பாதங்கள் பதியாமல்
உலவினேன்
காட்டின்
தனிமையில்
வசவிய
குருவிகளுக்கும்
வாழ்த்துக்கள் தந்தேன்
வார்த்தைகளற்று
அதீதங்களின்
அரவமொன்றின்
வழியில்
தொலைந்தேன்
நனைந்த
நதியில்
நகர்ந்தது
நீலத்
தீ
ஈர நிலத்தின்
குடைகாளான்
தலை
கவிழ்ந்து
நின்றது.
Wednesday, January 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment