Monday, October 10, 2011

கவிதை ...

உறைந்த
உன்னதங்களின்
சுனை
தேடி களைத்தபின்

அருந்துகிறேன்


அலைவரிசைகளின்
ஆபாசங்ககளை


இருப்புக்கும்
விருப்புக்குமான
இடைவெளிகளில்
அன்பின்றி
அடித்துக்கொண்டே
இருக்கிறது அபத்தம்

தன வாழ்வு போதா
தந்தை தோளில் தோற்ற

ஊர் கிழித்த பக்கங்கள்
போக எஞ்சியதில் எழுத
எனக்கும் இருக்கிறது


சில
வார்த்தைகளும்

சிறிய வாழ்வும்....

No comments:

Post a Comment