Sunday, February 6, 2011

கவிதை



எள்ளி நகையாடி
என்னை தவிர்த்துவிட்டு
செல்லும்
சிறு விழிகள்

இரவுகள் தோறும்
அர்த்தம் தெரியாமல்
தவித்து
மனவெளியில்
திரிகையில்

பற்றவைத்துச் செல்கின்றன
இளமையின் வேர்களில்
துளி துளியாய்..

இனியும்
உணரப்படாமல்

காணலில் பரவி
பகல்களை
கொள்ளை கொண்டு

அழகான இரவுகளை
சற்றே முரட்டுத்தனமாய்
போதிய மென்மையுடன்
சூழும் என் காதல்

தணிந்து தணிந்து
தவழவே
துவங்கிவிடும்
விடியலில்

உள்ளங்கை சூட்டில்
முகம் புதைத்து
ஓர் கணம் சிலிர்த்து
மீண்டும் துவங்கும்
பயணம்

விழிகளின் செவ்வரி
திசைகள் படைக்கும்
உறுதியோடு
நிறம் மாறும்.

No comments:

Post a Comment