தென்னங்கீற்றுகள் தழுவி
தென்றலால் தணிந்து
மேனி தீண்டுகிறது
மாலை வெயில்
மென்மையாய்
இரு கரங்கள் நீண்டு
எடுத்து
ஒளித்து
வைத்துகொள்கின்றன
உயிரின் கதகதப்பில்
ஒடுங்கி
அற்றதாய்
தவித்து மீள்கிறது
மனம்
விழிகளில் செவ்வரி படரும்
தூக்கமிழந்த இரவுகளின்
ஊமை கனவுகள்
முன்போல
அடங்கி கிடந்திருக்கலாம்
இந்த சோகம்
எழதப்பட்டிருக்காது
No comments:
Post a Comment