ஏதுமில்லை
கலைந்தே கிடக்கின்றன
அழகாய்
சிறகிழந்த
சிறுமைகள்
மெலிதாய் ஊடுருவி
நெஞ்சில் பரவும்
திகைப்பு
தவித்து அடங்கும்
முரண்களின் வெளி
புனிதங்களின் நிறம்
என்றும்
வெண்மையின்
மறுப்பாகவே
வீதிகள் தோறும்
விழிகளில்
வழிந்து
தெருக்கள்
நிறையும்
தேடல்கள்
விரல்கள் இடையில்
வழிந்து பாதங்கள்
தீண்டிமெதுவாய்
நழுவி செல்கிறது
நதி
துளிதுளியாய்
சலனங்களற்று
மடிகிறது
No comments:
Post a Comment