எள்ளி நகையாடி
என்னை தவிர்த்துவிட்டு
செல்லும்
சிறு விழிகள்
இரவுகள் தோறும்
அர்த்தம் தெரியாமல்
தவித்து
மனவெளியில்
திரிகையில்
பற்றவைத்துச் செல்கின்றன
இளமையின் வேர்களில்
துளி துளியாய்..
இனியும்
உணரப்படாமல்
காணலில் பரவி
பகல்களை
கொள்ளை கொண்டு
அழகான இரவுகளை
சற்றே முரட்டுத்தனமாய்
போதிய மென்மையுடன்
சூழும் என் காதல்
தணிந்து தணிந்து
தவழவே
துவங்கிவிடும்
விடியலில்
உள்ளங்கை சூட்டில்
முகம் புதைத்து
ஓர் கணம் சிலிர்த்து
மீண்டும் துவங்கும்
பயணம்
விழிகளின் செவ்வரி
திசைகள் படைக்கும்
உறுதியோடு
நிறம் மாறும்.
No comments:
Post a Comment