ஏதோ ஒரு மழைநாளின்
பற்றி படரும்
உணர்வுகளின்
பின்னலில்
மிரட்சியோடு
இரு விழிகள்
நிழலாடி செல்லும்
மௌனமாய் துள்ளலோடு
கடந்து சென்ற மழைத்துளி
வெம்மையை எழும்
உயிரின் ஆழங்களில்
மிச்சம் வைக்கப்பட்ட
குழந்தமை கனவுகள்
உயிரின் தேடலாய்
நீளும்
கட்டவிழ்க்கும்
பிஞ்சு விரல்களில்
விரியும்
மீட்சியின்
சிறகுகள்
No comments:
Post a Comment