Friday, March 18, 2011

-கவிதை -



கற்பிதங்களின்

புனிதத்தில்

என்னை வடிக்கும்

சிற்பியாய் என்

கவிதைகளின் கரு


நீர்க்குளத்தின்

சலனங்கள்

பார்க்கும்

சுட்டிக் குழந்தை


ஓரோர்

பொழுதுகளின்

நிராகரிப்பின்

தூண்டலும்

துவளலும்

எள்ளலும்

மீட்டலுமாய்

என்னில் நான்


மீண்டு(ம்) வந்து

கட்டிக்கொள்ளும்

என் கவிதை

அழுமூஞ்சியோடு

No comments:

Post a Comment