Wednesday, March 30, 2011

கவிதை ;'




வற்றிப்போய் உயிரற்றவையாய்
நேர்த்தியான சடக்கூடுகள்
என்நேரமும் நனைந்து
பொய் சொட்டிக்கொண்டிருந்தன
சுவாசம் எங்கணும்
இளைப்பு கண்டு தவித்து
களைப்பேறி

பிச்சைகாரனின் தட்டில் காசு பொறுக்கி
புகை பிடித்து
சள்ளை பிடித்த
தத்துவங்களை உமிழ்ந்துவிட்டு
அருகிலேயே மரித்துப்போயின

சலனங்களற்று தேங்கிக்கிடக்கும்
யாவும் நேசமற்ற தூரிகையின்
மங்கலான வெளிச்சத்தில்

பரிதாபத்துக்குரிய அசட்டு
சிறுமியின் கிறுக்கல்களாய்
வெடுக்கென பிடுங்கி
எறியப்பட்டு விடும்

வீதிகள் எங்கிலும் மலர்களை தின்று செரித்த
கூட்டம் கள்ள விழிகளில் ஏளனம் சுமந்து
காற்றைப் புணர்ந்து
உப்பித்திரியும்

வார்த்தைகளில் முற்றுப்பெறாத
ஏதோ ஒன்று தனித்து
இனிவரும் நாட்களை
புதுப்பிக்க காத்திருக்கும்

அடர்த்தியான இருள்போர்வை கிழித்து
புவியின் மீள் விடியல் துவங்கும்.

No comments:

Post a Comment