Tuesday, October 4, 2011

கவிதை


என் வீட்டு மாடியில்
குடி வைத்திருக்கிறேன்
ஏழைப் பிசாசொன்றை

அந்தியொளி வீழ்ந்தபின்
அழிந்த நகரங்களின்
அருவங்கள்
கதை சொல்லிகளாவார்கள்

கட்டி வைத்திருக்கிறேன்
கடவுளை மட்டும்

அர்த்தமின்மைகளின்
படிக்கட்டுகளில்
அற்பர்கள்
அதிமானுடர்களாய்
பாவித்து

அறுத்தெரிகிறார்கள்

பிரபஞ்சத்தின்
பிழையை

2 comments:

பூங்குழலி said...

அர்த்தமின்மைகளின்
படிக்கட்டுகளில்
அற்பர்கள்
அதிமானுடர்களாய்
பாவித்து

அறுத்தெரிகிறார்கள்

பிரபஞ்சத்தின்
பிழையை


வாவ் ...

ஸ்டாலின் குரு said...

நன்றி பூங்குழலி :)

புதிதாக இருக்கிறீர்கள்

Post a Comment