Friday, September 2, 2011

,கவிதை,

முன்நிலா பொழுதுகளில்
முயங்குதல் சப்தங்களில்
அதிரும் காற்றில்
சிலிர்க்கும்
உலர் நிலத்தின்
ஒற்றை நாணல்


ஒரு துளி நதியின்
பிரவாகம் பருக
திணறும்
பால்வெளி


சபிக்கப்பட்ட
சார்வாகனின்
பாதங்களில்
முடியும்
முடிவுறா
பாதைகள்...

No comments:

Post a Comment