ஏக்கம் ததும்பி
வழியும்போதே
வற்றிவிடுகிறது
என் இருப்பு
சேமிப்பில் இருந்த
முகங்கள்
உதடுகள் திறந்து
உளறி திரிகிறது
வாழ்வை
முகில் கலையும்
வெளிகள்தோறும்
நிறங்கள் எரிந்து
சாம்பல் குவித்து
துயில்கிறது
என் வானம்
அந்நிய மொழி
குழந்தையின்
பிஞ்சு விரல்கள்
பிடித்து
விழிகள் பார்த்து
துள்ளலோடு
துவஙகும்
மீள் உயிர்ப்பு
இந்த கவிதை
தொடரும்.
No comments:
Post a Comment