Friday, March 18, 2011

-கவிதை .



வெக்கை தாளாமல்

விழித்துக்கொள்கிறது

என் இரவு


இடைக்கிடை

அமிழ்ந்து எங்கோ

ஓர் குழந்தையின்

அழுகுரல் கேட்கும்


தனித்து வானத்தின் கீழ்

உயிர்ப்பை அறிவித்து

சலனங்களற்று என்

வேர்களும் நீளும்


முற்றத்தில் அமர்ந்து

தர்க்கித்தும்

விமர்சித்துமிருந்தவன்

இமைகளை உயர்த்தி

தாழ்த்திக்கொள்வான்


விழிகளின் விழிகளில்

புன்னகை மலரும்


வழிப்போக்கர்களின்

காலடியோசை

கேட்டு துவங்கும்

என் நாள்


துயில்கொண்டு

நீங்கிச் சென்ற

தென்றலின் சுவடு

தோள்களில்

இனியும் இனியும்

மிச்சமிருக்கும்

No comments:

Post a Comment