எப்பொழுது பார்க்கினும்
எட்டி நின்று
முறைத்துகொன்டிருக்கிறது
சூழலின் யதார்த்தம்
இடைக்கிடை ஓரிரு நொடிகள்
தணிந்து மீண்டும்
சூழ்ந்து பரவும்
வெயில்
நரம்புகள் பரவி
மனித கூட்டின்
பள்ளத்தில்
மரித்துபோகிறது
நெஞ்சுக்குள் கிளர்ந்து
சரசரக்கும் சருகுகள்
இனி உரக்க பேசும்
மெலிதாய் தளிர்க்கும்
இனி வரும்
விடியல்கள்
சிவந்திருக்கும்
இரு பனிதுளிகள்
தழுவிக்கொண்டு
புன்னகைக்கும்
No comments:
Post a Comment