Wednesday, March 31, 2010

வாதப்பிரதிவாதக் கலை

எதிராளியின் வாதத்திலுள்ள விசயத்தை ஒரு குறிப்பிட்ட நோக்கமோ இயல்போ அல்லாத பொதுப்படையான கருத்தாக எடுத்துக்காட்ட வேண்டும்.அதே சமயம் நம்முடைய வாதத்தின் கருத்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குகளுக்குட்பட்டதாகவும்,ஏதேனுமொருசில நோக்கங்களையும் கருத்துக்களையும் கொண்டதாகவும் எடுத்துக் கூற வேண்டும்.ஏனெனில் வாதத்தில் ஒரு விசயம் எவ்வளவுக்கெவ்வளவு பொதுப்படையானதாகவும்,விசாலமானதாகவும் இருக்கிறதோ,அவ்வளவுக்கவ்வளவு அதற்குஆணித்தரமான எதிர்வினைகள் கிளம்பும்.வாதத்தில் நமது கருத்தையே சரியானதென்று நிரூபிக்க ஒரு சிறந்த உபாயம் கேள்வி கேட்டுக் கொண்டேபோவதாகும்.வாதத்துக்கு எடுத்துக்கொண்ட பொருளுக்குச் சிறிதும் தொடர்பில்லாத பல்வேறு விவகாரங்களையும் பற்றிக் கேள்வி மேல் கேள்விகேட்டு எதிராளியிடம் பதிலை வரவைக்க வேண்டும்.இதனால் எதிராளியுடைய சிந்தனை திசை மாறும்நம்முடைய வாதத்திலுள்ள பலவீனங்களைமறைத்துவிடுவதும் நமக்கு சாத்தியமாகும்.


வாதப்பிரதிவாதக் கலையில் எளிதில் வெற்றி பெறுவதற்கு இன்னொரு மார்க்கம்,எதிராளிக்கு ஆத்திரமூட்டுவதாகும்.சினம் மிகுந்தால் சிந்தனையின் போக்கு தடுமாறும்.கோபம் வந்துவிட்டால் நியான அநியாயங்களைப் பாகுபாடு செய்துபார்க்கும் மனத்தெளிவு அகன்றுவிடும்.அதன் காரணமாகத் தனக்கு சாதகமான கருத்துக்கள்ளை தேடிக்கண்டு பிடித்து விவாதம் செய்யும் சாதுரியத்தைஎதிராளி இழந்து விடுவான்.நாம் வலியுறுத்த வேண்டிய கருத்துக்கு மாறுபட்டதும் வேறுபட்டதுமானபிரச்சனைகளைப் பற்றி பேசுவதாலும்,கேள்வி எழுப்புவதாலும்,எதிராளி நாம் எந்தக் கருத்தை வலியுறுத்தப் போகிறோம் என்று புரியாமல் மனம்குழம்பிப்போவான்.அடிப்படைக் கருத்துக்குகந்த மறுப்புகளைக் கூறத் தன்னை தயார்படுத்திக்கொள்வதை தவற விடுவான்.அந்த நேரம் பார்த்து நமது கருத்தை திடீரென வலியுறுத்தினால் நாம் வெற்றிய்டையலாம்.


நமது கேள்விகளில் எதிராளியிடமிருந்து எந்த கேள்விகளுக்கு ஆமாம் என்கிற ஒப்புதலை எதிர்பார்க்கிறோமோ,அப்போதெல்லாம் இல்லை என்று பதில் வந்து கொண்டிருந்தால், உடனே நாம் கேள்விகளைநேர் மாறாக திருப்பிப்போட ஆரம்பித்துவிட வேண்டும்.நம்கருத்துக்குச் சாதகமான பதிலை வேண்டுவது போல,நாம் கேள்விகளைக் கேட்க வேண்டும்.இதன் மூலம் எதிராளியின் வாதங்களில் இருந்தே நமது வாதத்துக்கான ஆதாரங்களைப் பெற்று நாம் வெற்றியடைந்து விடலாம்.நமது கேள்விகளுக்கெல்லாம் சளைக்காமல் பதில்களைச் சொல்லிக்கொண்டே வந்த பின்னரும்,நமது கருத்தை வலியுறுத்துவதற்க்கான வாய்ப்பை எதிராளி தராமலே இருந்தாலுங்கூட,திடீரென நமது வாதம் வெற்றியடைந்து விட்டமாதிரி நமது கருத்தை வெளியிட்டு விடலாம்.எதிரி சங்கோஜியாகவோ,மந்தப்புத்தி உள்ளவனாகவோ இருந்து விட்டால் இந்த யுக்தி உடனுக்குடன் பலித்துவிடும்.


எதிராளி வலியுறுத்தும் கருத்துக்கு எதிரிடையான கருத்தை,எதிராளியின் செயல்களையும்,அவன் தன் கருத்துக்குச் சாதகமாக கையாண்ட எடுத்துக்காட்டுகளின் இதர அம்சங்களையும் வெளியிட்டு மடக்குவதாலும் நாம் வெற்றியடையலாம்.உதாரணமாக எதிராளிதற்கொலை புரிந்து கொள்வது நியாயமானதென்றோ, அதில் தவறில்லையென்றொ வலியுறுத்துவானேயானால்நாம் தொடுக்க வேண்டிய கேள்வி அப்படியானால்நீங்கள் ஏன் தூக்குப் போட்டுக்கொள்ளக் கூடாது?பெர்லின் மனிதர்கள் வாழ முடியாத ஒரு நகரம் என்று எதிராளி கூறினால்,உடனே நாம் நாளைக்கே முதல் வண்டி பிடித்து வேறெங்கேயாவது போய்ச்சேருவதுதானே என்று கேட்க வேண்டும்.


வாதத்தில் தோல்வியுண்டாகும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம்உடனே பேச்சைச் திசைமாற்றிவிட வேண்டும்.நமது வாதத்துக்கு தொடர்புடைய விசயத்தை பேசுவதுபோலவக்கனையாகவும்,விரிவாகவும்,நமது வாததிற்கு எந்தவகையிலும் தொடர்பில்லாத விவாகாரங்களைப் பற்றி பேசஆரம்பித்துவிட வேண்டும்.


வாதத்தில் நம் தரப்புக்குச் சாதகமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிஞர் பெருமக்களின் வாக்குக்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.ஏனெனில் எந்த கருத்தானாலும்,அதன் உட்பொருளை நோக்காமல் அந்த கருத்தை வெளியிட்டவரின் தகுதியையும்,திறமையையும்,பார்த்தே மேற்படி கருத்துக்கு மதிப்பளிப்பது மனித சுபாவம்.ஏதேனும் ஒரு விசயத்தை எடுத்துச் சொல்லி,சாக்ரடீஸே இதை வலியுறுத்திஇருக்கிறார் என்றோ,புத்தரின் போதனைகளின் முக்கியஅம்சமே இதுதான் என்றோ பெரியவர்களை துணைக்கு கூப்பிட்டால் எதிராளி அடங்கி போய்விடுவான்.எதிராளி எந்த அளவுக்கு சாத்திர அறிவு இல்லாமல் இருக்கிறானோ அந்த அளவுக்கு இந்த உபாயம் நமக்கு வெற்றி கொடுக்கும்.


எதிராளியின் கை ஓங்கும்போது தனிப்பட்ட முறையில் நேரடியானதாக்குதலில் இறங்குவதால் எதிராளியின் கவனத்தை திசைமாற்றி விடலாம்.இந்த யுகதியைகடைசி ஆயுதமாகத்தான் பயன்படுத்த வேண்டும்.விவாதத்துக்குறிய விசயத்தை விட்டு விட்டுஎதிராளியின் நடையுடை பாவனைகளைப் பற்றிய ஏளன விமர்சனத்தை மேற்கொள்ளும் இந்த உத்தி கீழ்த்தரமானது.ஆனால் இதுதான் மிக எளிதில் கைவரக் கூடியது.பெரும்பாலும் அனைவராலும் கையாளப்பட்டுவருவதும் இந்த உத்திதான்.இந்தத் தாக்குதலை ஜாடை மாடையாகவும் நகைச்சுவை வெளிப்படுபடியாகவும் பயன்படுத்த வேண்டும்.


இப்பொழுது பதிவுக்குள் வரலாம்.எதையாவது படிக்கலாம் என்றுபுத்தகங்களை புரட்டினேன்.நீண்ட காலத்துக்கு முன்பாகவே வந்து விட்ட சிந்தனையாளர் வரிசை நூல்களில் ஷோபன்ஹேர் என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் கிடைத்தது. நீட்ஷேயின் குரு என்று கேள்விபட்டது நினைவுக்கு வந்தது.படிக்க ஆரம்பித்தேன்.The art of controversy என்கிற தலைப்பில் ஷோபன்ஹேர் ஒரு புத்தகமே எழுதி இருக்கிறாராம்.அந்த புத்தகத்தை பற்றிய அறிமுகமாக குறிப்பிட்டுள்ள விசயங்கள்தான் நான் மேலே பதிந்திருப்பது.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்பதால் உடனே பதிவாக எழுதி பகிர்ந்துகொண்டு விட்டேன்.


மேலும் ஒரு விசயம் நினைவுக்கு வந்தது.ஷோபன்ஹேர் சொல்லிஇருக்கிற முறைகேடான விவாத முறைகளை மிகச்சரியாகப் பயன்படுத்தி விவாதிக்கிறவர்களை நாம் அடிக்கடி சந்தித்து இருக்கிறோமே என்று பட்சி சொல்லியது.இனியும் பீடிகை வேண்டுமா என்ன ? மக்கள் கலை இலக்க்கிய கழகம் என்று அறியப்படுகிற மக இக வின் இணையப் புரட்சியாளர்களோடுவிவாதிக்க நேர்ந்திருக்கிற ஒவ்வொருவரும்,மேலே சொல்லப்பட்டு இருக்கிற விவாத முறைகேடுகளை அவர்கள் பயன்படுத்துவதை ஒரு முறையாவதுஉணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.அடுத்தது நம்ம ஷோபாசக்தியையும் இந்தக் கலையில்யாரும் மிஞச முடியாது.தன்மீதான விமர்சனங்களுக்குபதில் அளிப்பதாகக் கூறி பதில்களே இல்லாமல்,ஷோபாசக்தி எழுதியிருக்கும் கட்டுரைகள் எல்லாம்இந்த விவாத முறையை நமக்கு நினைவூட்டுவதாகஉள்ளன.பொதுவாகவே ஈழம் தொடர்பான அ.மார்க்ஸின் எழுத்துகளிலும்,குறிப்பாக அரசு.இறையானமை. ஆயுதப்போராட்டங்கள் என்கிற கட்டுரையிலும் இதே பாணிதான் இழையோடி இருந்தது.பிரான்ஸ் குடியுரிமை பெற்றிருக்கும் கனவான் இரயாகரன் கூட இந்த பாணியை கடைபிடித்திருப்பதை அவரது எழுத்துக்களை வாசித்தவர்களால் உணர்ந்திருக்க முடியும் என்று நம்புகிறேன்.


வெளிப்படையாகவே மக இக வினரின் அரசியல் மக்களுக்கானது அல்ல என்பதை என்னுடைய பல பதிவுகளின் வழியாக அமபலப்படுத்திஇருந்தாலும்,விவாத முறை பற்றிய இந்த பதிவின் ஊடாகவும் சில விடயங்களை முன் வைக்க விரும்புகிறேன்.கட்சியில் அங்கம்வகிப்பதாலோ,துண்டறிக்கைகளை விநியோகிப்பதாலோ அடையாள எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொள்வதாலோ தன்னை புனிதன் என்றும்,மக்களை உய்விக்க வந்த தேவதூதன் என்றும் கருதிக் கொள்கிற யாரும் மார்க்சியர்களாக இருக்க முடியாது.


மார்க்சிய நூல்களைப் படித்துவிட்டதால் அறிவுஜீவி திமிரோடு சக மனிதர்களுக்கும்,மக்களுக்கும் மேலானவர்களாக தங்களை வைத்துப் பார்க்கும் குணமும் மார்க்சியர்களுக்கு உரியதல்ல.மக்களுக்கும்,மனிதர்களுக்கும் மேலாக தன்னை நிறுத்திக்கொண்டு அதிகாரம் செலுத்துவது அரசின் குணம் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.இவர்களின் எந்த ஒரு பதிவும் சுரண்டலுக்கு எதிராக போராடுவதன் தேவையை,தோழமையோடு அருகே அமர்ந்து சொல்லிக்கொடுக்கும் பாணியில் அமைந்தது கிடையாது.இது ஒன்றே போதும் இவர்கள் மார்க்சியர்கள் அல்ல என்பதை அடையாளம் காண்பதற்கு.சற்று உன்னிப்பாக கவனித்தால் இவர்களின் விழுந்து பிடுங்கும் பாணியால் மார்க்சியத்தின் மீதான ஆர்வத்தையே மக்களுக்காக செயல்பட விரும்புவர்கள் இழந்து விடுவார்கள் என்பதையும் உணரலாம்.மார்க்சியர்கள் என்றாலே இப்படித்தான் என்று எண்ணத் தூண்டுவதன் மூலம் அவர்களை எதிர்நிலைக்கு ஓட வைக்கிற வேலையையும் கூடதெளிவாகவே செய்து கொண்டிருக்கிறார்கள் நம் இணையப் புரட்சியாளர்கள்.மீண்டும் மீண்டும்நினைவூட்ட விரும்புவது பேராசான் மார்க்சின்இந்த வரிகளைத்தான்.
எல்லாவற்றையும் சந்தேகி .......

7 comments:

muki; said...

நல்ல பதிவு

Bibiliobibuli said...

எங்க ஈழத்து சாக்ரட்டீஸ்களின் தத்துவங்கள் எனக்கு புரியாத போதெல்லாம் நான் தான் ஏதோ பேக்கு போல அதான் எனக்கு புரியவில்லை என்று நினைத்தேன். என்னை நொந்துகொண்டேன்.

ஸ்டாலின் குரு said...

நன்றி சிவா

ஸ்டாலின் குரு said...

வருகைக்கு நன்றி ரதி.கொஞ்சம் கவனமாக இல்லாவிட்டாலும்
கவிழ்த்து விடுவார்கள் நம் அறிவுஜீவிகள் :)

Anonymous said...

The art of controversy என்கிற தலைப்பில் ஷோபன்ஹேர் ஒரு புத்தகமே எழுதி இருக்கிறாராம்.அந்த புத்தகத்தை பற்றிய அறிமுகமாக குறிப்பிட்டுள்ள விசயங்கள்தான் நான் மேலே பதிந்திருப்ப//


அறிமுகமே இப்படி TERROR ஆக இருக்கிறது.நீங்கள் சொல்கிற ஆட்கள் எல்லாம்
முழு புத்தகத்தையும் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறன்.

thiagu1973 said...

தோழர் ஸ்டாலின் குரு மனுதர்மம் பத்தி நீங்கள் இட்ட பதிவுகளின் சுட்டியை எனக்கு அனுப்ப முடியுமா

ஸ்டாலின் குரு said...

http://markchiyamaanavan.blogspot.com/2007/12/blog-post_31.html

இதுதான் தோழர்.

Post a Comment