அரண்மனையை பார்வையிட்டு
அறிவித்தார்
பில்லி சூனியம்
ஏவல் ஏதுமில்லை
அடுத்தடுத்து பெண் பிள்ளை
பெறுபனுக்கு அடுத்தது
ஆண் என்றும் தன் பெயர்
வைக்க சொல்லி
அன்பு கட்டளையிட்டார்
அந்த கரைக்கும் இந்த கரைக்கும்
ஓடும் சாமியோடு ஓடி
அடிக்கிற பறை நிறுத்தி
அவன் கேட்டிருக்கலாம்
எப்போது நீக்குவாய்
என் ஜாதி இழிவையென்று
அப்பா
அரசு
அதிகாரத்தோடுதான்
அவருமென்றானபின்
நாத்திகனாகிறேன்
புதிய கடவுளாகவும்
Sunday, October 9, 2011
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அப்பா
அரசு
அதிகாரத்தோடுதான்
அவருமென்றானபின்
நாத்திகனாகிறேன்
புதிய கடவுளாகவும்
நிறைய பொருளை ஒரு கவிதையில் பொருத்தியிருக்கிறீர்கள் ...அருமை
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள் உங்களுக்கு
சில சமயங்களில் விரும்பி நிறைய அர்த்தங்களை சேர்க்கிறேன். விரும்பாமலும் கூட அப்படி வந்துவிடுகிறது.வார்த்தைகளை எடுத்துகொள்ளலாம் அர்த்தங்களைமுடியாததல்லவா :) பல பொருள் தரும்படி எழுதுவதையே விரும்புகிறேன்.
Post a Comment