Monday, February 7, 2011

கவிதை




வெட்ட வெளியின்
வெளிச்ச புள்ளிகள்
பிடித்தேன்

வெற்றுத்தாள் ஒன்றில்
வைத்தேன்

ஒவ்வொன்றும்
ஓவியமாக
தன்னை
வரைந்துகொண்டது

தீராத என் கவிதையொன்றின்
வரிகளை எழுத துவங்கினேன்

வெளியில் கலந்து
மறைந்தன

உள்ளங்கையில்
மிச்சமிருந்தது
வெறுமை

No comments:

Post a Comment