விழிக்கும்போதெல்லாம்
விழித்துக்கொள்கிறது
விரக்தி
ஆழ்ந்து சுவாசித்து
அக்கறையின்மையை
நிரப்பிக்கொள்கிறேன்
நிகழ்தகவு விதிகள்
தலைகீழாய்
எழுதப்படுகிற
வெளியில்
கண்கள் கட்டப்பட்டு
சுற்றி விடப்பட்டிருக்கிறார்கள்
திவாலாகிப்போன
தீர்க்கதரிசிகள்
Monday, December 5, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment