Sunday, November 13, 2011

கவிதை.

ஒளியால் நடுங்கும்
ஒரு கிணற்றின் விளிம்பில்
அன்புடன் மட்டுமிருப்பது
காணாமல் அடித்துகொள்வதாக
மட்டுமே இருக்க முடியும்


தவிர்க்கவியலா
அபூர்வ கணங்களும்
ஓய்வெடுக்க சென்றுவிட்டன
நிரந்தர விடுமுறையில்


ஒற்றை புன்னகையால்
ஓடும் உயிர் நதி
தனிக்குரல் பறவையின்
தாகம் தீர்ப்பதில்லை

No comments:

Post a Comment