Monday, December 5, 2011

கவிதை

விழிக்கும்போதெல்லாம்
விழித்துக்கொள்கிறது
விரக்தி

ஆழ்ந்து சுவாசித்து
அக்கறையின்மையை
நிரப்பிக்கொள்கிறேன்

நிகழ்தகவு விதிகள்
தலைகீழாய்
எழுதப்படுகிற

வெளியில்

கண்கள் கட்டப்பட்டு
சுற்றி விடப்பட்டிருக்கிறார்கள்
திவாலாகிப்போன
தீர்க்கதரிசிகள்

No comments:

Post a Comment