Wednesday, March 9, 2011

!! கவிதை !!




அந்தகனின் விழிகளை
அணிந்திருந்தேன்

நண்பகல் வானில்
நட்சத்திரங்கள்
இறைந்திருந்தன

முன்னிரவின் துவக்கத்தில்
கைகளில் வழிந்த
துளிகளில் நின்றது
பேரிசையின் தொடரணி

தள்ளி வைக்கப்பட்டிருந்த
எனது தலையின்
இடப்பக்கம் ஹெராக்ளிடஸ்
வலப்பக்கம் பெர்மினியீட்ஸ்

நான்கு நாட்களுக்கொரு முறை
புதுப்பிக்கப்படும் கணினியை
உடைத்துவிட்டு நடந்தான்

லோகாயத
சித்தன்...

No comments:

Post a Comment