Wednesday, January 19, 2011

முகமற்ற கவிதைகள் - 4



போருக்கு அழைக்கின்றன‌
என் வனத்தின்
சில பட்டாம்பூச்சிகள்


அழகாய்த்தான் சிறகுகளும்
செயற்கை வண்ணங்களில்


நுகத்தடியின் நுன் கரங்களுக்குள்
சிதைந்துகொண்டே
புன்னகை பூக்கின்றன‌


பற்றி பிடித்த தளிர் கரம்
ஒன்றின் விரலிடுக்கில்
செழுமையாய் ஒரு துளி
இரத்தம்


அமைதியாய் மரணித்துபோகும்
வனம்


அதிகாலை நீல் இரவு
மெதுவாய் விடிய‌
துவங்கும்

No comments:

Post a Comment