Wednesday, January 19, 2011

முகமற்ற கவிதைகள் - 3

பாதங்கள் பதியாமல்
உலவினேன்
காட்டின்
தனிமையில்

வசவிய
குருவிகளுக்கும்
வாழ்த்துக்கள் தந்தேன்
வார்த்தைகளற்று

அதீதங்களின்
அரவமொன்றின்
வழியில்

தொலைந்தேன்

நனைந்த
நதியில்
நகர்ந்தது
நீலத்
தீ

ஈர நிலத்தின்
குடைகாளான்
தலை
கவிழ்ந்து
நின்றது.

No comments:

Post a Comment