Friday, October 14, 2011

கவிதை

ஏன் எதிர்மறை
என்பவர்களிடம்
என்டோமார்பின் சுரக்காதது
என் தவறல்ல
என்றிருக்கலாம்


மறைகளுக்கு எதிராயிருப்பது
மனிதத்துக்கு
நெருக்கமானது என்றேன்


அல்லாவும்
புத்தனும்
கர்த்தரும்
காவிகளும்


காவு கொண்டு
களவெடுக்கிறார்கள்


கோவில் மணியை
கொள்ளையிட்டவனை
கோவில் எல்லை
தாண்டவும்
விட்டதில்லையாம்
கருப்பணசாமி

No comments:

Post a Comment