Friday, January 21, 2011

கவிதை




திருத்தம் செய்வதற்கு

ஏதுமில்லை




கலைந்தே கிடக்கின்றன

அழகாய்

சிறகிழந்த

சிறுமைகள்




மெலிதாய் ஊடுருவி

நெஞ்சில் பரவும்

திகைப்பு

தவித்து அடங்கும்

முரண்களின் வெளி




புனிதங்களின் நிறம்

என்றும்

வெண்மையின்

மறுப்பாகவே



வீதிகள் தோறும்

விழிகளில்

வழிந்து

தெருக்கள்

நிறையும்

தேடல்கள்




விரல்கள் இடையில்

வழிந்து பாதங்கள்

தீண்டிமெதுவாய்

நழுவி செல்கிறது



நதி

துளிதுளியாய்

சலனங்களற்று

மடிகிறது



No comments:

Post a Comment