எல்லையற்ற வானத்தின் கீழ்
அந்தி பொழுதின் நிழல்களையும்
வண்ணங்களையும் தூரிகை கொண்டு
வரைந்திடும் கண்கள் விரிய திறந்து
தேம்பி அழுதவாறு நிற்கும்
நீல வானம் தூய காற்று
கூச்சப்பட்டு தழுவிக்கொள்ளும்
அர்த்தமற்ற சந்தடியையும்
பரபரப்பையும் கடந்து
மர நிழல்களில் ஒளிந்து
செல்லும் உருவங்கள் கதைகள்
சொல்லி செல்லும்
தனிமையாலும் சோர்வாலும்
முடங்கியிருக்கும் தருணங்கள்
நிலவுதல் இல்லாத நிலையின்
எஞ்சிய பரப்பெங்கும்
சோகம் கலந்த உள்ளன்பு
பரவும்
கதகதப்பான கைகளுக்குள்
புதைந்துகொண்டு
சிறுவிழிகள் சிமிட்டி
விரல்களால் உயிர்தொட்டு
நீங்கும் ஓர் குழந்தை
மெல்ல குளிராகி
இருள் சூழும்
No comments:
Post a Comment