வெட்ட வெளியின்
வெளிச்ச புள்ளிகள்
பிடித்தேன்
வெற்றுத்தாள் ஒன்றில்
வைத்தேன்
ஒவ்வொன்றும்
ஓவியமாக
தன்னை
வரைந்துகொண்டது
தீராத என் கவிதையொன்றின்
வரிகளை எழுத துவங்கினேன்
வெளியில் கலந்து
மறைந்தன
உள்ளங்கையில்
மிச்சமிருந்தது
வெறுமை
No comments:
Post a Comment