கற்பிதங்களின்
புனிதத்தில்
என்னை வடிக்கும்
சிற்பியாய் என்
கவிதைகளின் கரு
நீர்க்குளத்தின்
சலனங்கள்
பார்க்கும்
சுட்டிக் குழந்தை
ஓரோர்
பொழுதுகளின்
நிராகரிப்பின்
தூண்டலும்
துவளலும்
எள்ளலும்
மீட்டலுமாய்
என்னில் நான்
மீண்டு(ம்) வந்து
கட்டிக்கொள்ளும்
என் கவிதை
அழுமூஞ்சியோடு
No comments:
Post a Comment