Friday, March 18, 2011

கவிதை



எல்லையற்ற வானத்தின் கீழ்

அந்தி பொழுதின் நிழல்களையும்

வண்ணங்களையும் தூரிகை கொண்டு

வரைந்திடும் கண்கள் விரிய திறந்து

தேம்பி அழுதவாறு நிற்கும்



நீல வானம் தூய காற்று

கூச்சப்பட்டு தழுவிக்கொள்ளும்



அர்த்தமற்ற சந்தடியையும்

பரபரப்பையும் கடந்து

மர நிழல்களில் ஒளிந்து

செல்லும் உருவங்கள் கதைகள்

சொல்லி செல்லும்



தனிமையாலும் சோர்வாலும்

முடங்கியிருக்கும் தருணங்கள்



நிலவுதல் இல்லாத நிலையின்

எஞ்சிய பரப்பெங்கும்

சோகம் கலந்த உள்ளன்பு

பரவும்



கதகதப்பான கைகளுக்குள்

புதைந்துகொண்டு

சிறுவிழிகள் சிமிட்டி

விரல்களால் உயிர்தொட்டு

நீங்கும் ஓர் குழந்தை



மெல்ல குளிராகி

இருள் சூழும்

No comments:

Post a Comment