வலி
அச்சமேற்றும்
ஊளைச் சத்தங்கள்
சுடலைக் காற்றில்
சுவாசம் திணறினாலும்
வழிகாட்டிகள் வாழ்ந்துகொள்ள
வாழ்வை தருவதாயில்லை
எனக்கானவை அல்லாத
எல்லா மையங்களையும்
அழித்தபின்
அடைவதென்ன
புறவாசல் இல்லாத
புதிய சொர்க்கம்
இருக்குமெங்காவது
Tuesday, November 8, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment