Tuesday, November 8, 2011

கவிதை

வலி
அச்சமேற்றும்
ஊளைச் சத்தங்கள்
சுடலைக் காற்றில்
சுவாசம் திணறினாலும்
வழிகாட்டிகள் வாழ்ந்துகொள்ள
வாழ்வை தருவதாயில்லை


எனக்கானவை அல்லாத
எல்லா மையங்களையும்
அழித்தபின்
அடைவதென்ன


புறவாசல் இல்லாத
புதிய சொர்க்கம்
இருக்குமெங்காவது

No comments:

Post a Comment