Monday, January 31, 2011

கவிதை




கதை சொல்லியின்
விரல்களை பற்றிகொண்டு
இருவருக்குமான வெளியில்
சுற்றி திரிந்த சிறுமி
தோளில் சாய்ந்து
துயில்கொள்வாள்


இமைகள் பிரியாத‌
க‌ன‌வுக‌ளின் முக‌த்தில்
கவிதைகள் மலரும்


மெல்லிய சோகம் ததும்பி
பற்றிகொள்ள பரவும் கரங்கள்
தயங்கி அலைவுற‌

மௌனத்தின் வலியை
அடர்த்தியான இரவு
மதி நிழல் தந்து கூட்டும்

ரகசிய உயிர்ப்பு

இருவரின்
உயிரோசை
காற்றுகொண்டு சென்ற
மழை மேகமாய்

வெற்று வெளியில்
அலைக்கழிக்கப்பட்ட யாச‌க‌ன்
கைகளில் இரு துளிகளாகும்

இன்ன‌மும் தீராத
இரவின்
மிச்சங்களில்


தோழி
துயில் நீங்கி
பிரிவாள்

தனிமை
சப்தித்திருக்கும்

No comments:

Post a Comment