Monday, February 7, 2011

கவிதை




தத்துவங்களின் தாகம்
பெருகி வழிய
தொண்டைக்குள் இறங்கி
இரை தேடிய
என் பாட்டனின் சோகம்
நரம்புகளில் பாய்ந்து
சிலிர்த்தது

உமிழப்பட்ட
வார்த்தைகளிலெல்லாம்
தனித்திருந்து
முடங்கியது


அதிமானுடன் தேடி
பயணம் நடந்த
பாதையில்
ஓர் ஓரமாய்
வீசப்படும் துண்டுகளுக்காய்
தானும் நாய்க்குட்டியுமாய்
பாடிக்கொண்டிருந்த
கிழவனின்
குரலில்

ஒழித்து தெரித்தது
கள்ளோடு
கொஞ்சம்
கம்யூனிசமும்..

No comments:

Post a Comment