கதை சொல்லியின்
விரல்களை பற்றிகொண்டு
இருவருக்குமான வெளியில்
சுற்றி திரிந்த சிறுமி
தோளில் சாய்ந்து
துயில்கொள்வாள்
இமைகள் பிரியாத
கனவுகளின் முகத்தில்
கவிதைகள் மலரும்
மெல்லிய சோகம் ததும்பி
பற்றிகொள்ள பரவும் கரங்கள்
தயங்கி அலைவுற
மௌனத்தின் வலியை
அடர்த்தியான இரவு
மதி நிழல் தந்து கூட்டும்
ரகசிய உயிர்ப்பு
இருவரின்
உயிரோசை
காற்றுகொண்டு சென்ற
மழை மேகமாய்
வெற்று வெளியில்
அலைக்கழிக்கப்பட்ட யாசகன்
கைகளில் இரு துளிகளாகும்
இன்னமும் தீராத
இரவின்
மிச்சங்களில்
தோழி
துயில் நீங்கி
பிரிவாள்
தனிமை
சப்தித்திருக்கும்
No comments:
Post a Comment