Saturday, January 22, 2011

கவிதை



எப்பொழுது பார்க்கினும்

எட்டி நின்று

முறைத்துகொன்டிருக்கிறது

சூழலின் யதார்த்தம்


இடைக்கிடை ஓரிரு நொடிகள்

தணிந்து மீண்டும்

சூழ்ந்து பரவும்

வெயில்


ந‌ர‌ம்புக‌ள் ப‌ர‌வி

ம‌னித‌ கூட்டின்

ப‌ள்ள‌த்தில்

ம‌ரித்துபோகிற‌து


நெஞ்சுக்குள் கிள‌ர்ந்து

ச‌ர‌ச‌ர‌க்கும் ச‌ருகுக‌ள்

இனி உர‌க்க‌ பேசும்

மெலிதாய் தளிர்க்கும்

இனி வ‌ரும்

விடிய‌ல்க‌ள்

சிவ‌ந்திருக்கும்



இரு ப‌னிதுளிக‌ள்

தழுவிக்கொண்டு

புன்னகைக்கும்

No comments:

Post a Comment