Thursday, January 20, 2011

கவிதை.

மௌனகூட்டின் சிறை திறந்து
உதிரும்போதெல்லாம்
கருவறையின் வெம்மை தேடி
உள்ளோடுகிறேன்


எதிரிடும் கண்களை
சந்தித்து மீளகையில்
மின்னல் தெறிக்கிறது
மெலிதாய் சாவின் நிழலும்


மொழிதலின் மறுப்பு
தொடர
சூழ்கொண்டு மேகமாய்
வேர் வரை தீண்டி
பற்றிகொள்ளும்



எரிதழல் எழும்
கற்பிதங்களின்
அறியாவெளிகள்தோறும்
உள்ளொடுங்கி
தளிர்க்கும்
எதிர் உயிர்கள்..


விட்டுசெல்லும்
யுகம் சுமந்த
கனவுகள்
நீளும்...

1 comment:

Post a Comment