாயரீதியாக இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் முயற்சிகளை சீனாவும் மேற்கொண்டு வருகிறது.மிகப்பெரிய இந்தியாவின் சந்தையில் தனக்கான பங்கை இழக்க சீனா விரும்பாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.இந்தியாவுடனான தற்காலிக கூட்டைப் பேணும் அதே வேளையில் நீண்ட கால நோக்கில் மேற்கத்திய நாடுகளால் தனக்கு எதிராக வளர்த்துவிடப்படக் கூடிய சாத்தியங்களை கொண்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரான திட்டங்களையும் சீனா மேற்கொண்டு வருகிறது.சீனாவுக்கும் இந்தியாவுக்குமான இந்த டிலெமா(Dilemma)தொடர்ந்து கொண்டிருக்கும்.ரசிய,சீன சார்புநிலைக்குள் முழுமையாக இந்தியா செல்வதை தடுத்து தங்கள் முகாமைச் சார்ந்து நிற்க வைப்பதிலும்,தங்களின் பொருளாதார தேக்கதைச் சரிசெய்துகொள்ள இந்திய சந்தையையும்,வளங்களையும் பயன்படுத்த முனையும்,அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கும் இந்தியாவுக்குமான டிலெமா ( Dilemma) வும் தொடர்ந்து கொண்டிருக்கும்.


ஒரு மூன்றாம் உலக நாடான இந்தியாவின் இறையான்மை என்பது ஏகாதிபத்திய நாடுகளுக்கு சந்தையையும்,வளங்களையும் திறந்து விடுவதற்கான உரிமையே அன்றிவேறல்ல.அந்த உரிமையால் மட்டுமே ஓரளவு சுயாதீனமாக வெளியுறவுகொள்கை வகுக்கப்படுகிறது.இந்தியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும்,இந்தியாவுக்கு சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்படும் தற்காலிக நீண்டகால மாறுதல்களை சரியாக மதிப்பிட்டு போராடும் முறைகளை வகுத்துக்கொள்வதன் மூலமாகவேஈழ விடுதலைப்போராட்டம் அடுத்த கட்டதுக்கு நகர முடியும்.அதே நேரம் இந்தியாவின் அரைகுறையானஇறையான்மையில் தங்களுக்கான பங்கைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் தற்போதுதான் ரஸ்ய,சீன அரசுகள் இறங்கி இருக்கின்றன்.ஆனால் நீண்ட காலத்துக்கு முன்பாகவே இந்திய இறையானமையின் பெரும்பகுதியை மேற்குலக நாடுகள் கைப்பற்றி விட்டனஎன்பதை மறுக்க முடியாது.


ஒரு சிறு உதாரணம் மூலம் இதை உறுதிபடுத்தலாம்.2009 ஆம் ஆண்டில் உலக பொருளாதார நெருக்கடி துவங்கியபோது இந்திய பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சியைசந்தித்தன.நான்கிலிருந்து ஆறு இலட்சம் கோடிகள் வரை சிறு,நடுத்தர முதலீட்டாளர்களின் பணத்தை பன்னாட்டு நிதி மூலதன கும்பல்கள் திருடிக்கொண்டு சென்றார்கள்.தோற்றத்தில் குழப்பமாக இருந்தாலும் பங்குச்சந்தைகளில்ஆதிக்கம் செலுத்தும் நிதிமூலதன கும்பல்கள் தங்களுக்கான திட்டவட்ட தேசிய அடையாளங்களையும்,நோக்கங்களையும் கொண்டிருக்கிறார்கள் என்பதன் அடையாளமாகும் இது.இந்திய அனுசக்தி உடன்பாட்டை நிறைவேற்ற முற்பட்ட காலத்தில் நிகழ்ந்த கட்சித்தாவல்களையும்,குதிரை பேரங்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய கடற்படையின் போர் அறை (WAR ROOM) இல் இருந்து போர்திட்டங்கள் திருடப்பட்டது தொடர்பான வழக்கு மத்திய புலனாய்வுத்துறையால் நடத்தபட்டுக்கொண்டிருந்தது,இன்றைக்கு அது என்ன நிலையில் இருக்கிறது என்பதே தெரியவில்லை.மனுவின் நாட்டில் திருட்டுக்குற்றத்துக்கு பார்ப்பன அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பினால் நாம் முட்டாள்களாகத்தான் இருக்க முடியும்.ஆக இந்தியாவின் FUSE ஐ பிடுங்கும்வாய்ப்புகளை மேற்கத்திய நாடுகளே அதிகமாகக் கொண்டிருக்கின்றன என்பதே யதார்த்தமாக இருக்கிறது


இந்தியாவை தவிர்த்துவிட்டு மேற்கத்திய நாடுகள் வழியாக ஈழம் நோக்கிய நகர்வுகளை முன்னெடுப்பது என்பதுசரியான விசயமாகவே தோன்றுகிறது.புலம் பெயர் தமிழர்கள் மேற்கொண்டு வரும் தொடர்சியான ராஜதந்திரநடவடிக்கைகளால் சில மாற்றங்களை மேற்கத்திய நாடுகளின் ஆளும்வர்க்கங்கள் எடுத்து வருவதைஅவதானிக்க முடிகிறது.தமிழ்நெட் இணையத்தில் வெளியான Why welcome and caution to Transnational Government என்ற கட்டுரையை இந்த இடத்தில் நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.புலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் இராஜதந்திர நடவடிக்கைகளும்,உருவாக்கப்படும் அமைப்புகளும் தமிழீழம் பற்றிய அடிப்படைக் கொள்கைகளில் இருந்தும்,ஏகாதிபத்திய எதிர்ப்பில் இருந்தும் விலகாமல் கண்காணிக்க்கும் கடமை ஊடகவியலாளர்களுக்கே இருக்கிறது.அதைச் சரியாகச் செய்வதன் மூலமாகவே தமிழீழ மக்களுக்கான தங்கள் கடமைகளை ஊடகவியலாளர்கள் சரியாக நிறைவேற்ற முடியும்.


மிகுந்த நெருக்கடிகளுக்கு உள்ளாகிவரும்,இருத்தலுக்கே போராடிக்கொண்டிருக்கும் உலகத்தின் உழைக்கும் வர்க்க மக்களோடு இணைந்து போராடுவதா அல்லது மேற்கத்திய ஆளும் வர்க்கங்களோடு மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாகவே முன்னேறுவதாஎன்கிற கேள்விக்கு பதில் தேட வேண்டி இருக்கிறது.நடந்துமுடிந்த போரில் சர்வதேச உழைக்கும் வர்க்கத்துக்கான தங்கள் கடமைகளை புலிகள் சரியாகவே நிறைவேற்றினர்.சர்வதேச உழைக்கும் வர்க்க அரசியல் பேசுபவர்கள் ஈழத்த்துக்கும்,புலிகளுக்குமான தங்கள் கடமைகளை நிறைவேற்றினார்களா என்கிற கேள்வியை அவர்களின் சுயவிமர்சனத்துக்கே விட்டுவிடலாம்.எரிகிறவீட்டுக்குள் இருப்பவன் உதவி கேட்டுக் கூக்குரல் இடவில்லை அதனால்தான் நாங்கள் உதவிக்குப் போகவில்லை என்கிற சாக்குப்போக்கு சொல்லும் மனநிலைதான் பெரும்பாலும் வெளிப்பட்டது.


மொத்தத்தில்,சர்வதேச புரட்சிகர,ஜனநாயக சக்திகளின் வரையறைக்குட்பட்ட பலத்தை நம்பி முழுக்கஅவர்களை நம்பியே ஈழப்போராட்டத்தின் அடுத்தகட்டத்தை நகர்த்தலாம் என்பதும்,முழுக்கமேற்கத்திய நாடுகளின் வழியாகவே முன்னேறலாம் என்பதும் சரியான பார்வையாக இருக்கமுடியாது.இரண்டு தரப்புகளோடும் தொடர்புகளைப் பேணுவதும்,அவைகளின் பலத்தை சரியாகமதிப்பிட்டு செயல்படுவதும் மட்டுமே ஈழ விடுதலையை சாத்தியமாக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_1271.html
http://stalinguru.blogspot.com/2009/08/blog-post_17.html
http://stalinguru.blogspot.com/2009/11/blog-post_11.html
http://stalinguru.blogspot.com/2010/02/1_16.html
http://stalinguru.blogspot.com/2009/12/1.html
http://stalinguru.blogspot.com/2010/02/2.html
http://stalinguru.blogspot.com/2009/12/2.html
http://stalinguru.blogspot.com/2009/12/3.html
http://stalinguru.blogspot.com/2009/12/4.html
http://stalinguru.blogspot.com/2010/02/blog-post_25.html

Wednesday, March 31, 2010

வாதப்பிரதிவாதக் கலை

எதிராளியின் வாதத்திலுள்ள விசயத்தை ஒரு குறிப்பிட்ட நோக்கமோ இயல்போ அல்லாத பொதுப்படையான கருத்தாக எடுத்துக்காட்ட வேண்டும்.அதே சமயம் நம்முடைய வாதத்தின் கருத்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குகளுக்குட்பட்டதாகவும்,ஏதேனுமொருசில நோக்கங்களையும் கருத்துக்களையும் கொண்டதாகவும் எடுத்துக் கூற வேண்டும்.ஏனெனில் வாதத்தில் ஒரு விசயம் எவ்வளவுக்கெவ்வளவு பொதுப்படையானதாகவும்,விசாலமானதாகவும் இருக்கிறதோ,அவ்வளவுக்கவ்வளவு அதற்குஆணித்தரமான எதிர்வினைகள் கிளம்பும்.வாதத்தில் நமது கருத்தையே சரியானதென்று நிரூபிக்க ஒரு சிறந்த உபாயம் கேள்வி கேட்டுக் கொண்டேபோவதாகும்.வாதத்துக்கு எடுத்துக்கொண்ட பொருளுக்குச் சிறிதும் தொடர்பில்லாத பல்வேறு விவகாரங்களையும் பற்றிக் கேள்வி மேல் கேள்விகேட்டு எதிராளியிடம் பதிலை வரவைக்க வேண்டும்.இதனால் எதிராளியுடைய சிந்தனை திசை மாறும்நம்முடைய வாதத்திலுள்ள பலவீனங்களைமறைத்துவிடுவதும் நமக்கு சாத்தியமாகும்.


வாதப்பிரதிவாதக் கலையில் எளிதில் வெற்றி பெறுவதற்கு இன்னொரு மார்க்கம்,எதிராளிக்கு ஆத்திரமூட்டுவதாகும்.சினம் மிகுந்தால் சிந்தனையின் போக்கு தடுமாறும்.கோபம் வந்துவிட்டால் நியான அநியாயங்களைப் பாகுபாடு செய்துபார்க்கும் மனத்தெளிவு அகன்றுவிடும்.அதன் காரணமாகத் தனக்கு சாதகமான கருத்துக்கள்ளை தேடிக்கண்டு பிடித்து விவாதம் செய்யும் சாதுரியத்தைஎதிராளி இழந்து விடுவான்.நாம் வலியுறுத்த வேண்டிய கருத்துக்கு மாறுபட்டதும் வேறுபட்டதுமானபிரச்சனைகளைப் பற்றி பேசுவதாலும்,கேள்வி எழுப்புவதாலும்,எதிராளி நாம் எந்தக் கருத்தை வலியுறுத்தப் போகிறோம் என்று புரியாமல் மனம்குழம்பிப்போவான்.அடிப்படைக் கருத்துக்குகந்த மறுப்புகளைக் கூறத் தன்னை தயார்படுத்திக்கொள்வதை தவற விடுவான்.அந்த நேரம் பார்த்து நமது கருத்தை திடீரென வலியுறுத்தினால் நாம் வெற்றிய்டையலாம்.


நமது கேள்விகளில் எதிராளியிடமிருந்து எந்த கேள்விகளுக்கு ஆமாம் என்கிற ஒப்புதலை எதிர்பார்க்கிறோமோ,அப்போதெல்லாம் இல்லை என்று பதில் வந்து கொண்டிருந்தால், உடனே நாம் கேள்விகளைநேர் மாறாக திருப்பிப்போட ஆரம்பித்துவிட வேண்டும்.நம்கருத்துக்குச் சாதகமான பதிலை வேண்டுவது போல,நாம் கேள்விகளைக் கேட்க வேண்டும்.இதன் மூலம் எதிராளியின் வாதங்களில் இருந்தே நமது வாதத்துக்கான ஆதாரங்களைப் பெற்று நாம் வெற்றியடைந்து விடலாம்.நமது கேள்விகளுக்கெல்லாம் சளைக்காமல் பதில்களைச் சொல்லிக்கொண்டே வந்த பின்னரும்,நமது கருத்தை வலியுறுத்துவதற்க்கான வாய்ப்பை எதிராளி தராமலே இருந்தாலுங்கூட,திடீரென நமது வாதம் வெற்றியடைந்து விட்டமாதிரி நமது கருத்தை வெளியிட்டு விடலாம்.எதிரி சங்கோஜியாகவோ,மந்தப்புத்தி உள்ளவனாகவோ இருந்து விட்டால் இந்த யுக்தி உடனுக்குடன் பலித்துவிடும்.


எதிராளி வலியுறுத்தும் கருத்துக்கு எதிரிடையான கருத்தை,எதிராளியின் செயல்களையும்,அவன் தன் கருத்துக்குச் சாதகமாக கையாண்ட எடுத்துக்காட்டுகளின் இதர அம்சங்களையும் வெளியிட்டு மடக்குவதாலும் நாம் வெற்றியடையலாம்.உதாரணமாக எதிராளிதற்கொலை புரிந்து கொள்வது நியாயமானதென்றோ, அதில் தவறில்லையென்றொ வலியுறுத்துவானேயானால்நாம் தொடுக்க வேண்டிய கேள்வி அப்படியானால்நீங்கள் ஏன் தூக்குப் போட்டுக்கொள்ளக் கூடாது?பெர்லின் மனிதர்கள் வாழ முடியாத ஒரு நகரம் என்று எதிராளி கூறினால்,உடனே நாம் நாளைக்கே முதல் வண்டி பிடித்து வேறெங்கேயாவது போய்ச்சேருவதுதானே என்று கேட்க வேண்டும்.


வாதத்தில் தோல்வியுண்டாகும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம்உடனே பேச்சைச் திசைமாற்றிவிட வேண்டும்.நமது வாதத்துக்கு தொடர்புடைய விசயத்தை பேசுவதுபோலவக்கனையாகவும்,விரிவாகவும்,நமது வாததிற்கு எந்தவகையிலும் தொடர்பில்லாத விவாகாரங்களைப் பற்றி பேசஆரம்பித்துவிட வேண்டும்.


வாதத்தில் நம் தரப்புக்குச் சாதகமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிஞர் பெருமக்களின் வாக்குக்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.ஏனெனில் எந்த கருத்தானாலும்,அதன் உட்பொருளை நோக்காமல் அந்த கருத்தை வெளியிட்டவரின் தகுதியையும்,திறமையையும்,பார்த்தே மேற்படி கருத்துக்கு மதிப்பளிப்பது மனித சுபாவம்.ஏதேனும் ஒரு விசயத்தை எடுத்துச் சொல்லி,சாக்ரடீஸே இதை வலியுறுத்திஇருக்கிறார் என்றோ,புத்தரின் போதனைகளின் முக்கியஅம்சமே இதுதான் என்றோ பெரியவர்களை துணைக்கு கூப்பிட்டால் எதிராளி அடங்கி போய்விடுவான்.எதிராளி எந்த அளவுக்கு சாத்திர அறிவு இல்லாமல் இருக்கிறானோ அந்த அளவுக்கு இந்த உபாயம் நமக்கு வெற்றி கொடுக்கும்.


எதிராளியின் கை ஓங்கும்போது தனிப்பட்ட முறையில் நேரடியானதாக்குதலில் இறங்குவதால் எதிராளியின் கவனத்தை திசைமாற்றி விடலாம்.இந்த யுகதியைகடைசி ஆயுதமாகத்தான் பயன்படுத்த வேண்டும்.விவாதத்துக்குறிய விசயத்தை விட்டு விட்டுஎதிராளியின் நடையுடை பாவனைகளைப் பற்றிய ஏளன விமர்சனத்தை மேற்கொள்ளும் இந்த உத்தி கீழ்த்தரமானது.ஆனால் இதுதான் மிக எளிதில் கைவரக் கூடியது.பெரும்பாலும் அனைவராலும் கையாளப்பட்டுவருவதும் இந்த உத்திதான்.இந்தத் தாக்குதலை ஜாடை மாடையாகவும் நகைச்சுவை வெளிப்படுபடியாகவும் பயன்படுத்த வேண்டும்.


இப்பொழுது பதிவுக்குள் வரலாம்.எதையாவது படிக்கலாம் என்றுபுத்தகங்களை புரட்டினேன்.நீண்ட காலத்துக்கு முன்பாகவே வந்து விட்ட சிந்தனையாளர் வரிசை நூல்களில் ஷோபன்ஹேர் என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் கிடைத்தது. நீட்ஷேயின் குரு என்று கேள்விபட்டது நினைவுக்கு வந்தது.படிக்க ஆரம்பித்தேன்.The art of controversy என்கிற தலைப்பில் ஷோபன்ஹேர் ஒரு புத்தகமே எழுதி இருக்கிறாராம்.அந்த புத்தகத்தை பற்றிய அறிமுகமாக குறிப்பிட்டுள்ள விசயங்கள்தான் நான் மேலே பதிந்திருப்பது.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்பதால் உடனே பதிவாக எழுதி பகிர்ந்துகொண்டு விட்டேன்.


மேலும் ஒரு விசயம் நினைவுக்கு வந்தது.ஷோபன்ஹேர் சொல்லிஇருக்கிற முறைகேடான விவாத முறைகளை மிகச்சரியாகப் பயன்படுத்தி விவாதிக்கிறவர்களை நாம் அடிக்கடி சந்தித்து இருக்கிறோமே என்று பட்சி சொல்லியது.இனியும் பீடிகை வேண்டுமா என்ன ? மக்கள் கலை இலக்க்கிய கழகம் என்று அறியப்படுகிற மக இக வின் இணையப் புரட்சியாளர்களோடுவிவாதிக்க நேர்ந்திருக்கிற ஒவ்வொருவரும்,மேலே சொல்லப்பட்டு இருக்கிற விவாத முறைகேடுகளை அவர்கள் பயன்படுத்துவதை ஒரு முறையாவதுஉணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.அடுத்தது நம்ம ஷோபாசக்தியையும் இந்தக் கலையில்யாரும் மிஞச முடியாது.தன்மீதான விமர்சனங்களுக்குபதில் அளிப்பதாகக் கூறி பதில்களே இல்லாமல்,ஷோபாசக்தி எழுதியிருக்கும் கட்டுரைகள் எல்லாம்இந்த விவாத முறையை நமக்கு நினைவூட்டுவதாகஉள்ளன.பொதுவாகவே ஈழம் தொடர்பான அ.மார்க்ஸின் எழுத்துகளிலும்,குறிப்பாக அரசு.இறையானமை. ஆயுதப்போராட்டங்கள் என்கிற கட்டுரையிலும் இதே பாணிதான் இழையோடி இருந்தது.பிரான்ஸ் குடியுரிமை பெற்றிருக்கும் கனவான் இரயாகரன் கூட இந்த பாணியை கடைபிடித்திருப்பதை அவரது எழுத்துக்களை வாசித்தவர்களால் உணர்ந்திருக்க முடியும் என்று நம்புகிறேன்.


வெளிப்படையாகவே மக இக வினரின் அரசியல் மக்களுக்கானது அல்ல என்பதை என்னுடைய பல பதிவுகளின் வழியாக அமபலப்படுத்திஇருந்தாலும்,விவாத முறை பற்றிய இந்த பதிவின் ஊடாகவும் சில விடயங்களை முன் வைக்க விரும்புகிறேன்.கட்சியில் அங்கம்வகிப்பதாலோ,துண்டறிக்கைகளை விநியோகிப்பதாலோ அடையாள எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொள்வதாலோ தன்னை புனிதன் என்றும்,மக்களை உய்விக்க வந்த தேவதூதன் என்றும் கருதிக் கொள்கிற யாரும் மார்க்சியர்களாக இருக்க முடியாது.


மார்க்சிய நூல்களைப் படித்துவிட்டதால் அறிவுஜீவி திமிரோடு சக மனிதர்களுக்கும்,மக்களுக்கும் மேலானவர்களாக தங்களை வைத்துப் பார்க்கும் குணமும் மார்க்சியர்களுக்கு உரியதல்ல.மக்களுக்கும்,மனிதர்களுக்கும் மேலாக தன்னை நிறுத்திக்கொண்டு அதிகாரம் செலுத்துவது அரசின் குணம் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.இவர்களின் எந்த ஒரு பதிவும் சுரண்டலுக்கு எதிராக போராடுவதன் தேவையை,தோழமையோடு அருகே அமர்ந்து சொல்லிக்கொடுக்கும் பாணியில் அமைந்தது கிடையாது.இது ஒன்றே போதும் இவர்கள் மார்க்சியர்கள் அல்ல என்பதை அடையாளம் காண்பதற்கு.சற்று உன்னிப்பாக கவனித்தால் இவர்களின் விழுந்து பிடுங்கும் பாணியால் மார்க்சியத்தின் மீதான ஆர்வத்தையே மக்களுக்காக செயல்பட விரும்புவர்கள் இழந்து விடுவார்கள் என்பதையும் உணரலாம்.மார்க்சியர்கள் என்றாலே இப்படித்தான் என்று எண்ணத் தூண்டுவதன் மூலம் அவர்களை எதிர்நிலைக்கு ஓட வைக்கிற வேலையையும் கூடதெளிவாகவே செய்து கொண்டிருக்கிறார்கள் நம் இணையப் புரட்சியாளர்கள்.மீண்டும் மீண்டும்நினைவூட்ட விரும்புவது பேராசான் மார்க்சின்இந்த வரிகளைத்தான்.
எல்லாவற்றையும் சந்தேகி .......

Saturday, March 27, 2010

புரட்சிகர மனுவாதிகள்

நீண்ட நாட்களாக பதிவுகள் எழுதாமல் இருந்து விட்டால்
பதிவர் உலகம் மறந்து விடுமே என்கிற கவலை சில
நாட்களாகவே வந்து கொண்டிருந்தது.சரி இனியேனும்
எதையாவது உருப்படியாக :) எழுத முயற்சிக்கலாம்
என்று பார்த்தால் விட மாட்டார்கள் போல இருக்கிறது.
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் இணையப்
புரட்சியாளர்கள.புலிகள் மீது வைக்கப்பட்ட
விமர்சனங்கள்,இறுதி போர்க்காலகட்டத்தில் நிகழ்ந்த
விசயங்களை எல்லாம் தர்க்கரீதியாக அலசி ஒரு
பதிவிடலாம் என்று நீண்ட நாட்களாக எண்ணம்
இருந்தாலும்,அது மருதையரின் நேர்காணலைப்
படித்த பிறகே சாத்தியமானது.நம்ம ராசி அப்படி
போல.பொய்களால் வாழும் போலிப் புரட்சியாளர்கள்
என்று இரண்டு பகுதிகளாக அந்த இடுகையை
பதிவிட்டிருந்தேன்.இப்பொழுதும் அப்படியே
இவர்களுக்கான எதிர்வினையூடாகவே சில
விசயங்களை முன் வைக்க முயலுகிறேன்.

சில நாட்களுக்கு முன்னால் ஜெயமோகன் டோண்டு
ராகவன்களின் மேட்டிமைத் திமிர் என்றோரு பதிவு
வந்திருந்தது வினவு இணையத்தில்.அப்படியே
வாசித்துக்கொண்டு வந்தபோது நரம்புகள் எல்லாம்
சிலிர்த்தன.வர்க்க உணர்வு பொங்கியது.ஏதோ
என்னுடைய அடிப்படை மார்க்சிய அறிவைக்
கொண்டு தமிழ்த்தேசிய விடுதலையே சமூக
மாற்றத்துக்கான வழி என்கிற முடிவுக்கு
வந்திருந்தாலும்,அடிப்படையில் நானும் ஒரு
மார்க்சியன்.இந்திய தேசிய இனங்களுக்கு
இடையிலான தோழமையை நேசிப்பவன்
என்பதால் சேட்டன்களின் உபசரிப்பைப் பற்றி
படித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

தொடர்ந்து வாசித்துக்கொண்டு வந்தபோது வழக்கம்
போலவே பூணூல் நிரடியது.இந்திய அதிகாரவர்க்க
ஆதரவு அரசியல் பல்லிளித்தது.குறைந்த கூலிக்கு
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மக்களை
இறக்குமதி செய்வதை கேரள ஓட்டல்களில்
இருக்கும் தொழிலாளர்களின் சங்கங்கள்
தடுத்து வருகின்றன என்று எழுதி இருக்கிறார்கள்.
வாயைக் கொடுத்து வாயில் புண்ணோடுதான்
ஊர்போய்ச் சேருவேன் என்று வடிவேலு போல்
அடம் பிடித்தால் நான் என்ன செய்ய?

மறுகாலனியத்தின் விளைவு என்றாலும் உழைக்கும்
மக்கள் தங்கள் தேசிய இன அடையாளங்களைக்
கடந்து இணைவதை நாம் கொண்டாட வேண்டும்.
இனிய ராகம் பாட வேண்டும் என்றெல்லாம்
போதிக்கும் இந்த புரட்சியாளர்களுக்கு,உழைத்துப்
பிழைக்க வந்த வடகிழக்கு மக்களை,கேரள
தொழிற்சங்கங்கள் துரத்துவது ஏன் இனவாதமாக
தெரியவில்லை? தமிழர்கள் செய்தால் இனவாதம்.
மலையாளிகள் செய்தால் புரட்சியா?சாதிக்கொரு
நீதிதானே மனுதர்மம்,இனத்துக்கொரு நீதி
வழங்கி சாதனையே படைக்கிறார்கள் நம்
புரட்சிக்காரகள் அடடா ! மேலும் இதனை
வெறுமனே தற்செயல் கருத்து என்று கருத
முடியும் என்று தோன்றவில்லை.எந்த இசத்தின்
லேபிளைக் கொண்டு மூடினாலும் இந்திய
ஒருமைப்பாடு என்பதை பார்ப்பன
ஒருமைப்பாட்டிலிருந்தும்,இந்திய தேசபக்தியை
பார்ப்பன பக்தியிலிருந்தும் பிரித்துப் பார்ப்பது
சாத்தியமற்றதாகவே இருக்கிறது.

இந்திய தேசபக்தியிலும்,இந்திய ஒருமைப்பாட்டிலும்
மட்டுமே சாத்தியமாகக் கூடிய பார்ப்பன
மேலாதிக்கத்தை எதிர்த்து மூன்று தசாப்தங்களாக
அஸ்ஸாம்,நாகாலாந்து,மணிப்பூர் உள்ளிட்ட
வடகிழக்கு தேசிய இனங்களின் மக்கள்
போராடிக் கொண்டிருக்கிறார்கள்.தங்களின்
தேசிய இன அடையாளத்தை தக்கவைத்து,
இந்திய அடையாளத்துக்குள் கரைந்து போக
மறுப்பதால்,இந்திய அரச பயஙகரவாதத்தின்
கொடுமைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இந்திய ஒருமைப்பாட்டையும்,இந்திய தேச
பக்தியையும் நிராகரிக்கும் வடகிழக்கு தேசிய
இனங்களின் மீது பார்ப்பனர்களுக்கும்,இந்திய
அதிகாரவர்க்கத்துக்கும் இருக்கும் வன்மமும்,
கோபமும்தான் இவர்களின் எழுத்திலும்
வெளிப்படுகிறது என்று புரிந்துகொள்வது
தவறாக இருக்காது.அப்பட்டமான பார்ப்பன
வன்மத்தை வடகிழக்கு தேசிய இனங்கள்
மீது காட்டும் இவர்கள் நெடுமாறனும்,
வைகோவும் அந்த மக்களுக்காக குரல்
கொடுக்கவில்லை நாங்கள்தான் குரல்
கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்று
படம் காட்டுகிற கொடுமையை என்னவென்பது?
உண்மையில் இவர்களின் இருபத்தைதாண்டு
கால புதிய ஜனநாயக இதழ்களில் தேடினால்
அதிகபட்சம் பத்து கட்டுரைகள் கூட வட
கிழக்கு தேசிய இன மக்களின் பிரச்சனைகளை
பேசியதாக இருக்காது என்பதே உண்மை.

மேம்போக்கான அரசியல் பார்வைகளை தவிர்த்துவிட்டு
பார்த்தால் தமிழர்கள் மீது சத்தமில்லாமல் ஒரு
உளவியல் போரையே இந்திய அதிகாரவர்க்கம்
நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
காஷ்மீரையும்,வடகிழக்கு மாநிலங்களையும் தவிர
இந்திய பார்ப்பனிய அதிகாரவர்க்கத்துக்கு சிக்கல்
தரும் இனங்களாக தமிழர்களும்,சீக்கியர்களுமே
இருக்கிறார்கள்.இரண்டு தரப்பையும் உளவியல்
ரீதியாக ஊனப்படுத்திக்கொண்டே இருக்க
முயற்சி செய்து வருகிறது இந்திய அரசு.சீக்கிய
மக்களுக்கு எதிராக சர்தார்ஜி ஜோக்குகள் என்கிற
பெயரில் கழிசடைத்தனமான கலாச்சாரம் ஒன்று
கட்டமைக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து
கொண்டிருக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
மேலும் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த
ஒரு நிகழ்வையும் இங்கே மறுபடியும் நினைவு
படுத்த வேண்டி இருக்கிறது.


1984 இல் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த இனப்
படுகொலையில் தொடர்புடைய சஜ்ஜன் குமார்,
மற்றும் ஜகதீஸ் டைட்லருக்கு தேர்தலில் போட்டி
இட காங்கிரஸ் கட்சி சீட்டு கொடுத்ததை எதிர்த்து
சீக்கியர்கள் மிகத் தீவிரமாக போராடிக்கொண்டு
இருந்தனர்.ஏறக்குறைய மீண்டும் ஒரு தேசிய
எழுச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது
பஞ்சாப்.அந்த நேரத்தில் தாழ்த்தப்பட்ட
சீக்கியர்களின் தேரா சச்சா செளதா பிரிவின்
தலைவர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில்
வைத்துக் கொல்லப்பட்டார்.சீக்கியர்களின்
அந்த எழுச்சி முழுக்க திசை திருப்பபட்டது.
இணைந்து போராடிக்கொண்டிருந்த சீக்கியர்கள்
தங்களுக்குள் மோதிக்கொள்ளத் துவங்கினர்.


இவைகளை இங்கே பதிந்ததற்கு காரணமே தமிழர்கள்
தங்களின் மேம்போக்கான அரசியல் பார்வைகளை
மாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
ஏற்கனவே பின்னூட்டத்தில் சொல்லி இருந்த ஒரு
விசயத்தையே மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.
தினமும் பேருந்தில் இரண்டு,மூன்று குரல்களை
கேட்க முடிகிறது.150,200 ரூபாய் வாங்கிக்
கொண்டிருந்த இடத்தில் வட இந்தியாவில் இருந்து
வேலைக்கு ஆட்கள் வர ஆரம்பித்த பிறகு 90
ரூபாய்கும் 80ரூபாய்க்கும் வேலை செய்ய
வேண்டி இருக்கிறது என்கிற விசன குரல்களை.
கொத்தடிமை உழைப்புக்கு தயாராக இருக்கும்
வட இந்திய தொழிலாளர்களால் தமிழ் உதிரிப்
பாட்டாளிகள் குறை கூலிக்கு வேலை செய்ய
வேண்டிய நிலை தோன்றி இருக்கிறது.
மேலும் தமிழகத்தின் உதிரிப்பாட்டாளிகள்
யார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை
பெரும்பாலும் சாதிய ஒடுக்குமுறை
தாங்காமல் கிராமங்களை விட்டு வெளியேறிய
தலித்துகள்.விவசாயத்தை அழிக்கும் அரசுகளின்
கொள்கையாலும்,தமிழகத்துக்கே உரிய
பிரத்தியேகமான நதிநீர் சிக்கலகளாலும்
வாழ்வாதாரங்களை இழந்தவர்கள் என்கிற
இரண்டு தரப்பினரே உதிரிப் பாட்டாளிகளாக
உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.


வட இந்திய தொழிலாளர்களின் வருகையால் தமிழகத்தின்
உதிரிப்பாட்டாளிகள் சிக்கலை சந்திக்க துவங்கி
இருக்கின்றனர்.எந்த ஒரு தேசிய இனத்திலும்
பிற தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள சேர்ந்து
வசிப்பது இயல்பான ஒன்றுதான்.அதே நேரம்
சமீப காலங்களில் தமிழகத்துக்கு பிற தேசிய
இனத்தவரின் வருகை மிக அதிகமாகி இருக்கிறது
என்பதையும் காணக் கூடியதாக இருக்கிறது.
இவைகளெல்லாம் பிரச்சனைகள்தான்.ஆனால்
இவைகள் மட்டுமே முதன்மையான பிரச்சனைகள்
என்று கூறப்படுவதை ஏற்க முடியாது.
தமிழகத்தின் வாழ்வாதாரங்களை,வளங்களைச்
சூறையாடும் ஏகாதிபத்தியங்களை எதிர்ப்பது,
சாதி வெறியர்களால் தாழ்த்தப்பட்டவர்கள் மீது
நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை எதிர்ப்பது
போன்ற கடைமைகளை புறக்கணித்துவிட்டு
தமிழ்த்தேசியர்களாக தங்களைக் கூறிகொள்பவர்கள்
இயங்குவது ஏற்க முடியாத விசயமாகும்.
வர்க்கப் பார்வையற்ற,பாசிச மற்றும் இனவாதப்
பண்புகளைக் கொண்டவர்கள் முன்நிறுத்தும்,
ராஜ்தாக்கரே பாணியிலான தேசியத்தை
முறியடிக்க வேண்டிய கடமையும் உண்மையான
தமிழ்த்தேசியவாதிகளின் தோள்களில்
சுமத்தப்பட்டிருக்கிறது.


மீண்டும் மக இக வினருக்கே வரலாம்.பலமுறை
இவர்களின் போலி வர்க்க அரசியலையும்,
பார்ப்பன விசமத்தையும் அம்பலப்படுத்தி எழுதி
விட்டேன்.இறுதியாக சொல்வது ஒன்றுதான்.
சமூகத்தில் சரியான விசயங்களுக்கான தேடல்
இருக்கும் போது,பல இடங்களில் இருந்தும்
சரியான கருத்துக்கள் வரவே செய்யும்.அந்தக்
கருத்துக்களை முன் வைப்பவர்கள் நேர்மையான
ஆட்களா என்பதை அவர்களின் செயல்களை
வைத்து மட்டுமே மதிப்பிட முடியும்.
தோற்றத்தில் என்னவாக காட்டிக்
கொள்கிறார்கள் என்பது அக்கறைக்குரியதல்ல.
கண்ணால் காண்பதும் பொய் காதால்
கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்
என்கிற பழமொழியோடு இந்த பதிவை
நிறைவு செய்து விடலாம்.

Saturday, March 6, 2010

பொய்களால் வாழும் போலிப் புரட்சியாளர்கள் - 2

பொய்களால் வாழும் போலிப் புரட்சியாளர்கள் - 2


ராஜிவ்காந்தியின் கொலைக்குப் பிறகு இவர்கள் கடும்
ஒடுக்குமுறையை சந்தித்து போராடினார்களாம்.அது
பற்றிய மேலதிக தகவல்கள் கைவசம் இல்லாத
நிலையில் விமர்சிக்க விரும்பவில்லை.ஆனால்
சில மாதங்களுக்கு முன் ராஜிவ் கொலையுண்ட
காலத்தில் வெளியான எங்கள் பொதுச்செயளரின்
கட்டுரை என்று ஒன்றை இவர்களின் அமைப்பைச்
சேர்ந்தவர் சுட்டி அளித்துப் படிக்கத் தந்தார்.படித்து
முடித்தபோது மனதில் எழுந்த கேள்வி இதுதான்.
இதில் எங்கே ஈழம் பற்றிய அரசியல் இருக்கிறது?
அதைத்தேட ஏதேனும் விசேச கண்ணாடி
அணிந்திருக்காமல் நாம்தான் தவறு செய்து
விட்டோமோ என்று குழப்பமே வந்துவிட்டது.


மேலும் இவர்கள் அடிக்கடிச் சொல்லும் நகைச்சுவைத்
துணுக்கு ஒன்று இந்தப் பதிவிலும் வந்திருக்கிறது.
புலிகளின் தலைவர்களில் ஒருவரான கிட்டு ராஜிவ்
கொலையை மக இக கூடச் செய்திருக்கலாம் என்று
காட்டிக்கொடுக்கும் வகையில் அறிக்கை விடுத்தார்
என்பது.நமது கோபமெல்லாம் இவர்களை இவ்வளவு
சீரியசாக எடுத்துக்கொண்டு கிட்டு பேசி விட்டாரே
என்பதுதான்.


நேர்காணலில் இறுதிப் பத்தியில் சொல்லப்பட்டுள்ள
அரசியலை சற்று விரிவாகவே அலச வேண்டி
இருக்கிறது.யாழ் கோட்டை புலிகளால் சுற்றி
வளைக்கப்பட்டபோது பா.ம.க. தி.மு.க.
ம.தி.மு.க அடங்கிய பாரதிய ஜனதா ஆட்சி
நடைபெற்றதாம்.அடங்கொக்காமக்கா ! 1985
காலகட்டங்களில் யாழ்கோட்டையில் இருந்த
சிங்களைப்படைகளை புலிகள் சுற்றி வளைத்த
போது பாரதிய ஜனதா எப்படி ஆட்சி அதிகாரத்தில்
இருந்திருக்க முடியும்.யாழ்ப்பாணத்தில்
டச்சுக்காரர்கள் கட்டிய கோட்டை இருப்பதும்
அதுதான் யாழ்கோட்டை என அழைக்கப்படுகிறது
என்பதும் கூட தெரியாத ஒரு அமைப்பின்
பொதுச்செயலாளரை நம்பி இந்தியப் புரட்சியா !
இந்த நாடும் நாட்டுமக்களும் நாசமாய் போகட்டும்.


மேலும் இது இவர்களுக்கு வழக்கமான ஒன்றுதானே.
ஈழத்தின் மூத்த மார்க்சியர் என்ற அறிமுகத்தோடு
தோழர் சிவசேகரத்தின் நேர்காணலை இரண்டு
பகுதிகளாக புதிய ஜனநாயகம் இதழில்
வெளியிட்டிருந்தார்கள்.எப்படியாவது புலிகளை
ஏகாதிபத்தியச்சார்பாளர்களாக சித்தரிக்க வேண்டிய
நிலையில் இருந்த அவர்,1995 களிலேயே
புலிகள் யாழ்ப்பாணத்தை இழந்து வெளியேறி
இருந்தனர் என்கிற உண்மையை மறைத்து 2002
போர் நிறுத்தத்துக்குப் பின் யாழ்ப்பாணத்தில்
கோக்கை புலிகள் அனுமதித்தார்கள் என்று பச்சைப்
பொய் சொல்லி இருந்தார்.அதைக்கேட்டுக்கொண்டு
பூம் பூம் மாடு போல தலையாட்டிக் கொண்டு
வந்தவர்கள்தானே நம் புரட்ச்ச்ச்ச்ச்சீஈஈகாரர்கள்.


பிறகு இவர்கள் எந்த முற்றுகையைச் சொல்கிறார்கள்
என்று யோசித்தபோதுதான் புரிந்தது.உலகின் ராணுவ
ஆய்வாளர்களால் ஹோசி மின் வழிகாட்டுதலில்,
வியட்நாமின் வீரத்தளபதி ஜெனரல் கியாப்
தலைமையில்,அமெரிக்கப்படைகளுக்கு எதிராக
நடத்தப்பட்ட TET தாக்குதலுக்கு இணையானது
என்று பாராட்டப்பட்ட புலிகளின் யானையிறவு
முகாம மீதான தாக்குதலைத்தான் இவர்கள்
குறிப்பிடுகிறார்கள் என்று.இப்படி புலிகளை
புகழ்ந்தால் அவாள் சஙகடப்படுவா என்பதால்
இத்தோடு நிறுத்திக்கொண்டு பதிவுக்குள் போகலாம்.
ஆனையிறவு முகாமை தகர்த்துவிட்டு நாற்பதாயிரம்
சிங்கள ராணுவத்தினரை சுற்றி வளைத்து புலிகள்
நின்றிருந்தனர்.யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிடிக்க
புலிகள் முன்னேறிச் செல்லக் கூடாது என்பதே
இந்திய அரசின் மிரட்டலாக இருந்தது.


சில மணி நேரங்களுக்குள்ளாகவே ராணுவத்தினரை
கூண்டோடு புதைத்து விடுகிற இடத்தில் புலிகள்
இருந்தார்கள்.உலகின் எந்த ராணுவம் வந்தாலும்
அதைத் தடுக்க முடியாது என்பதே யதார்த்தமாக
இருந்தது. இந்திய அரசின் மிரட்டலுக்காக
அல்லாமல் மனித உயிர்களின் மதிப்பறிந்த
போராளிகளாக,உச்சபச்ச மனிதாபிமானதுடன்
இந்திய கடற்படை கப்பல்கள் வழியாக சிங்களப்
படையினர் வெளியேற புலிகள்
அனுமதித்திருந்தனர்.புலிகளுக்கு எதிரான
இந்திய அரசின் மிரட்டலை மிகப்பெரிய
வெற்றியாகநெடுமாறன் உள்ளிட்ட புலி
ஆதரவாளர்களாக சொல்லிக்கொண்ட கட்சிகள்
பேசினார்கள் என்று எழுதி இருக்கிறார்கள்.
நெடுமாறன் அமைப்புதான் நடத்திக்கொண்டு
இருக்கிறார்.ஓட்டுக்கட்சியை அல்ல என்பது
கூட தெரியாத இவர்களின் பொது அறிவை
என்னவென்பது?


நேர்காணலின் இறுதிப் பகுதியில் இவர்களே சொல்லிய
விசயத்தில் இருந்து ஒரு விசயம் தெளிவாகிறது
இந்திய அதிகாரவர்க்கத்துக்கு ஓரளவுக்கு மேல்
தமிழக அரசியல் கட்சிகளால் அழுத்தம் கொடுக்க
இயலாது என்பதை உணர்ந்திருந்த புலிகள்,அதை
மேலும் உறுதிபடுத்திக்கொள்ள அந்த நிகழ்வு
வாய்ப்பளித்திருக்கும்.ஆட்சியை வேண்டுமானாலும்
இழப்போமே தவிர ஈழத்தை அங்கீகரிக்க மாட்டோம்
என்பதே இந்திய பார்ப்பன பனியா அதிகாரவர்க்கத்தின்
முடிவாக இருந்து வந்திருக்கிறது.இந்திய அதிகார
வர்க்கத்தின் இயல்பை நன்கு அறிந்த புலிகள்
இந்தியாவை தவிர்த்துவிட்டு மேற்கத்திய நாடுகள்
வழியாகவே ஈழம் நோக்கிய நகர்வுகளை போர்நிறுத்த
காலங்களில் மேற்கொண்டிருந்தனர் என்பதும் நாம்
அறிந்த ஒன்றுதான்.தமிழக கட்சிகளின் பலத்தை
அடிப்படையாக வைத்து தங்களின் திட்டங்களை
வகுக்கும் அளவுக்கு சிறுபிள்ளைத்தனமான
எண்ணங்களை கொண்டிருந்தவர்களாக புலிகளைக்
கருத வாய்ப்பேயில்லை.


எந்த பாரதிய ஜனதா கட்சியின் அரசு தங்களை
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றக்கூடாது என்று
மிரட்டியதோ அதே பாரதிய ஜனதாவின்
ஆட்சி அமைந்தால் போர் நிறுத்தம் வந்து
விடும் என்று கருத புலிகள் ஒன்றும்
மக இக வினர் போன்ற அதிபுத்திசாலிகள்
அல்லவே.தமிழகத்தில் ஜெயலலிதாவின்
ஆட்சியும்,இந்தியாவில் பாரதியஜனதாவின்
ஆட்சியும் அமைந்தால் போர் நிறுத்தம்
வந்துவிடும என்று புலிகளின் தமிழக ஆதரவு
கட்சிகள் சொன்னதை நம்பி புலிகள்
ஏமாந்ததாக,இவர்கள் சித்தரிப்பதைக்
பார்க்கையில் கேட்பவன் கேனையன்
என்றால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்று
சொல்பவர்கள மக இக காரர்களைப்
போலத்தான் இருப்பார்கள் என்று புரிந்து
கொள்ள முடிகிறது.


ஈழத தமிழர்கள் மீதான உச்சபட்ச மனித அவலமும்
நிகழ்த்தி முடிக்கப்பட்ட பிறகு சாரு நிவேதிதாவும்,
ஜெயமோகனும்,கிளிநொச்சி போர்க்காலத்தில்
ஆயுதங்களைஒப்படைத்துவிட்டு சரணடையும்படி
புலிகளை,உள்துறை அமைச்சர் சிதம்பரம் கோரிய
போது அதை புலிகள் ஏற்றிருந்தால் இவ்வளவு
மக்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று
எழுதி அம்பலப்பட்டதை இணைய உலகில்
பார்த்தோம்.துரோகிகளின் மெனத்தில் துடிக்கும்
முள்ளிவாய்க்கால் என்று இவர்கள் ஒரு சிறு
வெளியீட்டை கொண்டு வந்திருக்கிறார்கள்.
கொடுக்கிற காசுக்கான மதிப்பைக் கூட
கொண்டிராத இவர்களின் வெளியீடுகளை வாங்கி
படிப்பதை நிறுத்த வேண்டும் என்கிற முடிவுக்கு
வந்திருப்பதால்,புதிய கலாசாரத்தில் வந்த
கட்டுரையை மட்டுமே வாசித்தேன்.


தப்பிக்கவோ தற்காத்துக்கொள்ளவோ வழியற்ற நிலையில்
ஆயுதங்களை மௌனிக்கச் செய்கிறோம் என்கிற
முடிவை சில நாட்களுக்கு முன்னால் புலிகள்
எடுத்திருந்தால் ஒருவேளை ஆயிரக்கணக்கான உயிர்கள்
காப்பாற்றப்பட்டிருக்கும் என்று எழுதி இருக்கிறார்கள்.
புலிகள்ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பிறகும்,
உச்சபச்ச தாக்குதலை நடத்தி ஆயிரக்கணக்கான
மக்களை சிங்கள ராணுவம் கொன்றொழித்தது
என்கிற உண்மையை இவர்கள் மறைப்பது ஒருபுறம்
இருக்கட்டும்.இந்திய ஆட்சி மாற்றமோ,தமிழக
ஆட்சி மாற்றமோ போர்க்களத்தில் எந்த விளைவையும்
ஏற்படுத்தாது என்கிற புரிதலுடனே புலிகள்
இயங்குவார்கள் என்பதை மேலே பார்த்திருக்கிறோம்.


இந்திய தமிழக ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தும்,தமிழக
கட்சித்தலைவர்களின் வாக்குறுதிகளை நம்பியும்
புலிகள் ஏமாந்து விட்டதாக ஒரு சித்தரிப்பை
உருவாக்குவதன் மூலம்,மக்களின் உயிரிழப்புகளுக்கு
புலிகள்தான் காரணம் என்ற தோற்றத்தை
உருவாக்குவதுதானே இவர்களின் திட்டம்.அப்பொழுதும்
கூட இலங்கை ராணுவம் அப்பாவி மக்களை
ஆயிரக்கணக்கில் கொன்றது இவர்களுக்கு இரண்டாம்
பட்சமாகத்தான் படுகிறது என்பதையும்
கவனிக்க முடிகிறது.


சிதம்பரம் புலிகளைச் சரணடையக் கோரியபோதே அதை
வழிமொழிந்தால் தங்களை துரோகிகள் என்று
அடையாளம் காண்பார்கள் என்பதால் சாருநிவேதிதாவும்
ஜெயமோகனும்,இனப்படுகொலை நிகழ்த்தி
முடிக்கப்பட்ட பிறகு பேசியதைத்தான் இவர்களும்
பேசி இருக்கிறார்கள். சிதம்பரத்தின் குரலோடு மக இக
வினரின் குரலையும் சேர்த்து அடையாளம் காண்பதில்
எந்த தவறும் இருக்க முடியாது.இந்திய
மாவோயிஸ்டுகளை பயஙகரவாதிகள் என்கிற
அடைமொழியோடு எழுதுபவர்கள்தானே இவர்கள்.
ஒரு ஐந்து பக்க கட்டுரைக்குள் இவ்வளவு ஆப்பைச்
செருகுகிறவர்கள் அந்த வெளியீடு முழுவதும்
எத்தனை மோசடிகள் செய்திருப்பார்கள்
என்று நினைத்தால் மயக்கமே வருகிறது.


இறுதியாக (9.9.20009) அன்று தினமணி இதழில் வந்த
ஒரு கருத்துக்கணிப்பை அடிப்படையாக் கொண்டு ஒரு
பத்தி எழுதி இந்தப் பதிவை முடுத்து விடலாம்.
இலங்கைத் தமிழரின் தற்போதைய நிலைக்கு காரணம்
யார் என்கிற கேள்விக்கு தமிழக மக்கள் கீழ்கண்டவாறு
பதில் அளித்திருக்கிறார்கள்.


விடுதலைப்புலிகள் - 19.8%
இலங்கை அரசு - 21.33%
இந்திய அரசு - 58.69%

ஒரு சாராசரியான நாளிதழ் வாசிக்கிற தமிழனுக்கு கூட
ஈழத்தமிழர்களின் அவலங்களுக்கு காரணம் இந்திய
அரசுதான் என்பது தெரிந்திருக்கிறது என்பதை
இந்த கருத்துக் கணிப்பு உணர்த்துகிறது.விடுதலைப்
புலிகள்தான் தமிழ் மக்களின் அவலங்களுக்கு
காரணம் என்கிற அந்த 19.8% சதவிகிதத்துக்குள்
யார் யார் எல்லாம் வருவார்கள் என்று பார்க்கலாம்.
அமைப்புகள்,கட்சிகள்,இயக்கங்கள் தாண்டி
பார்ப்பனர்கள் அணைவரும்,இந்திய அரசு,காங்கிரஸ்,
கருணாநிதி,ஜெயலலிதா,சி.பி.எம்,அ.மார்க்ஸ்,
ஷோபாசக்தி போன்ற அறிவுஜீவிகள்.புலிகளுக்கு
எதிரான இவர்களின் குரலோடு மக்கள் கலை இலக்கிய
கழகத்தின் குரலும் இணைந்தே ஒலிக்கிறது என்பதே
போதும் இவர்கள் அரசியல் யாருக்கானது
என்பதை அறிய.

முடிந்தது.

பொய்களால் வாழும் போலிப் புரட்சியாளர்கள் - 1


கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் அம்மா,ச்சே ச்சே
மருதையன்(ர்)வெளியிட்ட அறிக்கையை இனியொரு
இணையத்தில் வாசிக்க நேர்ந்தது.
http://inioru.com/?p=4726
தொடர்ச்சியாக இவர்களின் கட்டுரைகளுக்கு பதில்
அளித்துக்கொண்டு இருப்பது சலிப்பை தருகிறது.
அதே நேரம் பதில் அளிக்காமல் விட்டுவிட்டால்
இவர்கள் தங்களுக்கு கட்டமைத்திருக்கும்
புரட்சிகர முகமூடி நிலைத்துவிடும் அபாயமும்
இருக்கிறது.வேறு வழியில்லை என்பதால்
இந்தப் பதிவு.


தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மக்கள்
ஆதரவு எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவு கட்சிகள்
விரும்பவில்லை என்று முரண்பட்ட பதிலோடு
துவங்கி இருக்கிறார் மக்கள் கலை இலக்கிய
கழகத்தின் பொதுச்செயலாளர்.தமிழ்நாட்டில்
ஏற்படும் மக்களின் எழுச்சியும்,போர்க்குணம்
கொண்ட போராட்டங்களும்தான் ஈழத் தமிழர்கள்
மீது நடந்துகொண்டு இருந்த இனப்படுகொலையை
தடுத்து நிறுத்த முடியும் என்கிற நிலையில்,அந்த
எழுச்சியை தங்களின் தேர்தல் அரசியல்
இலாபங்களுக்காக தடுத்து நிறுத்தியவர்கள்
எப்படி புலி ஆதரவாளர்களாக இருக்க முடியும்?
மக இக வினரை புரட்சியாளர்கள் என்பது
எத்தகைய அபத்தமோ அத்தகையதுதான்,
தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகளின் தலைவர்களை
புலிகள் ஆதரவாளர்கள் ஈழத் தமிழர்களுக்காக
போராடுபவர்கள் என்பதும்.


தங்கள் போராட்டங்களின் நோக்கங்களாக இவர்கள்
சொல்லி இருக்கும் கருத்துக்கள் மீதான எதிர்
வினையை இதே பதிவில் வேறு ஒரு இடத்தில்
வைத்துக்கொள்ளலாம்.அதற்கு முன்னால்
தமிழகமெங்கும் இவர்கள் நடத்தியதாக கூறிக்
கொள்ளும் போராட்டங்களின் யோக்கியதையை
பார்க்க வேண்டி இருக்கிறது.நான்கு பேரை
வைத்துக்கொண்டு நாற்பது பிளாக்குகளில்
எழுதிக்கொண்டு இருப்பதாலேயே மக இக வினர்
ஏதோ தமிழகத்தின் மாபெரும் புரட்சிகர சக்திகள்
என்று ஒரு தோற்றம் இணைய உலகில்
ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.அந்த மாயையையே
முதலில் கேள்விக்கு உள்ளாக்கி உடைக்க
வேண்டி இருக்கிறது.நாற்பது இலட்சம் மக்கள்
வசிக்கும் கோவை பகுதிகளில் இவர்கள் ஒரு
ஆர்ப்பாட்டம் நடத்தினால இருபதிலிருந்து
முப்பது பேர் மட்டுமே பங்கேற்பார்கள்
என்பதுதான் நிதர்சனமான் உண்மை.


அரசியல் உணர்வு கொண்ட மிகச்சிறிய பிரிவினரைத்
தவிர்த்து பெரும்பாலான மக்களுக்கு மக இக என்று
ஒரு அமைப்பு இருக்கிறது என்பதே தெரியாது.
அரசிடம் அனுமதி வாங்கி இவர்கள்,நகரங்களிலும்,
மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் செய்தது
உண்மையாக இருக்கலாம்.திருச்சியிலும்,
சென்னையிலும் ராணுவ ஆட்சேர்ப்பு மையத்தின்
முன்பாக போராட்டம் நடத்தி கைதானதை
குறிப்பிடும் இவர்கள்.மாலை ஆறு மணிக்கு
மேல் விடுவிக்கப்பட்ட கதையையும்
சொல்லலாமே எது இவர்களைத் தடுக்கிறது?


ஏற்கனவே சொன்னது போல மக இக என்கிற அமைப்பு
இருப்பதே பலருக்கும் தெரியாது என்பதே உண்மையாக
இருக்க,இவர்களின் மாணவர் அமைப்புதான்
தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்களை அணிதிரட்டிப்
போராடியது என்பது அப்பட்டமான மோசடியாகும்.
அணைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு என்று
ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலமே மாணவர்கள்
போராடிக்கொண்டு இருந்தனர்.ஈழத்தையும்,
புலிகளையும் ஏற்றுக்கொண்ட பல்வேறு
அமைப்புகளிலும் அங்கம் வகித்த,வகிக்காத
மாணவர்கள் தங்களுக்குள் இணைந்து நின்றுதான்
போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.ஒரு
கட்டத்துக்கு மேல் சரியான வழிகாட்டல் அற்ற
நிலையிலேயே மாணவர்களின் போராட்டங்கள்
தேங்கிப்போயின.


தர்க்கரீதியாக வேறு ஒரு விசயத்தின் மூலமாக இதை
நிறுவலாம்.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தின்
பாதையை மக்களநடமாட்டம் இல்லாத பகுதிக்கு
விடுதலைச்சிறுத்தைகள் திருப்பிய போது
சத்தமேயில்லாமல் பின்னால் போனவர்கள் இவர்கள்.
திருமாவும்,வன்னியரசும்,வேல்முருகனும்,
முத்துக்குமாரின் உடலைக் கைப்பற்றி இடுகாட்டுக்கு
எடுத்துச்சென்ற போது வேடிக்கை பார்த்தவர்கள்
இவர்கள்.இந்த நிகழ்வுகளை வைத்தே சொல்லி
விடலாம்.இவர்களின் வீரம் எப்படிப்பட்டது என்று.
ஈழத்தையும் ஏற்காத,புலிகளையும் ஏற்காத இந்த
வீரர்களின் மாணவர் அமைப்புதான் தமிழகத்தில்
மாணவர்கள் முன்னெடுத்த போராட்டங்களின்
பின்னனியில் நின்றது என்று சொல்வதை
அயோக்கியத்தனம் என்கிற ஒற்றை வார்த்தைக்குள்
அடக்கி விட முடியாது என்றே தோன்றுகிறது.


புரட்சிகர அரசியல் என்றால் நேபாள தோழர்களின்
முதுகுக்கு பின்னால் எப்படி ஒளிவார்களோ
அப்படியே முத்துக்குமார் விசயத்தில் இவர்கள்
மீது விமர்சனம் எழுப்பப்பட்டவுடன் இன்று
வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையனின்
முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.
முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தை எழுச்சி
மிக்கதாக்க இவர்கள் போராடினார்களாம்.எழுச்சி
மிக்கதாக நடைபெற வேண்டிய இறுதி
ஊர்வலம் சந்தர்ப்பவாதிகளால் சீர்குலைக்கைப்
படுகையில் எங்கே ஓடி ஒளிந்து கொண்டீர்கள்
என்பதுதானே கேள்வியே?அதற்கு கடைசிவரை
பதிலையே காணவில்லையே.


ஓட்டுக்கட்சி தலைவர்களின் அரசியலை இவர்கள்
விமர்சிப்பது ஒரு புறமிருக்கட்டும்.ஈழத்தமிழர்
மீதான படுகொலை பற்றிய செய்திகள் தமிழகம்
தழுவிய அளவில் ஒரு அரசியல் எழுச்சியை
ஏற்படுத்தியது மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்று
அடுத்த பொய்.தமிழக அரசின் உளவுத்துறை
மாணவர்களின் மத்தியில் தோன்றக் கூடிய
எழுச்சியை சரியாக கணக்கிட்டுக் கூறி
இருந்ததாலேயே தமிழக அரசு,தமிழகம்
முழுவதும் கல்லூரிகளை காலவரையின்றி
மூட உத்தரவிட்டது.உண்மை இப்படி இருக்க
தமிழகம் தழுவிய எழுச்சி ஏற்பட்டதாக கருத
முடியாது என்று கூறுவதை என்னவென்பது ?
மேலும் முத்துக்குமாரை தொடர்ந்து
தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்காக
தங்களின் உயிரை பலரும் ஈகையாக தந்து
கொண்டிருந்த காலமது என்பதை எவ்வளவு
சாமர்த்தியமாக மறைக்கிறார்கள்.எப்படா
கல்லூரிகளைச் சாத்துவார்கள் என்று பார்த்துக்
கொண்டு இருந்துவிட்டு,மூடிய
கல்லூரிகளுக்கு மாணவர்களைத் திரட்டப்
போனால் மாணவர்களை திரட்ட
முடியாமல்தான் போகும் வீரர்களே.


போகிற போக்கில் புலிகளுக்கு எதிராகச் சேறடிப்பதில்
தினமலர்,துகளக் சோ,இந்து ராமை மிஞ்சியவர்கள்
இவர்கள் என்பது நாம் அறிந்த விசயம்தான்.அதில்
ஒன்று புலிகள் இஸ்ரேலின் உளவுத்துறைக்காக
போதைப்பொருள் கடத்தினார்கள் என்பது.
அதற்கான ஆதாரங்களை முதுகில் செருகிக்
கொண்டே அலைகிறார்களா என்பது இன்றுவரை
சிதம்பர ரகசியமாக இருக்கிறது.ஆதாரப்பூர்வமான
குற்றசாட்டுகளையே கூறுவதாக சத்தியம் செய்யும்
இவர்களிடம் நாம் கேட்பது ஒன்றுதான்.2008
இல் இருந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக
இவர்கள் நடத்திய போராட்டங்களில் கைதான
இவர்களின் அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள்,
வழக்குரைஞர்கள்,ஆண்கள்,பெண்கள்,நிர்வாகிகள்
பற்றிய விவரம்,அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட
வழக்குகள்,வழக்குகளின் இன்றைய நிலை
பற்றியெல்லாம் ஒரு வெள்ளை அறிக்கை
வெளியிட்டு உங்களின் நேர்மையை
பறைசாற்றுங்கள் முதலில்.


ஈழத்த தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான
அங்கீகாரம் தமிழக மக்களிடம் இல்லை என
அடுத்த கண்டுபிடிப்பு.ஆனந்த விகடனில்
வந்த கருத்துக்கணிப்பு என்று நினைக்கிறேன்.
ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு தனி ஈழமே
தீர்வு என்றுதான் பெரும்பாலான தமிழர்கள்
வாக்களித்திருந்தார்கள்.மேலும் புலிகள்தான்
ராஜீவ்காந்தியைக் கொன்றார்களா என்பது
இன்றளவும் விவாதத்துக்குறிய விசயமாக
நீடித்தாலும்,ராஜிவ்காந்தியின் கொலைக்காக
பிரபாகரனை தண்டிக்க வேண்டுமா என்கிற
கேள்விக்கு கூடாது என்றே பெரும்பாலான
தமிழர்கள் வாக்களித்திருந்தார்கள்.இந்த
நிகழ்வின் ஊடாக வெளிப்படும் ராஜிவ்காந்தி
கொலையை தமிழக மக்கள் மறந்து
விட்டார்கள் என்கிற விசயத்தோடு,
பெரியாருக்குப் பிறகு தமிழகத்தில் இந்திய
அதிகாரவர்க்கத்தால் கட்டமைக்கப்பட்ட
பார்ப்பன இந்தியதேச பக்தியையும் கூட
தமிழக மக்கள் கடந்து வர
துவங்கியுள்ளனர் என்பதும் புலப்படுகிறது.

Thursday, February 25, 2010

மீண்டும் பனிப்போருக்குள் உலகம்





இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே சர்வதேச சூழலில்
ராணுவ மேலாதிக்கம் கொண்ட நாடுதான் அரசியல்,
பொருளாதாரரீதியான மேலாதிக்கத்திலும் ஆதிக்கம்
செலுத்த முடியும் என்பது நாம் அறிந்ததுதான்.அந்த
வகையில் இன்றைய நிலையில் ராணுவ பலத்தில் ரசியா
முதலிடத்தில் இருக்கிறது.அமெரிக்காவும்,சீனாவும் சம
வலிமை கொண்ட நாடுகளாக இருக்கின்றன.
இவைகளோடு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும்
தகுதி கூட அற்றதாகத்தான் இந்தியா இருக்கிறது.




எதிரி நாடுகளின் அணு ஆயுத ஏவுகணைகளை
வானிலேயே தடுத்து அழிக்கும் தொழில்நுட்பம்
கொண்ட நாடுகளாகவும்,அணுஆயுதங்களின்
தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு பெற்ற
நாடுகளாகவும்,ரசியா,சீனா,அமெரிக்கா
ஆகிய மூன்று நாடுகளே இருந்த நிலை மாறி
வானில் தங்கள் ஏவுகனைகளை தடுக்கும்
எதிரி நாட்டு ஏவுகணைகளிடம் சிக்காமல்
சென்று தாக்கும் டோபோல் ஆர் எஸ் எம் 12
என்கிற ஏவுகணையை ரசியா வெற்றிகரமாக
சோதித்து,தன் ராணுவத்தில் சேர்த்து மூன்று
ஆண்டுகளாகிவிட்டது.அதன் மூலம்
முதலிடத்துக்கு முன்னேறிவிட்டது ரசியா.



அமெரிக்காவிடமும்,சீனாவிடமும் அதுபோன்ற
தொழில்நுட்பம் இல்லாத நிலையிலும் ராணுவ
வலுவில் சமநிலையில் உள்ளன.சீனாவின்
எந்தப் பகுதியையும் தாக்கும் நிலையில்,
அமெரிக்காவும்,அமெரிக்காவின் எந்தப்
பகுதியையும் தாக்கும் நிலையில் சீனாவும்
உள்ளன.மேலும் விண்ணுக்குசெயற்கைக்
கோளை அனுப்பி பூமியில் இருந்து தாக்கி
அதனை அழிக்கும் சோதனையையும் சீனா
வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது.




முக்கி,முக்கி இப்போதுதான் இந்தியா 3500கிலோ
மீட்டர்கள் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை
சோதித்து வெற்றி கண்டிருக்கிறது.இந்தியாவின்
எந்த மூலையையும் தாக்கக்கூடிய சீன அரசின்
ஏவுகணைகளின் முன் பாதுகாப்பு எதுமில்லாமல்
இந்தியா நின்று கொண்டிருக்கிறது.அமெரிக்கா
மற்றும் இஸ்ரேலுடனும் இந்திய அதிகாரவர்க்கம்
ஏவுகணைகள் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு
ஒப்பந்தம் செய்திருக்கிறது என்பது உண்மைதான்
என்றாலும்,அந்த நாடுகள் இந்தியாவின் சார்பில்
தலையிடுவார்கள் என்று கருத முடியாது.
காலை வாரிவிடுவத்ற்கான வாய்ப்புகளே அதிகம்.
சீண்டிப்பார்த்தால் மென்னியைத் திருகி விடும்
சீனா என்பது இந்திய அதிகாரவர்க்கத்துக்கே
நன்கு தெரிந்த ஒன்றுதான்.



மேலும் இன்னொரு தகவலையும் பார்க்க வேண்டி
இருக்கிறது.இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு
முன்பாக,அமெரிக்காவின் விமானப்படையில்
இருந்து கழட்டிவிடப்பட்ட மூன்றாம் தலைமுறை
போர் விமானமான F 16 ரக விமானங்களை
கொள்முதல் செய்வதில் நாய்ச்சண்டையில்
ஈடுபட்டிருந்த இந்திய,பாகிஸ்தான் அரசுகள்.
சென்ற வருட இறுதியில் ஐந்தாம் தலைமுறை
அமெரிக்கப் போர்விமானங்களுக்கு இணையான
J 10 ரக போர்விமானங்களை சீன அரசு
பாகிஸ்தானுக்கு விற்றபின்,தன் விமானப்படை
பலத்தை இழந்த இந்திய அரசு அவசரமாக
ரசியாவிடம் மிக் 29 ரக விமானங்களை
கொள்முதல் செய்தபின்பே ஆசுவாச மூச்சு விட
முடிந்தது.நேரடி களங்களாக இல்லாமல்
அமெரிக்காவை,ஈரான் வாயிலாகவும்,
வடகொரியா வாயிலாகவும் கையாளுவது
போல இந்தியாவை,பாகிஸ்தான் வாயிலாக
கையாளுவதே சீனாவுக்கு போதுமானதாக
இருக்கும்.




மொத்தத்தில் சீனாவுக்கு எதிரியாக இருக்கும் தகுதி
இந்தியாவுக்கு இல்லை என்பதுதான் புரிந்துகொள்ள
வேண்டிய உண்மை.அதோடு இந்தியமுதலாளிகள்
தரகு முதலாளிகள்.அடிக்கிற கொள்ளையில்
உனக்கு 60 % எனக்கு 40 % என்பதுதான்
எப்பொழுதும் இவர்களின் குணமாக இருந்து
வந்திருக்கிறது.அந்த வகையில்தான்
இலங்கையை,ஈழத்தை சீன,இந்திய ஆளும்
வர்க்கங்கள் பங்கிட்டுக்கொண்டு கொள்ளை
அடித்துக்கொண்டு இருக்கின்றன.ஏற்கனவே
சொன்னது போல ரசிய சீன சார்புடனும்,
ஓரளவு தற்சார்பு நிலையிலுமே இந்திய
அதிகாரவர்க்கம் இயங்குகிறது என்பதுதான்
தற்போதைய நிலை.



ஏறக்குறைய இரண்டாம் கட்ட பனிப்போருக்கு உலகம்
முகம் கொடுக்கத்துவங்கி விட்டது.சம பலமற்ற
நிலையிலும்,எதிரியை புறக்கணித்துவிட்டு தனது
ஆதிக்க நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் பாணியில்,
போலந்தில் அணுஆயுத ஏவுகணைகளை நிறுத்தி
ரசியாவை,முற்றுகையில் வைக்கும் திட்டத்தை
மீண்டும் தொடரப்போவதாக அமெரிக்கா
அறிவித்திருக்கிறது.ஈரான் மீதான அமெரிக்க,
இஸ்ரேலிய விமானப்படைகளின் தாக்குதலை
செல்லாக்காசாக்கிவிடும் திறன் கொண்ட S 300
என்கிற அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளை,
ஈரானுக்கு விற்பனை செய்யப்போவதாக அறிவித்து
பதிலடி கொடுத்திருக்கிறது ரசியா.மேலும் மேலும்
நெருக்கடியான காலகட்டங்களுக்கு முகம்
கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டு
இருக்கிறோம் நாம்.


தொடர்புடைய பதிவுகள்

http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_1271.html
http://stalinguru.blogspot.com/2009/08/blog-post_17.html
http://stalinguru.blogspot.com/2009/11/blog-post_11.html
http://stalinguru.blogspot.com/2010/02/1_16.html
http://stalinguru.blogspot.com/2010/02/2.html

Tuesday, February 23, 2010

புரட்சிக்குள் ஒளியும் பார்ப்பன தேசிய பக்தர்கள்

இந்தியப் புரட்சி,மற்றும் மார்க்சிய லெனிய அரசியலின்
ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக தங்களைக் காட்டிக்
கொள்ளும் ‘மக்கள் கலை இலக்கிய கழகத்தின்’
இணையப் புரட்சியாளர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக
எழுதிக்கொண்டு இருக்கிறோம்.அந்த வகையில் இது
அடுத்த பதிவு.ஈழத்துக்கு எதிராகவும்,பொதுவாகவே
தமிழர்களுக்கு எதிராகவும்,பார்ப்பன வன்மத்தைக்
கொட்டும் இவர்களை கடுமையாகவே விமர்சிக்க
வேண்டி இருக்கிறது.புரட்சியின் மீதும்,மக்களின்
மீதும் உண்மையான நேசம் கொண்ட மனிதர்கள்
இவர்களின் கீழும் திரண்டிருப்பதை நாம் அறிந்தே
இருக்கிறோம்.இந்த பதிவுகளை அடிப்படையாக
வைத்து கேள்விகளை எழுப்பும் நிலையில் கூட
தங்களின் கீழ் இருக்கும் மனிதர்களை இவர்கள்
வைத்திருக்கமாட்டார்கள் என்பதும்,ஏறக்குறைய
ரஜினி ரசிகர்மன்ற உறுப்பினர்களைப் போலவே
அவர்களை தலைமை வழிநடத்தும் என்பதும் கூட
நாம் அறிந்ததுதான்.எனினும் உண்மையான
மக்கள் நேசம் கொண்ட மனிதர்கள்,இவைகளை
பரிசீலித்து தங்களை மாற்றிக்கொண்டால் அதுவே
நமக்கு கிடைத்த வெற்றிதான்.



சில மாதங்களுக்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள்
தலைவர் திருமாவளவனை விமர்சித்து ஒரு கட்டுரை
இவர்களின் புதிய ஜனநாயகம் இதழில் வந்திருந்தது.
ஆர்வத்துடன் படித்தபோது அதில் ஒரு விசயம் மிகக்
கவனமாக தவிர்க்கப்பட்டிருந்தது.அப்போதைக்கே
அதை கவனித்தாலும் உடனடியாக எதிர்வினை எழுத
வேண்டாம் என்று கருதியதால் விட்டு விட்டோம்.
மீண்டும் சமீபத்தில் வினவு இணையத்தில் வந்த
முத்துக்குமார் தொடர்பான கட்டுரையில்தான் அந்த
விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது.முத்துக்குமார்
மன்னித்து விடு ..சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள்
தோற்றுப்போனோம் என்ற கட்டுரையை வாசித்த
போது ஓநாய் வடிக்கும் கண்ணீர்தான் நினைவில்
வந்தது.சரி விசயத்துக்கு வந்துவிடலாம்.துவக்க
காலங்களில் திருமா தலித் மக்களிடம் வளர்த்த
சுயமரியாதை,அரசியல் உணர்வை எல்லாம்,
தூய வர்க்க அரசியலின் பெயரால் நிராகரிப்பது
சரியல்ல என்ற எண்ணமே இருந்து வந்தது.
அதையும் தாண்டி திருமாவளவனை கைவிட
வேண்டும் என்கிற முடிவுக்கு வரத் தூண்டியது
முத்துக்குமாருக்கும்,ஈழ மக்களுக்கும் அவர்
இழைத்த துரோகத்தின் பிறகுதான்.



காலவரையறையின்றி,கல்லூரிகளை மூட உத்தரவிட்ட
தமிழகஅரசை எதிர்த்து,முத்துக்குமாரின் விருப்பப்படி
அவரது உடலை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போராட
முடிவுசெய்து,சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்கள்
மீது,திருமா தனது கட்சியினரை வன்னியரசோடு
அனுப்பி,தாக்குதல் நடத்தியதும்,உடலைக் கைப்பற்றி
அடக்கம்செய்ததுமான துரோகம் நிகழ்ந்தேறிய பின்பே
முத்துக்குமார் விரும்பிய எழுச்சி நிகழாமல் போனது.
முத்துக்குமாரின் உடலைக் கைப்பற்றும் முயற்சி
நடந்தபோது இந்த வீராதி வீரர்கள் எதைப் பிடுங்கிக்
கொண்டு இருந்தார்கள் என்பதுதான் நமது கேள்வி.
வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு
இன்றைக்கு வந்து ஓநாய் கண்ணீர் வடிப்பவர்களை
என்ன செய்வது ? தெளிவாக புரிந்துகொண்டால்
முத்துக்குமார் விரும்பிய எழுச்சி நிகழாமல் போக
வேண்டும் என்று விரும்பியவர்களின் அணியில்,
ஆளும்வர்க்கத்தின் பக்கமே இவர்கள் நின்றார்கள்
என்பதை அறிய முடியும்.திருமாவின் துரோகத்தை
புதிய ஜனநாயகம் இதழில் எழுதாமல் விட்டுவிட்டு
இணையத்தில் மட்டும் எழுதும் உள் அரசியலும்
ஒன்றை தெளிவுபடுத்துகிறது.



இதழில் எழுதினால் இவர்களின் கீழ் இருக்கும் மக்கள்,
ஏன் வன்னியரசை எதிர்த்துப் போராடவில்லை என்று
கேள்வி எழுப்புவார்கள்.இவர்களின் வீரம் சந்தி
சிரித்து விடும்.இணையத்தில் எழுதினால் கேள்வி
எழுப்புபவர்களை இவர்களின் வழக்கமான திசை
திருப்பல்,முத்திரை குத்தல்,மன உளைச்சலுக்கு
உள்ளாக்கல் பாணி விவாத முறையில் ஏமாற்ற
முடியும் என்பதுதானே இவர்களின் திட்டம்.
இவர்கள்தான் இந்திய அரசை எதிர்த்து ஆயுதப்
புரட்சி செய்யப்போகிறவர்கள் என்றால் எதைக்
கொண்டு சிரிப்பது? இவர்கள் செய்யப்போகும்
இந்திய புரட்சியின் நிலைதான் இப்படி சந்தி
சிரிக்கிறது என்றால்,அரசு சாரா நிறுவனங்களின்
(N.G.O) தவப்புதல்வர்களான சில புலம்பெயர்
தமிழர்களைக் கொண்டும்,சில இலங்கை
மார்க்சியர்களைக் கொண்டும் இவர்கள்
செய்ய விரும்பும் இலங்கைப் புரட்சியின்
நிலையை நினைத்தால் மயக்கமே வருகிறது.



தேசிய இன உணர்வு இருந்தால் முல்லைத்தீவில் போர்
நடந்தபோது ஏன் யாழ்ப்பாணம் அமைதியாக இருந்தது
என்று ஒரு அடிமுட்டாள்தனமான கேள்வியை எழுப்பி
இருந்தார் சமீபத்தில் ஒரு விவாதத்தில் மக இக வை
சேர்ந்த ஒருவர்.அவர்களிடம் நாம் ஒரு கேள்வியை
கேட்க வேண்டி இருக்கிறது.முல்லைத்தீவில் போர்
நடந்தபோது உங்களின் தோழமைச்சக்திகளான,வர்க்க
அரசியலின் வாரிசுகளான இலங்கை மார்க்சியர்கள்,
புலிகள் கட்டுப்பாட்டில் இல்லாதிருந்த,கிழக்கு
பகுதியையும்,யாழ்ப்பாணத்தையும்,கொழும்பையும்
ஏன் அமைதியாகவே வைத்திருந்தனர் என்கிற
கேள்விக்கு பதில் என்ன? கருணாவை,டக்ளசை,
பேரினவாத சிங்கள அரசை எதிர்த்து,ஒரு
ஆர்பாட்டத்தைக் கூட நடத்த வக்கற்றவர்கள்,
சிங்களர்களோடு சேர்ந்து புரட்சி செய்ய போகிறார்கள்
என்றால் என்ன சொல்வது?



திருமாவைக் கண்டு மான் கராத்தே காட்டிய மக இக
வும், இலங்கை அரச பயங்கரவாதிகள் முன்னால்
செயலற்று நின்றவர்களும்,இந்திய புரட்சியையும்,
இலங்கை புரட்சியையும் நடத்துவோம் என்று
சொல்வதைக் கேட்டால்,முடியல முடியல என்று
வடிவேழுவின் இம்சை அரசன் வசனத்தைதான்
சொல்ல வேண்டி இருக்கிறது.மேலும் இங்கே
ஒரு விசயத்தையும் பதிவு செய்யத் தோன்றுகிறது.
1995 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை இழந்து
வெளியேறிய புலிகள்,2002 ஆம் ஆண்டு போர்
நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின் யாழ்ப்பாணத்துக்கு
வந்து கூட்டம் நடத்தியபோது 60.000 ஆயிரம்
மக்கள் புலிகளின் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.
இந்த நிகழ்வை வைத்தே சொல்லி விடலாம்.
தமிழர்கள் தங்களின் பாதுகாவலர்களாகவும்,
தங்களின் உரிமைகளுக்காக நேர்மையாக
போராடுபவர்களாகவும் புலிகளை மட்டுமே
ஏற்கிறார்கள் என்று.



சமீபத்தில் தோழர் விடுதலை இராசேந்திரன் இவர்களைப்
பற்றி எழுதிய கட்டுரையை படித்தபோதுதான் இவர்கள்
வழக்கமாகவே மான் கராத்தேகாரர்கள்தான் என்பது
புரிந்தது.மோடிக்கு எதிராக இவர்கள் நிகழ்த்திய
பாதுகாப்பான புரட்சி பற்றி படிக்கையில் புல்லரிப்பே
வந்துவிட்டது.ஒரு உண்மையும் கூட நினைவுக்கு
வந்தது.ஈழம் தொடர்பான போராட்டங்களில் மூன்று
பேரை சிறைக்கு அனுப்பிவிட்டு,ஆயிரக்கணக்கில்
எங்கள் தோழர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்று
கூசாமல் பொய் சொன்னவர்கள்தானே இவர்கள்.
ஈழத் துரோகிகளான திராவிட முன்னேற்ற கழகத்திடம்
இருந்து நன்கொடை பெற்றார்கள் என்று பெரியார்
திராவிடர் கழகத்தின் மேல் கடுமையான
விமர்சனம் வைத்திருந்தார்கள் சமீபத்தில்.



திமுக போலவே ஈழத் துரோகிகளான பாட்டாளி மக்கள்
கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளரையும்,
விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலப் பொதுச்
செயலாளரையும் தில்லைக்கோவில் தொடர்பான
கூட்டதில் மேடையேற்றியது மட்டும் புரட்சிகர
நடவடிக்கையோ?பெரியாரிய தோழர்களுக்கு எதிரான
பார்ப்பன வன்மம்தானே விமர்சனம் என்கிற பெயரில்
வந்து விழுந்திருக்கிறது.சூத்திரனுக்கு ஒரு நீதி,
பார்ப்பானுக்கு ஒரு நீதி என்கிற மனுதர்ம வாரிசுகள்
தங்களுக்கு ஒரு நீதியும்,மற்றவர்களுக்கு ஒரு
நீதியும் வைத்திருப்பார்கள் என்பது இயல்புதானே.
சோவியத் வீழ்ந்தால் அமெரிக்கச்சதி காரணம்,
புலிகள் வீழந்தால் மட்டும் அகக்காரணஙகள் என்பது
வரை இவர்களின் நீதி இப்படித்தான் இருக்கிறது.
திமுகவோடு சேர்ந்துதான் தமிழின ஓர்மையை
காப்பாற்ற முடியும் என்கிற பெரியார் திராவிடர்
கழகத்தின் கருத்தோடு நாம் உடன்பட முடியாது
என்பதையும் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.



இவர்களின் எழுத்துகளை தொடர்ந்து வாசித்துக்கொண்டு
இருப்பவர்களால் ஒரு விசயத்தை எளிதாக உணர
முடியும்.தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்துக்
கொண்டிருக்கும் தேசிய இன அடையாளம் பற்றிய
விழிப்புணர்வால் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டிருக்கும்
இயல்பான பதற்றத்தை அதிலும் காண முடியும்.
ராமதாஸ் போன்ற அப்பட்டமான ஓட்டுப்பொறுக்கி
அரசியல்வாதியை தமிழ்த்தேசியவாதியாக்கி,தலித்
மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக கவிதை
எழுதுகிறோம் என்ற பெயரில்,தமிழ் அடையாளத்தை
இழிவு செய்த பார்ப்பன குயுக்தி மூளையின்
திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.
இன்றைக்கு அதே ராமதாசின் கட்சியை சேர்ந்தவரை
மேடையில் ஏற்றுகையில் மட்டும் தலித்துகள் மீதான
அக்கறை காணாமல் போய் விடுகிறதே ஏன்?
மேலும் இவர்கள் என்றைக்காவது இந்திய அரசு,
இந்தியாவின் வடகிழக்கில் இருக்கும் தேசிய
இனங்கள் மீது நிகழ்த்தும் தாக்குதலை வைத்துக்
கொண்டு,இந்திய தேசியத்தின் மீதும்,இந்தியன்
என்கிற அடையாளத்தின் மீதும் சேறடிக்கிற
வேலை செய்திருக்கிறார்களா என்றால்,இல்லை
என்பதே பதிலாக இருக்கிறது.



அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.சுலபமாகச்
சொல்லி விடலாம்.இந்தியாவெங்கிலும் இருக்கிற
எல்லா தேசிய இன மக்களோடும் வசித்தாலும்,அந்த
மக்களில் இருந்து அந்நியப்பட்டவர்களாகவும்,அந்த
மக்களையே சாதி ஒடுக்குமுறையால் சுரண்டுபவர்
-களாகவும்,இந்தியா என்கிற கட்டமைப்பின் வழியாக
மட்டுமே தங்கள் மேலாதிக்கத்தை உறுதிபடுத்திக்
கொள்ள முடியும் என்கிற யதார்த்தத்திலும் இருக்கும்
பார்ப்பனர்கள் மணிரத்தினம் பட கதாநாயகன் போல
இந்தியப்பாசத்தில் பொங்குவது இயல்பான ஒன்றுதான்.
அந்த பார்ப்பன தேசிய பக்திக்கு எதிராக தேசிய இன
அடையாளம் பற்றிய விழிப்புணர்வு எங்கு எழுந்தாலும்
அதை சிறுமைப்படுத்துவதை,கம்யூனிஸ்ட் கட்சிகளில்
இருக்கும் பார்ப்பனர்கள் செய்துகொண்டுதான் உள்ளனர்.



இந்தியதேசியத்தாலும்,இந்திய அடையாளத்தாலும்,இந்திய
நிலப்பரப்பில் இருக்கும்,தேசிய இனங்கள் தங்கள்
அடையாளத்தை இழந்துகொண்டிருப்பதை எப்படி ஏற்க
முடியும் என்கிற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை
இந்த பார்ப்பன தேச புரட்சியாளர்களிடமிருந்து.விட்டால்
இந்திராகாந்தி சோசலிசம் என்கிற வார்த்தையை
அரசியல் சட்டதின் முகப்பில் சேர்த்துவிட்டார்.அதனால்
நாம் சோசலிச கட்டத்தில் இருந்து பொதுவுடைமை
கட்டத்துக்கு போய்க்கொண்டு இருக்கிறோம்.அதனால்
தேசிய இன மொழி,பண்பாட்டு அடையாள அழிப்பைப்
பற்றி கவலைப்படை தேவையில்லை என்று பதில்
சொன்னாலும் சொல்வார்கள்.மொத்தத்தில் இந்திய
தேசிய இனங்கள் தங்களின் தேசிய விடுதலைக்கான
போராட்டங்களை முன்னெடுப்பதும்,தங்கள் தேசிய
இன அடையாளங்கள் உறுதிபடுத்திக்கொள்வதுமே
இப்போதைக்கு தேவையாக இருக்கிறது.



இந்திய மாவோயிஸ்டுகளோடு இணைந்து நிறக வேண்டிய
தேவை வந்தாலும்,மீண்டும் இந்திய கட்டமைப்பில்
இணைய வேண்டி வந்தாலும் கூட தங்களின் தேசிய
அடையாளம் பற்றிய முழு விழிப்புணர்வு கொண்ட
தேசிய இனங்களால் மட்டுமே தங்களை காத்துக்
கொள்ள முடியும்.சாதியையும் மதத்தையும்
வைத்துக்கொண்டு என்னதான் பொதுவுடைமையக்
கொண்டு வந்தாலும்,அதிலும் பார்ப்பனர்கள் மததையும்
சாதியையும் கொண்டு வந்து தங்கள் மேலாதிக்கத்தை
நிலை நிறுத்திகொண்டு விடுவார்கள் என்கிற
பெரியாரின் எச்சரிக்கையை நினைவுபடுத்திக்கொள்ள
வேண்டி இருக்கிறது.இந்தியதேசியத்துக்கும்,இந்திய
அடையாளத்துக்கும் பார்பனியத்துக்கும் உள்ள
உறவை இயங்கியல் ரீதியாக புரிந்துகொண்டு,இந்திய
அடையாள நிராகரிப்போடு தேசிய இனங்கள்
இயங்குவது மட்டுமே சரியான விசயமாக இருக்க
முடியும்.



இந்திய வரலாற்றில் நிலவிய எல்லா அரசு வடிவங்களிலும்
தங்களின் மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்வதில் பார்ப்பன
சமூகம் காட்டி வந்திருக்கும் அதீத திறமையை வரலாறு
முழுக்க கண்டு வந்திருக்கிறோம் நாம்.சோசலிசத்தின்
பெயரால் இந்தியாவிலும் ஒரு அதிகாரவர்க்க ஆட்சி
நிறுவப்பட்டால் அதிலும் தங்களின் மேலாதிக்கத்தை
நிறுவிக்கொள்வதில் பார்ப்பனர்களுக்கு சிரமங்கள் இருக்க
போவதில்லை.அதே நேரம் மிகைப்படுத்தப்பட்ட
பார்ப்பன எதிர்ப்பையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டி
இருக்கிறது.பிறப்பின் அடிப்படையை வைத்து பார்ப்பனர்
என்று அவதூறு செய்யப்படும் கிஷன்ஜீயிடமிருந்தே
இந்திய இடதுசாரிகளிடம் இலகுவாக காண முடியாத
சோவியத் யூனியன் பற்றிய நேர்மையான விமர்சனங்கள்
வருகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது.
சோவியத் யூனியனில் அதிகாரவர்க்க ஆட்சியை
அமைக்க துணைபோனதாக லெனினையும்,அதிகார
வர்க்க ஆட்சியை அமைத்ததாக ஸ்டாலினையும்,
அவர் விமர்சித்திருப்பது.தங்கள் பிரதேசங்களில்
உருவாக்கி இருக்கும் மக்கள் புரட்சிகர கமிட்டிகளில்
ஜனநாயகபூர்வமான தேர்தல்களை நடத்துவது,நாங்களும்
தவறு செய்கிறவர்கள்தான் எங்களையும் எதிர்த்துப்போராட
கற்றுக்கொள்ளுங்கள் என்று மக்களுக்கு பயிற்றுவிப்பதை
எல்லாம் நாம் ஆரோக்கியமான முன்னெடுப்புகளாக
கருத முடியும்.



இவர்களின் பார்ப்பன வன்மத்துக்கு உதாரணமாக மேலும்
சில விசயங்களைப் பார்த்துவிட்டு இந்தப் பதிவை
முடித்துக் கொள்ளலாம்.ஜெயராம் பற்றிய கட்டுரையில்
காகிதப்புலி சீமானின் தம்பிகள் போலிஸ் பாதுகாப்போடு
ஜெயராம் வீட்டைத் தாக்கியதாக எழுதி இருக்கிறார்கள்.
இந்தக் காகிதப்புலிகள் முத்துக்குமார் விசயத்தில்,
வன்னியரசிடம் மான் கராத்தே காட்டி ஓடியது ஒரு
புறம் இருக்கட்டும்.தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும்
அவ்வப்போது தமிழக போலிசை சந்திருந்தால் கூட
தமிழகப் போலிசைப் பற்றி இவர்களுக்குத் தெரிந்து
இருக்கும்.அரசிடம் அனுமதி பெற்று நடத்தும்
ஆர்ப்பாட்டங்களைத் தவிர வேறு எதுவும் செய்யாத
புரட்சியாளர்களாயிற்றே இவர்கள்.சேலம் ரயில்வேக்
கோட்டம்,முல்லைப்பெரியாறு,ஈழத்தமிழர்களுக்கான
போராட்டங்கள் எதிலாவது கலந்துகொண்டிருந்தால்
தமிழக போலிசின் இந்தியப்பாசம் புரிந்திருக்கும்.
சேலம் கோட்ட பிரச்சணையாகட்டும்,முல்லைப்
பெரியாறு பிரச்சனையாகட்டும் கேரள முதலமைச்சர்,
மத்திய அமைச்சர் யாருடைய கொடும்பாவிகளையும்,
ஏன் சிங்கள ராஜபக்ஸேவின் கொடும்பாவியைக்கூட
எரிக்க விட்டதில்லை தமிழக போலிஸ்.தள்ளுமுள்ளு
நடந்த பிறகே எரிக்க முடியும்.அதே நேரம் தமிழக
அமைச்சர்களின் கொடும்பாவிகள் கேராளாவில்
போலிஸ் பாதுகாப்புடன் எரிக்கப்படுவதை தொலைக்
காட்சிகளில் நன்றாகவே பார்க்க முடிந்தது.அரச
விசுவாசத்திலும்,இந்திய விசுவாசத்திலும் நாயினும்
கீழான தமிழகபோலிஸ் சீமானின் தம்பிகளுக்கு
பாதுகாப்பு கொடுத்தது என்று எழத புறநானூற்று
வீரம் தேவையில்லை பார்ப்பன சாணக்கியனின்
குயுக்தியே போதும் .



மலையாளிகள் தமிழனது உருவத்தையும் வடிவத்தையும்
கேலி செய்வதற்க்கும்,தமிழர்கள் மலையாளிகளின்
ஆளுமையையும் பண்பையும் கேலி செய்வதற்கும்
பாரிய வேறுபாட்டை கண்டு பிடித்திருக்கிறார்கள்
முன்னது நகைச்சுவையாம்,பின்னது காழ்ப்புணர்வாம்.
எது நகைச்சுவை? தமிழர்களை சுத்தமற்றவர்களாக,
பிச்சை எடுப்பவர்களாக சித்தரிப்பது நகைசுவையா?
உருவத்திலும் வடிவத்திலும் தமிழர்களுக்கும்,
மலையாளிகலுக்கும்,என்ன வேறுபாடு உள்ளது.
நிறம்தான் வேறுபடும்.நிறத்தை வைத்துதான்
தமிழர்களை இழிவு செய்கிறார்கள் என்பதுதானே
உண்மை.அதை சொல்வதில் இருந்து எது
இவர்களைத் தடுக்கிறது.நிறத்தின் அடிப்படையிலும்
சுத்தத்தின் அடிப்படையிலும்,தீண்டத்தகாத மனநிலை
கொண்டு தமிழர்களை இழிவு செய்வதை,மலையாள
சமூகம் பார்ப்பன அடிமைத்தனத்தில் இருந்து
விடுபடாதன் நீட்சியாகப் பார்ப்பதுதானே சரியாக
இருக்க முடியும்.அதை வெறுமனே நகைச்சுவை
என்று எழுதி தங்களின் பார்ப்பன விசுவாசத்தை
காட்டிக்கொண்டிருக்கிறார்கள் இந்தப்
புரட்ச்ச்ச்ச்யாளர்கள் என்பதுதான் உண்மை.
மேலும் தமிழர்களை கிண்டல் செய்வார்களாம்,
சித்தரிப்பார்களாம் என்று எதற்கெடுத்தாலும்
ளாம் போடுகிறார்கள்.ஏன் எதையும் அவர்கள்
செய்வதே இல்லையா? கிண்டல் செய்கிறார்கள்,
சித்தரிக்கிறார்கள் என்று கூட எழுத மறுக்கும்
இவர்கள்.அவற்றை வாதத்துக்காக உண்மையென்று
வைத்துக்கொண்டாலும் என்று எழுதி இருக்கிறார்கள்.
எந்த அளவுக்கு தமிழர்களை மடையர்களாக
பார்ப்பன குயுக்தி மூளை கருதுகிறது என்பதற்கு
இதுவே சாட்சியாகும்.ஜெயராம் பிரச்சனையில்
மிகச்சரியான நிலைப்பாடு ஏற்கனவே தமிழக
அரசியல் வழியாக சமூகத்தில் பரவலாககொண்டு
செல்லப்பட்டுவிட்டது என்பதால் இத்தோடு
நிறுத்திக்கொள்ளலாம்.



மற்றபடி தமிழ்த்தேசியர்களாக இவர்களே ஒரு
பட்டியலை வைத்துக்கொண்டு அவர்கள் ஏன்
அதைச் செய்யவில்லை இவர்கள் ஏன் இதை
செய்யவில்லை என்றெல்லாம் கேட்பதற்கு
நம்மிடம் ஒரே பதில்தான் இருக்கிறது.
மார்க்சியம் பேசுவதாலேயே மக இக வினர்
மார்க்சியர் ஆகிவிட முடியாது என்பது
எத்தகைய உண்மையோ,அத்தகைய
உண்மைதான் தமிழ்த்தேசியம் பேசுபவர்கள்
எல்லோரும் தமிழ்த்தேசியவாதிகள் ஆக
முடியாது என்பதும் பலமுறை இவர்களை
விமர்சித்தாகிவிட்டது,புரட்சிகர அரசியல்,
ஈழம்,இடஒதுக்கீடு,எல்லாவற்றிலும்
இவர்கள் அம்பலப்பட்டு போயிருக்கிறார்கள்
என்பதால் மீண்டும் அதிகம் கிளற
வேண்டியதில்லை.தேனொழுகும்
வார்த்தைகளில் இந்திய தேசிய
இனங்களின் பாட்டாளிவர்க்க
ஒருங்கிணைவு பேசினாலும்,அதன்
உள்ளடக்கமாக பார்ப்பன ஒருங்கினைவும்,
மேலாதிக்கமும் நிலை நிறுத்தப்படும்
என்பதாலேயே எழுத்தாளர் ஞாநி
போன்றவர்கள் இவர்களை பாராட்டுகிறார்கள்
என்பதே போதும் இவர்களின் அரசியல்

தொடர்புடைய பதிவு
http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_28.html

Tuesday, February 16, 2010

இடதுசாரி,தேசிய போராட்டங்களின் இன்றைய வடிவம் - 2




தேசிய இனங்கள் பற்றிய நேபாள தோழர்களின் செயல்பாடுகளை
முழுக்க அப்படியே இங்கே பின்பற்ற முடியாது என்பதே
உண்மை.நம்மைப் பொறுத்தவரை,காஸ்மீர்,தமிழகம்,
நாகாலாந்து,அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு தேசிய இனங்கள்,
தங்களின் தேசிய விடுதலைக்கான போராட்டங்களை
தீவிரப்படுத்துவதன் வழியாகவே இந்திய புரட்சிகர
அரசியலுக்கு உதவ முடியும்.சாத்தியமான சர்வதேச சூழல்கள்
அமைந்தால் தேசங்களாக தங்களை அமைத்துக்கொளவது,
அல்லது நேபாள தோழர்களின் பாணியில் இந்திய
மாவோயிஸ்டுகள்,ஒரு குறிப்பிட்ட கால ஆயுதப்
போராட்டத்துக்குப் பிறகு,தங்களை நிராகரிக்க முடியாத
அரசியல்சக்திகளாக இந்தியப்பெருநிலப்பரப்பில் உறுதி
படுத்திக்கொண்டு,பாராளுமன்றத்துக்கு செல்லும்போது
அவர்களோடு ஒத்துழைப்பது போன்ற செயல்பாடுகளே
உதவியாக அமையும்.மேலும் நேபாளம் போன்ற மிகச்சிறிய
பிராந்தியமாக இந்தியா இல்லை என்பதையும் நாம் மறுக்க
முடியாது.நூறு கோடி பேர் கொண்ட சந்தையை இழக்க
நேரும் என்றால் அதை எந்த விலை கொடுத்தேனும் தடுக்க
ஏகாதிபத்தியங்கள் முயலவே செய்யும்,அணு ஆயுதத்தாக்குதல்
உட்பட எதையும் எதிர்பார்க்கலாம்.போராடும் களங்களை
சிறியதாக்குவதன் வழியாக மட்டுமே நாம் அந்த அபாயத்தை
தவிர்க்க முடியும்.அதே நேரம் ஆயுதங்கள் விற்பனைக்கான
களமாக தேசிய விடுதலைப்போர்க்களங்களை
பாவிப்பதன் மூலம் தங்களின் இலாபத்தை தக்க வைக்க
ஏகாதிபத்திய அரசுகள் முயலும் என்பதையும் மறுக்க
முடியாது.அதற்கான வாய்ப்பை மறுக்கும் விதத்திலேயே
தேசியவிடுதலைப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.



ஏகாதிபத்தியங்களின் சூறையாடலுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த
பிரதேசமாக இருந்த ஈழமும்,தமிழகத்தின் நிலைக்கு கொண்டு
வரப்பட்டுவிட்டது.ஏகாதிபத்தியங்கள் தங்கள் சூறையாடலை
ஈழ மண்ணில் நிகழ்த்த துவங்கி இருக்கின்றன.வளர்சித்
திட்டங்கள் என்கிற பெயரில் வாழ்வாதாரங்களை அழிப்பது,
சுற்றுச்சூழலை சீரழிப்பது என்கிற ஏகாதிபத்தியங்களின் எல்லா
நடவடிக்கைகளும் ஈழ மண்ணில் நடைபெறத் துவங்கி உள்ளன.
எந்த விட்டுக்கொடுப்புகளுமற்ற ஆயுதப்போராட்டத்தை நடத்திக்
கொண்டிருந்த விடுதலைப்புலிகளும் அகற்றப்பட்ட நிலையில்,
எந்த தடைகளும் இல்லாம் ஈழம் சூறையாடப்படும் நிலையே
இருக்கிறது.பொருளாதார ரீதியான சுரண்டலோடு,கலாச்சார
ஏகாதிபத்தியத்தின் கீழ் மக்களின் போராடும் உணர்வை
மழுங்கடிக்கும் நடைமுறைகள் எற்கனவே,புலிகள்
கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்த பிரதேசங்களில்
ஆரம்பிக்கபட்டிருந்தன.அது இனி தமிழீழத்தின் சகல
பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.போராடும் தேசிய இனங்கள்
தங்களுக்கான வழிமுறையாக ஏற்க வேண்டிய பொதுவான
அம்சங்களை பரிசீலிக்க முயலலாம்.



வெகுசன வன்முறையோடு இணைக்கப்பட்ட இருபத்தியோராம்
நூற்றாண்டுக்கான கெரில்லா யுத்தமே,இனி வரும்
காலங்களில் தேசிய விடுதலைப்போர்களுக்கான வழிமுறை
என்றாக முடியும்.வேலை நிறுத்தங்கள்,குஜ்ஜார்கள்,
காஸ்மீரிகள்,பாலஸ்தீன மக்களின் இண்டிபதா பாணி
வெகுசன வன்முறையே முதன்மை வழியாக மாற வேண்டும்.
அதோடு ஏகாதிபத்திய நாடுகளின் நுகர்பொருட்களான
சந்தையை,அந்நிய பொருட்களின் புறக்கணிப்பின் வழியாக
நிகழ்த்துவது.நிலங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்காத
நிலையிலும்,அரசுக்குள்ளேயே அரசாக இயங்கி சிறிய
அளவிலான தற்சார்பு பொருளாதாரத்தை கட்டமைக்க
முயற்சிப்பது போன்றவைகள் பற்றி எல்லாம் நாம்
சிந்திக்கத் துவங்க வேண்டும்.



ஆயுதப்போராட்ட வடிவங்கள் பற்றி விரிவாக பேசுவது
தேவையற்ற ஒன்றாக இருந்தாலும்,ஆயுதப்
போராட்டங்களின் தேவை மறைந்து விட்டது என்று
கூற இயலாது.ஒன்றை மட்டும் உறுதியாகக்
கூறலாம்.தேசியஇன விடுதலைப்போராளிகளோ,
இடதுசாரிகளோ யாராக இருப்பினும்,மரபுவழி படை
கட்டுமானங்களை உருவாக்கி கொள்வதன் தேவை
மறைந்து விட்டது.நாம் அந்த வரலாற்றுக் கட்டத்தை
தாண்டியாகி விட்டது என்பதே நிதர்சனம்.ஆட்சியை
கைப்பற்றிய பிறகும்,தேசியவிடுதலையை அடைந்த
பிறகும் கூட மரபுவழி படைக்கட்டுமானங்களை
உருவாக்குவது அவசியமற்ற ஒன்றாகவே
தோன்றுகிறது.ஈராக்,ஆப்கானிஸ்தான் அனுபங்கள்
அதையே காட்டுகின்றன.



கெரில்லா போராட்டதின் மூலமாகவும்,வெகுசன வன்முறை
மூலமாகவும் தங்களை நிராகரிக்க இயலாத சக்தியாக,
வளர்த்துக்கொண்ட பின்,சில விட்டுக்கொடுப்புகளுடன்
தேசத்தை அடைவது.சரியாக சொல்வதென்றால் தேசப்
பொருளாதாரத்தின் 50 % சதவிகித்தை கைப்பற்றுவது.
50% சதவிகிதத்தை கைப்பற்றுவது என்பதை தங்கள்
மண்ணில் இருக்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களில் 50%
வெளியேற்றுவது என்று அர்த்தமாகும்.50% சதவிகிதத்தை
80 %சதவிகிதமாக மாற்றுவது,பிறகு முழுக்க
கைப்பற்றிக்கொள்வதை நோக்கி நகர வேண்டும்.கைகளில்
ஆயுதங்கள் இல்லாமல்,ஆட்சியதிகாரமும் இல்லாமல்
வெகுசன வன்முறை மூலமும்,அரசியல் போராட்டங்கள்
மூலமும் நேபாள,பொருளாதாரததின் 50 %
மாவோயிஸ்டுகள் கட்டுப்படுத்திக்கொண்டு இருப்பதை
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.ஆட்சியதிகாரத்தை
அடைகையில் அதை 80 % சதவிகிதமாக மாற்றிக்
கொள்வது அவர்களுக்கு சிரமமாக இருக்கப்போவதில்லை.
ஆயுத ரீதியிலான தலையீடுகளை ஏகாதிபத்திய அரசுகள்
நிகழ்த்தினால்,மீண்டும் அதே பாணியில் வெகுசன
வன்முறையோடு இணைக்கப்பட்ட 21 ஆம்
நூற்றாண்டுக்கான கெரில்லா யுத்தம் என்கிற வகையில்
ஆக்கிரமிப்பு அரசுகளை எதிர்த்து போராட முடியும்.ஒரு
தேசிய அரசின் கீழ் தாங்கள் அடைந்த நன்மைகளை,
இழக்காமல் இருக்க மக்கள் உற்சாகமாக போராட
முன்வருவார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.



கியூபா,வெனிசுலா,போன்ற தென் அமெரிக்க அரசுகள் போன்று
சோசலிசம் சார்பான அரசுகளின் எண்ணிக்கைகளை அதிகரித்துக்
கொண்டே செல்வதன் மூலமே சர்வதேச அரங்கில் முற்போக்கு
அரசியலுக்கான தளத்தை நம்மால் உருவாக்க முடியும்.அணு
ஆயுதங்கள் கொண்ட ஒரு இடதுசாரி அரசு உருவாகும்வரை
இதுபோன்ற போராட்ட முறைகளே சாத்தியமாகும்.
முதலாளித்துவம் தனது முதுகில் தனக்கான சவப்பெட்டியை
சுமந்துகொண்டு திரிகிறது என்று இனியும் கூற முடியும்
என்று தோன்றவில்லை.அது மனித குலத்துக்கான சவப்
பெட்டியை சுமந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.
ஆலைகளில் திட்டமிடப்பட்ட உற்பத்தியையும்,சமூகத்தில்
அராஜக உற்பத்தியையும் நிகழ்த்திக்கொண்டுப்பதாக
கூறுவோம் முதலாளித்துவத்தைப் பற்றி கூற வருகையில்.
இன்றைய சூழலில் பார்த்தால்,தனது அதிநவீன தொழிழ்
நுட்பங்கள் வழியாக உற்பத்தியை நிகழ்த்தும்
முதலாளித்துவம்.தனது உற்பத்தி பொருட்களுக்கான
நுகர்வோராக இருப்பதற்கும்,உபரி மதிப்பை உற்பத்தி செய்து
கொடுப்பதற்கும்,தேவையான அளவு மனிதர்களை மட்டுமே
பூமியில் வாழ விடுவது என்கிற வகையில்,மனித
சமூகத்தின் எண்ணிக்கையையே ஒழுங்குபடுத்திக்கொண்டு
இருக்கிறதோ என்று எண்ணவே தோன்றுகிறது.நிலவில்
தண்ணீரையும்,செவ்வாயில் வசிப்பிடத்தையும் தேடி
முதலாளித்துவம் சென்று கொண்டிருக்கையில்,இன்றைய
யதார்த்த சூழலுக்கு ஏற்ப தத்துவங்களை வளர்க்காமல்
பன்முகப்பட்ட போராட்டங்களை மேற்கொள்ளாமல்.தத்துவ
சர்ச்சைகள் செய்து கொண்டிருக்க இது காலமல்ல என்பதை
புரட்சிகர சக்திகள் இனியேனும் உணர்ந்தால் நலம்.



தொடர்புடைய பதிவுகள்
http://stalinguru.blogspot.com/2009/12/3.html
http://stalinguru.blogspot.com/2009/12/4.html
http://stalinguru.blogspot.com/2009/11/blog-post_11.html

முடிந்தது.

இடதுசாரி,தேசிய போராட்டங்களின் இன்றைய வடிவம் - 1




இடதுசாரிகளாக இருந்தாலும் தேசிய விடுதலைப்போராட்ட
அமைப்புகளாக இருந்தாலும்,தினம்,மாற்றமடைந்து
கொண்டே இருக்கும் சர்வதேச சூழல்களை கணக்கில்
எடுத்துக்கொண்டே தங்களது நடவடிக்கைகளை
அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இருந்தபோதிலும் பெரும்பாலான நேரங்களில் அது
போன்ற ஆய்வுகளை மேகொள்ளாமல் தான் புரட்சிகர
சக்திகள் இயங்கிகொண்டு இருக்கின்றன.தற்போதைய
சர்வதேச சூழலைக் குறித்து சற்று பரிசீலிக்க முயலலாம்.
முதலாவதாக இடதுசாரி எழுச்சிப்போராட்டங்களையோ,
தேசிய இன விடுதலைப்போராட்டங்களையோ ஆதரிக்க
எந்த சோசலிச முகாமும் இன்றைக்கு உலகில் இல்லை.
முழுக்க முதலாளித்துவ உலகத்தின் கீழ்தான் நாம் வாழ்ந்து
வருகிறோம் என்பதே நிராகரிக்க முடியாத உண்மையாக
இருந்து வருகிறது.இன்றைய சூழலில் அமெரிக்கா
தலைமையிலான ஒற்றைத்து துருவ அரசு என்கிற நிலை
மறையத் துவங்கிவிட்டது.அமெரிக்காவை விட ராணுவ
பலத்தில் ரஸ்யா மேலாதிக்கத்தை அடைந்திருக்கிறது.சீனா
அமெரிக்காவின் ராணுவ வலிமைக்கு இணையாக
வளர்ந்திருக்கிறது.


http://stalinguru.blogspot.com/2009/08/blog-post_17.html

http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_1271.html


இந்த இரண்டு தலைப்புகளின் கீழ் ஏற்கனவே விவாதித்த
விசயங்களைமீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக்
கொள்ள வேண்டி இருக்கிறது.பலத்தை இழந்திருக்கிற
அமெரிக்க முகாமைச் சார்ந்து இருப்பதை தவிர்த்து,சீன,
ரஸ்ய சார்பின் மூலமே தனது இலாபவேட்டையை
அதிகரித்துக்கொள்வது என்கிற நிலையிலேயே இந்திய
முதலாளி வர்க்கமும்,அதற்கு இசைவாக இந்திய
வெளியுறவுக்கொள்கை அமைந்திருக்கிறது என்பதையும்
அந்த தலைப்புகளின் கீழ் பார்த்தோம்.சீனாவால்
இந்தியாவுக்கு பாதிப்பு என்று எவ்வளவு கூப்பாடு
போட்டாலும்,இந்திய அதிகாரவர்க்கம் அலட்சியமாக
கடந்து செல்வதற்கு சீனாவோடு,இந்தியாவால் தற்காப்பு
யுத்தத்தை நடத்துவது மட்டுமே சாத்தியம் என்கிற
உண்மையோடு,நாம் வேறு ஒன்றையும் பார்க்க வேண்டி
இருக்கிறது.தனது நலனுக்கு ஏற்ப சோவியத்தோடும்,
அமெரிக்காவோடும்,யாருடைய பலம் அதிகரிக்கிறதோ
அவர்கள் பக்கம் சாய்வதன் மூலம் தன் நிலையை உறுதி
படுத்திகொள்வது என்பதே இந்திய வெளியுறவுக்
கொள்கையாக இருந்து வந்திருக்கிறது.



அந்த வகையில்,பொருளாதார ரீதியாகவும்,ராணுவ
ரீதியாகவும் பலம் அடைந்திருக்கும் ரஸ்ய,சீன
சார்புநிலையையே அது எடுத்திருக்கிறது.ஒற்றை
முகவரா,இரு தரப்பு முகவரா அல்லது பல்முனை
முகவரா என்று அடையாளம் காணமுடியாத்போதும்
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம் ‘இந்து’
ராம் இந்தியமுதலாளிவர்க்கத்தின் நலனுக்காக
அயராது உழைக்கும் நபர்.அவரே சீனாவுக்கு
மேலாதிக்க நோக்கம் இல்லை என்று சொல்வதன்
அர்த்தத்தை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
சீனாவுக்கு மேலாதிக்க நோக்கம் இல்லை என்கிற
அவரது கருத்துக்கு வழிமொழிதல் எழும் இடம் நமக்கு
ஆச்சரியளிக்கவில்லை.தங்கள் புதிய ஜனநாயகம்
பத்திரிக்கையில் அப்பட்டமாக சீனாவுக்கு மேலாதிக்க
நோக்கம் இல்லை என்று எழுதி‘ இந்து’ ராமினை
வழிமொழிந்திருக்கிறார்கள் மக இக வினர்.
அடுத்த வழிமொழிதல் கிளம்பும் இடமும் கூட
ஆச்சரியத்தை தரவில்லை.அது அ.மார்க்ஸிடமிருந்து
வந்திருக்கிறது.இவர்கள் அணைவரும் இணையும்
புள்ளி எது என்பதை ஊகத்துத்துக்கே விட்டு
விடலாம் இப்போதைக்கு.



ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த
பின் க்யூபா,வெனிசுலா மற்றும் சில இடதுசாரி சார்பான
இலத்தீன்அமெரிக்க நாடுகளுக்கு எதிராக நாம் பரவலாக
கடுமையானவிமர்சனங்களை எழுப்பி வந்திருக்கிறோம்.
மாவோவின் சீனா நிக்சனின் கரங்களைப் பற்றி குழுக்கியதை
எல்லாம் நம்மால் மறந்திருக்க இயலாது.சர்வதேசியம்
என்கிற வார்த்தையை அதன்உண்மையான அர்த்தத்தில்
இன்று வரை உலகம் காணாமல்தான் இருந்து வருகிறது.
சில விதிவிலக்குகளைத் தவிர.சோவியத் யூனியனின்
சிதைவுக்குப் பிறகு கடந்த இருபது ஆண்டுகளாக,
அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் தினறிக்
கொண்டிருக்கும் க்யூபாவும்,எந்நேரமும் அமெரிக்கத்
தாக்குதலுக்கு உள்ளாகும் சாத்தியம் இருக்கும் இலத்தீன்
அமெரிக்க நாடுகளும், சீன,ரஸ்யச்சார்பு நிலையை
எடுத்திருப்பதன் மூலம் தங்களுக்கான பாதுகாப்பை
உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றன என்பதையும்,
அமைதியான முறையில் வளர்ச்சியை நோக்கி
முன்னேறுவது.மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது
போன்ற வழி முறைகளையே இலக்காக கொண்டுள்ளன
என்பதை காணக் கூடியதாக இருக்கிறது.

அவைகள் ஈழத்ததமிழர்கள் விசயத்தில் இழைத்த குற்றத்தை
மறுக்க முடியாதபோதிலும்,அதற்கான பின்னனியை பார்க்க
வேண்டும்.ரஸ்யாவைப் பொறுத்துவரை இன்றளவும் ஒரு
விதமான கலப்புப்பொருளாதாரம்தான் நிலவி வருகிறது.
முன்னால் கே.ஜி.பி.யின் சேர்மனும்,இரண்டு முறை
அதிபரும்,தற்போதைய பிரதமருமான விளாடிமிர்
புதினுக்கும்,தற்போதைய அதிபர் மெத்வதேவுக்குமான
முரண்பாடு எதன் அடிப்படையில் நிகழ்ந்து கொண்டு
இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.முழுக்க
தாராளமயமாக்குவது,தனியார்மயமாக்குவது,உலகமய
பொருளாதாரத்தோடு ரஸ்ய பொருளாதாரத்தை இணைப்பது
அதிபரின் நோக்கமாக இருக்கிறது.பிரதமர் புதின் தேசிய
பொருளாதாரத்தை அரசு கட்டுப்பாட்டில் வைத்திருக்க
முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்.மேலும் இன்றளவும்,
எரிவாயு,எண்ணெய்,மின்சாரம்,அணுசக்தி போன்ற
பெரும்பாலான துறைகள் ரசியாவில் அரசு கட்டுப்பாட்டில்
தான் இருக்கிறது.சீனாவிலும் அதுவே நிலை.தேசியப்
பொருளாதாரம் அரசுக் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.
மேலும் ஆயிரக்கணக்கில் சீனாவில் அரசுக்கெதிரான
விவசாயிகளின் எழுச்சிகள் நிகழ்ந்துகொண்டிருப்பது,
கட்சியிலும்,அரசிலும் இருக்கும் மாபியாக்களுக்கு
எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை எல்லாம்
நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாற்றங்களை நோக்கிய சாத்தியக்கூறுகளை உடைய
நாடுகளாகவும்,பொருளாதாரத்தில் அரசு கட்டுப்பாடு
நிலவும் நாடுகள் ஆகவும் சீனாவையும்,ரஸ்யா
-வையும் புரிந்துகொண்டு இருப்பதாலேயே
இலத்தீன் அமெரிக்க நாடுகள் அவைகளைச் சார்ந்து
நிற்கின்றன.மேலும் முழு அளவிலான ஏகாதிபத்திய
அரசுகளாக அவைகள் வளர்வதற்கும்,தங்களின்
இறையான்மையை பலியாக கோருவதற்கும் சற்று
காலம் ஆகும் என்றோ அல்லதுஅப்படி ஒரு நிலை
ஏற்பட்டாலும்,பேசித்தீர்க்ககூடிய வாய்ப்புகள்,குறைந்த
பட்ச இழப்புகளோடு தங்கள் பொருளாதாரத்தையும்,
மக்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்
என்பதாலேயே இலத்தீன் அமெரிக்க நாடுகள் ரஸ்ய,
சீன சார்புநிலையைமேற்கொண்டு இருக்கின்றன.
மேலும் தேசியப் பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டை
தங்கள் கையில் வைத்துக்கொண்டு,தங்களின்
வளர்சிக்கு உதவும் விதத்தில் அந்நிய முதலீகளை
கையாளுவதில்இலத்தீன் அமெரிக்க நாடுகள்
திறமையோடு செயல்படுகின்றன என்பதே
உண்மையாக இருக்கிறது.தனது மேலாதிக்க
நடவடிக்கைகளை சீனா ஆசிய பிராந்தியத்திலும்,
ரஸ்யா, முன்னாள் சோவியத் பகுதிகளிலுமே
நிகழ்த்திக்கொண்டு இருக்கின்றன என்பதும்,உலக
ஆதிக்கத்துக்கான வேட்டையில் அவைகள்
இறங்க இன்னும் சற்றும் காலம் ஆகும் என்பதும்
அவதானிக்க கூடியதாக இருக்கிறது.அதே நேரம்
இந்த சர்வதேச சூழல் எந்த நேரத்திலும் மாறகூடிய
ஒன்றுதான் என்பதை மறந்துவிட்டு புரட்சிகர
சக்திகள் இயங்க முடியாது.



என்ன செய்வது என்கிற கேள்விக்கு பதில் தேட வேண்டிய
நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம்.ஒரு முறையான
பின்வாங்கல் என்றும்,இன்றைய சர்வதேச சூழலுக்கு
ஏற்றதான முறை என்றும் நாம் நேபாள
மாவோயிஸ்டுகளின் வழிமுறைகளை முழுக்க ஏற்பது
சாத்தியம்தானா ? நிராகரிக்க முடியாத அரசியல்
சக்திகளாக தங்களை நேபாள அரசியல் அரங்கில் நிறுவிக்
கொண்டிருக்கிற விதத்திலும்,ஏகாதிபத்தியங்களின்
சூறையாடலுக்கு தடைகற்களாக அரசியல் போராட்ட
வழிமுறைகளை பயன்படுத்துகிற விதத்திலும்,
நேபாள தோழர்களின் வழிமுறைகள் சரியானவைகள்தான்.
அதே நேரம் ஏற்கனவே நிலவிய அந்நிய,உள்ளக
சுரண்டல்களுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளை
எடுக்கும் நிலையில் நேபாள தோழர்கள் இல்லை
என்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
ஆட்சியதிகாரத்தை தேர்தலின் வழியாக மாவோயிஸ்டுகள்
கைப்பற்றுவதையும்,தேசியப் பொருளாதாரத்தை
கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு இறையான்மையை
காப்பதையும் தடுக்க,இந்திய அமெரிக்க,சீன ஆளும்
வர்க்கங்கள் நிகழ்த்தும் அத்துமீறல்களை நேபாள்
தோழர்கள் முறியடித்துக்கொண்டுருப்பதே நிகழ்காலமாக
இருக்கிறது.அந்நிய சதிகளை முறியடித்து வெற்றிகரமாக
ஆட்சி அதிகாரத்தை,தேர்தல் வழியாக கைப்பற்றி,
இலத்தீன் அமெரிக்க மாதிரி அரசை மாவோயிஸ்டுகள்
உருவாக்குவார்களா என்பதற்கான விடை
வருங்காலத்திடமே உண்டு.

தொடர்புடைய பதிவுகள்
http://stalinguru.blogspot.com/2009/12/3.html
http://stalinguru.blogspot.com/2009/12/4.html
http://stalinguru.blogspot.com/2009/11/blog-post_11.html

இன்னும் வரும்....

Friday, February 12, 2010

தமிழ்த்தேசியத்தை நோக்கி - 5

தனது நாட்டு மக்களுக்கு எதிராகவே விமானப்படையை பயன்படுத்திய
நாடு இலங்கை என்ற பேச்சைக் கேட்க நேர்ந்தபோதெல்லாம்,அதிலும்
இலங்கைக்கு முன்னோடி இந்தியாவே என்பது நினைவில் வந்தது.
நாகாலாந்து தேசிய விடுதலைப்போராளிகளின் முற்றுகையில் சிக்கிய
இந்திய ராணுவத்தினரை,ஈவு இரக்கமற்ற விமானப்படைத் தாக்குதல்
மூலமே இந்திய அரசு மீட்டது என்பதை எப்படி மறப்பது?.ஈழத் தமிழ்
மக்கள் மீதான அரச பயங்கரவாதக் கொடுமைகள் பற்றிய நினைவு
வரும்போதெல்லாம்,இந்தியாவின் வடகிழக்கு பிரதேசங்களில்,இந்திய
அரச பயஙகவாதத்தால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நினைவே
எழுகிறது.ஈழத்தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு எந்த
விதத்திலும் சளைக்காத அரசபயங்கரவாத கொடுமைகளை எதிர்
கொள்ளும் அந்த மக்களைப் பற்றி தமிழகத்தில் நிலவும் மௌனம்
அருவருப்பையே தருகிறது.கடந்த ஐம்பது ஆண்டு காலமாக
இந்திய ராணுவத்தின் ஆட்சியில் இருக்கும் அந்த மக்களுக்காகவும்
நாம் பேசத் துவங்கியாக வேண்டும்.ஒப்பீட்டளவில் தமிழகத்தின்
அரசியல் விழிப்புணர்வு கொண்ட பிரிவினரிடம்,காஸ்மீர் மக்களின்
அவலங்கள் கொண்டு செல்லப்பட்ட அளவுக்கு கூட,மணிப்பூர்,
நாகாலாந்து,அஸ்ஸாம்,உள்ளிட்ட வடகிழக்கு தேசிய இனங்களின்
மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் அரசபயங்கரவாத
கொடுமைகள் பற்றிய செய்திகள் இன்று வரை கொண்டு
செல்லப்படவில்லை என்பதே மறுக்க முடியாத
உண்மையாக இருக்கிறது.

தமிழகத்தின் தேசியவிடுதலைக்கான போராட்டத்தில் இயல்பான
நட்புகரங்களாக நாம் அந்த மக்களையே கருத முடியும்.தடா,
பொடா,என்று மத்திய இந்திய பகுதிகளில் நடைமுறையில்
இருந்த கொடூரமான சட்டங்கள் எல்லாம் கூட,மனித உரிமை
இயக்கங்கள்,ஜனநாயக சக்திகளின் போராட்டங்கள் மூலம்
ஒழிக்கப்பட்ட நிலையில்,இன்றைக்கும் ஒழிக்கப்படாத கருப்புச்
சட்டமாக வடகிழக்கு மாநிலங்களில், ஆயுதபடைகளுக்கான
சிறப்பு அதிகாரங்கள் சட்டம் நீடித்துக்கொண்டிப்பது எத்துணை
அவலமானது? இந்திய ராணுவம் எங்களை கற்பழிக்கிறது
என்று நிர்வாணமாக பெண்கள் போராடும் அளவுக்கு,அரச
பயங்கரவாதத்தின் கொடுமைக்குள் சிக்கி இருக்கும்
மக்களுக்காக பேசாவிட்டால் நாமெல்லாம் என்ன மனிதர்கள்?
தமிழகத்தின் தமிழ்த்தேசியசக்திகள் ஒடுக்கப்படும் அந்த
மக்களினங்களிடம் நட்புச்சக்திகளை தேடிக்கொள்வதும்,
இணைந்து போராட முன்வருவதும் மட்டுமே,நாம் சரியான
தேசியவாதிகளாக இருக்கிறோம் என்பதன் அடையாளமாகும்.
இந்திய அதிகாரவர்க்கத்தால் கட்டமைக்கப்பட்ட போலி
பார்ப்பன தேசபக்தியை கேள்விக்குள்ளாக்கவும்,நிராகரிக்கவும்,
அரச பயங்கரவாதத்தால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின்
மீதான வன்கொடுமைகளே நமக்கு ஆயுதமாக மாற வேண்டும்.

நாகாலாந்து தேசியவிடுதலைப்போராட்டம் பற்றிய செய்திகளில் ஒரு
விசயத்தை குறிப்பிட்டாக வேண்டி இருக்கிறது.அங்கு வாழும் சுமார்
இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட இனக்குழு வாழ்நிலையில் இருந்த
சமூகங்கள் தங்களுக்குள் ஒரு பொதுமொழியை உருவாக்கிகொண்டு
தேசிய விடுதலைக்காக இணைந்தனர் என்கிற செய்தியை நாம்
கவனத்தில் கொள்ள வேண்டும்.இனக்குழு நிலையில் இருந்த
மக்கள் தங்களுக்கான தேசிய அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு
இணைவதே சாத்தியமாக இருக்கும்போது,வளமான தேசியப்போராட்ட
மரபை கொண்டிருக்கும் தமிழகத்தில் தேசிய இணைவு சாத்தியம்
அற்றது என்றோ,தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்கு,தேசிய
விடுதலைப்போராட்டம் வழியாக தீர்வு காண்பது இயலாதது என்றோ
கருத முடியாது.பெரியார் வளர்தெடுத்த சாதியொழிப்பு மரபு,
அம்பேத்கரிய சிந்தனைகளை வீச்சாக கொண்டு சென்ற தலித்திய
இயக்கங்களின் செயல்பாடுகளால்,விழிப்படைந்திருக்கும் சாதி
எதிர்ப்புணர்வை,சாதியொழிப்பு போராட்டங்கள் வழியாக,தேசிய
விடுதலைப்போராட்டத்தோடு இணைப்பதன் வாயிலாக வளர்க்க
முயற்சிப்பதே தமிழ்த்தேசியவாதிகளின் முதல் கடமையாக
அமைய வேண்டும்.இயல்பாகவே இந்தியாவில் உள்ள மற்ற
மாநிலங்களை விட குட்டிமுதலாளித்துவ பிரிவினர் அதிகம்
வாழும் பகுதியாக இருப்பதால்,தேசியக்கோரிக்கையின்
வர்க்கத்தலைமையை மாற்ற முயலும் சக்திகளுக்கு எதிரான
தொடர்ந்த போராட்டங்களும் தேவையாக இருக்கும்.இந்தியப்
பெருநிலப்பரப்பில் செயல்படும் மாவோயிஸ்டுகள் போன்ற
உண்மையான புரட்சிகர சக்திகளின் ஒத்துழைப்பையும் தமிழ்த்
தேசிய சக்திகள் பெற்றுக்கொள்ள முயல வேண்டும்.

தமிழகத்தின் புறச்சூழல் எப்படி இருக்கிறது என்று மதிப்பிட வேண்டி
இருக்கிறது.பரவலாக தேசியச்சிந்தனைகள்,தேசிய இனம்
பற்றிய தன்னுணர்வு தமிழகத்தில் அதிகரிக்கவே செய்திருக்கிறது.
இருந்தபோதிலும்,மார்க்சிய வழிகாட்டல் அற்ற,பெரியாரிய
அம்சங்களால் வளப்படுத்தப்பட்ட ஒன்றாக தேசியம் இல்லை
என்றே கூற வேண்டி இருக்கிறது.தமிழகத்தின் தமிழ்த்தேசிய
அரசியலை ஆக்கிரமித்துக்கொண்டிருப்பவர்களில் ஒரு பிரிவினர்
தேர்தல் அரசியலுக்காக தமிழ்தேசியத்தை ஒரு கருவியாக பயன்
படுத்த முயல்வது அறியக் கூடியதாக இருக்கிறது.இந்தத்
தரப்பினர் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில்
எந்த சந்தேகமும் இல்லை.இவர்களின் குரலுக்கு செவி
கொடுத்தால் இன்னும் ஐம்பது ஆண்டுகளை தமிழர்கள் இழக்க
வேண்டி வரலாம்.மறு தரப்பினர் தங்களை மார்க்சியவாதிகள்
என்று கூறிக்கொண்டாலும் அவர்களிலும் பெரும்பாலானோர்
தமிழ்ச்சாதி கோட்ப்பாட்டாளர்களாக இருக்கும் அவலமும்
மறுக்க இயலாததாக இருக்கிறது.

ரேசன் கடையில் பொருள் வாங்க நின்று கொண்டிருந்தபோது பார்த்த
விசயம் ஒன்று நினைவுக்கு வருகிறது.வரிசையில் பக்கத்தில்
நின்றிருந்த நபர்,ஒரு முஸ்லிம் வரிசையில் நிற்க வந்தபோது
முகத்தைச் சுழித்துக்கொண்டு விலகி நின்றார்.ஒரு தரமான
வாழ்க்கைக்கு வழியற்ற நிலையில் ரேசன் கடையில் நிற்கும்போது
கூட மத அடையாளத்தின் பெயரால்,சக மனிதனை வெறுக்கும்
அவரது மனநிலைக்கு காரணம் என்ன என்று யோசித்தபோது
இந்துத்துவ தீவிரவாதிகள் சமூகத்தின் பொதுவெளியை எப்படி
நஞ்சாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதே புரிந்தது.வேலை
இல்லாமல்,விலைவாசி உயர்வை சமாளிக்க இயலாமல்,
படுத்தி எடுக்கும் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் மனிதனை
அழைத்து வைத்து இந்துத்துவ பயஙகரவாதிகள் என்ன
சொல்வார்கள்,உன் அத்தனை பிரச்சணைகளுக்கு காரணம்
இஸ்லாமியர்கள்,கிறிஸ்தவர்கள் என்றுதானே.அப்படிச்
சொல்கையிலேயே உண்மையான சுரண்டல்காரர்களான
ஏகாதிபத்தியங்கள்,இந்திய,தமிழக முதலாளிகள்,ஆதிக்க
சாதி வெறியர்கள் அணைவரையும் தப்ப வைத்துவிடுவார்கள்
என்பது நாம் அறிந்ததுதான்.தமிழ்த்தேசியக் கோரிக்கையை
கையில் எடுத்திருக்கும் தமிழ்சாதிக்கோட்பாட்டாளர்களின்
அரசியலும் அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸ் காரர்களின்
பாணியில் செல்வது இங்கேதான்.இவர்களில் பாதிப்பேர் தங்கள்
முகங்களில் மார்க்சிய முகமூடியையும் மாட்டிக்கொண்டிருக்கும்
வெட்கக்கேடும் நிகழ்ந்தேருகிறது.

நம்மைப் பொறுத்தவரை நூற்றாண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்துவரும்
மக்களை,கன்னடசாதிகள்,தெலுங்குசாதிகள் என்று தனித்து நிறுத்த
முயலும் முயற்சிகளை அடியோடு நிராகரிப்பது என்பதே சரியான
ஒன்றாக இருக்க முடியும்.அதே நேரம் குடியேற்ற பிரதேசம் என்று
கருதத்தக்க அளவுக்கு சமீப நாட்களில் தமிழ்நாட்டில் அதிகரித்து
இருக்கும் பிற மாநிலத்தவரின் குடியேற்றங்களை எதிர்த்தே ஆக
வேண்டும்.ஏகாதிபத்திய சுரண்டலோடு நதிநீர் பிரச்சனைகளால்
விவசாயம் பாதிக்கப்பட்டதாலும்,தீண்டாமை கொடுமைகளை
சகிக்க இயலாமலும்,தமிழகத்தின் நகர்புறங்களில் உதிரிப்பாட்டாளி
-களாக இருக்கும் தமிழர்களின் வேலைவாய்ப்பு,பிற மாநில
மக்களால் பறிக்கப்படுவது ஏற்க முடியாத ஒன்றாகவே கருதப்பட
முடியும்.மக இக வினர் போன்ற உன்னத புரட்சியாளர்கள் பீகார்,
உத்திரபிரதேசம் போன்ற வட இந்திய பகுதிகளுக்குச் சென்று,
வேலை தேடி பிற மாநிலங்களுக்கு அந்த பகுதி மக்கள் செல்லக்
காரணமான ஆளும்வர்க்கத்தையும்,தீண்டாமையையும் எதிர்த்து
தங்கள் புரட்சிப் பணியை ஆற்ற வேண்டும் என்பதே நமது ஆசை.
கி.பி.2500 க்குள் அங்கெல்லாம் சென்று தங்கள் புரட்சிப்
பணியை ஆரம்பிக்க அவர்களை வாழ்த்துவோம்.

தமிழகத்தில் கிளர்ந்திருக்கும் தேசிய உணர்வை தேர்தல் அரசியலுக்கு
செலுத்தி வீனடிக்க முயற்சிப்பவர்கள்,தாழ்த்தப்பட்டவர்கள் மீது
நிகழும் தீண்டாமை,சாதிய ஒடுக்குமுறைகளை அலட்சியம் செய்து
தேசியம் பேசுபவர்கள்,மார்க்சிய முகமூடி அணிந்துகொண்டே
தமிழ்ச்சாதி கோட்பாட்டாளர்களாகவும்,திராவிட எதிர்பாளர்களாகவும்
இருப்பவர்கள் என்று தமிழ்த்தேசியத்தை பலரும் கைகளில் எடுத்து
பயன்படுத்திக்கொண்டிருக்கும் சூழலே இன்றைக்கு நிலவுகிறது.
தவறான முன்னுதாரனங்களாக சுட்டிக்காட்ட உதவுவதன்,மூலம்
சரியான தேசியத்தை கட்டமைப்பதற்கு உதவுகிறவர்கள் என்கிற
வகையில் இவர்களுக்கு நாம் நன்றி செலுத்தலாம்.புறநிலை
உலகத்தின் யதார்த்தங்களை அறியாத கனவுலகவாசிகளாகவும்,
இன்றளவும் அதிகார நிறுவனங்களாக கட்சிகளை வைத்திப்பவர்
-களாகவும் இருக்கும் மார்க்சியர்களிடமிருந்து தேசிய
விடுதலைக்கான குரல்கள் வந்து கொண்டிருப்பதும் நாம் அறிந்த
ஒன்றுதான்.தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளிலும்,
அமைப்புகளில் அங்கம் வகிக்காமலும்,சிதறிக் கிடக்கும் இளைய
தலைமுறை தங்களை,அமைப்பற்ற அமைப்பு என்கிற வடிவத்தில்
ஒருங்கிணைத்துக்கொள்வதே இன்றைய தேவையாக இருக்கிறது.
மார்க்சிய வழிகாட்டலின் கீழ் நிகழ்த்தப்பட வேண்டிய தமிழ்த்தேச
விடுதலைக்கான கருத்தியல் தளத்தை உருவாக்குவது.பெரியார்
அம்பேத்கரின் பன்முகப்பட்ட சிந்தனைகளையும்,போராட்ட
மரபுகளையும் அதனோடு இணைப்பது.சரியான வர்க்க உணர்வு
கொண்ட,சாதியொழிப்பில்,பெண்விடுதலையில்,ஏகாதிபத்திய
எதிர்ப்பில் நேர்மை கொண்ட மனிதர்களாக தங்களை வளர்த்துக்
கொள்வது.சாத்தியமான ஊடகங்கள் வழியாக,தமிழ்த்தேசிய
விடுதலைக்கான கருத்தியல் பரப்பலை மேற்கொள்வது போன்ற
விசயங்கள் வழியாக மட்டுமே நம்மால் ஒரு சரியான தேசிய
விடுதலைப்போராட்ட அமைப்பை உருவாக்க முடியும்

தமிழ்த்தேசியத்தை நோக்கி - 4




நிகழ்காலத்தில் தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூகச் சூழலைப் பற்றி
விரிவாக பரிசீலிக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.வழக்கம்
போலவே தேசிய விடுதலைப்போராட்டத்தின் முக்கியத்துவத்தையும்,
அதை ஏகாதிபத்திய எதிர்ப்புக்கடமையோடு இணைப்பதையும்,பற்றி
பெரியாரிய தோழர்கள் மத்தியில் அலட்சியமே நிலவி வருகிறது.
மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக பூமியை மாற்றிக்கொண்டு
இருக்கிற ஏகாதிபத்தியச் சுரண்டலை பாதுகாப்பதற்காக,மனிதர்களாக
வாழ்வதன் கௌரவத்தை களவாடிக்கொண்டிருக்கும் நிலையை
அடைந்திருக்கும் தமிழக ஆட்சியாளர்கள் செயல்படுத்தும்
திட்டங்களுக்கு இன்றைக்கும் வரவேற்பளிக்கும் நிலைதான்
பெரியாரியம் பேசும் தோழர்கள் மத்தியில் இருக்கிறது.
ஏகாதிபத்திய கட்டத்துக்கு ஏற்ப பெரியாரியலை வளர்த்தெடுக்கும்
எந்த செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதில்லை.மார்க்சிய
வழிகாட்டலின் கீழ் நிகழ்த்தப்பட வேண்டிய தேசிய விடுதலைப்
போராட்டத்தோடு பெரியாரிய அம்சங்களை இணைப்பதன் மூலம்
அதனை ஜனநாயக உள்ளடக்கம் கொண்டதாக மாற்றுவது,
இந்துத்துவ சார்பு நிலையில் இருந்தும்,இனவாத நிலையில்
இருந்தும் தேசிய விடுதலைக்கோரிக்கையை எழுப்புபவர்களை
அம்பலப்படுத்துவது,தலித் விடுதலையை அலட்சியப்படுத்தும்
தேசியத்தின் கூறுகளை இனம் கண்டு அகற்ற பெரியாரியத்தை
பயன்படுத்துவது,போன்ற எந்த முன்னெடுப்புகளும் இன்றுவரை
மேற்கொள்ளப்படாததே யதார்த்தமாக இருக்கிறது.மறுபுறத்தில்
அடையாள அரசியலின் பெயரால் ஏகாதிபத்தியங்களுக்கு சேவை
செய்வோர் பெரியாரின் கருத்துக்களை தங்களின் ஏகாதிபத்திய
ஆதரவு அரசியலுக்கு பயன்படுத்திகொள்வதை தடுக்க இயலாத
நிலையே இருக்கிறது.தனது காலகட்டத்துக்கும்,அன்றைய
சூழலுக்கும் ஏற்ப பெரியார் கடைபிடித்த ஆளும் வர்க்கத்துடனான
சமரசங்களை இன்றைக்கும் அப்படியே பின்பற்றுவது என்பது
அபத்தமாகத்தான் இருக்க முடியும்.



ஏகாதிபத்தியங்களின் சூறையாடலுக்கும்,சுரண்டலுக்கும் தடைகளேதும்
இல்லாமல் திறந்து விடப்பட்ட பிரதேசமாகத்தான் தமிழகம் இருந்து
கொண்டு இருக்கிறது.ஈழத்தைப் போன்றோ,இந்தியாவின் வடகிழக்கு
மாநிலங்களைப்போலோ,காஷ்மீரைப்போலவே ஏகாதிபத்தியங்களின்
சூறையாடலுக்கு ஒப்பீட்டளவில் நிலவிய தடைகள் கூட இங்கு
இல்லை.சில நாட்களுக்கு முன் தமிழக துணை முதலமைச்சர் ஒரு
தகவலைச் சொன்னார்.கடந்து மூன்று ஆண்டுகளில் தமிழகத்துக்கு
47.000 ஆயிரம் கோடி அந்நிய முதலீடுகள் வந்திருப்பதாகவும்,
அதன் மூலம் இரண்டு இலட்சத்து இருபத்து இரண்டாயிரம் பேருக்கு
வேலை கிடைத்திருக்கிறது என்றார்.நாற்பத்தேழாயிரம் கோடி
முதலீட்டில் வெறும் இரண்டு இலட்சத்து இருபத்திரெண்டாயிரம்
பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது என்பது என்ன வகை வளர்ச்சி?
அந்த 47.000 ஆயிரம் கோடியும் அடுத்த முன்று ஆண்டுகளில்
வரிச்சலுகைளாக,உழைப்புச்சுரண்டலாக,அந்த அந்நிய
முதலீட்டாளர்களுக்கே திரும்பவும் போய் விடும் என்பதொன்றும்
சிதம்பர ரகசியமல்ல.மூன்று இலட்சம் பேருக்கு அரசு வேலைகள்
அளிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் தகவல் சொல்கிறது.
சுருக்கமாகச் சொன்னால் ஏகாதிபத்தியங்களுக்கும்,இந்திய,தமிழக
முதலாளிகளுக்கும் தமிழகத்தை சூறையாட அனுமதிப்பதற்கு
தமிழக மக்களுக்கு இலஞ்சம் கொடுத்துக்கொண்டு இருப்பதாகவே
இன்றைய சூழல் இருக்கிறது.இந்த வேலை வாய்ப்புகளோடு சேர்ந்து
நுகர்வு மற்றும் ஆடம்பர பொருட்களுக்கான சந்தை உருவாக்கமும்
நிகழ்ந்துகொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.ஒரே கல்லில்
இரண்டு மாங்காய் அடிக்கிறது ஆளும் வர்க்கம் என்றே கருத
வேண்டி இருக்கிறது.



மேலும் இந்திய அரசின் தணிக்கைத்துறையின் தகவலின்படி மத்திய
அரசு வருமானத்தில் மாநில அரசுகளின் பங்கு 54 சதவிகிதமாக
இருக்கும் நிலையிலும்,மத்திய அரசுகளிடம் இருந்து மாநில அரசுகள்
பெரும் நிதி 34 சதவிகிதமாகவே இருக்கிறது.இது நடைபெறுகிற
சுரண்டலின் இன்னுமொரு நடைமுறை வடிவமாக இருக்கிறது.ஒரு
ஒப்பீட்டின் வழியாக தமிழர்கள் இழந்துகொண்டிருக்கும் வளங்களின்
மதிப்பை கணக்கிடலாம்.டாடா அமைக்க இருக்கும் டைட்டானியம்
ஆலை வழியாக கிடைக்க கூடிய வருமானம் நான்கரை இலட்சம்
கோடிகள் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.தமிழகத்தின் உலகவங்கிக்
கடன் 78.000 ஆயிரம் கோடிகள் இருக்கிறது என்று முதலமைச்சர்
கூறுகிறார்.தமிழகத்தின் ஒரு இடத்தில் கிடைக்கும் கனிமத்தை
விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஆறில் ஒரு
பகுதியைக் கொண்டே உலகவங்கி கடனை அடைத்துவிட்டு,
தற்சார்பு பொருளாதாரத்தை கட்டமைக்கும் நிலை இருக்கையில்
இந்திய முதலாளிகளுக்கும்,ஏகாதிபத்தியங்களுக்கும்,தமிழ்நாட்டை
சூறையாட அனுமதிப்பதற்கு இலஞ்சமாக தமிழக அரசு கொடுக்கும்
வேலை வாய்ப்புகளை வரவேற்பது என்ன வகை புத்திசாலித்தனம்?




நரிமணத்தின் பெட்ரோல்,சேலம் இரும்பு,நெய்வேலி நிலக்கரி
மின்சாரம் என்று தமிழகத்தில் இருந்து அந்நிய,இந்திய,
தமிழக சுரண்டல்காரர்களின் நலன்களுக்காக சூறையாடப்படும்
வளங்களை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.அரசு
நிறுவனங்களுக்காக தங்கள் நிலங்களைக் கொடுத்த
மக்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளே முறையாக
நடைபெற்றது இல்லை என்னும்போது,சிறப்பு பொருளாதார
மண்டலங்களுக்காக தங்கள் நிலங்களை பறிகொடுக்கும்
மக்களின் நிலையைப் பற்றி அதிகம் கூறத் தேவையில்லை.
தமிழகத்தின் வளங்களை,சுற்றுச்சூழலை,சீரழிப்பதோடு,
மாநகராட்சிகள் என்று தமிழகத்தின் பெருநகரங்களை
அறிவிப்பதன் மூலமும்,நகரங்களை அழகுபடுத்துவதன்
பெயராலும்,சாதி ஒடுக்குமுறையின் பிடியில் இருந்து
ஒப்பீட்டளவில் தப்பிக்க நகர்புறங்களைச் சார்ந்து இருந்த
ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும்,தீண்டாமையின் பிடிக்குள்
தள்ளும் வேலையும் தமிழகம் முழுக்க நடந்துகொண்டு
இருக்கிறது.ஏகாதிபத்திய,உள்ளக சுரண்டல்களை
பாதுகாப்பது,சுரண்டல்களுக்கு எதிரான போராட்டங்களை
தடுக்கவும்,தணிக்கவும் சில திட்டங்களை செயல்படுத்துவதன்
மூலம் ஆட்சியதிகாரத்தை தக்க வைப்பது என்கிற
நடைமுறைகளை இனியும் தொடர முடியாத நிலை
ஆட்சியாளர்களுக்கு ஏற்படவே செய்யும் என்பதற்கான எல்லா
அடையாளங்களையும் காணக் கூடியதாகவே இருக்கிறது.



பெரும்பணக்காரர்கள் தவிர்த்த,உயர்நடுத்தர வர்க்கம்,நடுத்தர
வர்க்கத்தின் இருப்பு பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகாத
போதும்,ஏழை மற்றும இரண்டாம் நிலை நடுத்தரவர்க்கம்,
விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் கீழே சென்று கொண்டிஇ
ருப்பதுவே யதார்த்தமாக இருக்கிறது.ரேசன் கடைகளை
நம்பியே வாழும் நிலைக்கு தமிழகத்தின் பெருவாரியான
உழைக்கும் மக்கள் சென்று கொண்டிருப்பதைக் காணக்
கூடியதாக இருக்கிறது.தமிழகவளங்களைச் சூறையாட,
சுற்றுச்சூழலை சீரழிக்க,உழைப்புச்சக்தியை மலிவு விலைக்கு
உறிஞ்ச,அணு உலைகளை அதிகரித்து மக்களின்
பாதுகாப்பை அபாயதுக்குள்ளாக்க எங்களை அனுமதியுங்கள்,
இருக்க இடமும்,உண்ண உணவும் தருகிறோம் என்பதே
ஆளும் வர்க்கத்தின் பேரமாக இருக்கிறது.சிறைகளில்
பராமரிக்கப்படும் கைதிகளின் நிலையில்,தமிழக உழைக்கும்
மக்களை வைக்க விரும்பும் அரசுக்கு எதிராக,பெரியாரின்
சுயமரியாதை மரபை உயர்த்திப் பிடிப்பதே
இன்றைக்கு அவசியமாக இருக்கிறது.

தமிழ்த்தேசியத்தை நோக்கி - 3

இந்து மத ஒழிப்பில்லாமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை என்ற முடிவுக்கு
இயல்பாக வந்து சேர்ந்ததைப்போலவே,இந்து மத ஒழிப்புக்கு இந்திய
தேசிய ஒழிப்பும் அத்தியாவசியமானது என்று புரிந்துகொண்டதன்
வெளிப்பாடாகவே பெரியாரின் தமிழ்த்தேசியகோரிக்கையை பார்க்க
முடியும்.பெரியாரைப் பொறுத்தவரை அடையாள அரசியலை முன்
நிறுத்தி அரசுகளிடம் இருந்து சாத்தியமான நலன்களைப் பெறுவது
என்பதை மட்டும் இறுதி இலட்சியமாக என்றைக்கும் முன்நிறுத்தியது
இல்லை.அதே நேரம் அரசுகளிடம் இருந்து பார்பனரல்லாத சமூகங்கள்
பெறவேண்டிய சாத்தியமான,அத்தியாவசியமான உரிமைகளைப்
பெறுவதற்க்கான போரட்டங்களின் தேவையை குறைத்து
மதிப்பிட்டவருமில்லை.வர்க்கப்போராட்டத்தின் பெயரால்,
பார்பனரல்லாத சமூகங்கள் பெறக் கூடிய உரிமைகளைக் கூட,
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைகளில் இருந்த பார்ப்பனர்கள்
வர்க்கப்போராட்டத்தின் பெயரால் தடுப்பதாக கருதியதன் பின்னனியில்
பெரியார் கூறிய கருத்துக்களை,கம்யூனிஸ இலட்சியங்களுக்கு
எதிரான அவரது கருத்துக்களாக பொதுமைப்படுத்தி புரிந்துகொள்வது
சாத்தியமற்ற ஒன்றாகும்.

பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு,சாதியொழிப்பு நோக்கங்களுக்காக மொழிவாரி
மாநிலங்கள் பிரிவினைக்கு பின்பாகவும் திராவிட அடையாளத்தை
பெரியார் முன்நிறுத்தியிருந்தாலும்,தமிழர்களின் நலன்களுக்கு எதிராக
இந்திய அதிகாரவர்க்கம் எடுக்க முனையும் எந்த நடவடிக்கையையும்
எதிர்த்து முதலில் எழும் குரல் பெரியாருடையதாகத்தான் இருந்தது.
சாதியொழிப்பு,பெண் விடுதலை,சமூக விடுதலைச்செயல்பாடுகளை,
தேசியவிடுதலைக் கோரிகையோடு இணைத்து வைத்ததன் மூலமாக,
தேசிய இன வரலாற்று வளர்ச்சிப்போக்கின் அடுத்தகட்டத்துக்கு
தமிழகம் முன்னேற வழிகாட்டி விட்டுச் சென்றார் பெரியார்.மீண்டும்
பெரியார் தேசியவிடுதலைக்கோரிக்கையை எழுப்ப,அவரிடமிருந்து
பிரிந்து சென்றவர்கள் தமிழகத்தின் பார்ப்பனர்களுடன் செய்துகொண்ட
சமரசங்களும் ஒரு காரணமாக இருந்திருக்க கூடும்.தமிழகத்தில்
பார்ப்பனியத்துடன் அண்ணாவின் சமரசம் என்பது அதன்
அடுத்தகட்டமாக,பார்ப்பன,பனியா,நலனுக்கான இந்திய அதிகார
வர்க்கத்தோடும் சமரசத்தில் முடிந்ததை தன் வாழ்நாளிலேயே
கண்டவர்தான் பெரியார்.மீண்டும் தேசிய விடுதலைக் கோரிக்கையை
கையிலெடுத்து தீவிரமாக பெரியார் குரல்கொடுக்க ஆரம்பித்ததன்
பின்னனி இதுவாகவே இருக்கக் கூடும்.பெரியாரின் மறைவோடு
தமிழ்ச்சமூகம் தேக்கத்தை அடைந்தது என்கிற யதார்த்தத்திலிருந்தே
நாம் மீண்டும் பேசத் துவங்கவேண்டி இருக்கிறது.

பெரியாருக்குப் பிறகான திராவிட இயக்கத்தின் தலைமை என்பது
சாதியொழிப்பு,மற்றும் தேசிய விடுதலைக்கான போராட்டங்களில்
பெரியாரின் தொடர்ச்சியை முற்றாக இழந்து,பகுத்தறிவு,இட
ஒதுக்கீடு,அரசுகளிடம் இருந்து உரிமைகளைப் பெறுவது
என்பதோடு தனது எல்லையை சுருக்கிகொண்டதே வரலாறாக
இருக்கிறது.தமிழ்த்தேசிய உணர்வு என்பது ஏறக்குறைய
தமிழகத்தின் பொதுவெளியில் கைவிடப்பட்ட நிலையை
அடைந்தது என்றே கூறிவிடலாம்.ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள
உழைப்பைச் சுரண்டிக்கொண்டு உழைத்தவனுக்கு,ஐம்பது ரூபாய்
கொடுக்கும் முதலாளியின் பாத்திரத்தை ஆட்சியதிகாரத்தின்
தலைமையில் இருந்துகொண்டு வகிக்க ஆரம்பித்தார் அண்ணா.
சாதி ஒடுக்குமுறை,முதலாளித்துவச் சுரண்டல் இரண்டின்
தாக்கங்களும் மிகக் கடுமையாக தமிழகத்தின் உழைக்கும்
மக்கள் மீது பாதிப்பைச் செலுத்துவதை தடுக்கும் அரைகுறைத்
திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தங்களது
ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வது என்பதே
அன்றிலிருந்து இன்றுவரை திராவிட கட்சிகளின் வரலாறாக
இருந்து வருகிறது.அந்தப்போக்கிலும் ஜெயலலிதாவின்
ஆட்சிக்காலங்கள் விதிவிலக்கானவையே.

பெரியாரால் உருவாக்கப்பட்டிருந்த ஒரு சரியான தேசிய விடுதலை
போராட்டக்களத்தை அபகரித்து கொண்டவர்கள் அல்லது திசை
திருப்பியவர்களாகவே திராவிட கட்சிகளை கருத முடியும்.
திராவிடர் கழகத்திலும் பெரியாரின் கொள்கைகளை தங்களின்
வாழ்வில் நேர்மையாக பின்பற்றிக்கொண்டு இருந்த தோழர்களை
மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.பெரியாருக்குப்
பிறகான திராவிட இயக்கத்தின் தலைமையும் கூட போதுமான
அளவு சாதியொழிப்புக்கான செயல்பாடுகளை
முன்னெடுத்திருக்கவில்லை என்பதே யதார்த்தமாக இருந்தது.

அதன் காரணமாக தலித்துகள் தங்களுக்கான அடையாள அரசியலின்
கீழ் தங்களை அணிதிரட்டிக்கொள்ள வேண்டிய தேவை எழுந்தது
என்பதையும்,தொன்னூறுகளுக்கு பிறகான தலித்திய அரசியல்
வளர்த்தெடுத்த சுயமரியாதை,மற்றும் அரசியல் அணிதிரட்டல்
வேலைகள் ஆரோக்கியமான ஒன்றாகவே துவக்கத்தில் இருந்து
வந்தன என்பதும் நாம் அறிந்ததுதான்.வழக்கம்போலவே
சமரசங்களுக்கு சென்று,தங்களின் கீழ் திரண்டிருக்கும்
மக்களின் நலன்களுக்கு விரோதமாக தங்களை நிறுத்திக்கொண்டு
அந்த மக்களையே சுரண்டுவது என்கிற அமைப்புகளின் பொதுவான
இயங்கியலுக்குள்,தலித்திய இயக்கங்கள் செல்லத் துவங்கி
இருக்கின்றன என்பதே நிகழ்காலமாக இருக்கிறது.தலித்திய
அடையாளத்துடன் தேசிய இன அடையாளம் பற்றிய
தன்னுனர்வையும் தமிழகத்தில் இயங்கும் தலித்திய இயக்கங்கள்
சிறிதளவு வளர்த்திருக்கின்றன என்பது,வர்க்க அடிப்படையிலான
தேசிய விடுதலைக்காக முயற்சி செய்பவர்களைப் பொறுத்தவரை
ஒரு வரவேற்கத்த அம்சம்தான்.

தமிழகத்தின் பொதுவெளியில் இருந்து கைவிடப்பட்ட தேசிய உணர்வு,
தமிழ் அடையாளம் பற்றிய விழிப்புணர்வை,தமிழகத்துக்கு மீட்டு
கொடுத்தது என்பதுகளுக்குப் பிறகான ஈழ ஆதரவு போராட்டம்தான்.
பொதுவெளியில் அகற்றபட முடியாத ஒன்றாக வளர்ந்திருந்த இந்திய
உணர்வை அகற்றுவது சாத்தியமே என்கிற நம்பிக்கையை
வளர்ப்பதாகவே சமீப காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக
நிகழ்ந்த போராட்டங்கள் அமைந்திருக்கின்றன.பெரியாரின்
கொள்கைக்கும்,சாதியொழிப்பு போராட்ட மரபுக்கும் தொடர்ச்சியாக
திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய தோழர்களால்
ஆரம்பிக்கப்பட்ட பெரியார் திராவிடர் கழகம் தமிழகத்தின்
பொதுவெளியில் செயல்பட துவங்கி இருப்பதும்,பெரியாரின்
வழியில் போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்ததிருப்பது
ஆறுதலிக்ககூடியாதவே இருக்கிறது.