ஏன் எதிர்மறை
என்பவர்களிடம்
என்டோமார்பின் சுரக்காதது
என் தவறல்ல
என்றிருக்கலாம்
மறைகளுக்கு எதிராயிருப்பது
மனிதத்துக்கு
நெருக்கமானது என்றேன்
அல்லாவும்
புத்தனும்
கர்த்தரும்
காவிகளும்
காவு கொண்டு
களவெடுக்கிறார்கள்
கோவில் மணியை
கொள்ளையிட்டவனை
கோவில் எல்லை
தாண்டவும்
விட்டதில்லையாம்
கருப்பணசாமி
Friday, October 14, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment